ஜெயலலிதாவால் "உடன்பிறவா சகோதரி' என அழைக்கப்பட்ட சசிகலாவை, அவரது உடன்பிறந்த சகோதரரான திவாகரன் "முன்னாள் சகோதரி' என அழைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
"இந்த மோதலின் உண்மையான பின்னணி... சொத்து விவகாரம்தான்' என்கிறது மன்னார்குடி வட்டாரம்.
சசிகலாவின் ஒட்டுமொத்த குடும்பமே இன்கம்டாக்ஸ் வலையில் சிக்கித் தவிக்கிறது. அதில் பெருமளவில் சிக்கிக்கொண்டது விவேக்கின் குடும்பம்தான். விவேக் இன்கம்டாக்ஸ் என்றாலே அலறுகிறார். விவேக் வீட்டில் ரெய்டு நடத்திய இன்கம்டாக்ஸ் அதிகாரி சொன்னார் என்பதற்காக மதுரையில் வேலை பார்த்துவந்த ஜெயா டி.வி. ஊழியரை சென்னைக்கு மாற்றியதோடு அவரை அதிக அதிகாரமுள்ள பதவியில் அமரவைத்து அழகு பார்க்கிறார். அந்த அளவிற்கு வருமானவரித்துறைக்கு பயந்து நடுங்குகிறார் விவேக் என்கிறார்கள் ஜெயா டி.வி.யைச் சேர்ந்தவர்கள்.
எப்படியாவது பா.ஜ.க.வுடன் நெருக்கமாக உள்ள எடப்பாடியுடன் இணைந்து தனது சொத்துகளை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் விவேக்கின் ஆசை. அதற்காக சில முயற்சிகளையும் எடுத்தார். ஆனால் அந்த முயற்சிகளை இளவரசி மூலம் சசிகலா தடுத்த
ஜெயலலிதாவால் "உடன்பிறவா சகோதரி' என அழைக்கப்பட்ட சசிகலாவை, அவரது உடன்பிறந்த சகோதரரான திவாகரன் "முன்னாள் சகோதரி' என அழைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
"இந்த மோதலின் உண்மையான பின்னணி... சொத்து விவகாரம்தான்' என்கிறது மன்னார்குடி வட்டாரம்.
சசிகலாவின் ஒட்டுமொத்த குடும்பமே இன்கம்டாக்ஸ் வலையில் சிக்கித் தவிக்கிறது. அதில் பெருமளவில் சிக்கிக்கொண்டது விவேக்கின் குடும்பம்தான். விவேக் இன்கம்டாக்ஸ் என்றாலே அலறுகிறார். விவேக் வீட்டில் ரெய்டு நடத்திய இன்கம்டாக்ஸ் அதிகாரி சொன்னார் என்பதற்காக மதுரையில் வேலை பார்த்துவந்த ஜெயா டி.வி. ஊழியரை சென்னைக்கு மாற்றியதோடு அவரை அதிக அதிகாரமுள்ள பதவியில் அமரவைத்து அழகு பார்க்கிறார். அந்த அளவிற்கு வருமானவரித்துறைக்கு பயந்து நடுங்குகிறார் விவேக் என்கிறார்கள் ஜெயா டி.வி.யைச் சேர்ந்தவர்கள்.
எப்படியாவது பா.ஜ.க.வுடன் நெருக்கமாக உள்ள எடப்பாடியுடன் இணைந்து தனது சொத்துகளை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் விவேக்கின் ஆசை. அதற்காக சில முயற்சிகளையும் எடுத்தார். ஆனால் அந்த முயற்சிகளை இளவரசி மூலம் சசிகலா தடுத்துவிட்டார்.
சசிகலா சாம்ராஜ்யத்தின் சொத்துகள் எங்கே இருக்கிறது, யார்... யார் கையில் எவ்வளவு இருக்கிறது என்ற விவரம்... நடராஜன், சசிகலாவுக்கு அடுத்தபடியாக விவேக்குக்குத்தான் தெரியும் என்பதால் விவேக்கை குறிவைத்த வருமானவரித்துறை அவரை நெருக்குகிறது. மறுபக்கம் சசிகலா வகையறாக்களின் சொத்துக்களை விற்று கட்சி நடத்த பணம் கொடு என தினகரன் தரப்பு விவேக்கை நெருக்குகிறது. அவரை, "நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்' என திவாகரன் கையகப்படுத்தி வைத்துள்ளார். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.
ஜெயா டி.வி.யை சொந்தமாக வைத்திருக்கும் மாவிஸ் டாட்காம் என்கிற நிறுவனத்தின் இயக்குநராக இருப்பவர் தினகரனின் மனைவி அனுராதாவின் சகோதரரான டாக்டர் வெங்கடேஷ். ஆனால் ஜெயா டி.வி.யை நிர்வகிப்பவர் விவேக். இவர்கள் இருவரும் மோதிக்கொண்டதால் ஜெயா டி.வி. ஊழியர்களுக்கு கடந்த ஆறு வருடமாக சம்பளமே உயர்த்தப்படவில்லை. அதனால் ஜெயா டி.வி.யை அனுராதாவிற்கு கொடுத்துவிடு என தினகரன் குரல் உயர்த்தினார். அதேபோல் ஜெ., மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை வெற்றிவேல் மூலம் வெளியிட்டார் தினகரன்.
