சர்வோதய சங்கங்களில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது குறித்து நக்கீரன் ஏற்கெனவே அம்பலப்படுத்திய நிலையில், சி.பி.ஐ. விசாரணையிலும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் ரெட்ஃபீல்ட்ஸ் பகுதியில் ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். செயலாளர், பொருளாளர், மேலாளர், எழுத்தர் உள்ளிட்ட நிலைகளில் 500 பேர்வரை பணியாற்றுகின்றனர். 28 இடங்களில் இதன் கிளைகள் உள்ளன.
ர்வோதய சங்கங்களில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது குறித்து நக்கீரன் ஏற்கெனவே அம்பலப்படுத்திய நிலையில், சி.பி.ஐ. விசா ரணையிலும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் ரெட்ஃபீல்ட்ஸ் பகுதியில் ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். செயலாளர், பொருளாளர், மேலாளர், எழுத்தர் உள்ளிட்ட நிலைகளில் 500 பேர்வரை பணியாற்றுகின்றனர். 28 இடங்களில் இதன் கிளைகள் உள்ளன.
கைத்தறி நெசவாளர்களுக்காக மத்திய, மாநில அரசுகள் வழங்கிய பல கோடி ரூபாய் ஊக்கத்தொகையை ஆவாரம்பாளையம் சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமார், போலி உறுப்பினர்களின் பெயர்களில் வரவு வைத்து மொத்தமாக விழுங்கிவிட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 11-14 நாளிட்ட 'நக்கீரன்' இதழில், 'சர்வோதய சங்கத்தில் போலி நெசவாளர்கள்; கோடி கோடியாய் சுருட்டும் புரோக்கர்கள்' என்ற தலைப்பில் விரிவான செய்தி வெளியிட்டு இருந்தோம். அதன்பிறகுதான், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். நாம் அம்பலப்படுத்திய சங்கதிகள் அனைத்தும் உண்மை என்பது சி.பி.ஐ. தரப்பிலும் இப்போது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
சர்வோதய சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து அதன் முன்னாள் ஊழியர்களிடம் விசாரித்தோம். "கிராமப்புற கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்காக சர்வோதய சங்கங்கள் தொடங்கப்பட்டன. இவற்றின் மூலம் கதர் துணிகள், கைத்தறி பட்டுச்சேலைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சங்கங்களை மத்திய அரசின் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (கே.வி.ஐ.சி.) நேரடியாகக் கண்காணிக்கிறது. பட்டுச் சேலைகளை நெய்து தரும் நெசவாளர்களுக்கு கூலித்தொகை பட்டுவாடா செய்யப்படுகிறது. மேலும், நெசவாளர்கள் பெறும் கூலி அடிப்படையில் காலாண்டிற்கு ஒருமுறை எம்.எம்.டி.ஏ. (மாடிஃபைடு மார்க்கெட்டிங் டெவலப்மென்ட் அசிஸ்டன்ஸ்) எனப்படும் 30 சதவீத ஊக்கத்தொகையும் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடி யாக செலுத்தப்படுகிறது. இந்த ஊக்கத்தொகையில் 20 சதவீதம் மத்திய அரசின் கே.வி.ஐ.சி. துறையும், 10 சதவீதம் தமிழக அரசும் பங்களிப்புச் செய்கின்றன. கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து இந்த எம்.எம்.டி.ஏ. ஊக்கத்தொகை வழங்குவது நடைமுறைக்கு வந்தது. அதன்பிறகுதான் சர்வோதய சங்கங்களும், கே.வி. ஐ.சி. துறை அதிகாரிகளும் கைகோர்த்துக் கொண்டு கூட்டுக்கொள்ளையில் ஈடுபடத் தொடங்கினர்.
