ராங்கால் பெண் எம்.பி. மீது இலங்கை புகார்! தொகுதி வாரியாக விஜய்

sss

"ஹலோ தலைவரே.. தமிழக பெண் எம்.பி. ஒருவர், இலங்கை அதிபருக்கு எழுதிய கடிதம் ஒன்று சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.''”

"ஆமாம்பா, அது தொடர்பாக இலங்கை அரசு இந்தியாவிடம் புகார் சொல்லியிருப்பதாகவும் தகவல் வருதே?''”

ss

"உண்மைதாங்க தலைவரே, தமிழக காங்கிரஸில் இருக்கும் எம்.பி.க்கள் ஒன்பது பேரில் ஒருவர்தான் மயிலாடுதுறை சுதா. இவர் மீதுதான் இலங்கை அரசு, இந்தியாவிடம் புகார் செய்திருக்கிறதாம். சமீபத்தில் மீனவர் பிரச்சனை தொடர்பாக அவர், இலங்கையின் புதிய அதிபரான அனுரகுமார திசநாயகவுக்கு, ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அதில், இலங்கை அதிபரை, டியர் ப்ரதர் என்று விளித்திருந்தாராம். இது சாதாரண விசயம்போல் தெரிந்தாலும், ஒரு நாட்டின் அதிபரை இப்படிதான் டியர் ப்ரதர் என்று, புரோட்டகால் பற்றிக் கவலைப்படாமல் அழைப்பதா? என்ற புகாரோடு, அந்தக் கடிதத்தை இந்திய அரசுக்கு ஃபார்வேர்ட் பண்ணியிருக்கிறதாம் இலங்கை அரசு. இதனையடுத்து, சுதா எம்.பி. குறித்து ஒன்றிய உளவுத்துறை விசாரித்திருக்கிறது. மேலும், அவரது அதிகப் பிரசங்கித்தனம் குறித்த புகாரோடு அந்தக் கடித நகலை காங்கிரஸின் தலைமைக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அனுப்பிவைக்க, இதனால் காங்கிரஸும் சுதா மீது கோபத்தில் இருக்கிறதாம். இப்படி சுதா எம்.பி.யின் கடித சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்த சுதாவுக்குக் கொடுக்கும் அதிக முக்கியத்துவம்தான் அவரை ஏடாகூடமாக நடக்கவைக்கிறது என, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், கட்சியின் மேலிடத்திற்கு மற்றொரு புகாரையும் அனுப்பியிருக்கிறார்களாம்.''”

"காங்கிரஸ் தலைமை செல்வப்பெருந்தகையிடம் பண விவகாரம் குறித்து விசாரணை நடத்தியதாகவும் சொல்கிறார்களே?''”

"காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அவசர அழைப்பால், அண்மையில் செல்வப்பெருந்தகை டெல்லிக்குப் பரபரப்பாகப் பறந்தார். இதுகுறித்து விசாரித்த போது, கட்சிக்குச் சொந்தமான காமராஜர் அறக்கட்டளைக்கு நிறைய சொத்துக்களும் பெருமளவில் டெபாஸிட்டும் இருக்கிறது. அந்த அறக்கட்டளைக்கும் தலைவராக மாநிலத் தலைவர் என்ற முறையில் செல்வப்பெருந்தகை இருந்து வருகிறார். இந்த சூழலில் தலைவர் என்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி, அறக் கட்டளைப் பணத்தை எடுத்து கட்சியின் பெய ரில் அவர் கண்ட மேனிக்குச் செலவு செய்துவரு கிறாராம். சிறுகச் சிறுக சேமித்த அறக்கட்ட ளைப் பணம், இப்படித் தாறுமாறாகக் கரைக் கப்படுவது வருத்தத்தைத் தரு

"ஹலோ தலைவரே.. தமிழக பெண் எம்.பி. ஒருவர், இலங்கை அதிபருக்கு எழுதிய கடிதம் ஒன்று சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.''”

