மிழ்நாட்டில் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிற்சாலைகளும் அதை சார்ந்த தொழிலாளர்களும் அதிக அளவில் இருப்பது கொங்கு மண்ட லத்தில் மட்டுமே. அதிலும் குறிப்பாக ஈரோட்டில் பல்லாயிரக்கணக்கான விசைத்தறிகளும், அத்தொழில் சார்ந்த லட்சக்கணக்கான மக்களும் வசிக்கிறார்கள்.

மக்களின் மகிழ்ச்சியே அரசின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த முன்னாள் முதல்வர் முத்தமி ழறிஞர் கலைஞர் அவர்கள்தான் அவரது ஆட்சி யில், இந்திய அள வில் முதன்முத லாக கைத்தறியாளர்களுக்கு 100 யூனிட் இலவச மின் சாரம், அதேபோல் விசைத்தறி தொழில் புரிவோருக்கு 500 யூனிட் இலவச மின்சாரம் என 1.8.2006ல் அறிவித்தார்.

stalin

Advertisment

தொடர்ந்து விசைத்தறிக்கு அது 750 யூனிட்டுகள் இலவச மின்சாரம், கைத்தறிக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என இருந்து வந்தது. விசைத்தறி நெச வாளர்களின் பல்லாண்டு கோரிக் கையை ஏற்று சென்ற 2021 சட்ட மன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிவிப்பாக விசைத்தறிகளுக்கு 750 யூனிட்டில் இருந்து ஆயிரம் யூனிட்டுகள் வரை இலவச மின் சாரம், அதேபோல் கைத்தறி களுக்கு 200 யூனிட்டிலிருந்து உயர்த்தப்பட்டு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அவர் கள் தேர்தல் வாக் குறுதியாக அப்போது அறிவித்தார். தி.மு.க. தேர்தல் வாக்குறுதி கள் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக முறைப்படி உரிய அரசாணை பெற்று செயல்படுத்தப்பட்டு வரும் வேளையில், ஒன்றிய அரசு மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகள் மற்றும் கட்டுப் பாடுகளை விதித்ததோடு மின் கட்டண உயர்வுக்கும் அது வழி வகை செய்தது. ஒன்றிய அரசு மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்த அறிவிப்புகள், மக்களுக்கு பெரும் சுமையாக மாறுவதை அறிந்த தமிழ்நாடு அரசு, மின் கட்டண உயர்வு மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது என சிறப்பு கவனத்துடன் செயல்பட்டு, விவசாயத்திற்கும் இலவச மின்சாரம், குடிசைவாழ் மக்களுக்கு இலவச மின்சாரம், கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்கும் குறிப்பிட்ட அளவு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என மக்கள் நலன் சார்ந்த அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்நிலையில் மக்களுக்கு தி.மு.க. அரசு வழங்கிய வாக்குறுதிகளின்படி தமிழக அர சானது தமது கொள்கை முடிவில் எவ்வித மாற்றமும் இன்றி மின்துறை சார்ந்த அனைத்துத் திட்டங்களை யும் செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் தொடர்ந்து நட வடிக்கை எடுத்து வந்தது. தமிழக முதல்வர் அவர்கள் இந்தியாவில் எந்த மாநி லத்திலும் இல்லாத ஒரு நடவடிக்கையாக விசைத்தறிக்கு வழங்கப்பட்டு வரும் 750 யூனிட் இலவச மின் சாரத்தினை மேலும் 250 யூனிட் உயர்த்தி, ஆயிரம் யூனிட்டு கள் வரை மின்சாரம் இலவசம் எனவும், அதே போல் கைத்தறிகளுக்கு வழங்கப்பட்டுவரும் 200 யூனிட் இலவச மின்சாரத்தினை மேலும் 100 யூனிட்டுகள் உயர்த்தி 300 யூனிட்டுகள் வரை மின்சாரம் இலவசம் என நெசவாளர்களுக்கு வாழ்வில் வசந்தம் வளர்ந்திட செய்யும் வகையில் மாபெரும் அறிவிப்பினை தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்தார்.

