மத்திய அரசு நிறைவேற்றிய விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்களுக்கு எதிராக நாடெங்கும் போராட்டங்கள் வெடித்துவருகின்றன. முக்கியமாக ஹரியானா மற்றும் பஞ்சாப்பில் விவசாயிகள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆரம்பமே குளறுபடி!
கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி கூடிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் விவசாயிகளுக்கான உற்பத்தி, வர்த்தகம், வணிக மேம்பாடு, விவசாய விளைபொருள்களுக்கான விலை உறுதிப்பாடு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்தம் தொடர்பான மூன்று மசோதாக் களை பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் மத்திய அரசு நிறைவேற் றியது. எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்திலேயே மசோதா நகலைக் கிழித்தெறிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
குரல் வாக்கெடுப்பு முறையில் இம்மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட முறை குறித்தும் சர்ச்சை எழுந்தது. ஜனநாயக நடைமுறையையே மத்திய பா.ஜ.க. அரசு குழிதோண்டிப் புதைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பா.ஜ.க.வுடன் பஞ்சாப் மாநிலத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக கூட்டணியிலிருந்த சிரோமணி அகாலிதளத்தைச் சேர்ந்த எம்.பி. ஹர்சிம்ரத்கவுர் பாதல், மசோதா நிறைவேறுவதற்கு முன்பே பதவி விலகினார்.
எனினும் மோடியும் அவரது கட்சியின் பிரதான தலைவர்களும் இம்மசோதாக்கள், விவசாயிகளுக்கு நலம்பயக்கும் மசோதாக்களை சட்டமாக்கியிருப்பதாக திரும்பத் திரும்ப கூறியதோடு பத்திரிகைகளில் மசோதாக்களின் நன்மை குறித்து முழுப்பக்க விளம்பரங்களை வெளி யிட்டு மக்களின் எதிர்ப்புணர்வை மட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இதையடுத்து 13க்கும் அதிகமான எதிர்க்கட்சியினர் குடியரசுத் தலைவரைச் சந்தித்து வேளாண் சட் டங்களுக்கு ஒப்புதல் வழங்கக்கூடா தென வேண்டுகோளை முன்வ
மத்திய அரசு நிறைவேற்றிய விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்களுக்கு எதிராக நாடெங்கும் போராட்டங்கள் வெடித்துவருகின்றன. முக்கியமாக ஹரியானா மற்றும் பஞ்சாப்பில் விவசாயிகள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆரம்பமே குளறுபடி!
கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி கூடிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் விவசாயிகளுக்கான உற்பத்தி, வர்த்தகம், வணிக மேம்பாடு, விவசாய விளைபொருள்களுக்கான விலை உறுதிப்பாடு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்தம் தொடர்பான மூன்று மசோதாக் களை பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் மத்திய அரசு நிறைவேற் றியது. எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்திலேயே மசோதா நகலைக் கிழித்தெறிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
குரல் வாக்கெடுப்பு முறையில் இம்மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட முறை குறித்தும் சர்ச்சை எழுந்தது. ஜனநாயக நடைமுறையையே மத்திய பா.ஜ.க. அரசு குழிதோண்டிப் புதைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பா.ஜ.க.வுடன் பஞ்சாப் மாநிலத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக கூட்டணியிலிருந்த சிரோமணி அகாலிதளத்தைச் சேர்ந்த எம்.பி. ஹர்சிம்ரத்கவுர் பாதல், மசோதா நிறைவேறுவதற்கு முன்பே பதவி விலகினார்.
எனினும் மோடியும் அவரது கட்சியின் பிரதான தலைவர்களும் இம்மசோதாக்கள், விவசாயிகளுக்கு நலம்பயக்கும் மசோதாக்களை சட்டமாக்கியிருப்பதாக திரும்பத் திரும்ப கூறியதோடு பத்திரிகைகளில் மசோதாக்களின் நன்மை குறித்து முழுப்பக்க விளம்பரங்களை வெளி யிட்டு மக்களின் எதிர்ப்புணர்வை மட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இதையடுத்து 13க்கும் அதிகமான எதிர்க்கட்சியினர் குடியரசுத் தலைவரைச் சந்தித்து வேளாண் சட் டங்களுக்கு ஒப்புதல் வழங்கக்கூடா தென வேண்டுகோளை முன்வைத்தனர். எனினும் குடியரசுத் தலைவர் இச்சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க, அவசரமாக அரசிதழில் வெளியிடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது மத்திய அரசு.
பலே பஞ்சாப்
இதையடுத்து இந்தியா முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. செப்டம்பர் 28-ஆம் தேதி இந்தியத் தலைநகரான டெல்லியில் மான்சிங் ரோடு சந்திப்பு அருகே பஞ்சாப் மாநில இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் டிராக்டர் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்தி தீவைத்தனர். மேலும் டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் வேளாண் சட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன.
பஞ்சாப் மாநிலத்தில் 30-க்கும் மேற் பட்ட விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து செப் 24-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு ரயில் மறியலில் இறங்கின. இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து வேளாண் சட்டங்களுக்கும் மத்திய அரசுக்கும் எதிராக குரலெழுப்பினர். பர்னாலா பகுதியில் போராட்டக்காரர் ஒருவரால் ட்ராக்டர் தீவைத்து எரிக்கப்பட்டது.
