எந்தப் பக்கம் போனாலும் ஆபாச வலைத்தளக்காரர்களுக்கு கேட் போடுகிறது தமிழக காவல் துறையின் சைபர் க்ரைம். ஆனாலும், ஏதோ ஒரு வகையில் சித்துவேலைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆபாச வலைத்தள குரூப்பினர். இப்போது, தமிழகத்தின் முன்னணி கல்லூரிகளின் பெயர்களில் நீலப்படங்களைப் பதிவேற்றி சத்தமின்றி கோடிக்கணக்கில் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர்.
""கல்லூரி அட்மிஷன் நேரத்தில் முன்னணி கல்லூரிகளின் விவரங்களைத் தேடும்போது, அக்கல்லூரிகளின் பெயர்களில் இயங்கும் ஆபாச வலைத்தளங்களும் கண்களில் படுவதை தவிர்க்கமுடியவில்லை'' என வருந்துகிறார் ஒரு மாணவியின் தந்தை.
தமிழகத்தில் பல முன்னணி தனியார் மருத்துவக் கல்லூரிகள்- இன்ஜினியரிங் கல்லூரிகள், பிரபலமான கலைக்கல்லூரிகளின் பெயர்களில் ஆபாசப்பட வலைப்பக்கங்கள் உலா வருகின்றன. சென்னை, கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் முன்னணியிலுள்ள கல்லூரிகளின் மாணவிகளின் செக்ஸ் வீடியோக்கள், ஆசிரியைகள்- மாணவர்களின் அந்தரங்க லீலைகள் என்ற "கிளுகிளு' பெயர்களில் பல வலைத்தளங்கள் இருக்கின்றன.
குறிப்பாக, சென்னை-செங்கல்பட்டு ரூட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவிகளின் ஆபாசப்படங்கள் என்ற பெயரிலும், குரூப் ஸ்டடி என்ற பெயரில் ஆண்களும், பெண்களும் நெருக்கமாக இருக்கும் பல வீடியோக்கள் வேகமாக பரவிவருகின்றன. கல்லூரியின் இளம்பெண் ஒருவர், ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களுடன் படுக்கையில் இருப்பது போன்ற ஆபாசப்படங்கள், அதே பல்கலை வளாகத்திலுள்ள ஏ.டி.எம். மையத்தில் ஆணும், பெண்ணும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள், அக்கல்லூரியின் பேராசிரியை ஒருவர், வாலிபருடன் காருக்குள்ளேயே கசமுசாக்களில் ஈடுபடுவது என பல்வேறு தலைப்புகளில் ஆபாசப்படங்கள் "போர்னோ' பக்கங்களில் கொட்டிக்கிடக்கின்றன.
கோவையின் பிரபல கல்லூரி, சேலத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரி, நாமக்கல் இன்ஜினியரிங் கல்லூரிகள், ஈரோடு கல்லூரி உள்பட கூகுள் தேடுதளமே சூடாகும் வகையில் பல்வேறு பிரபலமான கல்லூரிகளின் பெயர்களில் போர்னோ வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. எக்ஸ்வீடியோஸ், ஐபோர்ன், ரெட்போர்ன் கிராட்டிஸ் உள்ளிட்ட பல்வேறு ஆபாச வலைத்தளங்கள் தமிழ் செக்ஸ் என்ற பெயரிலும், கல்லூரிகளின் பெயரிலும் நீலப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளன.
கல்லூரிகளின் பெயர்களில் உலாவும் ஆபாசப்பட வலைத்தளங்களை ஆய்வு செய்ததில் நமக்கு சில நுட்பமான விஷயங்களும் தெரியவந்தன. குறிப்பிட்ட கல்லூரிகளின் மாணவிகள், ஆசிரியைகளின் செக்ஸ் என்ற பெயரில் பதிவேற்றப்பட்டுள்ள ஆபாச வீடியோக்களில் சில பக்கங்கள் மட்டுமே இளம்பெண்கள் அல்லது தமிழ்நாட்டுப் பெண்கள் சார்ந்தவையாக இருக்கின்றன. பெரும்பாலும், வெளிநாட்டுப் பெண்களும், ஆண்களும் லீலைகளில் ஈடுபடும் காட்சிகளே மலிந்து கிடக்கின்றன.