Advertisment

senthilbalaji

இவை தவிர்த்து விசைத்தறிகளுக்கு ஆயிரம் யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு 70 காசுகள் மட்டுமே உயர்த்த வேண்டும் என்ற நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும்விதமாக 1001 யூனிட்டிலிருந்து 1500 யூனிட்டுகள் வரை யூனிட் ஒன்றுக்கு 35 காசுகள் குறைத்து, 1500 யூனிட்டிற்கு மேல் 70 காசுகள் குறைத்தும் முதல்வர் அந்த நடவடிக்கையை செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு தமிழ்நாடு அரசினால் விசைத்தறி மின்சாரத்திற்கு ஆண் டொன்றிற்கு மானிய மாக வழங்கப் பட்டு வந்த 430.90 கோடி யானது ரூபாய் 53.62 கோடி அதிகரித்து மொத்தம் 484.52 கோடி யானது. அதேபோல் கைத்தறி மின்சாரத்திற்கு ஆண்டொன்றுக்கு மானியமாக வழங்கப்பட்டு வந்த 6.41 கோடியிலிருந்து ரூபாய் 8.41 கோடி அதிகரித்து மொத்தம் ரூபாய் 14.82 கோடியானது ஆண்டொன்றுக்கு அதிகரித்த மொத்தத் தொகையான ரூபாய் 62.03 கோடி தொகையை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு தமிழக அரசே மானியமாக வழங் கும் என்று முதல்வர் அவர்கள் அறிவித்திருக்கிறார்.

senthilbalaji

இந்தியாவில் எந்த மாநில அரசும் இது வரை செயல்படுத்தாத இத்திட்டத்தை செயல் படுத்தி, மற்ற மாநில முதல்வர்களிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டு, எதற்கும் ஒரு முன்னு தாரணமாய் தமிழக மக்களின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு செயல்பட்டுவரும் முதல்வர் அவர்கள், கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக் கான இலவச மின்சாரம் அதிகரிப்பு மற்றும் 1000 யூனிட்டுக்கு மேல் விகிதப்பட்டியல் குறைப்பு சம்பந்தமான அரசாணையை பிறப்பிக்க வேண்டிய வேளையில் தான், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டன.

அரசாணை வெளியிட வேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி தேவை. எனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழக அரசின் சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு இது சம்பந்தமாக அரசாணை வெளியிடக் கோரி கடிதம் எழுதியது.

இந்தத் தகவலை தெரிந்துகொண்ட அ.தி. மு.க. அணி தலைமை, கைத்தறி மற்றும் விசைத் தறி தொழிலில் ஈடுபடும் மக்களின் வயிற்றில் அடிப்பது போல் இத்திட்டத்தினை செயல்படுத் தும் அறிவிப்பை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியது.

இந்திய தேர்தல் ஆணையமும் இப்படி ஒரு எதிர்ப்புக் கடிதத்தை அ.தி.மு.க. கட்சியினர் கொடுத்திருப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பின்னரே நெசவாளர்களுக்கு வழங்கப் படும் இலவச மின்சாரத்தினை அதிகரிக்கும் திட்டத்தினை செயல்படுத்தலாம் என தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. அ.தி.மு.க. தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கொடுத்த எதிர்ப்பு கடித்ததால் தான் தற்போது நடை முறைக்கு வந்திருக்க வேண்டிய நெசவாளர் களுக்கு கூடுதலான இலவச மின்சாரம் அறிவிக்கப்படாமல் போனது. கடந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு எப்போதுமே விசைத்தறியாளர்களுக்கு துன்பம் ஒன்றையே பரிசாக கொடுத்திருக்கிறது. இதுதான் நிதர்சனமான உண்மை.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் முழு உண்மையையும் மறைத்துவிட்டு, தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதியை செயல் படுத்தவில்லை என முற்றிலும் பொய்யான ஒரு பிரச்சாரத்தை ஈரோட்டில் நிகழ்த்திவிட்டு சென்றுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

