"தன்னுடைய கால் கட்டை விரலைக் கொண்டு பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக, தீட்சை வழங்குகின்றேன்' என ஜக்கி செய்த அசிங்கமான சேட்டை காணொலியை, 25ஆம் தேதி இரவு EXCLUSIVE ஆக "ஜக்கி ஆசிரம அரை நிர்வாண தீட்சை! வீடியோ ஆதாரம்!' என்னும் தலைப்பில் நக்கீரன் ஆசிரியர் காணொலி வெளியிட, ஜக்கியின் மற்றொரு கொடூர முகம் வெளியுலகத்திற்கு தெரியலானது.

லகமெங்கும் வைரலான அந்த காணொலியில், தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடாவிலும்கூட ஜக்கியால் பாதிக்கப்பட்ட ஜக்கியின் முன்னாள் பக்தர்கள் நக்கீரன் ஆசிரியரை வாழ்த்தி கருத்துக்கள் பதிவிட்டனர். வாழ்த்துகள் வந்தால் வசைபாடுவதும் இருக்குமே? தன்னுடைய முகத்திரையை கிழித்த நக்கீரன் ஆசிரியரை பழிவாங்க, சிலரின் தூண்டு தலால், "ஈஷா துறவிகள் மற்றும் ஈஷா தன்னார் வலர்களைக் குறிவைத்து ஒரு யூடியூப் வீடியோ வை வெளியிட்டுள்ளார் நக்கீரன் ஆசிரியர். அவரின் அடுத்தகட்ட நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வீடியோவில் 'Child Abuse F] Report செய்யுங்கள்' எனத் தன்னிடமுள்ள தன்னார் வலர்களுக்கு வாட்ஸ்அப் செய்தி அனுப்பியது ஈஷா டீம். ஆக, அவர்களால் நக்கீரன் ஆசிரிய ரின் கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்பதுதான் பட்டவர்த்தமான உண்மை.

jaggi

முன்னதாக நக்கீரன் ஆசிரியர் EXCLUSIVE வெளியிட்ட காணொலியில், மானசரோவர் ஏரிக்கரையில் ஈஷா மைய நிறு வனரான ஜக்கியும், முன்னாள் பெண் சன்னி யாசியான "அந்த அக்காவும்' இருக்கின்றனர். அது குளிர் பிரதேசம் என்பதால், குளிரை தாங்குவதற்குரிய உடைகளை இருவருமே அணிந்திருக்கின்றனர். ஜக்கியோ உல்லன் டவலை தலையிலும், கழுத்திலுமாக சுற்றி யிருப்பது போல அணிந்திருக்கின்றார். ஆற்றின் கரையை ஒட்டி விரிப்பு ஒன்று விரிக்கப் பட்டிருக்கிறது. விரிப்பின் மேல் "அந்த அக்கா' காலை விரித்து மல்லாக்க படுத்திருக்கின்றார். ஜக்கியோ, Just as an experiment we set up one body. Set up this body like an invitation. And they didnt even hesitate for a moment. They were on என ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே, காலை உதறிக்கொண்டே செயலில் இறங்குகின்றார்.

Advertisment

அதாவது, "ஒரு பரிசோதனைக்காக உடல் தேவைப்பட்டது. ஒரு கணம்கூடத் தயங்க வில்லை. கேட்டவுடன் வந்துவிட்டார்கள். இந்த மானசரோவர் ஏரியை சுற்றிலும் பல மகான்களின் ஆத்மாக்கள் அலைந்து கொண்டி ருக்கும். அந்த மகான்களின் ஆத்மாக்களை ஒரு சேர அழைத்து, என்னுடைய கால் கட்டை விரலைக் கொண்டு அவருடைய பிறப்புறுப்புக் குள் அனுப்பி வைத்தேன். மிகவும் கடுமையான முறையில் "உள்ளே' நுழைந்ததால் அங்கு வெப் பம் அதிகமாகப் பரவியது. அதனை முன்னமே தெரிந்ததால் படுத்திருந்தவரின் தலைக்கு மேல்புறம் ஆறு அங்குலம் தொலைவில் பாத்தி ரத்தில் தண்ணீர் வைத்திருந்தேன். குளிர்ந்த இடம். குளிர்ந்த நீர் என்றாலும் ஒரு நிமிடத் திற்குள் அந்த நீர் கொதித்து விட்டது. இப்பொ ழுது பல புண்ணிய ஆத்மாக்கள் அந்த உடலில் செலுத்தப்பட்டதால், தீட்சை பெற்றதால் அந்த உடல், அந்த ஆத்மா, அவர் புதிய ஆத்மா ஆகின்றார்'' என்கின்றார் ஜக்கி வாசுதேவ். விரிப்பில் படுத்து பிறப்புறுப்பில் தீட்சை வாங்கிய அந்த அக்காவோ, "என்னை சவா சனாவில் படுக்கச் சொன் னார்கள், அப்போது என் உடலிலே ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்வதைப் போல் உணர்ந்தேன். பின் னர் என்னுடைய தலையில் மிகவும் சூடான ஏதோ ஒன்று வைக்கப்பட்டது போல உணர்ந்தேன். அது காய்ச்சியதற்கும் மேலான அளவுக்கு சூடாக இருந்தது'' என் கிறார். இதுபோல்தான், சிறுமிகளுக்கு பிறப்புறுப்பில் கட்டைவிரலை அழுத்தி தீட்சை அளிக்கின்றார் ஜக்கி என்பது அங்கு கல்வி பயின்ற முன்னாள் மாணவியின் குற்றச்சாட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