"ஆமாம்பா, அது தொடர்பாக இலங்கை அரசு இந்தியாவிடம் புகார் சொல்லியிருப்பதாகவும் தகவல் வருதே?''”

ss

"உண்மைதாங்க தலைவரே, தமிழக காங்கிரஸில் இருக்கும் எம்.பி.க்கள் ஒன்பது பேரில் ஒருவர்தான் மயிலாடுதுறை சுதா. இவர் மீதுதான் இலங்கை அரசு, இந்தியாவிடம் புகார் செய்திருக்கிறதாம். சமீபத்தில் மீனவர் பிரச்சனை தொடர்பாக அவர், இலங்கையின் புதிய அதிபரான அனுரகுமார திசநாயகவுக்கு, ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அதில், இலங்கை அதிபரை, டியர் ப்ரதர் என்று விளித்திருந்தாராம். இது சாதாரண விசயம்போல் தெரிந்தாலும், ஒரு நாட்டின் அதிபரை இப்படிதான் டியர் ப்ரதர் என்று, புரோட்டகால் பற்றிக் கவலைப்படாமல் அழைப்பதா? என்ற புகாரோடு, அந்தக் கடிதத்தை இந்திய அரசுக்கு ஃபார்வேர்ட் பண்ணியிருக்கிறதாம் இலங்கை அரசு. இதனையடுத்து, சுதா எம்.பி. குறித்து ஒன்றிய உளவுத்துறை விசாரித்திருக்கிறது. மேலும், அவரது அதிகப் பிரசங்கித்தனம் குறித்த புகாரோடு அந்தக் கடித நகலை காங்கிரஸின் தலைமைக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அனுப்பிவைக்க, இதனால் காங்கிரஸும் சுதா மீது கோபத்தில் இருக்கிறதாம். இப்படி சுதா எம்.பி.யின் கடித சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்த சுதாவுக்குக் கொடுக்கும் அதிக முக்கியத்துவம்தான் அவரை ஏடாகூடமாக நடக்கவைக்கிறது என, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், கட்சியின் மேலிடத்திற்கு மற்றொரு புகாரையும் அனுப்பியிருக்கிறார்களாம்.''”

"காங்கிரஸ் தலைமை செல்வப்பெருந்தகையிடம் பண விவகாரம் குறித்து விசாரணை நடத்தியதாகவும் சொல்கிறார்களே?''”

"காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அவசர அழைப்பால், அண்மையில் செல்வப்பெருந்தகை டெல்லிக்குப் பரபரப்பாகப் பறந்தார். இதுகுறித்து விசாரித்த போது, கட்சிக்குச் சொந்தமான காமராஜர் அறக்கட்டளைக்கு நிறைய சொத்துக்களும் பெருமளவில் டெபாஸிட்டும் இருக்கிறது. அந்த அறக்கட்டளைக்கும் தலைவராக மாநிலத் தலைவர் என்ற முறையில் செல்வப்பெருந்தகை இருந்து வருகிறார். இந்த சூழலில் தலைவர் என்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி, அறக் கட்டளைப் பணத்தை எடுத்து கட்சியின் பெய ரில் அவர் கண்ட மேனிக்குச் செலவு செய்துவரு கிறாராம். சிறுகச் சிறுக சேமித்த அறக்கட்ட ளைப் பணம், இப்படித் தாறுமாறாகக் கரைக் கப்படுவது வருத்தத்தைத் தருகிறது’ என்று, அந்த அறக் கட்டளையின் மூத்த உறுப்பினர்கள் பலரும் ராகுல்காந்தியிடம் குமுறலோடு புகார் தெரிவித்தார்களாம். கூடவே, இதற்கு முன்பு கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த யாரும், இப்படி அறக்கட்டளைப் பணத்தில் கை வைத்ததில்லை என்பதையும் அவர்கள் ராகுல் கவனத்துக்குக் கொண்டுசென்றார்களாம். இத னால் டென்சனான ராகுல், இதை உடனடியாக விசாரிக்கச் சொல்லி கார்கேவிடம் கேட்டுக் கொண்டாராம். இதைத் தொடர்ந்துதான் செல்வப்பெருந்தகை டெல்லிக்கு அழைக்கப்பட் டாராம். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதோடு, அவரை கார்கே கடுமையாக எச்சரித்ததாகவும் சொல்கிறார்கள்.''”