senthilbalaji

2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகாலம் அ.தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது பலமுறை மின்கட்டணம் உயர்வினை செய்தி ருக்கிறது. இறுதியாக கடந்த 2017ல் மின்கட்ட ணத்தை உயர்த்தியதோடு மட்டுமின்றி, விசைத் தறிகளுக்கும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆயிரம் யூனிட்டுக்கு ரூபாய் 405 அதிகப்படுத்தி சுமார் 130.85 சதவீதம் மின் கட்டண உயர்வை சத்தம் இல்லாமல் செய்து முடித்தது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு.

ஆனால் தி.மு.க. அரசால் 10.9.2022-ல் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் வெறும் ரூபாய் 235 மட்டுமே. அதாவது 32.87 சதவீதம் மட்டுமே. இவற்றையெல்லாம் மறைத்து அ.தி.மு.க. தரப்பு முழுக்க, முழுக்க பொய்யான பிரச்சாரத்தை ஈரோடு மக்களிடம் செய்துவருகிறது. இந்த உண்மை தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு தெரியவந்துள்ளது.

இது சம்பந்தமாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களிடம் நாம் பேசிய போது... "வரலாற்றிலேயே எதிலும் புரட்சிகர மான, புதுமையான, மக்கள் நேரடியாக பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக முதல்வர் தளபதி அவர்கள்தான் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார். முதல்வருக் கெல்லாம் முதல்வராக நம் முதல்வர் செயல் பட்டு வருகிறார். இலவச மின்சாரத்தை கூடுத லாக வழங்க வேண்டும் என்பது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி. அதை செயல்படுத்த முனைந்தபோது, தான் அதை நடைமுறைப் படுத்தாமல் தடுத்திருக்கிறது எடப்பாடி பழனிச் சாமி தலைமையிலான அ.தி.மு.க. அணி...!

தேர்தல் முடிந்த பிறகு நாங்கள் கொடுத்த வாக்குறுதியின்படி இலவச மின்சாரத்தினை அதிகப்படுத்தி நெசவாளர்களுக்கு வழங்குவ தோடு, மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து இலவசத் திட்டங்களும் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின் ஆட்சியிலும் தொடரும்'' என்றவர்...

"தி.மு.க. அரசின் இலவச மின்சார அதிகரிப்பு திட்டத்தால் பயன்பெறும் அனைத்து கைத்தறி மற்றும் விசைத்தறியாளர்கள், அதன் சங்க நிர்வாகிகள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை பாராட்டுவதற்காக, ஒரு பாராட்டு விழா நடத்த தீர்மானித்துள்ளார்கள். இடைத் தேர்தல் முடிந்ததும் இலவச மின்சார உயர்வு அறிவிப்பு வருகிறது. அதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் கோவை மாவட்டம் பல்லடம் அல்லது கருமத்தம்பட்டியில் பல லட்சக்கணக்கான கைத்தறி மற்றும் விசைத்தறியாளர்கள் கலந்து கொண்டு, முதல்வர் அவர்களை பாராட்டும் விழாவை விமரிசையாக நடத்த உள்ளார்கள்'' என நம்மிடம் கூறினார்.

கைத்தறி மற்றும் விசைத்தறியாளர்களின் குடும்பத்திற்கு நன்மை வழங்கும் தி.மு.க. அரசின் திட்டத்தை தற்காலிகமாக தடுத்து, தனது பொய் புரட்டின் மூலம் அ.தி.மு.க. எடப்பாடி பழனிச் சாமி மக்களிடம் அம்பலப்பட்டுப்போயுள்ளார்.

கைத்தறி, விசைத்தறியாளர்களுக்கு தி.மு.க. அரசு வழங்கவுள்ள கூடுதல் இலவச மின்சாரத் தால் தமிழகம் முழுக்க உள்ள பல லட்சக்கணக் கான நெசவாளர் குடும்பங்கள் நேரடியாக பயன் பெறும்.