அமிர்தசரஸ் நகரில் விவசாயிகள் மேலாடை யின்றி அரைநிர்வாணமாக அமர்ந்து போராட்டங் களில் இறங்கினர். இதனால் பஞ்சாப் மாநிலம் முழு வதும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் மூன்று நாட்களுக்கு ரயில் மறியலை நீட்டித்து பஞ்சாப் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும் பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.
கைது கவனிப்பு
யோகி ஆட்சிசெய்யும் உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு விவசாயப் போராட்டங்களுக்கு மாநில அரசு அனுமதி மறுத்தது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், போராட்டத் தலைவர்கள் உ.பி. போலீஸால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரும், திரிணமுல் காங்கிரஸாரும், விவசாய சங்கங்களும் இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கர்நாடகாவில் மாநிலமெங்கும் போராட்டங்கள் நடந்துவருவதோடு, திரளான விவசாய சங்கங்கள் மாநில தலைநகரான பெங்களூருவுக்கு வந்து இந்தச் சட்டங்களுக்கு எதிரான தங்கள் உணர்வை தீவிரத் துடன் வெளிப்படுத்தி வருகின்றனர். செப்டம் பர் 28 அன்று 300-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தின. முக்கிய நகரங்களின் சாலைகளில் விவசாயிகளும் பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் இறங்கினர். அரசு போராட்டக்காரர்களை கைதுசெய்தது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ""வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது கிடையாது'' என சான்றிதழ் அளித்துள்ளார். உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் போராடத் திரண்ட விவசாயிகளும் எதிர்க்கட்சியினரும் கைதுசெய்யப்பட்டனர்.
பஞ்சாப் அளவுக்கே தீவிரமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும் மற்றொரு மாநிலம் ஹரியானா. விவ சாயிகளிடமிருந்து நெல் கொள்முதலுக் கான வழக்கமான தேதியைவிட ஒரு வாரத்துக்கு முன்னதாக செப் 26 முதலே நெல் கொள்முதல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. விவ சாயிகளின் கோபத்தை மடை மாற்றவே இந்த அறிவிப்பு என்பதை விவ சாயிகள் அறிந்துள்ளதால், பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்தவில்லை.
கரம் கோர்த்த தமிழக எதிர்க்கட்சிகள்
ஆளுங்கட்சி வேளாண் சட்டங்களுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்த நிலையில், தமிழகத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மாநிலம் முழுவதும் 3500 இடங்களில் போராட்டங்களை நடத்தின. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி கிராமத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பச்சைத் துண்டு அணிந்து கலந்துகொண்டார். விவசாயத் தொழிலாளர்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கிய ஸ்டாலின் தனது உரையின்போது, “""கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததுபோல் தமிழக அரசும் செய்யவேண்டுமென வலியுறுத்தினோம். தமிழக அரசு அப்படிச் செய்யாவிட்டால் எதிர்க்கட்சியான நாங்கள் நீதிமன்றத்துக்குச் செல்வோம்'' என முழங்கினார்.
மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்டத்தில் 64 இடங்களில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் திங்கள்கிழமை (செப். 28) ஆர்ப்பாட்டம் நடத்தின. சேலத்தில் கலைஞர் மாளிகை அருகே மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோட்டில் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் 28 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பு தெற்கு மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் வேளாண் சட்ட மசோதாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் துணைப் பொதுச்செயலாளர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார், இளைஞரணி அமைப்பாளர் கே.இ.பிரகாஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கோபியில் வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்தியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி.யும் கொடுமுடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனும் தலைமை தாங்கினர். அவல்பூந்துறை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் உள்பட கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏர்க்கலப்பையுடனும் நாற்று நட்டும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகக் கோஷமிட்டனர்.
26 ஆம் தேதி மாலை வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தமருகே தந்தை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி தலைமை தாங்கினார்.
கடலூரில் மதச்சார்பற்ற முற்போக்கு ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் கடலூர் தலைமை தபால்நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கி இந்தச் சட்டங்களால் விவசாயிகளின் நிலங்கள் கார்ப்பரேட்டுகளுக்குச் சொந்தமாகும் என்றார்.
பா.ஜ. ஆதரவு மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்தில் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்ட ஆயிரத்துக் கும் அதிகமான போராட்டக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது அ.தி.மு.க. அரசு.
தானியத்துக்குப் பதில் தங்களது கோபத்தை போராட்டக் களங்களில் விதைத்துவிட்டுக் காத்திருக்கிறார்கள் விவசாயிகள். மோடி அரசு, தேசிய அளவிலான அதிருப்தியின் மகசூலை அறுவடைசெய்யத் துணியுமா…அல்லது போராட்டத்தின் போக்கைப் பார்த்துவிட்டு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமா என்பதைப் பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும்.
-க.சுப்பிரமணியன், ஜீவா தங்கவேல், பகத்சிங், சுந்தரபாண்டியன், இளையராஜா
படங்கள்: ஸ்டாலின், அசோக்