காதல் மனைவியை எரித்த கணவனின் குடும்பம்! -ஆயுள் தண்டனை தீர்ப்பு!

ss

டலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது ஆதிவராகநத்தம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயது பஞ்சநாதன். இவர் புவனகிரி பகுதியிலுள்ள பெருமாத்தூரில் ஜெராக்ஸ் கடை வைத்துள் ளார். வீடுகளுக்கும் கடைகளுக்கும் தண்ணீர் கேன் சப்ளையும் செய்துவருகிறார். இவரது மகள் சீதாவும் தந்தைக்கு உதவியாக கடையில் வேலைசெய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 8.7.2014 அன்று தனது மகள் சீதாவைக் காணவில்லை என கண்டுபிடித்துத் தருமாறு பஞ்சநாதன் புவனகிரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இவரது புகாரின்பேரில் ஆய்வாளர் ரமேஷ்ராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பஞ்சநாதன் ஜெராக்ஸ் கடைக்கு எதிரேயுள்ள மரக்கடையில் தச்சுவேலை செய்துவந்துள்ளார் மேல்புவனகிரியைச் சேர்ந்த சரவணன். சீதாவுக்கும் எதிர் மரப்பட்டறையில் வேலை செய்துவந்த சரவணனுக்கும் அறிமுகம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது.

mm

இந்த தகவல் போலீசாருக்கு கிடைத்ததும் சரவணனை போலீசார் தேடிவந்த நிலையில் அவர் 15.

டலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது ஆதிவராகநத்தம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயது பஞ்சநாதன். இவர் புவனகிரி பகுதியிலுள்ள பெருமாத்தூரில் ஜெராக்ஸ் கடை வைத்துள் ளார். வீடுகளுக்கும் கடைகளுக்கும் தண்ணீர் கேன் சப்ளையும் செய்துவருகிறார். இவரது மகள் சீதாவும் தந்தைக்கு உதவியாக கடையில் வேலைசெய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 8.7.2014 அன்று தனது மகள் சீதாவைக் காணவில்லை என கண்டுபிடித்துத் தருமாறு பஞ்சநாதன் புவனகிரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இவரது புகாரின்பேரில் ஆய்வாளர் ரமேஷ்ராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பஞ்சநாதன் ஜெராக்ஸ் கடைக்கு எதிரேயுள்ள மரக்கடையில் தச்சுவேலை செய்துவந்துள்ளார் மேல்புவனகிரியைச் சேர்ந்த சரவணன். சீதாவுக்கும் எதிர் மரப்பட்டறையில் வேலை செய்துவந்த சரவணனுக்கும் அறிமுகம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது.

mm

இந்த தகவல் போலீசாருக்கு கிடைத்ததும் சரவணனை போலீசார் தேடிவந்த நிலையில் அவர் 15.7.2014 அன்று பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். சரவணனை கஸ்டடி எடுத்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணை யில் சீதா பட்டியல் இனத்தைச் (ஆதிதிராவிடர்) சேர்ந்த பெண். சரவணன் தச்சு வேலைசெய்யும் ஆசாரி இனத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இரு வரும் இரண்டு குடும்பங்களுக்கும் தெரியாமல் கடலூர் சென்று நண்பர்களின் உதவியுடன் திருமணம் செய்துள்ளனர். இதை மறைத்து இருவரும் சரவணன் வேலைசெய்யும் மரப்பட்டறையில் கணவன் மனைவியாக அவ்வப்போது சந்தித்து வந்துள்ளனர்.

காலப்போக்கில் சீதா சரவணனிடம் எத்தனை நாளைக்கு நம் திருமணத்தைப் பற்றி வெளியேகூறாமல் ரகசியமாக மறைத்து வைக்கமுடியும். என்னை உங்கள் வீட்டிற்கு அழைத்துச்செல்லுங்கள் என்று வற்புறுத்தியுள்ளார்.

