"போலி ஆவ ணங்களைக் கொடுத்து வெற்றி பெற்றுவிட்டேன். நான் செய்தது தவறுதான். காலில் கூட விழுகிறேன். என்னை மன்னித்து விடுங் கள்!' என்று ஆளுங்கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் பேசிய ஆடியோ, வாட்சப், பேஸ்புக்கில் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தி லுள்ள கொடைக்கானல் நக ராட்சியை கடந்த உள்ளாட்சி நகர்ப்புறத் தேர்தலில் பெரும் பான்மையான கவுன்சிலர் களுடன் ஆளுங்கட்சியான தி.மு.க. கைப்பற்றியது. நகர்மன்ற சேர்மனாக செல்லத்துரை இருக்கிறார்.

இந்த நகராட்சி யின் 20வது வார்டை பட்டியலின சமூகத்திற்கு ஒதுக்கியதில், தி.மு.க.வை சேர்ந்த பரிமளா போட்டி யிட்டு வெற்றிபெற்றார். கடந்த 2 ஆண்டுகளாக தொகுதி மக்களுக்கு சேவையாற்றிவருகிறார்.

fake

Advertisment

இந்நிலையில் தான் ஆளுங்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் பரிமளா போலி ஆவணங்களைக் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதாக, மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ., கமிஷனர், சேர்மன் ஆகியோருக்கு, கொடைக் கானல் வி.சி.க.வின் நகர செயலாளரான இன்ப ராஜ் புகாரனுப்பியுள்ளார். புகாருக்கு பின்னர் தான் விஷயமே வெளியே வந்தது.

"கடந்த 2016 தேர்தலிலேயே பரிமளா போட்டி போட நினைத் தும் முடியவில்லை. அடுத்து 2021 கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றபோது தான் எங்களுக்கு சந்தேகம் வந்தது. ஏனென்றால், இவருடைய கணவர் ரத்தினம் இந்து பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் இந்த பரிமளா, கிறிஸ்துவ பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பிறந்த பிள்ளைக்கு இந்து பட்டியலின சமூகத்திற்கான சான்றிதழை வாங்கியிருக் கிறார். அப்படி வாங்கிய சான்றிதழைத்தான் பரிமளா மாற்றி, தானும் இந்து பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலம் அனைத்து ஆதாரங்களையும் வாங்கி யிருக்கிறேன். அதன் அடிப் படையில் மாவட்ட கலெக்டர் உட்பட அனைத்து அதிகாரி களுக்கும், போலி ஆவணங்களை தயார் செய்து வெற்றிபெற்ற கவுன்சிலர் பரிமளாவின் பதவியை பறிக்க வேண்டுமென்று மனு கொடுத்திருந்தேன். இந்த விசயம் பரிமளாவிற்கு தெரியவும் தான் என்னிடம் செல் மூலம் தொடர்பு கொண்டு, 'நான் போலி ஆவணங்களைக் கொடுத்து தான் தேர்தலில் வெற்றி பெற்றேன். நான் செய்தது தவறு தான். காலில் கூட விழுகிறேன், என்னை மன்னித்துவிடுங்கள். என் மகனுக்கு பெண் பார்த்துக்கொண்டு இருப்பதால் இந்த நேரத்தில் இந்த பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம். திருமணம் முடிந்தபின்பு நானேகூட என் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன். இனிமேல் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்' என்று கெஞ்சினார்.

அதற்கு, நீங்கள் செய்தது மிகப்பெரிய தவறு. எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வார்டில் நீங்கள் போட்டி போட்டதின் மூலம் எங்களுக்கான உரிமையை இழந்திருக்கிறோம். அதனால் நீங்கள் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறிவிட்டேன். இப்படி செல் மூலம் பேசியது தான் ஆடியோவாக தற்போது வைரலாகி வருகிறது. பரிமளா மீதான புகார்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் பரிமளாவிற்கு அதிகாரிகள் துணை போகிறார்கள். இந்நிலை தொடர்ந்து நீடித்தால் மாவட்ட அளவில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்'' என்றார் வி.சி.க.வின் கோடை நகரச் செயலாளரான இன்பராஜ்.

இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் பூங்கொடியிடம் கேட்டபோது, "இந்த பிரச்சனை என் கவனத்திற்கு வரவில்லை. கொடைக்கானல் நகராட்சி என்பதால் கமிஷனரிடம் புகார் ஏதும் கொடுத்திருப்பார்கள். அதனால் அவரிடம் பேசி அந்த புகாரை விசாரிக்கச் சொல்கிறேன். அதன் அடிப் படையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

கொடைக்கானல் நகராட்சி மற்றும் கொடைக்கானல் யூனியன் உள்பட அரசு துறைகளில் பணிபுரியும் சிலர், இந்து பட்டியலின சமூகத்தில் அரசு வேலைகளை வாங்கிக் கொண்டு தற்போது கிறிஸ்துவ பட்டியலின சமூகத்தில் சேர்ந்திருக்கிறார்கள். அதுபோல் கிறிஸ்துவ பட்டியலின சமூகத்தில் இருந்தவர்கள், இந்து பட்டியலின சமூகத்தில் சேர்ந்து, அதன்மூலமும் அரசு வேலையில் சேர்ந்து பயனடைந்து வருகிறார்கள். இதனால் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக் குள்ளேயே ஒருவரின் வாய்ப் பை இன்னொருவர் தட்டிப் பறிப்பதாக உள்ளது. இதை யும் கவனத்தில் கொள்ள வேண்டுமென்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

-சக்தி

ff