"அ.தி.மு.க.வை கைப்பற்றத் துடிக்கும் சசிகலா, அதற்குப் பெரிய அளவில் பணம் புரட்டத் தயாராகிறார் என்கிறார்களே?''”

ss

"ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் பங்களா எதிரிலேயே, ஆடம்பர பங்களா கட்டி வசித்துவரும் சசிகலா, அங்கே ஆயுத பூஜையை விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். எடப்பாடியை ஓரம்கட்டிவிட்டு, அ.தி.மு.க.வைக் கைப்பற்ற சபதம் எடுத்திருக்கும் அவர், அது தொடர்பான டீலிங் மற்றும் பர்ச்சேஸ்களுக்கு அதிகப் பணம் தேவை என்பதால், தனது ’மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரீஸ்; மதுபான ஆலையை விற்க முன்வந்திருக்கிறாராம். இதையறிந்த அ.தி.மு.க. மாஜியான வேலுமணி, தான் அதை 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்வ தாகச் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். இதற்கிடையே அந்த ஆலையைக் கேட்ட ஆந்திர தொழிலதிபருக்குக் கொடுக்கா மல், வேலுமணிக்கே கொடுப்பதாக சசிகலா சொல்லியிருக்கிறாராம். இது அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.''”

"ஈஷா மைய ரகசியங்களை காவல்துறை ஆராய்ந்து வருகிறதாமே?''”

"அண்மையில் கோவை ஈஷா மையத்தில் நடந்த விசாரணையின் போது, அங்கே சென்றவர்களில் ஒருவர் ஏ.டி.எஸ்பி. சுரேஷ். இவர், மேற்சொன்ன அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணிக்கு நெருக்கமானவராம். அதனால், அங்கே நடந்த விசாரணைகள் கண் துடைப்புக்காக நடத்தப்பட்டது என்கிற பேச்சு அடிபடுகிறது. இருப்பினும் அந்த விசாரணையின்போது 150 பேப்பர் டாகு மெண்டுகளை போலீசார் எடுத்துகொண்டு வந்திருக்கிறார்களாம். இவற்றில், ஈஷாவுக்கு எதிரான பல அதிர்வூட்டும் ரகசியத் தகவல்கள் இருக்கின்றனவாம். அதனால் அவற்றைக் காவல்துறையினர் தற்போது சீரியஸாய் ஆய்வுசெய்து வருகிறார்களாம். இதைத் தொடர்ந்து ஈஷாவுக்கு எதிரான வில்லங்க விவகாரங்கள் விரைவில் வெடித்து வெளியே வரலாம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.''’

"தி.மு.க. கூட்டணியில் இருந்து கொண்டே, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தி.மு.க. அரசைக் கடுமையாக விமர்சித்துவருகிறாரே?''”

"தமிழக வாழ்வுரிமைக் கட்சி’ வேல்முருகன், அடுத்த அர்ஜுன் ரெட்டியாக மாறியிருக்கிறார் என்ற ஆதங்கப் பேச்சு தி.மு.க. தரப்பிடம் இருக்கிறது. அதாவது கூட்டணியில் இருந்துகொண்டே தி.மு.க. அரசு மீது குற்றம்சாட்டி குட்டையைக் குழப் பும் வேலையை அவர் ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள். அதற்குக் காரணம், ’தி.மு.க. அரசு சமூகநீதியைக் காற்றில் பறக்கவிடுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பைச் செய்ய மறுக் கிறது. இது தமிழர்களுக்கான அரசு அல்ல’ என்றெல்லாம் அவர் பகிரங்கப் புகார்களை அடுக்கி வருகிறார். இதுபற்றி விசாரித்தபோது, வேல்முருகனை எடப்பாடி சரிக்கட்டிவிட்டார். எனவே தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகும் முதல் கட்சியாக அவரது வாழ்வுரிமைக் கட்சி இருக்கும் என்கிறார்கள், அவர் தரப்பினரே.''”

"கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் சிக்கியவர்களுக்கு ஆரவாரமாக வரவேற்பு தரப்பட்டிருக்கிறதே?''”

