நைஜீரியர்களின் அட்டகாசம் ஒடுக்கப்பட்டதற்குப் பிறகு, 500 ரூபாயில் போலி ஆதார் கார்டைப் பெற்றுக் கொண்டு சட்டவிரோதக் குடி யேற்றத்தின் மூலம் திருப்பூருக்குள் ஊடுருவி, அடிதடி மற்றும் கொள்ளை மூலம் டாலர் சிட்டியின் சட்டம் ஒழுங்கைச் சீர் குலைத்து வருகின்றனர் வங்க தேசத்தவர்கள். தோற்றத்தில் வட இந்தியரைப்போல் இருப்பதால் செய்வதறியாது கைகட்டி திகைத்து நிற்கின்றது காவல் துறை.

ff

திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் மணிகண்டன், "என்னு டைய வீட்டை ராக்கிபாளையம் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவருக்கு வாடகைக்கு விட்டிருந்தேன். நாளடைவில் மேலும் இரண்டு நபர்கள் வந்து தங்கிய நிலையில், வீட்டைக் காலி செய்யக் கூறினேன். அதில் தகராறு ஏற்பட்டதால் அங்கி ருந்த மூவரும் என்னை அடித்து உதைத்தனர்'' என திருமுருகன் பூண்டி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். விசாரணை யில் அவர்கள் வங்கதேசத்தவர்கள் எனவும், ரூ500க்கு போலி ஆதார் கார்டு பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக இந்தியா விற்குள் ஊடுருவியதும் தெரிய வர, அவர்களைக் கைது செய்து புழல் சிறைக்கு அனுப்பியது காவல்துறை. இது இப்படியிருக்க, இங்கொன்றும் அங்கொன்றுமாக வங்கதேசத்தவர்கள் அடிதடி கேஸ்களில் ஈடுபட்டதில், நொச்சிப்பாளையம் லாலா பேக்கரி அருகே கொத்தாக 10 வங்கதேசத்தவர்கள் கைதாகி காவல்துறைக்கு ஷாக் கொடுத் துள்ளனர்.

க்யூ பிரிவு அதிகாரி ஒருவரிடம் விசாரித்ததில், "2013, 2014 மற்றும் 2015, 2018-ம் ஆண்டுகளில், இங்கு சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்த நைஜீரியர்கள் மீது நிறைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பெரும் பாலானவை உரிய ஆவணங் களின்றி இந்தியாவில் தங்கியிருந்ததற்கான வழக்குகளாகும். இவர்களில் குற்றம் நிரூபிக்கப் பட்ட குற்றவாளிகள், அவர்களின் நாட்டுக்கே திரும்ப அனுப்பப் பட்டனர். இப்பொழுது, தோற்றத்தில் வட இந்தியர்களைப்போல் இருப்பதையே சாதகமாக வைத்துக்கொண்டு, வங்கதேசத்திலிருந்து எல்லை கடந்து மேற்கு வங்கம் வந்தடையும் வங்க தேசத்தவர்கள், அங்கே 500 ரூபாய்க்கு போலி ஆதார் கார்டு பெற்றுக் கொண்டு, ஹவுரா ரயில் வழியாக இங்கு வந்துவிடுகின்றனர். தோற்றமும், ஆதார் கார்டும் அவர்களுக்கு சாதகமாக, இங்கே எளிதில் வேலைக்குச் சேர்ந்து விடுகிறார்கள். நாளடைவில் ஏதாவது குற்றச்செயலில் ஈடுபட்டு கைதாகும்போதுதான் அவர்கள் வங்கதேசத்தவர் என்ப தும், சட்டவிரோதக் குடியேற்ற மும் எங்களுக்குத் தெரிய வருகின்றது. கடுமையான விசா ரணைக்குப் பிறகே அவர் களுடைய வங்கதேச பாஸ் போர்ட், தேசிய அடையாள அட்டை கிடைக்கும். அதை வைத்து உறுதி செய்துவிட்டு வழக்குப் பதிவு செய்து புழல் சிறையில் அடைத்துவிடுவோம். கடந்த ஆண்டு மட்டும் வங்க தேசத்தவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் 15. இந்தாண்டில் தற்பொழுது வரை 4 வழக்குகள் பதியப்பெற்றுள்ளன'' என்கிறார் அவர்.

