ழக்கறிஞர் கள் போராட் டத்தால் பணியிட மாற்றம் செய்யப் பட்ட பெண் எஸ்.ஐ., அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா கீழசவேரியார்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் மீது அவரது மனைவி ஜாஸ்மின்வித்யா கொடுத்த வரதட்சணை புகார் குறித்து புதுக்கோட்டை சமூகநலத்துறை அலுவலகத்தில் விசாரணை நடந்தபோது, ஜாஸ்மின் வித்யாவிற்காக வழக்கறிஞர் கலீல்ரகுமான் அங்கு சென்றுள்ளார்.

ff

விசாரணை முடிந்து வெளியேவந்த ஆரோக்கியராஜ், "உன்னால்தான் என் குடும்பமே நாசமாப் போச்சு''" என்று கலீல்ரகுமானை ஒருமையிலும், ஆபாசமாகவும் திட்ட, கைகலப்பானதில், வழக்கறிஞர் கலீல்ரகுமானுடைய செல்போனை ஆரோக்கியராஜ் பறித்துக்கொண்டு சென்றுவிட்டதாக திருக்கோகர்ணம் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் கொடுத்த புகாரின்பேரில் அவரது செல்போன் திரும்ப வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த சம்பவம் குறித்தும் புகார் குறித்தும் வழக்கறிஞர்கள் சங்கத்தில் கலீல் ரகுமான் முறை யிட்டதால், 2 நாட்கள் வழக்கறி ஞர்கள் வேலை நிறுத்தம், உண்ணா விரதம் ஆகிய போராட்டங் களைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அப்போது, "நம்மை காவல் கண்காணிப்பாளர் சந்திக்க மறுக்கிறார் என்றும், இனிமேல் காவல்துறைக்காக யாரும் ஆஜராகக்கூடாது' என்றெல்லாம் சங்கத் தலைவர் சின்ராசு பேசினார்.

தொடர்ந்து நடந்த பேச்சு வார்த் தையில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய எஸ்.ஐ. சங்கீதாவை திருக்கோகர்ணத்திலிருந்து ஆதனக்கோட்டை காவல்நிலையத் திற்கு பணியிட மாற்றம் செய்தனர். இதில் தான் விரக்தியடைந்து, காவல்நிலைய நாட்குறிப்பேட்டில்.. "தன் சாவுக்கு கார ணம் வழக்கறிஞர்களின் போராட்டமே! தவறு செய்யாத எனக்கு பணியிடமாற்றம். என் சாவுக்கு பிறகாவது போலீசாருக்கு நல்லது நடக்கட்டும்' என்று எழுதி வைத்துவிட்டு மாலையில் வீடு திரும்பியதும், தனது தாயாருக்கு வாங்கி வைத்திருந்த தூக்க மாத்திரைகளை விழுங்கி விட்டு படுக்கையில் கிடந்திருக்கிறார். சங்கீதா காவல் நிலையத்திலிருந்து கிளம்பிய பிறகு நாட்குறிப்பேட் டில் அவரது செய்தியைப் பார்த்து அதிர்ந்து, வீட்டுப் படுக்கையில் மயங்கிக் கிடந்தவரை மருத் துவமனையில் சேர்த்து பிழைக்க வைத்துள்ளனர்.

oo

Advertisment

மாவட்ட எஸ்.பி. வந்திதாபாண்டே மருத்துவ மனைக்கு சென்று சங்கீதாவுக்கு ஆறுதல் சொல்லியதோடு, இப்படி செய்யக்கூடாதென கண்டித்துள் ளார். இதுகுறித்து சங்கீதா தரப்பிடம் பேசிய போது, "எஸ்.ஐ. சங்கீதா ரொம்ப திடமானவங்க தான். ஆனால் ஒரு சில வழங்கறிஞர்கள் கொடுத்த டார்ச்சர்தான் இந்த முடிவுக்கு தள்ளியிருக்கு. வழக்கறிஞர் கலீல்ரகுமான் காவல் நிலையத்தில் கூட புகார் கொடுக்கவில்லை. டி.எஸ்.பி.யுடன் ஒரு நிகழ்ச்சியில் இருந்த எஸ்.ஐ. சங்கீதாவிடம் சென்று புகார் கொடுத்திருக்கிறார். உடனே காவல்நிலையம் போய் வழக்குப் பதிவு செய்துட்டாங்க. இந்த தகவல் தெரிஞ்சதும் ஒரு வழக்கறிஞர், எதிர் தரப்புக்கு முன்ஜாமீனுக்கு மனு போடுகிறார். இது தெரிந்ததும் வேலை நிறுத்தம் செய்தனர். அடுத்ததா சாலை மறியலில் இறங்கியபோது, எஸ்.ஐ. உள்பட ஒட்டுமொத்த போலீசாரையும் தரக்குறைவாக பேசினாங்க. அதோடு, காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து, தப்பே செய்யாத சங்கீதாவை இடமாற்றம் செய்துட்டாங்க. இதனாலதான் விபரீத முடிவுக்கு போய்ட்டாங்க. ஒரு பக்கம் அரசியல்வாதிகள், அடுத்து உயர் அதிகாரிகள், அப்பறம் வழக்கறிஞர்கள்னு ஆளாளுக்கு போலீசாருக்கு கொடுக்கும் டார்ச்சரால், ரொம்பவே மன அழுத்தத்தில் இருக்கோம். அப்ப தான் இதுபோன்ற தற்கொலை எண்ணங்களும் வரும். இப்பகூட, தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் சொல்லித்தான் இடமாற்றம் செய்ததாக நக்கல் செய்றாங்க. எங்க நிலைமை ரொம்ப பரிதாபம். சங்கீதாவுக்காக டி.ஜி.பி.யை சந்தித்து பேசப்போறோம். இனி மேலும் இப்படியொரு சம்பவம் நடக்கக்கூடாது'' என்றார்கள்.

வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சின்ராசு, "வழக்கறிஞரைத் தாக்கியதும் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. அந்த புகாருக்கான எதிரியை கைது செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் செய்வது எங்கள் சங்க கடமை. அந்த அடிப்படையில் வேலை நிறுத்தம் செய்தோம். உண்ணாவிரதம் இருந்தோம். எஸ்.பி. சொன்னபடி கைது செய்யல. அதனால மறியல் செய்தோம். நாங்க யாரையும் பேசவில்லை. அப்போது மூத்த வழக்கறிஞர் முன்னாள் அரசு வழக்கறிஞர் மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் எங்களிடம் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. இடமாற்றம் செய்யப்படுவார் என்று உறுதியளித்தார். அதன்படி செய்யப்பட்ட பிறகு போராட்டத்தை வாபஸ் வாங்கிட்டோம். எஸ்.ஐ. அவங்க கடமையை சரியா செய்யல. நாங்க போராடினோம். நாங்க யாரும் டார்ச்சர் கொடுக்கல. அப்படி இருந்தால் ஆதாரங்களை நீதிமன்றத்தில் கொடுக்கட்டும்'' என்றார்.

சட்டம் ஒழுங்கைக் காக்க இணைந்து செயல் படவேண்டிய காவல்துறையும், சட்டத்துறையும் மோதிக்கொள்வதால் சட்டம் ஒழுங்குதான் கெடும்.