வரலாற்று உண்மைகளை நசுக்கும் பாஸிஸ்ட்டுகள்! -மஹூவா மொய்த்ரா

aa

தி.மு.க. மாணவரணி சார்பில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய இரு தினங்கள் கல்வி, சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்குபெற்ற இந்த மாநாட்டில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், தேசிய செய்தித் தொடர்பாளருமான மஹூவா மொய்த்ரா கல்வி காவிமயமாவதை அடையாளம்காட்டிப் பேசினார்:

"திராவிட இயக்கம் ஏற்பாடு செய்த மேடையில் நாங்கள் நின்றுகொண்டிருக்கிறோம். இந்த இயக்கம் செப்டம்பர் 17, 1949-ல் உருவானது. இந்தியாவில் முதன்முதலில் சமூக நீதிக்கான பாதையை இந்த இயக்கம் போட்டது.

aaa

ஜார்ஜ் ஆர்வெல், சூப்பர்ஸ்டேட் என்பதை மையமாகக் கொண்டு, அநீதிக்கு ஆளாகும் நாட்டைப் பற்றிய ஒரு சமூக அறிவியல் கதையை எழுதி னார். அதன் தலைப்பு 1949. அவர் தனது நாவலுக்கு இந்தத் தலைப்பு வைத்தது தற்செயலாகத்தான் இருக்கவேண்டும். அந்த நாட்டின் பெயர் ஓசியானியா. அந்த நாடு இங்சாக் எனும் சில தலைவர்களால் கட்டுப்படுத்தப்பட்டது. அவர்கள் நியூ ஸ்பீக் எனும் மொழியை உருவாக்க விரும்பினர்.

அங்கே நான்கு அமைச்சரவைகள் இருந்தன. அமைதி, அன்பு, உண்மை, பிரச்சாரம். அமைதிக் கான அமைச்சரவை போரைக் கையாளும். அன்பு பற்றிய அமைச்சரவை சித்ரவதைகளைக் கையாளும். உண்மை பற்றிய அமைச்சரவை முழுக்க பொய்களைக் கையாளும். பிரச்சார அமைச்சரவை யின் கீழ், உண்மை அமைச்சரவை வரும்.

எல்லா நேரமும் ஓசியானியாவின் குடிமக்கள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்பட்டனர். இன்றைய இந்தியாவில் இதைத்தான் நாமும் எத

தி.மு.க. மாணவரணி சார்பில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய இரு தினங்கள் கல்வி, சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்குபெற்ற இந்த மாநாட்டில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், தேசிய செய்தித் தொடர்பாளருமான மஹூவா மொய்த்ரா கல்வி காவிமயமாவதை அடையாளம்காட்டிப் பேசினார்:

"திராவிட இயக்கம் ஏற்பாடு செய்த மேடையில் நாங்கள் நின்றுகொண்டிருக்கிறோம். இந்த இயக்கம் செப்டம்பர் 17, 1949-ல் உருவானது. இந்தியாவில் முதன்முதலில் சமூக நீதிக்கான பாதையை இந்த இயக்கம் போட்டது.

aaa

ஜார்ஜ் ஆர்வெல், சூப்பர்ஸ்டேட் என்பதை மையமாகக் கொண்டு, அநீதிக்கு ஆளாகும் நாட்டைப் பற்றிய ஒரு சமூக அறிவியல் கதையை எழுதி னார். அதன் தலைப்பு 1949. அவர் தனது நாவலுக்கு இந்தத் தலைப்பு வைத்தது தற்செயலாகத்தான் இருக்கவேண்டும். அந்த நாட்டின் பெயர் ஓசியானியா. அந்த நாடு இங்சாக் எனும் சில தலைவர்களால் கட்டுப்படுத்தப்பட்டது. அவர்கள் நியூ ஸ்பீக் எனும் மொழியை உருவாக்க விரும்பினர்.

அங்கே நான்கு அமைச்சரவைகள் இருந்தன. அமைதி, அன்பு, உண்மை, பிரச்சாரம். அமைதிக் கான அமைச்சரவை போரைக் கையாளும். அன்பு பற்றிய அமைச்சரவை சித்ரவதைகளைக் கையாளும். உண்மை பற்றிய அமைச்சரவை முழுக்க பொய்களைக் கையாளும். பிரச்சார அமைச்சரவை யின் கீழ், உண்மை அமைச்சரவை வரும்.

எல்லா நேரமும் ஓசியானியாவின் குடிமக்கள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்பட்டனர். இன்றைய இந்தியாவில் இதைத்தான் நாமும் எதிர்கொண்டபடி இருக்கிறோம்.

