தமிழகம் முழுவதும் சர்வோதய சங்கங்களில் போலி நெசவாளர்கள் பெயரில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள் ளது ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது.
மத்திய அரசின் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கே.வி.ஐ.சி.) கீழ், தமிழ்நாட்டில் மொத் தம் 70 சர்வோதய சங்கங்கள் இயங்கிவருகின்றன.
கைத்தறி நெசவாளர்களைப் பாதுகாக்க சர்வோ தய சங்கங்களே அவர் களுக்கு நேரடியாக பட்டு பாவு, ஊடு நூல் வழங்கு கின்றன. அதன்மூலம் பட்டுச் சேலைகளை நெய்து கொடுக்கும் நெசவாளர்களுக்கு கூலியும், அவர்களின் கூலியின் அடிப்படையில் காலாண்டிற்கு ஒருமுறை எம்.டி.ஏ. (மார்க்கெட்டிங் டெவலப்மெண்ட் அசிஸ் டன்ஸ்) எனப்படும் 30 சதவீத ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
சர்வோதய சங்கங்களில் நடந்து வரும் மோசடிகளுக்கு எதிராக 3 ஆண்டுக்கும் மேலாக போராடி வரும், சேலம் மாவட்டம் அத்தராம்பட்டி யைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை எஸ்.எஸ்.ஐ. மாரிமுத்து நம்மிடம் பேசினார்.
"நூற்போர், நெய்வோரை பாதுகாப்பதற்காக சர்வோதய சங்கங்கள் தொடங்கப் பட்டன. சேலம் மாவட்டம் தாரமங்கலம், அத்தராம்பட்டி, பஞ்சுகாளிப்பட்டி, ஓமலூர், காடையாம்பட்டி, பெரியேரிப் பட்டி, மல்லிக்குட்டை, பள்ளக் காட்டூர் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர். இவர்களில் ஒருவர்கூட கைத்தறி நெசவாளர் இல்லை.
அத்தராம்பட்டியைச் சேர்ந்த சகோதரர்களான சதாசிவம், இளையராஜா, கவுதமன் ஆகியோர் கைத்தறி நெசவாளர் அல்லாதோரை நெய்வோர், நூற்போர் பெயரில் ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தில் உறுப்பினராகச் சேர்த்துள்ளனர். போலி உறுப்பினர்களைச் சேர்த்து விடுவதில் இவர்கள் மூவரும்தான் மெயின் புரோக்கர்கள்.
இவர்களுக்கு ஆவாரம் பாளையம் சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமார், கே.வி. ஐ.சி. உயரதிகாரிகள் உடந்தையாக இருந்துவருகின்றனர். இதே ஊரைச் சேர்ந்த முத்துசாமி, முருகன், ஜெயவர்த்தனா உள்ளிட்ட மேலும் சில புரோக் கர்களும் போலி உறுப்பினர் களைச் சேர்த்து மோசடி செய்துள்ளனர்.
போலி உறுப்பினர்கள் பெயரில் கைச்சாத்து புத்தகம் தயாரித்து, அவர்களைப் போலவே கையெழுத்துப் போட்டு ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தில் இருந்து பட்டுப் பாவு நூல் வாங்கு கின்றனர். அந்த பட்டுப் பாவு நூலை வெளிச்சந்தையில் விற்று ப
தமிழகம் முழுவதும் சர்வோதய சங்கங்களில் போலி நெசவாளர்கள் பெயரில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள் ளது ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது.
மத்திய அரசின் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கே.வி.ஐ.சி.) கீழ், தமிழ்நாட்டில் மொத் தம் 70 சர்வோதய சங்கங்கள் இயங்கிவருகின்றன.
