பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம் ஆகிய தினங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். 2022ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஆறு முறை கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டங்களில், வார்டு கவுன்சிலர் கள், பொதுமக்கள் கலந்துகொள்வார்கள். தங்கள் கிராமத்திற்குத் தேவையான திட்டங்கள், கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றி, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கும், அரசுக் கும் அனுப்பி வைப்பார்கள். தேவைக்கேற்ப அரசு நிதி ஒதுக்கி கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
ஒரு நீதிமன்றத்தின் உத்தரவை அரசு எப்படி அக்கறையுடன் நிறைவேற்றுகிறதோ அதே போன்று ஊராட்சியில் நிறை வேற்றப்படும் தீர்மானத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் உள்ளது. ஆனால், சம்பிரதாயத் திற்காகத்தான் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்று கு
பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம் ஆகிய தினங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். 2022ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஆறு முறை கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டங்களில், வார்டு கவுன்சிலர் கள், பொதுமக்கள் கலந்துகொள்வார்கள். தங்கள் கிராமத்திற்குத் தேவையான திட்டங்கள், கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றி, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கும், அரசுக் கும் அனுப்பி வைப்பார்கள். தேவைக்கேற்ப அரசு நிதி ஒதுக்கி கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
ஒரு நீதிமன்றத்தின் உத்தரவை அரசு எப்படி அக்கறையுடன் நிறைவேற்றுகிறதோ அதே போன்று ஊராட்சியில் நிறை வேற்றப்படும் தீர்மானத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் உள்ளது. ஆனால், சம்பிரதாயத் திற்காகத்தான் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்று குமுறுகிறார்கள் சமூக நல ஆர்வலர்கள்.
"எங்கள் ஊரில் சுடுகாட்டுக் குச் செல்ல சரியான சாலை வசதி இல்லை. பஸ் நிலையம் அருகில் கழிவறை கட்ட வேண்டும். அங்கன்வாடி மையத்தைச் சுற்றி மதில் சுவர் கட்ட வேண்டும். இப்படிப்பட்ட அடிப்படைப் பணிகளுக்காக கிராம சபைக் கூட்டத்தில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டும் எதுவுமே செயல்படுத்தப்பட வில்லை. போதிய நிதி ஆதாரங் களை அரசு ஒதுக்கவில்லை என்று கூறி மறுக்கிறார்கள். எனவே கிராம சபைக் கூட்டங் களில் நிறைவேற்றப்படும் தீர் மானங்களைச் செயல்படுத்து வதற்கு தனி நிதி ஒதுக்கீடு செய் யப்பட வேண்டும்'' என்கிறார் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆசனூர் ஆறுமுகம்.
"இரண்டு நாட்களுக்கு முன்பு முத்துசாமி என்பவர் இறந்து போனார். அவரை சேற்றிலும், சகதியிலும் பெரும் சிரமத்திற்கு இடையே கொண்டு சென்று அடக்கம் செய்தோம். விளைநிலங்கள் வழியாகக் கொண்டு செல்லும்போது நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரி விக்கிறார்கள். சுடுகாட்டுக்குப் பாதை அமைக்கக்கோரி பலமுறை கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இதுவரை எந்த அதி காரியும் முன்வராதது வேதனை அளிக்கிறது. விரைவில் கிராம மக்களைத் திரட்டி போராட்டத் தில் இறங்கப் போகிறோம்'' என்கிறார் விழுப்புரம் மாவட்டம் சாணிமேடு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூரில், ஊராட்சி மன்றத் தலைவர் ரவிச்சந்திரன் தலை மையில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில், நூற் றுக்கும் மேற்பட்ட வர்கள் கருப்புக் கொடியேந்தி கலந்து கொண்டனர். "இடிந்துவிழும் நிலையிலுள்ள குடிநீர் தேக்கத் தொட்டியைப் புதிதாகக் கட்டிக் கொடுக்க பூமி பூஜை போட்டும் இன்னும் தொடங்காமல் இழுத் தடிப்பதை எதிர்த்தே இந்தப் போராட்டம்'' என்கிறார் அக்கிரா மத்தைச் சேர்ந்த முருகன். கருப்புக் கொடியைக் கேள்விப்பட்டு பதறியடித்துவந்த திருவெண்ணை நல்லூர் வட்டார வளர்ச்சி அலு வலர்கள் முகமது அலி, தேவ ராஜன் ஆகியோர், விரைவில் குடிநீர்த் தொட்டி கட்டித் தருவதாக உறுதியளித்தனர்.
கடலூர் மாவட்டம் வையங் குடி கிராமத்தில் கழிவு நீர்க்கால்வாய் முறையாக அமைக் காமல் துர்நாற்ற மடித்துக் கிடப் பதைக் காட்டினார் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் ராதா கிருஷ்ணன். "இவற் றை சரி செய்யக் கோரி பலமுறை கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றியும் கண்டுகொள்ளப்பட வில்லை. இந்த சுகாதாரக் கேட் டால் எங்கள் ஊர் இளைஞர் களுக்கு பெண் கொடுக்கக்கூடத் தயங்குகிறார்கள். தற்போது தமிழக அரசு, 'நம்ம ஊரு சூப்பரு' என்ற திட்டத்தை உருவாக்கியுள் ளது. கிராமங்களை முழுச் சுகா தார கிராமமாக மாற்றுவதையும், திடக்கழிவு, திரவக்கழிவுகளை வெளியேற்ற நடவடிக்கை எடுப் பதையும் அந்தத் திட்டத்தில் கூறியுள்ளனர். எங்கள் வையங் குடி கிராமத்திலிருந்து அந்த திட்டத்தைத் தொடங்கட்டும். இப்படி ஒரு கிராமம் இருப்பதை அரசும், அதிகாரிகளும் எப்போது தான் கண்டுகொள்வார்களோ?'' என்று வேதனை கலந்த கோபக் குரலில் கொந்தளித்தார் தோழர் ராதாகிருஷ்ணன்
இப்படி ஒருபக்கம் மக்கள் தங்கள் ஊருக்காக போராடி வாதாடிவரும் நிலையில்... கள்ளக் குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்றாம லேயே நிறைவேற்றியதாகக் கூறி பொய்யான ஆவணங்களைத் தயார் செய்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது, பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பதாக மாவட்ட ஆட்சிய ருக்கு புகார் அனுப்பப்பட்டு, ஊரக வளர்ச்சித் திட்ட உதவி அலுவலர் அன்னபூரணி, சங்கரா புரம் ஒன்றிய அலுவலகத்தி லுள்ள 40 அலுவலர்களிடம் நேரடி விசாரணை நடத்தியுள் ளார்.
"இப்படிப்பட்ட மோசடி யான போக்கு, அரசு அலுவலகங்களில் அதிகரித்துவருகிறது. இது, தமிழக கிராமங்களின் வளர்ச்சியை பெரிய அளவில் பாதிக்கும். எனவே இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுத்து கிராமங்கள் வளர்ச்சி பெற கிராம சபைக் கூட்டங்களில் எடுக்கப் படும் தீர்மானங்களை நிறை வேற்ற, அரசாங்கம் உரிய நிதியை ஒதுக்கி, கண்காணிக்கவும் வேண்டும்' என்கிறார்கள், கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் சமூக ஆர்வலர்கள்.