Advertisment

ff

"பின்னலாடை மற்றும் ரெடிமேட் ஆடைகள் மூலம் அதி களவில் அன்னியச் செலவாணியை ஈட்டித்தரும் திருப்பூர், பின்னா ளில் டாலர் சிட்டியாக மாறியது. திருப்பூர் மாவட்டத்தில் 2013-ஆம் ஆண்டு முதல் திருப்பூர் மாநகரக் காவல் உருவாக்கப்பட்டு, வடக்கு மற்றும் தெற்கு என இரு சரகத்தை உள்ளடக்கிச் செயல் படத் துவங்கியது. அப்போது இதில் ஏழு சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் மற்றும் இரண்டு அனைத்து மகளிர் காவல்நிலையங்கள், இரண்டு போக்குவரத்துப் புலனாய்வு காவல் நிலையங்கள் செயல்படத் தொடங்கி, தற்போது கொங்கு நகர் ரேஞ்சில் வடக்கு மற்றும் வேலாம்பாளையம் காவல் நிலையங்களும், அனுப்பர்பாளையம் ரேஞ்சில் அனுப்பர்பாளையம் மற்றும் திருமுருகன்பூண்டி காவல் நிலையங்களும், கே.வி. ஆர். நகர் ரேஞ்சில் தெற்கு மற்றும் மத்திய காவல் நிலையங்களும், நல்லூர் ரேஞ்சில் நல்லூர் மற்றும் வீரபாண்டி காவல் நிலையங்களு மாக மொத்தம் 4 ரேஞ்சில், 8 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

உளவுத்துறையில் இன்னும், அருகிலுள்ள கோவை மாவட் டத்தையே நம்பி இருப்பதால் பலன் பூஜ்யமே! சமீபத்தில் நடந்த போலீஸ் மானியக் கோரிக்கையின்போது க்யூ பிரிவு போலீஸார் திருப்பூர் மாவட்டத்தில் தனியாகச் செயல்பட உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. ஆனால் ஒருங் கிணைந்த குற்றங்களை இனங்காணும் OCIU போலீ ஸார், மாவட்டத்திற்கு 2, சிட்டிக்கு 1 என மொத்தமே 3 போலீஸார் தான் இருக்கின்றார்கள். SIU எனப்படும் சிறப்பு புலனாய்வு பிரிவில் சிட்டியில் மட்டும் 1 இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு போலீஸார் பணியாற்றுகின்றனர். தடுக்க வேண்டிய மத்திய உளவுத்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்ப்பதால் எங்களால் என்ன செய்ய முடியும்?" என்கின்றார் மாவட்ட உளவு அதிகாரி ஒருவர்.

இது இப்படியிருக்க, அவிநாசி பகுதியில் வங்கதேச வாலிபர்களுக்கு 1000 ரூபாய்க்கு ஆதார் கார்டு அச்சடித்துத் தருகிறார்கள் என்ற தகவல் காவல்துறைக்கு கிடைத்த நிலையில், யார் யாருக்கு ஆதார் அட்டை கொடுக்கப்பட்டுள்ளது? அவர்களின் இருப்பிடம் எது? அந்த ஆதார் அட்டைகள் அரசின் சர்வரில் இணைத்துப் பெறப்பட்டதா? என மத்திய அரசின் மின்னணுவியல் துறைக்கு தகவல் அனுப்பி ஒட்டுமொத்த வேட்டைக்காகக் காத்திருக்கின்றது தமிழக உளவுத்துறை.

Advertisment