விவேக்கின் தங்கை கிருஷ்ணப்ரியாவிடமிருந்து தினகரன் வாங்கிய அந்த வீடியோவை வெளியிட்டதில் விவேக்கிற்கும் தினகரனுக்கும் நேரடியாகவே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல்களையெல்லாம் சரிக்கட்ட நினைத்த சசிகலா முதல் முறை பரோலில் வந்தபோது அனைத்துச் சொந்தங்களையும் உட்காரவைத்துப் பேசினார். அப்போது அவர் சொன்னதை சசி சொந்தங்கள் கேட்டுக்கொண்டன. ஆனால் நடராஜன் இறந்தபிறகு இரண்டாவது முறை பரோலில் சசிகலா வந்தபோது நிலைமை மாறியிருந்தது. அப்போது சசி சொல்வதை தினகரன், திவாகரன், விவேக் என யாரும் கேட்கத் தயாராக இல்லை. அந்த மோதலின் தொடர்ச்சிதான் தற்பொழுது நடக்கும் உச்சகட்ட மோதல் என்கிறார்கள் மன்னார்குடி வகையறாக்கள்.
தினகரன் அ.ம.மு.க.வை ஆரம்பித்து சசி குடும்பத்து பினாமிகளை ஒருங்கிணைக்க முயன்றார். ஆனால் சசி குடும்பத்துப் பினாமியான வைகுண்டராஜன் அவரது ஆதரவாளரான சசிகலா புஷ்பா எம்.பி. ஆகியோரை மட்டுமே தினகரனால் வெற்றிகரமாக கொண்டுவர முடிந்தது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள சசிகலாவின் சொத்துகளையும் பினாமிகளையும் திரட்டித் தந்தார் வைகுண்டராஜன். கொங்கு மண்டலத்தில் இருந்த சசிகலாவின் பினாமிகளும், தென் மாவட்டங்களில் உள்ள பினாமிகளும் தினகரனின் பக்கம் வரவில்லை. தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட சசிகலாவின் பணத்தொடர்புகள் திவாகரன் பக்கம் ஒதுங்கிக்கொண்டன.
இதனால் டென்ஷனான தினகரன், திவாகரனிடம் கட்சி நடத்த பணம் கேட்டுப் பேசினார். அதற்கு திவாகரன், ""இப்பொழுது சசிகலா ஆயிரம் கோடிவரை விவேக் மூலம் உனக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார்... அந்தப் பணத்தை நீயும் உனது மனைவி அனுராதாவும் உன் மச்சான் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் மட்டுமே அனுபவித்து வருகிறீர்கள். அதைத்தாண்டி உங்களுக்கு நாங்கள் ஏன் பணம் தரவேண்டும்' என எதிர்க்கேள்வி கேட்டதோடு, சசிகலாவின் சொந்த பந்தங்களையும் தினகரனுக்கு எதிராகத் திருப்பினார். அத்துடன் விவேக்கையும் தன் பக்கம் இழுத்து தினகரனை நிர்மூலமாக்க முயன்றார். விவேக்கும் தனது இன்கம்டாக்ஸ் தொல்லையிலிருந்து தப்ப திவாகரனுடன் கைகோர்க்கிறார். இதைப் பார்த்த தினகரன், விவேக்கிடம் சசிகலா மூலம் பேசி அவரை நடுநிலை வகிக்க வைத்தார்.
இந்த மோதல் முற்றிய நிலையில் தினகரனுக்கு எதிராக திவாகரன் பேச... அவரை சசிகலா மூலம் அறிக்கை வெளியிட வைத்து அடக்கினார் தினகரன் என... மோதலின் பின்னணி பணம் என்பதை விளக்கினார்கள் சொந்தபந்தத்தினர்.
""திவாகரனை விட்டு சசிகலா ஒருபோதும் விலகமாட்டார். சசிகலா கஷ்டப்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்துவரும் திவாகரனுடனான சசியின் பந்தம் அப்படிப்பட்டது. சசியின் உடன்பிறந்தவர்களில் திவாகரனைத் தவிர மற்ற அனைவரும் சசியைவிட மூத்தவர்கள். தனக்கு இளையவரான திவாகரன் மீது சசிக்கு தனி பாசம் உண்டு. தினகரன் பக்கம் உள்ள 18 எம்.எல்.ஏ.க்களில் திவாகரன் தனக்கான ஸ்லீப்பர்செல்களை வைத்துள்ளாராம். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு குறித்த தீர்ப்பு வரட்டும்... அப்பொழுது ஸ்லீப்பர் செல்கள் வெளிப்படும் என்கிறது திவாகரன் தரப்பு. திவாகரன் தனது பேட்டியில், வெற்றிவேல்தான் பிளவுக்கு காரணம் என்கிறார். அதிலிருந்தே சசிகலாவிடமிருந்து அவர் எவ்வளவு தனிமைப்பட்டுவிட்டார் என்பது தெரிகிறது. எடப்பாடி அமைச்சரவையில் உள்ள பல மந்திரிகள் இந்த சண்டைக்குப் பிறகு நேரடியாக தினகரனுடன் பேச ஆரம்பித்துவிட்டார்கள்'' என்கிறது தினகரன் தரப்பு.
-தாமோதரன் பிரகாஷ், மகி