இறுதிச் சுற்று! மேயர் தேர்தல்: சாமானிய தொண்டனுக்கு பரிசு!

mayor

சாதாரண தொண்டன் தி.மு.க.வில் தொண்டனாகவே இருக்கின்றான் என்ற குமுறல்களை உடைக்கும் பொருட்டு, நீண்ட நெடுங்காலமாக கட்சிப்பணி செய்தவர்களை தகுதியின் அடிப்படையில் கோவைக்கும், நெல்லைக்கும் மேயர்களாக தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

நெல்லைக்கான மேயர் வேட்பாளரை அறிவிக்கும்பொருட்டு, நெல்லை வண்ணாரப் பேட்டையிலுள்ள தனியார் ஹாலில் அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ. அப்துல்வகாப், மா.பொறுப்பாளர் மைதீன்கான் மற்றும் கவுன்சி

சாதாரண தொண்டன் தி.மு.க.வில் தொண்டனாகவே இருக்கின்றான் என்ற குமுறல்களை உடைக்கும் பொருட்டு, நீண்ட நெடுங்காலமாக கட்சிப்பணி செய்தவர்களை தகுதியின் அடிப்படையில் கோவைக்கும், நெல்லைக்கும் மேயர்களாக தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

நெல்லைக்கான மேயர் வேட்பாளரை அறிவிக்கும்பொருட்டு, நெல்லை வண்ணாரப் பேட்டையிலுள்ள தனியார் ஹாலில் அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ. அப்துல்வகாப், மா.பொறுப்பாளர் மைதீன்கான் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில், அமைச்சர் நேரு, "என் கையிலிருக்கும் கவர் தலைவர் கொடுத்தது. அதில் என்ன பெயர் இருக்கிறதோ அவரே மேயர்'' என கவரை பிரிக்க, மேயர் வேட் பாளராக சாதாரண கட்சித் தொண்டரான எளிமையான குடும்பத்தை சேர்ந்த, தி.மு.க.வின் 25-ஆவது வார்டு கவுன்சிலரான கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். 58 வயதான கிட்டு ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இந்து சைவ வெள்ளாளர் பிரிவை சார்ந்தவர்.

as

"1980-ஆம் ஆண்டு முதல் தி.மு.க.வில் உறுப்பினராக இருந்துவரும் கிட்டு என்கின்ற ராமகிருஷ்ணன், வட்ட துணைச் செயலாளர், வட்டச் செயலாளர், மாவட்ட பிரதிநிதியாக பதவி வகித்துள்ளார். திருநெல்வேலி மாநக ராட்சியின் 25-வது வார்டு கவுன்சிலரான இவர் மக்களை அணுகும் பாணியே வித்தியாசமானது. தினம்தோறும் வார்டு முழுவதும் சைக்கிளில் சென்று தெருக்களில் மக்கள் குறைகளைக் கேட்டு அவர்களுக்கு தேவையானவற்றை அன்றே செய்துகொடுப்பதால் மக்கள் மத்தியில் செல்வாக்குண்டு. இது எங்களைப் போன்ற நீண்டகால கட்சி உறுப்பினர்களை உற்சாகப்படுத்தும்'' என்கின்றார் சாந்தி நகரைச் சேர்ந்த ராஜ்.

கோவையைப் பொறுத்தவரை மேயர் வேட்பாளராக 29-வது வார்டை சேர்ந்த ரங்கநாயகி ராமச்சந்திரன் அறிவிக்கப்பட் டுள்ளார்.

திங்கள் காலை 10.30 மணிக்கு அவசர அவசரமாக காளப்பட்டி சாலையில் அமைந் துள்ள சுகுணா அரங்கில் அமைச்சர் நேரு தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மேயர் வேட்பாளராக 29-வது வார்டை சேர்ந்த ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார். "அவருடைய வீட்டுக்காரர் ராமச்சந்திரன் நீண்ட நாள் கட்சிப் பணி செய்தவர். அதுபோக கவுண்டர் சமூகத்தை சார்ந்தவர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிவுரையின் பெயரிலேயே, எம்.பி. கணபதி ராஜ்குமாரின் சிபாரிசால் ரங்கநாயகிக்கு மேயர் பதவி கிட்டியுள்ளது'' என்கின்றது உளவுத்துறை.

எனினும், சாதாரண தொண்டர்களைக் குறிவைத்து பதவிகள் வழங்கியதால் உற்சாகமடைந்துவருகின்றனர் தி.மு.க. தொண்டர்கள்.

nkn070824
இதையும் படியுங்கள்
Subscribe