"ஆன்மிக வளர்ச்சிக்கு உதவிடும் வகையில், ஆன்மிகச் சூழலை வளர்த்தெடுக்க வும் ஆன்மிக சத்குருவான ஜக்கியிடம் நேரடியாக தொடர்பு வைக்கவும் ஈஷாவால் கட்டப்பட விருக்கும் இந்த குடி யிருப்புக்கள் உங்களுக்கு உதவும். இதனை வாங்கி ஈஷாவுடன் இணைந்திருங்கள்'' என தன்னுடைய பக்தர்களிடம் மார்க்கெட் டிங் செய்து அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் பிசினஸை துவக்கியிருக்கிறார் ஜக்கி வாசுதேவ்.
கர்நாடகாவில் ஈஷா மையத்தில் பணியாற்றும் தன்னார் வலர் ஒருவர், "அமெரிக்காவில் ஈஷா இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் இன்னர்லிசயின்ஸ் எனும் பெயரில் தன்னு டைய ஈஷா மையத்தின் கிளையைப் பரப்பியிருக்கும் ஜக்கி வாசுதேவ், தன்னுடைய மகள் ராதே, மருமகன் சந்தீப் நாரா யணன் இருவருக்குமாக பண்ணை வீடு வாங்கிக் கொடுத்தது அனைவரும் அறிந்ததே! இந்நிலையில், தமிழ்நாடு அரசு தனக்கு எதிரான மன நிலையில் இருப்பதைக் கவனித்த ஜக்கி வாசுதேவ், தன்னுடைய குடும்பத் தாரின் எதிர்காலத்திற்காக கர்நாட காவிலும், நேபாளம் காத்மண்டுவிலும் ஈஷாவின் கிளையை விரிவுபடுத்தி யிருந்தார். இவ்வேளையில், கோவை ஈஷா மையத்தில் ஜக்கிக்கு "எல்லாம் ஆக' இருந்த அம்மணி, ட்ரஸ்ட் விவகாரத்தில் ராதேவிற்கு எதிராகக் கோபித்துக்கொண்டு மீண்டும் "தன்னுடைய' இடத்திற்கே சென்றிருக் கின்றார். அந்த அம்மணி வாய் திறக்கும் வேளையில் அனைத்தும் சிதைந்து விடும் என்பதையறிந்த ஜக்கி, இங்கு மக்களை ஏமாற்றி சம்பாதித்த சொத்துக்களை அமெரிக்காவுக்கு முறைகேடான வழியில் கொண்டு சேர்த்து, சுமார் 1,000 ஏக்கர் அளவில் "ஈஷா கமலா' எனும் பெயரில் ரியல் எஸ்டேட் பிசினஸை துவக்கியிருக்கின்றார்.
இந்த ரியல் எஸ்டேட் பிசினஸில் ஈஷா அபார்ட்மெண்ட், ஈஷா ஸ்டுடி
"ஆன்மிக வளர்ச்சிக்கு உதவிடும் வகையில், ஆன்மிகச் சூழலை வளர்த்தெடுக்க வும் ஆன்மிக சத்குருவான ஜக்கியிடம் நேரடியாக தொடர்பு வைக்கவும் ஈஷாவால் கட்டப்பட விருக்கும் இந்த குடி யிருப்புக்கள் உங்களுக்கு உதவும். இதனை வாங்கி ஈஷாவுடன் இணைந்திருங்கள்'' என தன்னுடைய பக்தர்களிடம் மார்க்கெட் டிங் செய்து அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் பிசினஸை துவக்கியிருக்கிறார் ஜக்கி வாசுதேவ்.