"சிவபெருமானைத் தியானித்து விதிப்படி வழிபடுவதற்கு நமக்குத் தகுதியளிப்பது தீட்சை. எனக்கு தெரிந்து சிவ ஆகமத்தில் தெளிவுபெற்ற ஒருவர், தீட்சை பெறுபவரின் தலையில், நெற்றி யில் கைவைத்து தீட்சை அளிப்பார், ஆனால் பிறப்புறுப்பில் அல்ல. இது ஈனத்தனமானது. பாலியல் வேட்கையைத் தூண்டும் செயல்'' என் கிறார் பேரூரைச் சேர்ந்த சிவனடியார் ஒருவர்.

jaggi

Advertisment

இது இப்படியென்றால், 24ஆம் தேதி யன்று கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்தில் சுவாமி அபிபாதா என்பவர் மரணமடைந்தார். மரணத்திற்கு கார ணம், நாள்பட்ட புற்று நோய் என்ற ஈஷா யோக மையம், மரணமடைந்த சில மணி நேரங்களி லேயே சுவாமி அபிபாதாவை ஈஷா சிலைக்கு பின்புறம் எரியூட்டியது. "சுவாமி அபிபாதா, 1996ஆம் ஆண்டு ஈஷாவிற்கு வந்தவர். 1998ல் ஜக்கியால் பிரம்மச்சரியத்தில் தீட்சை பெற்றார். ஏறக்குறைய 28 வருடங்கள் உறவு ஈஷாவிற்கும் அவருக்குமானது. யோகா கற்றுக்கொண்டால், தீட்சை எடுத்துக்கொண்டால் நோய் என்பதே வராது என்று கூறினான் ஜக்கி. சுவாமி அபிபாதாவிற்கு எப்படி நோய் வந்தது? "என்னை நம்பி வந்துவிட்டால் போதும். அனைத்தையும் பார்த்துக் கொள்வேன்' என உறுதிமொழி யளித்து, தன்னை நம்பி வருபவர்களுக்கு நம்பிக்கையளிப்பான் ஜக்கி. காலப்போக்கில் பிரம்மச்சரியம் எடுத்தவரை குடும்பத்துடன் பேசவிடாமல் தடுத்து, "அவனவன் வினை அவனவன் அறுப்பான்... குடும்பத்தை விட்டு வா' எனக்கூறி மொட்டையடித்து ஈஷாவில் 18 மணி நேர வேலை கொடுப்பான். இதில் இரண்டு மணி நேரம் தூக்கம் என்பதே எங்களுக்கு கிடையாது. பெயர் தான் சுவாமி. ஆனால் கூட்டுவது, பெருக்குவது, துடைப்பது, கக்கூஸ் கழுவுவது, சமைப்பது, துவைப்பது என ஆளுக்குத் தகுந்த வேலை அங்கு. வேலை நேரம் அதிகமாக இருந்தால்தான் உங்கள் கர்மாக்களை விட முடியும். சீக்கிரம் கர்மா கழியும் என ஓய்வில்லாமல் பிழிந்தெடுப்பது ஜக்கியின் டாஸ்க். இதனால்தான் நாள்பட்ட நோய்களான கேன்சர் உள்ளிட்டவை வருகின்றன.