”"கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் பெண் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ், கடந்த 2017 செப்டம்பரில், அவரது வீட்டு வாசலிலேயே வைத்து துப்பாக்கி யால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒன்றிய பா.ஜ.க. அரசைத் தொடர்ந்து விமர்சித்து வந்த இவரது படுகொலை, கருத்தாளர்களுக்கு விடுக் கப்பட்ட கடும் எச்சரிக்கையாகவே பார்க்கப் பட்டது. எனவே, அப்போதே இது நாடு முழு தும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கைதானவர்களில் முக்கியமான நபர்களான பரசுராம், மனோஹர் ஆகியோரை பெங்களூர் நீதிமன்றம் தற்போது ஜாமீனில் விடுவித்திருக்கிறது. சிறையிலிருந்து வெளியே வந்த அவர்களை மாலைகள் அணிவித்தும் பொன்னாடைகள் போர்த்தியும் தடபுடலாக வரவேற்ற இந்துத்துவா அமைப் பினர், அங்கே இருக் கும் காளிகாதேவி கோவிலுக்கும் அழைத் துச் சென்று சிறப்பு பூஜைகள் நடத்தி மகிழ்ந்திருக்கிறார்கள். இது மோடி அரசுக்கு எதிரான அதிருப்தி யை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வரு கிறது. இந்த நேரத்தில், லண்டன் சென்றிருக்கும் அந்த தமிழக பா.ஜ.க. தலைவர், தனது கட்சிப் பதவியை, ஆனந்தன் அய்யாசாமி என்கிற இளைஞருக்கு விட்டுக் கொடுக்க முன்வந்திருக்கிறா ராம். இது தமிழக பா.ஜ.க.வில் இருக்கும் வானதி சீனிவாசன், இராம.சீனிவாசன், கே.டி.ராகவன் ஆகிய சீனியர்களை டென்சனாக்கியிருக்கிறதாம்.''”

"ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், கால்நடைத் துறைக்குச் செல்ல, முட்டிமோதி வருகிறாரே?''”

"தமிழக அரசின் நீர்பாசன வேளாண்மை நவீனமாக்கல் துறையில் திட்ட அதிகாரியாக, கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்து கொண்ட டி.எஸ்.ஜவஹர் இருக்கிறார். இது டம்மி போஸ்டிங் என்பதால், கால்நடைத்துறை யின் கூடுதல் தலைமைச் செயலாளராக வர வேண்டும் என பகீரத முயற்சி எடுத்துவருகிறா ராம் ஜவஹர். இதற்காக, தலைமைச் செயலாளர் முருகானந்தத்தைச் சந்தித்து, இந்திய குடியரசு தலைவரின் செயலாளராக இருப்பவர் எனக்கு நெருங்கிய நண்பர். அவர் மூலம், தமிழக அரசுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்ய முடியும். அதற்கு ஏதுவாக, கால்நடைத்துறை செயலாளராக என்னை நியமியுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்.''”

"ஆமாம், எதனால் அவர் கால்நடைத் துறையைக் கேட்கிறாராம்?''”

"இதுகுறித்து நாம் விசாரித்தபோது, தமிழகத்தில் கால்நடை மருத்துவர்கள் ஆயிரக் கணக்கில் இருக்கிறார்கள். இவர்கள் அரசு பணியிலும், தனியார் பணியிலும் உள்ளனர். இவர்களுக்கென்று சங்கமும் இருக்கிறது. இவர்கள், இனி தங்களை வெட்னரி டாக்டர்ஸ் என்று அழைக்காமல் வெட்னரி ஸயின்டிஸ்ட் என அழைக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே அரசிடம் கோரிக்கை வைத்தபடி இருந்தார்கள். ஆனால், இதை தமிழக அரசு ஏற்க மறுத்துவிட்டது. எனினும் மீண்டும் இதே கோரிக்கையை அரசிடம் கொண்டு செல்ல முயன்றுவருகிறார்கள். ஏற்கனவே, கால் நடை மற்றும் பால்வளத்துறை செயலாளராக இருந்த இந்த ஜவஹர், அந்தத் துறைகளில் நடத்திய ஊழல் விவகாரங்களால் மாற்றப்பட் டார். அவர் கால்நடைத்துறையில் இருந்தபோது, வெட்னரி டாக்டர்ஸ் அசோசியேசனுடன் மிகுந்த நெருக்கம் பாராட்டிவந்தார். அந்த வகையில், தங்களின் கோரிக்கையை அவரிடம் அசோசியேசன் நிர்வாகிகள் சொல்ல, உங்கள் கோரிக்கையை நான் முடித்துத் தருகிறேன். அதற்கு முதலில் நான் கால்நடைத்துறைச் செய லாளராக ஆகப்போகிறேன் என்று உறுதி கொடுத் தாராம். அதற்காகவும் அவர் கால்நடைத்துறை யை கேட்டுப் போராடுவதாகச் சொல்கிறார்கள்.''