வேறு வழியில்லாமல் இதுகுறித்து சரவணன் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினர் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த பெண்ணை மருமகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுத்துள்ளனர். இதுகுறித்து சரவணன் தனது சகோதரி கணவர் வெங்கடேசனிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அவர் ஜாதி கவுரவம்தான் முக்கியம். எனவே யாருக்கும் தெரியாமல் சீதாவை தீர்த்துக் கட்டிவிடுவோம் என்று கூறியுள்ளார். சரவணன், தாய் செல்வி, சகோதரி சகுந்தலா, வெங்கடே சன் நால்வரும் ஆலோ சனை நடத்தினர்.

அதன்படி சர வணன் சீதாவிடம் தற்போதைக்கு எங்கள் குடும்பத்தில் உன்னை சேர்த்துக்கொள்ள மறுக் கிறார்கள். எனவே நாம் கொஞ்ச நாள் வெளியூர் சென்று தனிக்குடித் தனம் இருப்போம். பிறகு வீட்டுக்குச் செல்வோம் என்று கூறியுள்ளார். அதை நம்பிய சீதாவை கடந்த 15.6.2014 அன்று சிதம்பரம் அருகே கடவாச்சேரி பகுதியில் வெங்கடே சன் வாட்ச்மேனாக வேலைசெய்யும் அட்சயா கார்டனுக்கு அழைத்துச் சென்று தனிக்குடித்தனம் வைத்தார். இரண்டு நாட்கள் அங்கேயே சீதாவுடன் தங்கியிருந்த சரவணன், 17.6.2014 அன்று தனது சகோதரி கணவர் வெங்கடேசன், சகோதரி சகுந்தலா, தாய் செல்வி ஆகியோரை அக்சயா கார்டனுக்கு வரவழைத் தார். அன்று இரவு சீதா அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபோது சகுந்தலா, செல்வி இருவரையும் வீட்டுக்கு முன்பு காவலாக நிறுத்தி விட்டு சரவணன், வெங்கடேசன் இருவரும் வீட்டுக்குள் சென்று சீதாவை கழுத்தை நெறித்தும், தலையில் கட்டையால் அடித்தும் கொலைசெய்து எரித்து, எலும்புகளை கார்டன் பகுதியில் புதைத்துவிட்டு ஊருக்கு வந்துவிட்ட னர்.

இதனை சரவணன் போலீ சாரிடம் வாக்குமூலமாக அளித்தார். இதையடுத்து சீதா காணாமல்போன வழக்கை கொலை, கூட்டுச்சதி, தடயங்களை மறைத்தல், வன் கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புவனகிரி போலீ சார் பதிவுசெய்து சரவணன், வெங்கடேசன், சகுந்தலா, செல்வி ஆகிய நால்வரையும் கைதுசெய்தனர்.

இந்த வழக்கு கடலூர் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் வனராசு 28 சாட்சிகளை நீதிபதி உத்தமராஜா முன்பு காவல்துறை உதவியுடன் ஆஜர்படுத்தினார். வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பளித்த நீதிபதி உத்தமராஜா, சீதாவை கொலைசெய்த குற்றத்திற்காக சரவணன், வெங்க டேசன் ஆகிய இருவருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும், கூட்டு சதித்திட்டம் தீட்டிய குற்றத்திற்காக தலா ஒரு ஆயுள் தண்டனை, 10000 ரூபாய் அபராதமும், தடயங்களை மறைத்த குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை, 5000 ரூபாய் அபராதமும், சரவணனின் தாய் செல்வி, சகோதரி சகுந்தலா இருவரும் கொலைக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டதற்காக தலா ஒரு ஆயுள் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும், தடயங்களை மறைத்த குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனை, 10,000 ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த தண்டனையை குற்றவாளிகள் ஏககாலத்தில் அனுபவிக்கவேண்டும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு குறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் வனராசு, "காதல் மனைவியை கொலை செய்யும் அளவுக்கு ஜாதிய உணர்வு இருந்துள்ளது. இந்த தண்டனை, காதல் என்ற பெயரால் பெண்களை நம்ப வைத்து ஏமாற்றுபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்''’என்றார்.

nkn280224
இதையும் படியுங்கள்
Subscribe