"ஹலோ தலைவரே, இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கு.''”

"ஆமாம்பா. இதன். மீதான விவாதத்தின்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, அதிரடி பதிலைக் கொடுத்து தி.மு.க. எம்.பி. கனிமொழி பலரின் சபாஷையும் பாராட்டையும் பெற்றிருக்கிறாரே?''”

ff

"உண்மைதாங்க தலைவரே... பல ஆண்டுகளாக இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு நிலவிய நிலையில், இப்போது கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவை எதிர்க்கட்சி கள் பலவும் வரவேற்கின்றன. இந்த மசோதா மீது பேசிய கனிமொழி, சுதந்திர இந்தியாவுக்காக போராடிய வலிமை யான பெண்கள் குறித்து குறிப் பிட்டுவிட்டு, இந்திராகாந்தி போன்ற வலிமையான பெண்களை இந்த நாடு பெற்றிருக்கிறது என்றார். அப்போது அமித்ஷா குறிப்பிட்டு, ’ஜெயலலிதா’ என்று குசும்பாகக் குரல் கொடுக்க, அதைக்கேட்டுக் கொஞ்சமும் அசராத கனிமொழி, ’ஜெயலலிதா பெயரைக் குறிப்பிடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால், சோனியாகாந்தி, மாயாவதி, மம்தா பானர்ஜி, மறைந்த சுஷ்மா சுவராஜ் போன்ற வலிமையான பெண் தலைவர்களை நாம் பெற்றிருக்கிறோம். அதை மறந்துவிடக்கூடாது’ என்று சந்தடி சாக்கில் சோனியா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பெண் தலை வர்களின் பெயரை அவர் பட்டியல் போட, அமித்ஷா திகைத்துப் போனார். நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்த கனிமொழியை பெண் எம்.பி.க்கள் பலரும் சூழ்ந்துகொண்டு கைகொடுத்துப் பாராட்டித் தள்ளி விட்டார்கள்.''”

Advertisment

"சரிப்பா, இந்த மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவே கண் துடைப்புன்னு சொல்லப்படுதே?''”

"ஆமாங்க தலைவரே, காரணம், இந்த மசோதா வருகிற நாடாளு மன்ற தேர்தலின்போது நடை முறைக்கு வராதாம். மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தொகுதி மறுவரையறை எல்லாம் முடிந்த பிறகு, அதற்கு அடுத்து வருகிற தேர்தலின் போதுதான் அந்த மசோதாவுக்கு உயிர் வரும். அதற்கு இன்னும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும். இதனைத்தான் சோனியா காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் கேள்வி எழுப்புகின்ற னர். எடுக்கப்படாத மக்கள் தொகை கணக்கெடுப்பைச் சுட்டிக்காட்டி, அத னடிப்படையில் இந்த மசோதா வரப் போவதாக சொல்வது தேர்தலுக்காகத்தான் என்றும், இது மோடி தரப்பின் தேர்தல் மீதான பயத்தைக் காட்டுகிறது என்றும் விமர்சிக் கிறார்கள்.''”

"என்னப்பா, இந்த முறையும் நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்க மறுத்துடுச்சே?''”

Advertisment

rr

’"சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 90 நாட் களாக சிறையில் இருந்துவரும் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஜாமீன் கேட்டு விண்ணப் பித்திருக்கிறார். இந்த வழக்கில் விசாரணை 20ஆம் தேதி வந்தபோது, அவருக்கு ஜாமீன் கிடைக்கும்ன்னு அவர் தரப்பு அதிகம் எதிர்பார்த்தது. ஆனால் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியோ, ஜாமீன் வழங்க மறுத்து செந்தில்பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார். இதனால் செந்தில் பாலாஜி பலத்த அப்செட்டுக்கு ஆளாகிவிட்டார். அவரது வழக்கறிஞர்கள் தரப்பும் இந்தத் தீர்ப்பை எதிர்பார்க்கலையாம்.''”

"எதனால் இப்படியாம்?''