அங்குள்ள சுவாமிகளின்... ஆயிரக்கணக் கில் தீட்சை பெற்றவர்களின் இப்போதைய நிலை என்ன? ஒன்று, நாள்பட்ட கேன்சர் போன்ற நோய்களால் மரணமடைகிறார்கள். இல்லையெனில் பைத்தியமாகிறார்கள். இதற்கு ஏராள உதாரணம் உண்டு. அதில், பொள்ளாச்சி யைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரின் மகளான பெண் மருத்துவரை தீட்சை கொடுத்து சுவாமி ஆக்கினார். ஆனால் மனநலம் பாதிக்கப் பட்டுள்ளார் எனத் திருப்பியனுப்பியது ஈஷா. அதுபோல், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பெண் மருத்துவர் பிரம்மச்சாரியாக உருவெடுத்து ஈஷாவில் பணிபுரிந்து, ஈஷாவின் நுழைவாயி லில் விபத்தில் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. அங்கிருக்கும் அனைவரும் சன்னியாசம் பெற்ற அடிமைகளே'' என்கின்றார் ஜக்கியிடம் தீட்சை பெற்று தப்பித்த சன்னியாசி ஒருவர்.

பிறப்புறுப்பு வழியாக தீட்சை, சன்னியாசம் என ஜக்கி ஒருபுறம் ஈனத்தனமாக கோல்மால் செய்வதுபோல், பண விஷயத்திலும் ஜக்கி பக்கா சீட்டிங் பேர்வழி என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்களில் பலர். இதில், ஜக்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட "ஈஷாங்கம்' மிகவும் முக்கியமானது. இதில் சேரவேண்டுமென்றால், பதிவுக் கட்டணமாக ரூ.1,008/- பணம் அல்லது காசோலை/ டிடி மூலம் கோவை "ஈஷா அறக்கட்டளை'க்கு செலுத்த வேண்டும். 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ‘ஈஷாங்கா லோகோவுக்கான உரிம ஒப்பந்தம் பதிவு செய்யப்படுதல் வேண்டும். இந்த சரிபார்ப்பிற்கு பின் விசிட்டிங் கார்டு, லெட்டர் பேட் மற்றும் வேலை செய்யும் இடத்திலும் லோகோவைப் பயன்படுத்தலாம் என்கின்றது ஈஷாங்கம் விதிமுறை.

ssad

இதில் பாதிக்கப்பட்ட தன்னார்வலர் ஒருவரோ, கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. "நீ அரிசி எடுத்து வா! நான் உமி எடுத்து வருகின்றேன். இருவரும் ஊதி ஊதி சாப்பிடலாம்' என்பார்கள். அதுபோல்தான் நாம் வாங்கும் சம்பளம், வைத்திருக்கும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் மொத்த வருவாயில் மாதம் 7 சதவிகிதம் ஜக்கிக்கு கொடுத்துவிட வேண்டுமாம். எப்படியிருக்கின்றது? எவன் பணத்தில் எவனுக்கு பங்கு என்று! நீங்கள் இருக்கின்றீர்கள். என்னை முழுதாக நம்புகிறீர்கள். நானும் உங்களை நம்புகின்றேன். உங்களை கண் இமைபோல் பார்த்துக் கொள்கின்றேன். அதாவது, ஒருவனுக்கு மலையுச்சி செல்ல வேண்டும் என ஆசை இருந்ததாம். ஆனால் பயம். இறைவனை கூப்பிட்டான். இறைவனும் தைரியமாக முன்னேறு, நான் பின்னே வருகின்றேன். உன்னுடைய இரண்டு காலடித் தடங்களுக்கு பின்னதாக என்னுடைய காலடித் தடங்கள் தெரியும். அப்போது நான் வருவது தெரியும். இடையில் சேறு வந்தது. ஆனால் இறைவனின் காலடித் தடங்கள் இல்லை. கோபமாகக் கேட்டான். என்னுடைய தோளில் தான் நீ இருந்தாய் என்றார் கடவுள். அதுபோல்தான் நானும். நான் உங்களை, உங்களது தேவைகளை, வணிகத்தை பார்த்துக்கொள்கின்றேன். இறைவனாகிய என்னை உங்களுடன் பார்ட்னராக சேர்த்துக்கொள்ளுங்கள். 7 சதவிகிதம் மட்டும் ஈஷாவிற்கு செலுத்துங்கள். நிம்மதியாக இருங்கள்! என முதல் போடாமலேயே எங்களை மொட்டை யடித்தவன் ஜக்கி'' என்கிறார் அவர்.

இது இப்படியிருக்க, கோவை ஈஷாவில்தான் அமெரிக்கா, கனடா நாடுகளைச் சேர்ந்த பெண் பக்தைகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர் என்பதால், ஜக்கியின் ரேப் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பக்தைகள் புகாரளிப்பதற்காக கோவைக்கு வரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.