முதன்முதலில் ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தின் கிளையான ஜக்கம்பட்டி சங்கத்தில் இத்தகைய மோசடி நடந்தது. இங்கு 160 கைத்தறி நெசவாளர்கள் மூலம் பட்டுச்சேலைகள் உற்பத்தி செய்யப்படுவதாக அலுவலகக் கோப்புகளில் போலியாகப் பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அத்தராம்பட்டி யைச் சேர்ந்த சகோதரர்களான சதாசிவம், கவுதமன், இளையராஜா ஆகிய மூவரும் விசைத்தறியில் நெய்யப்பட்ட பட்டுச்சேலைகளை வாங்கி வியாபாரம் செய்துவந்தனர். அவர்களுக்கும், ஆவாரம்பாளையம் சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமாருக்கும் பழக்கம் ஏற்பட, சிவக்குமார் கேட்டுக்கொண்டதன் பேரில் சதாசிவம் சகோ தரர்கள், ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தின் அனைத்து கிளைகளிலும் போலி நெசவாளர்களை உறுப்பினர்களாக சேர்த்துள்ளனர்'' என்கிறார்கள் ஊழியர்கள்.
இந்த புகார் குறித்து, சி.பி.ஐ. தரப்பில் இன்ஸ்பெக்டர் மாணிக்கவேல், எஸ்.ஐ. சீனிவாசன் ஆகியோர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாம் சி.பி.ஐ. வட்டாரத்தில் விசாரித்தபோது, "ஜக்கம்பட்டி கிளை சங்கத்தில் கைத்தறி நெசவாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள 160 பேரின் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவரும் சதாசிவம் சகோதரர்கள் வசிக்கும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவரிடமும் கைத்தறி நெசவுக்கூடம் இல்லை. இன்னும் சொல்லப் போனால், அவர்கள் பெயரில் கோடிக்கணக்கில் வரவு, செலவு நடந்திருப்பதுகூட அவர்களுக்கு தெரியவில்லை. ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தில் நூற்போர், நெய்வோர் பெயரில் உள்ள 1000 பேருமே போலி உறுப்பினர்கள்தான். இவர்கள் அனைவருமே சதாசிவம் சகோதரர்கள் மூலம் சேர்க்கப்பட்டவர்கள். கட்டடத் தொழிலாளர்கள், விவசாயக்கூலிகளை ஏமாற்றி, அவர்களுடைய பான் கார்டு, ஆதார் கார்டு, புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களைத் திரட்டியுள்ளனர். இந்த ஆவணங் களைக் கொண்டு, கரூர் வைஸ்யா வங்கியில் கணக்கு தொடங்கி, ஏ.டி.எம். கார்டுகளையும் இவர்களே வாங்கிக்கொண்டனர். இவர்களில், சிலரது வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், கே.வி.ஐ.சி. துறை 3 கோடி ரூபாய் எம்.எம்.டி.ஏ. ஊக்கத்தொகை செலுத்தியிருப்பதும், இந்தத் தொகையை சதாசிவம் மூலமாக ஆவாரம்பாளையம் சிவக்குமாரே நேரடியாக எடுத்துக் கொண்டதையும் ஆதாரப் பூர்வமாக உறுதி செய்திருக்கிறோம். 2014 - 2021ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த மோசடி நடந்துள்ளது.
மோசடிக்கு உதவியதற்கு கைமாறாக, சதாசிவம் சகோதரர்களிடம்தான் அனைத்துக் கிளைச் சங்கங்களும் பட்டுச்சேலைகளை கொள் முதல் செய்ய வேண்டுமென்று ஆவாரம்பாளையம் சிவக்குமார் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார். ஆனால் இவர்களோ மில்களிலும், ஷோரூம்களிலும் கழித்துக் கட்டப்பட்ட பழைய பட்டுச்சேலைகளை மொத்தமாக வாங்கி, அதை பாலீஷ், ஷைனிங் செய்து சர்வோதய சங்கங்களுக்கு தள்ளிவிட்டு கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். ஜக்கம்பட்டி கிளையில் பட்டுக்கூடு, பட்டுநூல் கொள்முதலிலும் ஊழல் நடந்துள்ளதை கண்டுபிடித்துள்ளோம். ஜக்கம்பட்டி கிளையின் முன்னாள் மேலாளர் பாலாஜி, கே.வி.ஐ.சி. துறை அதிகாரிகள், சதாசிவம் சகோதரர்கள் இந்த மோசடியில் உடந்தையாக இருந்துள்ளனர்.