"சீனியர் வழக்கறிஞர்கள் தரப்பில் விசாரித்த போது, செந்தில் பாலாஜி வழக்கில் அவரது தம்பி அசோக் உள்பட பலரையும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டி இருக்கிறது. அசோக் தலைமறைவாகவே இருக்கிறார். அவரை கைது செய்து அவரிடம் விசாரணை முடிந்த பிறகு தான் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும். அசோக் இருக்கும் இடம் தெரிந்தபோதும், அவரைக் கைது செய்தால், ஜாமீன் தொடர்பாக தாங்கள் நடத்திவரும் கண்ணாமூச்சு விளையாட்டு முடிவுக்கு வந்துவிடும் என்பதால், அவரை அமலாக்கத்துறையினர் விட்டு வைத்திருக்கிறார் களாம். இன்னும் சில நாட்கள் செந்தில் பாலாஜியை சிறையிலேயே வைத்திருக்க வேண்டும் என டெல்லி விரும்புகிறதாம். அதற்காகவே அசோக்கை கைது செய் யாமலும், அவரே சரண்டர் ஆக நினைத்தாலும் அதை நடக்கவிடாமலும், கவன மாகப் பார்த்துக்கொள் கிறார்களாம். தி.மு.க. தரப்புக்கு எதிராகச் செய்யவேண்டிய இன்னும் சில வேலைகள் மிச்சம் இருப்பதால், அதெல்லாம் ஒரு வழிக்கு வந்த பிறகுதான் ஜாமீன் விவகாரம் ஒரு நேர்கோட்டுக்குள் வரும் என்கிறார் கள்.''

"அமலாக்கத் துறையினர் மேலும் நான்கு தமிழக அமைச்சர்களைக் குறி வைத்திருக் கிறார்கள்னு தகவல் வருதே...?''

ff

"நாடாளுமன்றத் தேர்தலுக்குள், செந்தில் பாலாஜியைப் போல் இன்னும் சில அமைச்சர்களை சிறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது டெல்லியின் திட்டமாம். இதைத் தொடர்ந்து தமிழகத் தின் ஒரு மத்திய மாவட்ட அமைச்சர், ஒரு தென்மாவட்ட அமைச்சர் உட்பட நான்கு அமைச்சர்களுக்கு அம லாக்கத்துறை குறிவைத்திருக்கிறதாம். அவர்களை யும் செந்தில்பாலாஜி பாணியில் சிறைக்கும் நீதிமன்றத்துக்குமாக இழுத்தடித்து தி.மு.க.வின் இமேஜை சாய்க்க திட்டம் வகுக்கப்பட்டிருக் கிறதாம். முன்னதாக மணல் விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகனின் மகனான எம்.பி. கதிர் ஆனந்துக்கும் நெருக்கடி தரவிருக்கிறார்களாம். இந்த நிலையில் அண்மையில் ரெய்டுக்கு ஆளான மணல் அதிபர்களான திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் ஆகிய இருவரும் அமலாக்கத்துறைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு துபாய்க்குப் பறந்துவிட்டார்களாம். இன்னொரு மணல் அதிபர் ராமச்சந்திரனை அவர்களால் ஸ்மெல் செய்யவே முடிய வில்லையாம்.''

"தமிழக அரசின் நிர்வாகத் திலேயே வடக்கின் ஆதிக்கம் அதி கரிப்பதாக பேச்சு அடிபடுகிறதே?''

"ஆமாங்க தலைவரே, தமிழக அரசின் நிர்வாக நெட் ஒர்க்கைப் பொறுத்தவரையில், மிக முக்கியமான பதவிகள்னு எடுத்துக்கிட்டா, தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா, நெடுஞ்சாலைத்துறை செயலாளராக பிரதீப் யாதவ், கால்நடைத்துறை செயலாளராக மங்கத்ராம் சர்மா, சுற்றுப்புறச் சூழல் துறையில் சுப்ரியா சாகு என வட இந்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி களின் ஆதிக்கம் இப்போது வலுத்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலோர் தங்களுக்குள் லாபி அமைத்துக் கொண்டு செயல்படுகிறார்களாம். இது மாநில நலனுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக கோட்டை வட்டாரத்தில் சர்ச்சைகள் சுழன்றடிக் கிறது. இதுகுறித்து தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டத்தில் பெரும் ஆதங்கம் நிலவுவ தாகவும் சொல்கிறார்கள்.''

"லஞ்ச ஒழிப்புத் துறையினர், தலைமைச் செயலகத் திலேயே நுழைந்து செய்தித்துறை அதிகாரி ஒருவரை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கியிருக் கிறார்களே?''”

"தற்போது கோட் டைக்குள்ளேயே லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி யாக நுழைந்திருப்பது ஐ.ஏ.எஸ். வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக் கிறது. மதுரையைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவர், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடக்கும் தனியார் பொருட்காட்சியில் ஸ்டால் போடுவதற்காக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தாராம். அதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் அலுவலகம், அந்த மனுவை தலைமைச் செய லகத்தில் உள்ள செய்தித் துறையின் கட்டுப்பாட்டி லுள்ள பொருட்காட்சி பிரிவுக்கு அனுப்பி இருக் கிறது. இதைத் தொடர்ந்து அந்த மாணிக்கவாசகம், தலைமைச் செயலகம் வந்து பொருட்காட்சி பிரிவின் உயர் கணக்காளரான அன்பரசுவை அணுகி இருக்கிறார். அவரோ, ரூபாய் 15,000 கொடுத்தால்தான் அப்ரூவல் தரமுடியும் என்று சொல்லி இருக்கிறார். இதனால் நொந்துபோன மாணிக்கவாசகம், நேராக லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் போக, இதன் பிறகுதான் ஊழல் கணக்காளர் தூண்டில் போட்டு மடக்கப் பட்டிருக்கிறார்.''”

