8 வழிச் சாலைத் திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத் திய முறையே தவறு என்றும், அதற்கான அரசாணை யை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட, விவசாயி களை நசுக்குவதில் குறியாக இருந்துவருகிறது அரசு. இந்த நிலையில்தான், எட்டுவழிச் சாலைக்கான நில எடுப்பு வருவாய் அலுவலர் குழந்தைவேலு தலைமை யில், கடந்த 23-1-2019-ஆம் தேதியன்று, சேலத்தை அடுத்த மாசிநாயக்கன்பட்டியில் கருத்து கேட்பு கூட் டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலையில் அமர்ந்து அறவழியில் போராட்டம் நடத்தினர்.

p

அந்த போராட்டத்திற்கு வெடிகுண்டு தடுப்புப்பிரிவு காவல்துறையினரும் வரவழைக்கப் பட்டிருந்தனர். மெட்டல் டிடெக்டர் வைத்து விவசாயிகளை சோதனை செய்தனர். ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களின்போது -குறிப்பாக விவசாயிகளின் போராட்டங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் எல்லாம் நுழைந்ததை அப்போது வரை பத்திரிகையாளர்கள்கூட அறிந்திடாத நடைமுறை. கியூ பிரிவு காவல்துறையினரும் போராட்டங்களை செல்போனில் பதிவு செய்தனர்.

இது ஒருபுறம் இருக்க, 2019 ஆகஸ்ட் 4-ஆம் தேதியன்று, சேலத்தில் அரசுப் பொருட்காட்சியைத் தொடங்கி வைக்க வந்த எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் மனு அளிப்பதற்காக எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் ஐம்பதுக் கும் மேற்பட்டோர் திரண்ட னர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை, நான்கு மணி நேரமாக வெட்ட வெளியில் மண் தரையில் அமரவைத்து திருப்பி அனுப்பியது.

Advertisment

pp

இவ்விரு சம்பவங்கள் முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில், மாசிநாயக்கன் பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 10 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய் துள்ளது காவல்துறை. இவர்கள் மீது இ.த.ச. பிரிவு 143 (சட்ட விரோத கும்பலின் உறுப்பினராக இருத்தல்), பிரிவு 341 (சட்ட விரோதமாக தடுத்து வைத்தல்), பிரிவு 353 (பொது ஊழியரை கடமையைச் செய்ய விடாமல் தடுத்தல்), பிரிவு 332 (பொது ஊழியரை கடமையைச் செய்ய விடாமல் தடுக்கும் நோக்கில் தன்னிச்சையாக காயம் விளைவித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, அரசுப் பொருட்காட்சி துவக்க விழாவன்று போராட்டம் நடத்தியதாக 12 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் என்ன வேடிக்கை என்றால், வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் சின்னதம்பி மகன் பழனிசாமி, கலா மற்றொரு கலா என மூன்று போலியான நபர்களின் பெயர்களையும் இணைத்திருக்கிறார்கள் காவல்துறையினர்.

Advertisment

இந்த பொய் வழக்குகள் தொடர்பாக, சேலம் மாவட்டம் பூலாவரி கூமாங்காட்டில் வசிக்கும் விவசாயி மோகனசுந்தரம் நம்மிடையே பேசியபோது, ""காவல்துறை மூலம் வழக்குப்போட்டு பயமுறுத்த நினைக்கிறார்கள். இத்தனைக்கும் எங்கள் மீது வழக்கு எதுவும் பதியக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக நீதிமன்றத்தில் தடையாணையும் பெற்றிருக்கிறோம். அப்படியிருந்தும் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். எத்தனை வழக்குப் போட்டாலும் எட்டுவழிச்சாலைக்காக ஒரு பிடி மண்ணைக் கூட விட்டுத்தரப் போறதில்ல''’என்றார் அழுத்தமாக. மேலும், ""இந்த வழக்கில் போலியான சிலரையும் காவல்துறையினர் சேர்த்து இருக்கிறார்கள். அவர்களை எப்படித்தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்களோ?'' என்று கேள்வி எழுப்பினார்.

pp

குள்ளம்பட்டி பன்னீர்செல்வம் நம்மிடம், ""விவசாயிகள் மறியல் போராட்டத்தில் 40 முதல் 50 பேர்தான் இருந்தோம். ஆனால், 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இருந்தார்கள். மறியலில் ஈடுபட்ட ஒவ்வொரு விவசாயியையும் நாலைந்து போலீசார் தூக்கிச்சென்று அப்புறப்படுத்தினர். அப்படி இருக்கும்போது நாங்கள் எப்படி அவர்களுக்கு காயத்தை விளைவிக்க முடியும்?''’என கொந்தளித்தார் .

குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள சின்னகவுண்டா புரம் விவசாயி சிவகாமி, ""எங்களை சமூக விரோதிகள் போல சித்தரிக்க வேண்டும் என்று காவல்துறை முன்பே திட்டமிட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதனால்தான் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினரையும் வரவழைத்திருக்கிறார் கள்...''’’என்கிறார்.

pp

அறவழியில் போராடி வரும் விவசாயிகள் மீதான காவல்துறை நடவடிக்கை சரியானதுதானா? என்று மூத்த வழக்கறிஞர் பவானி பா.மோகனிடம் கேட்டபோது,

""இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19 (1) (ஏ) ன் படி, எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத் துரிமை, ஆயுதமின்றி கூடும் உரிமை ஆகியவை நமது அடிப்படை உரிமை. அரசாங்கம் என்பது வேறு. அரசு என்பது வேறு. மோடி அரசாங்கத் தின் என்.ஆர்.சி.யை எதிர்த்துப் போராடுவதும், எடப்பாடியின் எட்டு வழிச்சாலையை எதிர்த்துப் போரா டுவதும் மக்களின் அடிப்படை உரிமை ஆகும். இந்த அரசாங்கத்தின் தவறான கொள்கையை எதிர்த்து போராடலாம் தப்பில்லை.

பிரிவு 21, வாழ்வுரிமை பற்றி பேசுகிறது. நல்ல தண்ணீர், நல்ல காற்று, நல்ல உணவு, நல்ல வேலை கொடுப்பது அரசின் பொறுப்பு. அதைக் கேட்டுப் போராடுவது நமது உரிமை. அதைத் தர வேண்டியது அரசின் கடமை. ஆகையால் வாழ் வுரிமை பறிக்கப்படுகிறபோது போராடுவதில் தவறில்லை. மக்கள் உரிமைகளுக்காக அரசாங்கத்தைப் பற்றி கடுமையான வார்த்தைகளால் பேசினால்கூட தவறில்லை என்று நீதிமன்றம் சொல்கிறது'' என்கிறார் அழுத்தமாக.

-இளையராஜா