போராடினாலே தீவிரவாதிகளா? -விடுதலையான மாவோயிஸ்ட் வீரமணி!

vv

பிரதமர் மோடியின் உயிரைக் குறிவைத்து மாவோயிஸ்டுகள் சதி செய்வதாகக் கூறி, நாட்டின் மிகமூத்த சமூக செயற்பாட்டாளர்கள், அறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்களை தேசவிரோத சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் வைத்திருக்கிறது அரசு. எப்போதும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களாகவே மாவோயிஸ்டுகளை அரசும், அதன்கீழ் செயல்படும் காவல்துறையும் அடையாளம் காட்டுகிறார்கள். எனில் மாவோயிஸ்டுகள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதை அறிய, தமிழாசிரியரும், ஏறத்தாழ 16 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவருமான மூத்த மாவோயிஸ்ட் தோழர் வீரமணியைச் சந்தித்தோம். கடந்த ஐந்தரை ஆண்டுகளாக கோவை சிறையில் தண்டனை அனுபவித்து, நிபந்தனை ஜாமீனில் வெளி வந்திருக்கும் அவரிடம் நிகழ்த்திய உரையாடல்...

v

அரசுக்கு எதிராக போராடுகிறவர்களை மாவோயிஸ்டுகளாக முத்திரை குத்துகிறார்கள். உண்மையில் மாவோயிஸ்டுகள் என்பது யார்?

முடியாட்சியை வீழ்த்தி முதலாளித்துவ ஜனநாயகம் என்ற பெயரில், நாடாளுமன்ற முறை உலக நாடுகளில் கொண்டு வரப்பட்டது. ஆ

பிரதமர் மோடியின் உயிரைக் குறிவைத்து மாவோயிஸ்டுகள் சதி செய்வதாகக் கூறி, நாட்டின் மிகமூத்த சமூக செயற்பாட்டாளர்கள், அறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்களை தேசவிரோத சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் வைத்திருக்கிறது அரசு. எப்போதும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களாகவே மாவோயிஸ்டுகளை அரசும், அதன்கீழ் செயல்படும் காவல்துறையும் அடையாளம் காட்டுகிறார்கள். எனில் மாவோயிஸ்டுகள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதை அறிய, தமிழாசிரியரும், ஏறத்தாழ 16 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவருமான மூத்த மாவோயிஸ்ட் தோழர் வீரமணியைச் சந்தித்தோம். கடந்த ஐந்தரை ஆண்டுகளாக கோவை சிறையில் தண்டனை அனுபவித்து, நிபந்தனை ஜாமீனில் வெளி வந்திருக்கும் அவரிடம் நிகழ்த்திய உரையாடல்...

v

அரசுக்கு எதிராக போராடுகிறவர்களை மாவோயிஸ்டுகளாக முத்திரை குத்துகிறார்கள். உண்மையில் மாவோயிஸ்டுகள் என்பது யார்?

முடியாட்சியை வீழ்த்தி முதலாளித்துவ ஜனநாயகம் என்ற பெயரில், நாடாளுமன்ற முறை உலக நாடுகளில் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை நிலவுடைமை சமூகத்தைத் தூக்கியெறியாமலே நாடாளுமன்றம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கார்ல் மார்க்ஸ் சொன்ன அறிவியலை, இந்தியாவை விடவும் பின்தங்கிய சீனச் சூழலுக்கேற்ப பொருத்தி, அங்கு நிலவுடைமையை இல்லாமல் செய்து, உள்நாட்டு முதலாளிகளை ஒன்று சேர்த்து தொழில்புரட்சி நடத்திக்காட்டி, சீனாவை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசென்றார் மா சேதுங். அவருடைய கொள்கை வழியை, இங்கும் செயல்படுத்தி வளமிக்க நாடாக, இந்தியாவை ஆக்கவேண்டும் என்று மக்களை ஒன்றுதிரட்டி போராடுகிறோம். அதற்குத் தடையாக சாதிய நிலவுடைமை இருக்கிறது. அதை ஒழிக்காமல் நம்முடைய நாடு முன்னேற்றத்தைக் காணமுடியாது.

இதே உள்நாட்டு உற்பத்தியைத்தானே "மேக் இன் இந்தியா' என்கிறது மத்தியில் ஆளும் மோடி அரசு?