இங்கே பேசுபவர்கள் ஒவ்வொருவருக்கும் கூட்டாட்சி, சமூக நீதி என ஒவ்வொரு தலைப்பு வழங்கப்பட்டது. காவிமயமாகும் கல்வி என்ற தலைப்பை நான் எடுத்துக்கொண்டேன். வரலாற்றை வாசிக்கும்போது, உலகெங்குமுள்ள பாஸிஸ்ட்டு கள், கல்வியைக் கட்டுக்குள் கொண்டுவருவதையே விரும்புகிறார்கள். ஏன்? பாஸிஸ்ட்டுகள் கல்வித் துறையில் ஆர்வம், அறிவியல் ஈர்ப்பை நசுக்க விரும்புகிறார்கள். வரலாற்று விவரணையை அழிக்க விரும்புகிறார்கள். இறந்த காலத்தைக் கட்டுப் படுத்துபவர்களே எதிர்காலத்தைக் கட்டுப் படுத்தமுடியும். அவர்கள், பாடப்புத்தகம் உண்மையான வரலாற்றைப் பிரதிபலிப்பதை விரும்புவதில்லை.

இறந்தகாலத்தில் இந்தியா மோசமான சிறுபான்மையினரால் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த இந்தியாவை இழந்துவிட்டோம் என்று திரும்பத் திரும்ப அவர்கள் வலியுறுத்துகிறார்கள். இளைய தலைமுறையினரை, குடிமக்களைக் கொதிப்பிலிருக்க விடுகின்றனர். பிறகு மக்கள் அந்தக் கண்ணுக்குத் தெரியாத எதிரியோடு எல்லா நேரமும் மோதலில் ஈடுபடுகின்றனர்.

அனைத்து பாஸிஸமும் ஆரம்பப் பாட சாலைகளில் இருந்தே தொடங்கிவிடுகிறது. ஆரம்பப் பள்ளிகள், பாடப்புத்தகங்கள், வகுப்பறைகள், பல்கலைக்கழகம், தேர்வறைகள் என நீள்கிறது.

aa

ஹிட்லர் மிக ஆரம்பத்திலே ஒரு விஷயத்தை உணர்ந்திருந்தான். கல்வியையும் கல்வி அமைப்பு களையும் கட்டுப்படுத்தினால், கட்டுப்பாடான, எதிர்த்துப்பேசாத, அடங்கிநடக்கும், குடிமக்களை உருவாக்கலாம் என தெரிந்திருந்தான். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு இந்திய மக்களிடம் செய்யவிரும்புவதும் இதைத்தான். நீங்கள் அரசுக்கெதிராக குரலை உயர்த்தினால், தீவிரவாதி, கலகக்காரர். பிறகு உங்கள் மீது வழக்கு, சிறை.

2004-ல் மோடியின் குஜராத் அரசில் எட்டாம் வகுப்பில், ஒத்துழையாமை இயக்கம் பற்றி எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும் விதத்தில் பாடங்கள் உருவாக்கப்பட்டன. மாறாக, ஹிட்லரை உயர்வாக எண்ணும்படியாக பாடங்கள் வைக்கப்பட்டன. குறுகிய காலத்தில் ஹிட்லர், ஜெர்மன் மக்களுக்கு கௌரவத்தையும் உயர்வையும் கொண்டுவந்தான். மகத்தான ஜெர்மனியைத் தோற்றுவித்தான். அவன் ரயில்வே, பொதுக் கட்டடங்களைக் கட்டினான். ஆனால், 60 லட்சம் யூதர்களுக்கு பேரழிவைக் கொண்டுவந்த தற்கு அழுத்தம் தரப்படாது.

2014 முதல் இந்தியாவின் கல்வி நிறுவனங் களில் ஹிட்லரின் ஜெர்மனி நிலைமைகள் உருவாகிவருகிறது. அனைத்து வரலாற்று உண்மை களும் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக புராண இந்தியாவை விதந்தோதுவது மிகவிரைவாக புகுத்தப்படுகிறது. விநாயகரின் தலை அகற்றப்பட்டு, யானைத் தலை வைத்த புராணத்தைச் சொல்லி, புராண இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததாகக் கற்றுத்தருகிறார்கள்.

2019 இந்திய அறிவியல் மாநாட்டில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உண்மை யான டெஸ்ட் டியூப் பேபி குழந்தைகள் உருவாக்கப்பட்டன. என பேசினார்கள். நம்பமுடிகிறதா?.

2017-ல், பா.ஜ.க. ராஜஸ்தான் அரசில், சுதந் திரப் போராட்டத்தில் வினய் தாமோதர சாவர்க் கரின் பங்கு என்ன என்ற கேள்வி வைக்கப்படு கிறது. நானறிந்து, அந்தமான் சிறைச்சாலையில் இருந்தபடி தன்னை மன்னிக்கச் சொல்லி கடிதம் எழுதியது தான் சுதந்திரப் போரில் அவர் ஆற்றிய பங்கு.