கர்நாடகாவில் ஈஷா மையத்தில் பணியாற்றும் தன்னார் வலர் ஒருவர், "அமெரிக்காவில் ஈஷா இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் இன்னர்லிசயின்ஸ் எனும் பெயரில் தன்னு டைய ஈஷா மையத்தின் கிளையைப் பரப்பியிருக்கும் ஜக்கி வாசுதேவ், தன்னுடைய மகள் ராதே, மருமகன் சந்தீப் நாரா யணன் இருவருக்குமாக பண்ணை வீடு வாங்கிக் கொடுத்தது அனைவரும் அறிந்ததே! இந்நிலையில், தமிழ்நாடு அரசு தனக்கு எதிரான மன நிலையில் இருப்பதைக் கவனித்த ஜக்கி வாசுதேவ், தன்னுடைய குடும்பத் தாரின் எதிர்காலத்திற்காக கர்நாட காவிலும், நேபாளம் காத்மண்டுவிலும் ஈஷாவின் கிளையை விரிவுபடுத்தி யிருந்தார். இவ்வேளையில், கோவை ஈஷா மையத்தில் ஜக்கிக்கு "எல்லாம் ஆக' இருந்த அம்மணி, ட்ரஸ்ட் விவகாரத்தில் ராதேவிற்கு எதிராகக் கோபித்துக்கொண்டு மீண்டும் "தன்னுடைய' இடத்திற்கே சென்றிருக் கின்றார். அந்த அம்மணி வாய் திறக்கும் வேளையில் அனைத்தும் சிதைந்து விடும் என்பதையறிந்த ஜக்கி, இங்கு மக்களை ஏமாற்றி சம்பாதித்த சொத்துக்களை அமெரிக்காவுக்கு முறைகேடான வழியில் கொண்டு சேர்த்து, சுமார் 1,000 ஏக்கர் அளவில் "ஈஷா கமலா' எனும் பெயரில் ரியல் எஸ்டேட் பிசினஸை துவக்கியிருக்கின்றார்.
இந்த ரியல் எஸ்டேட் பிசினஸில் ஈஷா அபார்ட்மெண்ட், ஈஷா ஸ்டுடியோ மற்றும் ஈஷா கமலா என மூன்று வகையான குடியிருப்புக் களைக் கட்டித் தரவுள்ளதாக கடந்த மாதம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது'' என்கிறார் அவர்.
ஐக்கிய அமெரிக்காவிலுள்ள டென்னசி மாகாணத்தில், சுமார் 20 மில்லியன் டாலர் மதிப்பில் ஆயிரம் ஏக்கர் அளவிலான நிலத்தினைக் கையகப்படுத்தியுள்ளது ஈஷா மையம். இனி வருங்காலங்களில் சத்குரு ஜக்கியே இங்குதான் வசிக்க இருக்கிறார். அவருடன் நீங்களும் இங்கே தங்கி அவருடைய ஆன்மிகத்தில் ஒன்றிணையலாம் என ஆயிரம் ஏக்கரில், 480 எண்ணிக்கையிலான ஈஷா ஸ்டுடியோ டைப் வீடுகள், 202 ஈஷா கமலா டைப் வீடுகள் மற்றும் சிங்கிள் பெட்ரூம், டபுள் பெட்ரூம் என இருவகையான 6 அடுக்குகள் கொண்ட அபார்ட்மெண்ட் வீடுகளைக் கட்ட எத்தனித்துள்ளது ஈஷா நிர்வாகம். இதில் ஈஷா அபார்ட்மெண்ட்டில் 570 சதுர அடி கொண்ட சிங்கிள் பெட்ரூம் வீட்டின் விலை 1,49,000 தொடங்கி 1,80,000 அமெரிக்க டாலர்கள். 850 சதுர அடி கொண்ட டபுள் பெட்ரூம் வீட்டின் விலை 2,09,000 தொடங்கி 2,50,000 அமெரிக்க டாலர்கள். ஈஷா ஸ்டுடியோ வீடுகளில் 350 சதுர அடி வீடு 90,000 தொடங்கி 98,000 அமெரிக்க டாலர்கள். 420 சதுர அடி கொண்ட டீலக்ஸ் டைப் ஸ்டுடியோ வீடு 1,05,000 தொடங்கி 1,17,000 அமெரிக்க டாலர்கள்.