உள்நாட்டில் உற்பத்தி என்று சொல்லிக்கொண்டு, கொரோனா காலத்திற்கு முன்பாக வெளிநாடெல்லாம் சுற்றித் திரிந்தார் மோடி. இதில் கையெழுத்தான ஒப்பந்தங்களின் மூலம், வெளிநாட்டு ஏகாதிபத்தியங்கள் மூலை முடுக் கெல்லாம் ஊடுருவி, இந்த நாட்டை கொள்ளை யடிக்கின்றன. அவர்களது ஏஜெண்டுகளாக இருக்கும் உள்நாட்டு பெருமுதலாளிகளும் சுரண்டிக் கொழுக்கிறார்கள். எனவே, இதற்கு மாற்றாக தொழில் வளத்தைப் பெருக்கி, வேலை வாய்ப்பை அதிகரிக்கும், இலவச கல்வியும், மருத்துவமும் கொடுக்கும் மாவோயிசக் கொள்கை இந்தியாவிற்கும் பொருந்தும் என்று நான் நம்புகிறேன்.

மாவோயிஸ்டுகள் என்றாலே கலவரக்காரர்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியவர்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?

அரசியல்வாதிகள் பல ஆயிரம் கோடிகளில் திளைக்கிறார்கள். மக்கள் நலனுக்கு எதிரான போராட்டங்களில், காவல்துறை யினரை கட்டவிழ்த்துவிட்டு அடக்கி ஒடுக்குகிறார்கள். செத்த மாட்டின் தோலுரித்ததாக தலித்துகளையும், மாட்டிறைச்சியைக் கடத்தியதாக இஸ்லாமியர்களையும் தேடித்தேடி கொன்றார்கள். இதுதானே தீவிரவாதம். இதுவொரு சுரண்டல் கொள்கை. இதற்கு இந்துத்துவ மதவெறி அரசியலை மோடி அரசு கையிலெடுத்துக் கொண்டு, பயங்கரவாதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. பிற்போக்குத் தனங்களையும், பின்தங்கிய மனநிலையையும் அடிப்படையாகக் கொண்ட இந்த சமூகத்தைக் கட்டிக்காக்கும் வேலையை அரசுகள் செய்கின்றன. அதற்கு மாற்றாக முற்போக்குத் தளத்தில் மக்களை ஒருங்கிணைக்க நினைக்கும், உண்மையான ஜனநாயகமும், சுதந்திரமும் மக்களுக்குக் கிடைக்கவேண்டி போராடுகிற எங்களை கலவரக்காரர்கள் என்று சொல்வதில் ஆச்சர்யமில்லை.

vv

தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும்பான்மையான வேலைவாய்ப்பை பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்படுத்தித் தருகின்றன. நாட்டுக்கும் வருவாய் கிடைக்கும் சூழலில், அவர்களை சுரண்டல்காரர்கள் என்று சொல்வது முரண்பாடாக இல்லையா?

இதில் கிடைக்கின்ற வேலைவாய்ப்பு என்பது மிகச்சொற்பமே. சாதாரண கல்வி கற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்கக் கூடிய சூழல் இருந்திருந்தால், நாட்டில் வேலையில்லாத் திண் டாட்டம் எதற்காக அதிகரிக்கப் போகிறது. எனவே, தேசநலனில் அக்கறை கொண்ட முதலாளிகள் முதலீடு செய்து, வேலைவாய்ப்பைப் பெருக்கவேண்டும் என்றே வலியுறுத்துகிறோம். புதிய தாராளவாதத்தின் கொள்கையே உலகின் எந்தநாடாக இருப்பினும், மலிவு உழைப்பு கிடைத்தால் அங்கே சுரண்டிக் கொழுக்கலாம் என்பதாக இருக்கிறது. இந்த சுரண்டலுக்கு எதிராக, பெரும்பான்மை மக்களின் நலனை உத்தேசித்து திட்டங்களை வகுக்கவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

வனப்பாதுகாப்பு சட்டங்கள் இருக்கும் நிலையில், ஆதிவாசி மக்கள் சுரண்டப்படுகிறார்கள் என்று எதனடிப் படையில் குற்றம்சாட்டுகிறீர்கள்?

வன உரிமைப் பாதுகாப்புச் சட்டம் - 2006, ‘ஆண்டாண்டு காலமாக வனங்களில் வசித்துவரும் மக்களை விரட்டக்கூடாது. அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கக்கூடாது’ உள் ளிட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால், ஐந்நூறு, ஆயிரம் ஏக்கர் நிலங்களை வளைத்துப் போடக்கூடிய வாய்ப்பு பெருமுதலாளிகளுக்கு இருக்கும் அதேவேளையில், நான்கைந்து நூற்றாண்டுகளாக வனங்களில் வசித்துவரும் மக்களுக்கு இன்ன மும்கூட பட்டா வழங்க முடியவில்லை. இதுபோன்ற இடங்களில் மக்களிடம் பேசி, அவர்களை அணிதிரட்டி போராடி வருகிறோம். இங்கு சட்டங்கள் பெயரளவுக்குத்தானே தவிர, மக்களுக்கு பயனளிப்பதாக இல்லை.

சந்திப்பு - சிவா

nkn120920
இதையும் படியுங்கள்
Subscribe