தமிழ்நாட்டுப் பெண்களின் ஆபாச வீடியோக்களின் பலவும் அலுவலக அறைகள், விடுதி அறைகள், வகுப்பறைகள், பூங்கா, புதர் மறைவுகள் என பல இடங்களில் அரங்கேறிய லீலைகளாகவும், அவற்றிலும் பெண்களின் முகம் மட்டுமே முழுமையாக தெரியும் வகையிலும் ரகசியமாகவோ அல்லது தெரிந்தோ படம்பிடிக்கப்பட்டு உள்ளன என்பதும் புலனாகிறது.
90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நீலப்படங்களில் ஆண்களின் முகம்தெரியாத வண்ணம், மிக கவனமாக படமாக்கப்பட்டு இருந்தன. தவிர, பெரும்பாலும் வெளிநாட்டுப் பெண்களின் நீலப்படங்களாகவும் இருந்தன. தமிழ்நாட்டு கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வீடியோக் களை பதிவேற்றினால், அதிகமானோர் தேடிப்பார்க்க வாய்ப்பு உள்ளதாக கருதி, சைபர் மாஃபியாக்கள் அவ்வாறான குறுக்குவழியைக் கையாண்டிருக்கலாம் என்ற அய்யமும் எழாமலில்லை.
இதில் வேடிக்கை என்னவெனில், கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் ஆபாச இணையதள பக்கங்களை தேடித் தேடிப்பார்க்கும் பழக்கம் 20 சதவீதம் அதிகரித்து உள்ளதாக கூறுகிறது ஓர் ஆய்வு. மேலும், இந்தியாவில் 95 சதவீதம் பேருக்கு ஆபாச இணையதளங்களைப் பார்க்கும் ஆர்வம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன், சிறுவர்கள் ஆபாசப்பட வலைப்பக் கங்களை மூடியதன் மூலம் பலரின் கவ னத்தை ஈர்த்த ஏ.டி.ஜி.பி. ரவி. தற்போது எஸ்.டி.எப். பிரிவில் பணியாற்றுகிறார். அவருடைய இடமாற்றத்திற்குப் பிறகு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பிரிவுக்கு முழுநேர ஏ.டி.ஜி.பி. நியமிக்கப் படவில்லை. ஆபாச இணையதளங்கள் தொடர்பாக ஏ.டி.ஜி.பி. ரவியின் கருத்தறிய அவரிடம் பேசினோம்..
""உலகளவில் இந்தியாவில்தான் இளைஞர்கள் அதிகம். அவர்கள் தங்கள் திறன்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்து வதை விட்டுவிட்டு, ஆபாசப்படங்கள் பார்ப்பதுபோன்ற பயனற்ற செயல்களில் கவனம்செலுத்துகின்றனர். சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்த விழிப் புணர்வு ஏற்படுத்துவது மட்டும்தான் ஒரே வழி. இவ்வகை குற்றங்கள் திரும்பவும் முளைத்துக்கொண்டே இருக்கும். சைபர் குற்றங்கள் குறித்து பள்ளிப் பாடத்திலேயே கொண்டுவரவேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு சிறப்பு நடவடிக்கையின்போது ஆஸ்திரேலியாவில் இருந்து, இணையவழியில் தமிழச்சி என்பவர் குரூப் செக்ஸை புரமோட் செய்துவந் தார். அவருடைய வலைத்தள பக்கத் தை அதிரடியாக மூடினோம். இதுவரை கிட்டத்தட்ட 4500-க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்கள், யுடியூப் பக் கங்களை மூடியிருக்கிறோம். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக 28 பேர் கைதுசெய்யப்பட்டு உள்ளனர். ஆனாலும், பெண்கள், சிறு வர்கள் ஆபாச இணையப் பக்கங்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. எல்லாவற்றையும் ஊடுருவி தடை செய்வதும் கஷ்டம்'' என்றார் ஏ.டி.ஜி.பி. ரவி.
''இந்திய பெண்கள், குறிப்பாக தமிழ்நாட்டுப் பெண்கள் பெயரில் ஆபாச வீடியோக்கள் தெரிந்தோ, ரகசியமாக படம் பிடிக்கப்பட்டு, வெளி நாடுகளில் இதற்கென்றே உள்ள ஆபாசப்பட வலைத்தள நிறுவனங் களுக்கு விற்கப்படுகிறது. அதன்மூலம், இந்தியப் பெண்களின் உடல் கோடிக் கணக்கில் வியாபாரம் பேசப்படுகிறது'' என்கிறார் சேலத்தைச் சேர்ந்த வெப் டெவலப்பர் வெங்கடேசன்.