ஜக்கம்பட்டி கிளையில் ஆண்டுக்கு சராசரியாக 2 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துவந்த நிலையில், குறிப்பிட்ட ஒரே ஆண்டில் 16 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளதாக போலிக் கணக்கு காட்டியுள்ள னர்.'' என்கிறது சி.பி.ஐ. வட்டாரம். சி.பி.ஐ. விசாரணை துரிதப்படுத் தப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஆவாரம் பாளையம் சிவக்குமார் உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
சி.பி.ஐ. விசா ரணையைத் தொ டர்ந்து, ஆவாரம் பாளையம் சர்வோதய சங்க நெசவாளர்களுக்கு எம்.எம்.டி.ஏ. ஊக்கத் தொகை பட்டுவாடா செய்வதை நிறுத்தி வைத்துள்ளது கே.வி. ஐ.சி. தலைமை அலுவல கம். வங்கியில் கடன் பெறவும் தடை விதித் திருக்கிறது. இந்த ஊழல் குறித்து கே.வி.ஐ.சி. கோவை உட்கோட்ட உதவி இயக்குநர் சித் தார்த்தனிடம் கேட்ட போது, "ஊழல் புகாரின் உண்மைத்தன்மை, எவ்வளவு முறைகேடு நடந்துள்ளது என்பது குறித்து ரிப்போர்ட் செய் வது மட்டுமே என்னுடைய வேலை. மேற் கொண்டு மாநில இயக்குநரைதான் கேட்க வேண்டும்,'' என்றார். சென்னை சர்க்கிள் உதவி இயக்குநர் சந்தர்பாலோ, "மீட்டிங்கில் இருக் கிறேன். அப்புறம் பேசுகிறேன்'' என்று கூறி விட்டு பேச்சை துண்டித்தார். கே.வி.ஐ.சி. துறை யின் தமிழ்நாடு மாநில இயக்குநர் பி.என். சுரேஷிடம் கேட்டபோது, "ஊழல் புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை இன்னும் முடியவில்லை. இதற்கிடையே எங்கள் தரப்பிலும் ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தில் தணிக்கை செய்யும் பணிகளும் நடந்து வருகிறது. முறைகேடு செய்யப் பட்ட தொகை எவ்வளவாக இருந்தா லும் முழுமையாக ரெக்க வரி செய்யப்படும். இப்போதைக்கு விரிவாக எதையும் சொல்ல முடியாது,'' என்றார்.
இந்த புகார் குறித்து ஆவாரம்பாளையம் சர்வோதய சங்க செய லாளர் சிவக்குமாரிடம் கேட்டபோது, "இந்த புகார் தொடர்பாக ஏற் கெனவே கே.வி.ஐ.சி. அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் புகாரில் உண்மையில்லை என்று சொல்லிவிட்டனர். தற் போது சி.பி.ஐ. விசாரிக் கிறது. இதன் காரணமாக ஊக்கத்தொகை நிறுத்தப் பட்டபோதும்கூட நடப்பு ஆண்டில் 37 கோடி ரூபாய்க்கு கைத்தறி பட்டுச்சேலைகளை விற்பனை செய்திருக் கிறோம். எங்கள் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் பொய்ப்புகார் அளிக் கின்றனர்.'' என்றார் சிரித்துக்கொண்டே.
தமிழகம், புதுவையி லுள்ள 70 சர்வோதய சங்கங்களிலும் சி.பி.ஐ. விசாரித்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள் ஊழியர் கள்.