கைத்தறி நெசவாளர்களைப் பாதுகாக்க சர்வோ தய சங்கங்களே அவர் களுக்கு நேரடியாக பட்டு பாவு, ஊடு நூல் வழங்கு கின்றன. அதன்மூலம் பட்டுச் சேலைகளை நெய்து கொடுக்கும் நெசவாளர்களுக்கு கூலியும், அவர்களின் கூலியின் அடிப்படையில் காலாண்டிற்கு ஒருமுறை எம்.டி.ஏ. (மார்க்கெட்டிங் டெவலப்மெண்ட் அசிஸ் டன்ஸ்) எனப்படும் 30 சதவீத ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
சர்வோதய சங்கங்களில் நடந்து வரும் மோசடிகளுக்கு எதிராக 3 ஆண்டுக்கும் மேலாக போராடி வரும், சேலம் மாவட்டம் அத்தராம்பட்டி யைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை எஸ்.எஸ்.ஐ. மாரிமுத்து நம்மிடம் பேசினார்.
"நூற்போர், நெய்வோரை பாதுகாப்பதற்காக சர்வோதய சங்கங்கள் தொடங்கப் பட்டன. சேலம் மாவட்டம் தாரமங்கலம், அத்தராம்பட்டி, பஞ்சுகாளிப்பட்டி, ஓமலூர், காடையாம்பட்டி, பெரியேரிப் பட்டி, மல்லிக்குட்டை, பள்ளக் காட்டூர் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர். இவர்களில் ஒருவர்கூட கைத்தறி நெசவாளர் இல்லை.
அத்தராம்பட்டியைச் சேர்ந்த சகோதரர்களான சதாசிவம், இளையராஜா, கவுதமன் ஆகியோர் கைத்தறி நெசவாளர் அல்லாதோரை நெய்வோர், நூற்போர் பெயரில் ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தில் உறுப்பினராகச் சேர்த்துள்ளனர். போலி உறுப்பினர்களைச் சேர்த்து விடுவதில் இவர்கள் மூவரும்தான் மெயின் புரோக்கர்கள்.
இவர்களுக்கு ஆவாரம் பாளையம் சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமார், கே.வி. ஐ.சி. உயரதிகாரிகள் உடந்தையாக இருந்துவருகின்றனர். இதே ஊரைச் சேர்ந்த முத்துசாமி, முருகன், ஜெயவர்த்தனா உள்ளிட்ட மேலும் சில புரோக் கர்களும் போலி உறுப்பினர் களைச் சேர்த்து மோசடி செய்துள்ளனர்.
போலி உறுப்பினர்கள் பெயரில் கைச்சாத்து புத்தகம் தயாரித்து, அவர்களைப் போலவே கையெழுத்துப் போட்டு ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தில் இருந்து பட்டுப் பாவு நூல் வாங்கு கின்றனர். அந்த பட்டுப் பாவு நூலை வெளிச்சந்தையில் விற்று பணம் பார்த்துவிடும் சதாசிவம் சகோதரர்கள், விசைத்தறியில் நெய்த தரமற்ற பட்டுச்சேலை களை சர்வோதய சங்கத்திற்குக் கொடுத்து ஏமாற்றுகிறார்கள்.
கைத்தறியில் பட்டுச் சேலை நெய்ததாக ஏற்கனவே உறுப்பினராகச் சேர்க்கப்பட்ட போலி நெசவாளர்களின் வங்கிக் கணக்கில் கூலியும், காலாண்டிற்கு ஒருமுறை ஊக்கத்தொகையும் பெற்றுவிடுகின்றனர். போலி உறுப்பினர்கள் அனைவரின் வங்கிக் கணக்கு புத்தகம், ஏ.டி.எம். கார்டுகளையும் புரோக்கர்களே வைத்திருப்பதால், அவர் களுடைய கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்ட தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களில் ஏ.டி.எம். மூலம் மொத்தப் பணத்தையும் உருவிவிடுவார்கள். போலி உறுப்பினர்கள் பலருக்கும் பல ஆண்டுகளாக தங்கள் கணக்கில் லட்சக்கணக்கில் வரவு-செலவு நடந்துவருவதே தெரியாது.
குறிப்பாக, கோவை மாவட் டம் ஆவாரம்பாளையம் சர்வோ தய சங்கத்தில்தான் அதிகளவில் மோசடிகள் நடந்துள்ளன. மேலும், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, சேலம், திருச்சி, திருப்பத்தூர் ஆகிய சர்வோதய சங்கங்களிலும் இதேபோன்ற மோசடிகள் நடந்துள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் போலி நெசவாளர்கள் பெயரில் பல ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டப் பட்டுள்ளது.
ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தில் கடைசியாக கடந்த ஆக. 26-ஆம் தேதி 1.25 கோடி ரூபாய் போனஸ் தொகை நெசவாளர்களுக்கு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. அதுகுறித்த தகவல் கிடைத்த அடுத்தநாளே புரோக்கர்கள் அத்தொகையை ஏ.டி.எம். மூலம் எடுத்துவிட்டனர். இந்த சங்கத்தின் செயலாளர் சிவக்குமார்தான் புரோக்கர்களை கைக்குள் போட்டுக்கொண்டு இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டுவருகிறார்.
இந்த சங்கத்தின் கிளை தேனி மாவட்டம் ஜக்கம்பட்டி யிலும் உள்ளது. அங்கும் போலி உறுப்பினர்கள் பெயரில் பல கோடி ரூபாய் சுருட்டியிருக்கிறார்கள். அங்குள்ள கிளை மேலாளர் பாலாஜி, இந்த முறைகேடுகளுக்கு மூளையாகச் செயல்படுகிறார்.
ஆவாரம்பாளையம் சங்கத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர், சங்கத்தில் நடக்கும் முறைகேடுகளை உயரதிகாரிகளிடம் புகார் செய்தார். இதனால் சங்கச் செயலாளர் சிவக்குமார் தூண்டுதலின்பேரில் ஊழியர்கள் முருகேசன் மீது 13 காவல் நிலையங்களில் புகாரளித்து மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர். குண்டர்களை வீட்டுக்கு அனுப்பியும் மிரட்டியுள்ளனர். இதனால் சர்வோதய சங்கத்தில் நடக்கும் தில்லுமுல்லுகள் பற்றி தெரிந்தும்கூட பலர் புகார் கொடுக்க அஞ்சுகின்றனர்.
சர்வோதய சங்கங்களில் நடந்துவரும் மோசடிகள் குறித்து தமிழக காவல்துறை சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரிப்பதோடு, நேர்மையான அதிகாரிகள் மூலம் அனைத்து சங்கங்களிலும் தணிக்கை செய்ய வேண்டும். புரோக்கர்கள், சங்கச் செயலாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் விசாரித்தால் சட்டவிரோதமான சொத்துக்குவிப்பும் அம்பல மாகும்,'' என்றார் முன்னாள் எஸ்.எஸ்.ஐ. மாரிமுத்து.
நமக்குக் கிடைத்த தரவுகளைக்கொண்டு கள விசாரணையில் இறங்கினோம்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மனைவி வைதேகி, சாமி சிலைகள் விற்கும் கடையில் வேலைசெய்கிறார். அவரை கைத்தறி நெசவாளர் என்ற பெயரில் தேனி மாவட்டம் ஜக்கம்பட்டி சர்வோதய சங்கத்தில் உறுப்பினராகச் சேர்த்துள்ள னர்.
ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த பாலசங்கர் என்பவர் விசைத்தறி வைத்திருக்கிறார். அவர் பெயரிலும், பெங்களூருவில் வேலை செய்துவரும் அவர் மகன் பெயரிலும்கூட ஜக்கம்பட்டி சர்வோதய சங்கத்தில் உறுப்பினர் என்று சொல்லி வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த தனபாலன் என்பவர் 17.10.2017-ஆம் தேதி இறந்துவிட்டார். ஆனால் அவருடைய வங்கிக் கணக்கிற்கு 31.12.2018 வரை பட்டுச்சேலை நெய்ததாக கூலி மற்றும் ஓராண்டிற்கான ஊக்கத் தொகை பட்டுவாடா செய்திருப்பதும் விசா ரணையில் தெரிய வந்தது. இத்தனைக்கும் தனபாலனும் கைத்தறி நெச வாளர் இல்லை.
தனபாலன் உயிரோடு இருந்தபோது அவருக்கு முதியோர் உதவித்தொகை பெற்றுத்தருவ தாகக் கூறி அவரிடம் இருந்து ஆதார், புகைப்படங்களை பெற்றுச்சென்றதாக ஜக்கம்பட்டி சர்வோதய சங்க மேலாளர் பாலாஜி மீது தனபாலனின் மனைவி அன்னபூரணி புகாரளித்து, அது இன்னும் நிலுவையில் இருக்கிறது.