இப்படிக் கட்டப்படும் வீடுகளை அவர்களின் வாரிசுகள் அனுபவிக்க உரிமையில்லை. எனவே அவர்களுக்குப் பின் ஈஷாவே இந்த வீடுகளை எடுத்துக்கொள்ளும். யூஸ் அண்ட் த்ரோ போல ஒருமுறை பயன்படுத்தி விட்டு ஈஷாவிடமே ஒப்படைத்துவிடத்தான் இவ்வளவு தொகை வசூலிக்கிறார்கள். இப்படி யான நிபந்தனையுடன் யாரேனும் "சொந்த வீடு' வாங்குவார்களா?
இதேபோல வில்லா டைப்பிலான கமலா வீடுகள் கட்டித் தருவதிலும் கோல்மால் நிபந்தனைகள் உள்ளன. தரை வாடகைக்கு தருவதுபோல் ஒரு ஏக்கர், 1/2 ஏக்கர், 1/3 ஏக்கர் அளவுள்ள இடங்களை, முறையே 85,000 டாலர்கள், 55,000 டாலர்கள், 42,000 டாலர்கள் தொகைக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு ஈஷா தருகிறது. இதில் வில்லா கட்டுவதற் கும் அதற்குரிய தொகையை லீசுக்கு எடுத்தவர் களே தரவேண்டும். அந்த வில்லாக்களை கட்டித்தரும் பொறுப்பையும் ஈஷாவே ஏற்றுக்கொள்கிறது. ஆக, லீசு காலம் முடிந்த தும் அந்த இடமும், அதில் கட்டப்பட்ட கமலா டைப் வில்லாவும் திரும்ப ஈஷாவுக்கே சொந்தமாகும்.
"ஜக்கி சொன்னால் போதும், எதையும் யோசிக்காமல் செய்யும் கூட்டத்திலுள்ள பொருளாதாரத்தில் மிகுந்த செல்வாக்கு படைத்த வர்களாக இருப்பவர்களைக் குறிவைத்துதான் இந்த ரியல் எஸ்டேட் பிசினஸை துவக்கியிருக் கின்றார் ஜக்கி வாசுதேவ். இது முழுக்க, முழுக்க அவருடைய எதிர்காலத்தைக் கணக்கிட்டே நடக்கின்றது என்பது அவருடன் பயணிக்கும் எங்களைப் போன்ற சிலருக்குத் தெரியும். பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்த குடியிருப்புக்கள், முதலில் அட்வான்ஸ் கொடுத்து புக்கிங் செய்பவருக்கே முன்னுரிமை என்ற அறிவிப்புடன் வசூல் வேட்டை நடக்கின்றது. அப்படி அட்வான்ஸ் பணம் கொடுத்தவர்களுக்கு இந்த குடியிருப்புக்கள் ஒதுக்கப்படும் தகவல் செப்டம்பர்/ அக்டோபர், 2023 போல தான் கூற முடியும் என்கிறார்கள். அப்படி ஒதுக்கப்பட்டவை முழுதாகக் கட்டி முடிக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்க ஏறக்குறைய இரண்டிலிருந்து நான்கு வருடங்கள் ஆகும் எனவும் நிபந்தனையில் குறிப்பிட்டுள்ளார்கள். அதுபோக, வீட்டிற்கு சொந்தக்காரர்கள் இறந்தால் அந்த வீடு வாரிசிற்கு போகாதாம். இறப்பிற்குப் பின் ஈஷாவே எடுத்துக்கொள்ளும் என்கிற நிபந்தனையை அறிந்த வாரிசுகள், ஈஷாவிற்கு இமெயில் அனுப்பி எதிர்ப்பினைக் காண்பித்து வருகின்றனர். இருப் பினும் இந்த ரியல் எஸ்டேட் பிசினஸை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல, வருகின்ற ஜூன் மாதம் ஜக்கி, அட்லாண்டாவிற்கும், லாஸ் ஏஞ்சல்ஸுக்கும் வருகை புரிவது குறிப்பிடத்தக்கது'' என்கிறார் அவர்.