"இது முதல்வருக்குத் தெரிந்துதான் நடந்தது என்கிறார்களே?''”

ff

"ஆமாங்க தலைவரே, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, இந்த நடவடிக்கையில் இறங்கும் முன்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வின் கவனத்துக்கு இதை எடுத்துச்சென்றதாம். அவரோ, ’இங்கே செய்தித்துறையில் லஞ்சம் விளையாடுவதாக எங்களுக்கு நிறைய புகார்கள் வருகிறது’ என்றபடி முதல்வர் ஸ்டாலினிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றிருக்கிறார். எல்லா வற்றையும் நிதானமாகக் கேட்ட அவர், ’"லஞ்சம் கேட்கும் அதிகாரி யாராக இருந்தாலும் ஆக்ஷன் எடுங்கள்'’ என்று சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, மாணிக்கவாசகத்திடம் ரசாயனம் தடவிய பணத்தைக் கொடுத்து, அன்பரசுவிடம் அனுப்பிய லஞ்ச ஒழிப்புத்துறையினர், பணத்தை வாங்கிய அன்பரசுவையும், பாலாஜி என்ற கிளர்க்கையும் அதிரடியாக கைது செய்தது. மேலும், அன்பரசுவின் அறையில் இருந்த, கணக்கில் காட்டப்படாத ரூபாய் 90,000-ஐயும் கைப்பற்றியிருக்கிறார்கள்.''’

"நானும் ஒரு முக்கிய தகவலை சொல் றேம்பா. தமிழக மின்வாரியத்துக்கு கன்வேயர் பெல்ட் உள்ளிட்ட உபகரணங்கள் சப்ளை செய்த நிறுவனங்கள் தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித்துறை நடத்திய அதிரடி ரெய்டு, அ.தி.மு.க. வட்டாரங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ரெய்டில் மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு நெருக்கமான ஒரு நிறுவனமும் சிக்கியிருக்கிறதாம். ஜெயலலிதாவின் 2001 ஆட்சிக் காலத்தில் மின்வாரிய அமைச்சராக ஜெயக்குமார் இருந்தபோது, அந்த நிறுவனத் துடன் நெருக்கம் ஏற்பட்டதாம். ஒரு கட்டத்தில் அந்த நிறுவனத்தை தனது பினாமி கம்பெனியாக இவர் மாற்றிக்கொண்டதாகவும் அ.தி.மு.க.வினர் கிசுகிசுக்கின்றனர். சம்மந்தப்பட்ட நிறுவனத்தை பராமரித்துவரும் முக்கியஸ்தர்களிடம், "வரி ஏய்ப்பு எவ்வளவுன்னு பார்த்து பெனால்டியுடன் பணத்தைக் கட்டித் தொலையுங்கள். பிரச்சனையை பூதாகரமாக மாற்றா தீர்கள் என அட்வைஸ் செய் திருக்கிறாராம் ஜெயக்குமார்' என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.’

_______________

இறுதிச் சுற்று!

நீட் தேர்வு குறித்து ஒன்றிய அரசு தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டி சமூக வலைத்தளத்தில் வியாழக்கிழமை (21-ந் தேதி) பதிவு செய்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், "நீட் தேர்வின் பலன் என்ன என்றால், "0' தான் என்பதை ஒன்றிய பா.ஜ.க அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி மதிப்பெண் "0' தான் என்று வரையறுப்பதன் மூலமாக, நீட் என்றால் சஹற்ண்ர்ய்ஹப் ஊப்ண்ஞ்ண்க்ஷண்ப்ண்ற்ஹ் ஈன்ம் ஊய்ற்ழ்ஹய்ஸ்ரீங் பங்ள்ற் என்பதில் உள்ள National Eligibility Cum Entrance Test FuT§p Ds[ Eligibility-க்குப் பொருள் கிடையாது என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுவிட்டார்கள்.

நீட்=0 என்றாகிவிட்டது. இதைத்தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் சொல்லி வந்தோம். எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இரக்கமே இல்லாமல் இருந்துவிட்டு இப்போது இப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள். நீட் என்ற பலிபீடத்தைக் கொண்டு உயிர்களைப் பறிப்பதற்காகவே இந்த பா.ஜ.க ஆட்சியை அகற்றியாக வேண்டும்'' என்று தெரிவித்திருக்கிறார்.

-இளையர்