சேலம் மாவட்டம் அமரகுந்தியைச் சேர்ந்த மீன் கடைக்காரர் சுரேஷ், மல்லிக்குட்டையைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சண்முகம், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளியான பூங்கொடி ஆகியோர் பெயர்களிலும் கைத்தறி நெசவாளர் என்ற பெயரில் கணக்கு தொடங்கி புரோக்கர்கள் மோசடி செய்துள்ளனர்.
ஓலைப்பட்டி காட்டுவலவைச் சேர்ந்த ஜெகநாதன் (39) என்பவர், ''எங்கள் வீட்டில் கைத்தறி நெசவு எதுவும் இல்லை. நான் டிராக்டர் ஓட்டிப் பிழைத்துவருகிறேன். அத்தராம்பட்டியைச் சேர்ந்த கவுதமன் என்பவர், சில ஆண்டுகளுக்கு முன்பு ஜவுளித் தொழில் தொடங்க உள்ளதாகவும், அதற்கு சில பேரை உறுப்பினராக சேர்க்கவேண்டும் என்று கூறி, என்னுடைய ஆதார் அட்டை, புகைப் படம் வாங்கிச்சென்றார். அதற்காக அப்போது அவர் எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.
ஓமலூர் கரூர் வைஸ்யா வங்கிக் கிளையில் என் பெயரில் கணக்கு தொடங்கிய அவர், அதற்கு ஏ.டி.எம். கார்டும் பெற்றுக்கொண்டார். என் உறவினர் என்பதால் அப்போது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நான் கைத்தறி பட்டுச் சேலை நெய்த தாகச் சொல்லி, அதற்கான கூலி, போனஸ் தொகையை கவுதமன் பெற்றுவந்தி ருப்பது கடந்த 2018-ஆம் ஆண்டுதான் தெரியவந்தது. கவுதமன், அவருடைய சகோதரர்கள் சதாசிவம், இளையராஜா ஆகிய மூவரும் இந்த சுற்று வட்டாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் இவ்வாறு மோசடி செய்துள்ளனர்'' என்றார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ள பெரிய ஊணையைச் சேர்ந்தவர் பாபு (55). இவர், திருப்பத்தூர் சர்வோதய சங்கத்தில் உறுப்பினராக உள்ளதாக போலியாக பதிவு செய்யப்பட்டு, இந்தியன் வங்கியில் கணக்கும் தொடங்கியுள்ளார் சங்கத்தின் செயலாளரான லோகேஸ்வரன். அவருடைய வங்கிக் கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு ஆகியவை லோகேஸ்வரன் வசமே இருந்துள்ளது.
பாபுவின் கணக்கில் நெசவு நெய்த கூலி மற்றும் எம்.டி.ஏ. ஊக்கத்தொகையாக 2.75 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது. அதை, மொத்தமாக சுவாகா செய்திருக்கிறார் லோகேஸ்வரன். அவர் மீது பாபு அளித்த புகார்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இன்னும் கிடப்பிலுள்ளது.
மெயின் புரோக்கர்களாகச் குற்றம்சாட்டப் படும் அத்தராம்பட்டி சகோதரர்கள் சதாசிவம், இளையராஜா, கவுதமன் ஆகியோரிடம் கேட்டபோது, ''புகார்தாரர் மாரிமுத்து எங்களுக்கு மாமா உறவுமுறை. அத்தராம்பட்டியில் எங்கள் சமூகத்திற்குச் சொந்தமான மாரியம்மன் கோயில் உள்ளது. அந்தக் கோயிலில் மாரிமுத்து காணியாச்சி உரிமை கேட்டார். ஊர்க்கவுண்டரான எங்கள் அப்பாவும், மற்ற உறவினர்களும் அவருக்கு காணியாச்சி உரிமை தர எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதை மனதில் வைத்துக்கொண்டு மாரிமுத்து, சர்வோதய சங்கத்தில் போலி உறுப்பினர்களைச் சேர்த்து மோசடி செய்ததாக எங்கள் மீது பொய் புகார்களைக் கூறிவருகிறார். இந்தக்காலத்தில் யாராவது ஏ.டி.எம். கார்டுகளை மற்றவர்களிடம் தருவார்களா? இந்த ஊரில் யாரிடம் வேண்டு மானாலும் வந்து விசாரித்துக்கொள்ளுங்கள்'' என்றனர். மோசடி புகார் குறித்து ஆவாரம் பாளையம் சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமாரிடம் பேசினோம்.