குடியிருப்புகளில் வசிக்கவுள்ளோர், ஈஷாவின் க்ஷேத்ரக்னா பயின்றிருக்க வேண்டும். அடுத்ததாக, இன்னர் இன்ஜினியரிங் கம்ப்ளீஷன் திட்டத்தை முடித்திருந்தால் மட்டுமே ஒப்பந்த காலத்திற்கு ஒரு குடியிருப்பைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. வீட்டின் உரிமையாளர் இறந்துவிட்டால், அவரது மனைவியும் க்ஷேத்ரக்னா பயின்று இருந்தால் மட்டுமே குடியிருப்பைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்பன போன்ற துவக்க விதிகளின் மூலம் க்ஷேக்ரக்னா பயிற்சிக்கும் ஆட்களைக் கட்டாயத்தின் பேரில் சேர வைத்து, பணத்தை நிரப்பிவரும் ஜக்கி, தனக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க அளிக்கப்பட்ட 'சேவ் சாயில்' திட்டப் பணத்தை முறைகேடாக இந்த ரியல் எஸ்டேட் பிசினஸில் இறக்கியிருக்கிறார் என்கின்ற தகவல் ஈஷா கிளைகளில் கசிந்திருக்கின்றது.
"ஆன்மிக நோக்கில் வருகின்ற பணத்தை ஈஷா கமலா ரியல் எஸ்டேட்டில் முறைகேடாக முதலீடு செய்துள்ளதையும், அமெரிக்காவிலுள்ள ஈஷா கிளை ருத்திராட்சம், செம்பு, வளையல், கயிறு உள்ளிட்ட ஈஷா பொருட்களை வரி ஏய்ப்பு செய்து இந்திய மதிப்பில் சுமார் ரூ.300 கோடி அளவில் விற்பனை செய்துள்ளதையும் கண்டறிந்துள்ளது நிதி மோசடிகள் குறித்து ஆய்வு செய்யும் அமெ ரிக்க நிறுவனம். இது ஜக்கியின் வலது கரமாகவும், ஈஷா கமலா திட்டங்களுக்கு உதவியாக இருந்த லீகல் அட்வைசர் ஹிதேஷ் படேலுக்கு நெருக்கடி ஏற்படுத்திய நிலையில், அவர் ஜக்கியிடமிருந்து எஸ்கேப் ஆகியிருக்கின்றார். இதனால் ஜக்கி வாசுதேவிற்கு இனி சிரம தசைதான்'' என்கிறார் ஜக்கியின் முன்னாள் ஆடிட்டர் ஒருவர். நிலவரம் சிக்கலானால், நித்தியானந்தா வரிசையில் இந்தியாவை விட்டு வெளியேறு வாரா ஜக்கி?
__________
இறுதிச் சுற்று!
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் 3-ந் தேதி திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், மேல் முறையீட்டு வழக்கில் இறுதி விசாரணை நடத்தலாம். அதற்குரிய தேதியை தெரிவிக்கும்படி இரு தரப்பு வழக்கறிஞர்களையும் கேட்டுக்கொண்டனர். இதற்கு பன்னீர்செல்வம் அணியினர் தரப்பு வழக்கறிஞர்கள், "கட்சியில் தற்போது புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடப்பதாகவும், தங்கள் ஆதரவாளர்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டனர்.
அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், "தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் குழப்பங்கள் ஏற்படும். இடைப்பட்ட காலத்தில் கட்சியில் எடுக்கப்படும் முடிவுகள், இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது' என தெரிவித்து விசாரணையை 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-இளையர்