"சென்னை காவல்துறைக்கு மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பப் போவதாகச் சொல்லப்படுகிறதே?''”

"ஆம்ஸ்ட்ராங் படுகொலை நடந்த சமயத் தில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக அருண் ஐ.பி.எஸ். பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது, ’இனி ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரவுடிகளில் திருவேங்கடம், சீசிங் ராஜா ஆகியோரோடு, பல்வேறு குற்ற வழக்கு களில் தொடர்புடைய காக்கா தோப்பு பாலாஜி யும் என்கவுன்டர் செய்யப்பட்டார். அடுத் தடுத்து நடந்த இந்த என்கவுன்டர்களுக்கு எதிராக மாநில மனித உரிமை ஆணையத்தில், சம்பந்தப்பட்ட ரவுடிகளின் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை ஆராய, ஒரு குழுவை நியமித்த ஆணையம், விரைந்து ரிப்போர்ட் தருமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருணுக்கு சம்மன் அனுப்ப மனித உரிமைகள் ஆணையம் திட்ட மிட்டிருப்பதாவும் தகவல் கசிகிறது. இதற் கிடையே, சென்னை கமிஷனராக இருந்த சந்தீப்ராய் ரத்தோர், சோமசெட் என்கிற ஒரு ஓட்டலில் வைத்து, கிரிமினல் நபர் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி காவல் துறையில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.''”

er

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். நடிகர் விஜய்யின் ’தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, வருகிற 27ஆம் தேதி விக்கிர வாண்டியில் நடக்க இருக்கும் நிலையில், அது தொடர் பான பணிகளை விஜய் முடுக்கிவிட்டு வருகிறார். மேலும் கட்சி நிர்வாகிகள், மாநாட்டு நிர்வாகிகள் தவிர, இந்த மாநாட்டுப் பணிகளை தொகுதி வாரியாக ஒருங்கிணைக்க, தமிழகத்தின் 234 சட்ட மன்றத் தொகுதிக்கும் தற்காலிகப் பொறுப் பாளர்களையும் விஜய் நியமித்திருக்கிறார். அதற்கான அறிவிப்பு அக்கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸிஆனந்த் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒரு மாநாட்டுக்கு இத்தனை பொறுப்பாளர் களா? என அந்தப் பட்டியலைப் பார்த்து அந்தக் கட்சியில் உள்ளவர்களே திகைக் கிறார்களாம்.''

____________

இறுதிச் சுற்று!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை செவ்வாய்க்கிழமை தொடங்குவதையடுத்து சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ள பேரிடர் மீட்புப் படையினர் தயாராக இருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது தி.மு.க. அரசு. இந்த நிலையில், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் திங்கள் கிழமை (14-10-24) காலை அவசர ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார் முதல்வர் ஸ்டாலின். மேலும், சென்னையில் ஒவ்வொரு பகுதிகளையும் கண்காணித்து, தேவையான நட வடிக்கைகளை உடனுக்குடன் எடுப்பதற்காக பகுதி வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கவும் தலைமைச்செயலாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி, பகுதிவாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப் பட்டனர். இந்த உத்தரவையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி கள் களத்தில் குதித்துள்ளனர். சென்னை மாநகராட்சி நிர்வாகம் தனது பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது.

-இளையர்

nkn161024
இதையும் படியுங்கள்
Subscribe