"எங்கள் சங்கத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வில் சென்ற முருகேசன் என்பவர், சங்கத்தின் பெயரைப் பயன்படுத்தி கதர் மற்றும் கைவினை பொருள்களை விற்பனை செய்துவருகிறார். அவரும், ஓய்வுபெற்ற எஸ்.ஐ. மாரிமுத்து என்பவரும் எங்கள் சங்கத்தின்மீது ஆதாரமற்ற புகார்களை சொல்லிவருகின்றனர். இந்த புகார்கள் குறித்து ஏற்கனவே அதிகாரிகள் தணிக்கை நடத்தி முடித்ததோடு, குற்றச்சாட் டில் உண்மை இல்லை யென்றும் கூறிவிட்டனர்'' என்றார் சிவக்குமார்.
இதையடுத்து, இந்த மோசடி புகார் குறித்து கே.வி.ஐ.சி. துறையின் தமிழ் நாடு மாநில இயக்குநர் (பொறுப்பு) பாண்டியனிடம் கேட்டோம்.
"கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி, ஊக்கத்தொகை உள்ளிட்ட பட்டியல் தயாரித்துக் கொடுப்பது மட்டுமே எங்கள் வேலை. அத் தொகையை உரியவர்களின் வங்கிக் கணக்குகளில் மும்பையிலுள்ள தலைமை அலுவலகமே நேரடியாகச் செலுத்திவிடுகிறது. நாங்கள் பணத்தைக் கையாளுவதில்லை. ஆனாலும் எங்கள் தரப்பில் 100 சதவீதம் எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது என்று சொல்லிவிடமுடியாது. சின்னச்சின்ன குறைகள் இருக்கலாம். தற்போது நான் விடுப்பிலிருப்பதால், மீண்டும் பணிக்குத் திரும்பியபிறகு நீங்கள் சொன்ன புகார்கள் குறித்து முழுமையாக விசாரிக்கிறேன்'' என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
தேனி மாவட்டம் ஜக்கம்பட்டி சர்வோதய சங்க மேலாளர் பாலாஜி மீதான புகார்கள் குறித்து கேட்பதற்காக, அவரை பல நாள்களாக தொடர்புகொண்டும், பேசாமல் தவிர்த்தார்.
நம்முடைய விசாரணையின்போது, புகார் தாரர் மாரிமுத்து குறித்து அத்தராம்பட்டி சகோதரர்கள் என்ன சொன்னார்களோ அதே கோயில் தகராறு கதையையே ஆவாரம்பாளையம் சர்வோதய சங்க செயலாளர், தூத்துக்குடி சர்வோ தய சங்க செயலாளர் ராஜா, கே.வி.ஐ.சி. மாநில இயக்குநர் வரை அச்சுப்பிசகாமல் சொன்னார்கள்.
கோயில் தகராறு ஒருபுறமிருந்தாலும், போலி உறுப்பினர்களின் வாக்குமூலம் குறித்து விளக்கிய பிறகே மேற்குறிப்பிட்ட நபர்கள் புகாரின் தன்மை குறித்து பெயரளவுக்குப் பேசவே தொடங்கி னார்கள். இதற்கிடையே ஒரு தரப்பினர், இந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ.யின் கவனத்துக்கும் கொண்டுசென்றுள்ளனர்.
சர்வோதய சங்கங்களில் நடந்துள்ள மோசடிகளை களைந்து, அழிவின் விளிம்பிலுள்ள பாரம்பரியான கைத்தறி நெசவுத்தொழிலை மீட்டெடுக்க வேண்டுமென்கிறார்கள் உண்மையான நெசவாளர்கள்.