இதுதொடர்பாக வெங்கடேசன் மேலும் சில விவரங்களை பகிர்ந்துகொண்டார்.
''ஒவ்வொரு வெப்சைட்டுக்கும் தனித் தனி ஐ.பி. முகவரி இருக்கு. இங்குள்ள இணைய தளங்களின் ஐ.பி. அட்ரஸ், இந்தியா வில் பதிவு செய்யப்பட்டதாக காட்டும். ஒரு நாட்டின் ஐ.பி. முகவரியை முடக்கினால், சைபர் மாஃபியாக்கள் வேறுநாட்டின் ஐ.பி. முகவரியில் உடனடியாக அதே பக்கங்களை தொடங்கிவிடமுடியும். தமிழக காவல்துறையினர் ஆபாசப்பட வலைத்தளங்களை மூடியதாகச் சொல்வதும்கூட முழுமையான நடவடிக்கை அல்ல. அவர்கள் முடக்கியதாகச் சொல்லப்படும் பல ஆபாச வீடியோக்கள் வேறு வேறு தளங்களில் வெவ்வேறு பெயர்களில் இப்போதும் வலம்வருகின்றன. இணையதளத்தில் பதிவேற்றம் செய் யப்பட்ட எந்த ஒரு படமும், வீடியோவும் சர்வர்களில் நிரந்தரமாக பதிவாகி இருக்கும். அதனால் அதை மீண்டும் மீளுருவாக்கம் செய்யமுடியும்.
கல்வி நிலையங்களின் பெயர்களில் ஆபாசப்பட வலைத்தளங்கள் இருப்பதன் பின்னணியில் அதன் போட்டியாளர்கள் இருக்கலாம். அல்லது கல்லூரிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கில் மாணவர்களும்கூட அவ்வாறான வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம். சிலர், பெண்களை அச்சுறுவதற்காகவோ அல்லது அவர்களிடம் மீண்டும் "ஆதாயம்' அடைவதற்காகவோகூட ஆணும், பெண்ணும் உல்லாசமாக இருக்கும் காட்சிகளை பதிவேற்றம் செய்யலாம்'' என்கிறார் வெங்கடேசன்.
ஊரடங்கு காலத்திலும் ஆபாசப்பட வலைத்தளங்கள் மீது ஆர்வம் அதிகரிக்கக் காரணம் என்ன என்பது குறித்து நாம் சேலத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் பிரதீப்பிடம் கேட்டோம்.
''போர்னோகிராபி பார்ப்பது என்பது ஆரம்பத்தில் ஜாலிக்காக தொடங்கும். நாளடைவில், மன அழுத்தம் ஏற்படும்போதெல்லாம் ஆபாச வீடியோக்களை பார்ப்பது தொடரும். அதற்கே அடிமையாகிவிடும் அபாயமும் இருக்கிறது. யதார்த்த வாழ்வில் பெண்களுடன் இயைந்து போகமுடியாதவர்கள் போர்னோகிராபி பார்ப்பதன் மூலம் கற்பனை உலகில் தாங்கள் நினைத்தபடி வாழ்ந்துகொள்கிறார்கள்.
ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதால் பெரிய அளவில் தீங்கில்லை. அதுவே அதிகமாக போனால், ஒருகட்டத்தில் ஆபாச படக்காட்சிகளைப் பார்க்காவிட்டால் அந்த நபர் பயங்கரமாக எரிந்துவிழுவது, கோபப்படுவது மட்டுமின்றி அவர்களின் இயல்பான பணிகள் பாதிக்கும் அபாயமும் இருக்கு'' என்கிறார் மனநல மருத்துவர் பிரதீப்.
ஆண், பெண் அந்தரங்க உறவுகளை கிளர்ச்சிக்காகவோ, மீண்டும் போட்டுப் பார்க்கும் ஆவல் காரணமாகவோ செல்போனில் பதிவுசெய்வது என்பது, ஒருபோதும் பாதுகாப்பானது அல்ல. அந்தக் காட்சிகள் செல்போனுக்கு உரியவரின் அனுமதி இல்லாமலேயே பொதுவெளியில் காட்சிப்பொருளாகும் ஆபத்து இருக்கிறது என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். மேலும், கல்லூரிகளின் பெயர்களில் வரிசைகட்டி நிற்கும் ஆபாச வலைத்தளங்களை காவல்துறையும், கல்லூரி நிர்வாகமும் உடனடி யாக முடக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே, இவற்றைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ள பெற்றோர்கள், மாணவிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-இளையராஜா