புதிய சமூக அறிவியல் புத்தகங்களில், காந்தியின் படுகொலை அகற்றப்பட்டது. கோட்சே காந்தியைக் கொன்றார் என்ற உண்மை அகற்றப்பட்டிருக்கிறது. 2002 குஜராத் கலவரம், பசுப் பாதுகாப்பு அமைப்புகள், மாட்டிறைச்சிக்குத் தடை இவையெல்லாம் சேர்க்கப்படவில்லை.

மாறாக, பணமதிப்பிழப்பு நிகழ்வை, இந்தியாவின் மாபெரும் கறுப்புப் பண நீக்க இயக்கம் என்று சொல்லி சேர்த்திருக்கிறார்கள். 12-ஆம் வகுப்பு புத்தகத்தில் அசைவ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். பதஞ்சலி, பாபா ராம்தேவைப் பற்றிய பாடமொன்றைச் சேர்த்திருக்கிறார்கள் சல்வார்கமீஸில் தன்னை மறைத்துக்கொண்டு, மேடையிலிருந்து குதித்து தப்பியோடி காரில் ஏறி மறைந்ததுதான் என் நினைவில் இருக்கிறது. இன்று அவர் பல லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள தொழில் ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கின்றார். பதஞ்சலி பொருட்களை வாங்குவது சுதேசி இயக்கம், தேசியம் என்ற போர்வையில் விளம்பரம் செய்யப்படுகின்றன.

2017, ஆகஸ்ட் 17-ல் மகாராஷ்டிர அரசு 8, 9-ஆம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்திலிருந்து மொகலாயர்களைப் பற்றிய பாடங்களை நீக்கியிருக்கிறது. நீக்குவதால் அவர்கள் நம்மை ஆட்சிசெய்யவில்லையென ஆகிவிடாது. பதிலாக ஒன்பதாம் வகுப்பு புத்தகத்தில் போபர்ஸ் ஊழல், 1975-ல் இந்திராகாந்தி யின் அவசரநிலைப் பிரகடனம் பற்றி சேர்த்திருக்கிறார்கள்.

ராஜஸ்தான் பல்கலைக்கழகம், மகா ராணா பிரதாப், அக்பரை போரில் தோற்கடித்தார் என பதிவுசெய்திருக்கிறது. திரும்பத் திரும்ப இதுபோல செய்தால் சிலர் அதை நம்பத் தலைப்படுவார்கள். திரும்பத் திரும்பச் சொல்லப்படும் பொய் உண்மையாவதுபோல. இதுதான் நியூ ஸ்பீச்.

வேத காலம், வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தை, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் பற்றி, இந்தியாவின் நிதியமைச்சரைப் பற்றி பாடப்புத்தகங்களில் சேர்த்திருக் கிறார்கள். ராதாகிருஷ்ணன், சரோஜினி நாயுடுவைப் பற்றிய பாடங்களை நீக்கிவிட்டு தற்போதைய நிதியமைச்சர் பற்றி சேர்த்திருக்கிறார்கள். இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் பற்றி சேர்ப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அவர்கள் நீக்கிய விஷயங்களில்தான் எனக்கு உடன்பாடில்லை.

திருவள்ளுவரைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. அவரை ஒரு காவித் துறவியாக மாற்றிவைத்திருக்கிறார்கள். திருநீறு பூசி, காவியுடுத்தி, ருத்ராட்சம் அணிவித்து அவரது தோற்றத்தைச் சித்தரிக்கிறார்கள். விமர்சனம் செய்து அவனது தவறைச் சுட்டிக்காட்ட ஆளில்லாத மன்னன், எதிர்க்க ஆளில்லாதபோதும் அழிந்துபோவான் என்கிறது 448-வது குறள். அதற்கு நமது பிரதமரும் விதிவிலக்கில்லை. பிரதமர் மேலும், அவரது நாற்காலி மேலும் எனக்கு மரியாதை இருக்கிறது. அது வேறு விஷயம். எப்போது பார்த்தாலும், யார் மோடியை எதிர்கொள்ள முடியும் என்கிறார்கள் ஆளும்கட்சியினர். அதைத்தான் அந்தக் குறளில் வள்ளுவர் சொல்லியிருக்கிறார். வரலாறும் திரும்பத் திரும்ப அதைத்தான் நிரூபித்திருக்கிறது.

நான் சொன்னதை, முதல்வர் ஸ்டாலின் சொன்னதை, மேடையில் பேசுபவர்கள் சொன்னதைப் பற்றி மாணவர்களாகிய நீங்கள் சிந்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் உங்களுக்கு உத்திரவாதம் அளித்துள்ளவற்றை நீக்கினால் இந்தியா நீடித்திருக்காது.

nkn180522
இதையும் படியுங்கள்
Subscribe