எம்.ஆர்.பி. எனப்படும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் லஞ்சம் கொடுத்தால் பணி நிரந்தரம், விரும்பிய இடங்களில் போஸ்டிங் -டிரான்ஸ்ஃபர் என நர்சிங் அசோசியேஷனே புரோக்கராக செயல்பட்டதை நக்கீரன் ஆடியோ -ஆவணங்கள் மூலம் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, சி.எம். செக்யூரிட்டி ஆபீசர் செல்வத்தின் மனைவியும் யுனைட்டட் எம்.ஆர்.பி. நர்சஸ் அசோசியேஷனின் செயலாளருமான ஐஸ்வர்யாவின் மிரட்டல் ஆடியோக்களும் வெளியாகி அடுத்தடுத்து சிக்கப்போகும் புரோக்கர்கள் மற்றும் லஞ்ச அதிகாரிகள் யார்? என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புரோக்கரையே சிக்கவைத்த ஐஸ்வர்யா!
ஆண் நர்ஸுகளை பணிநிரந்தரம் செய்யப்போவதாகக்கூறி ஐஸ்வர்யா மற்றும் ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார் இருவரும் 8 கோடி ரூபாயை வசூல் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை பிரத்யேக ஆதாரங்களுடன் ‘"ஆண் நர்ஸுகள் பணி நிரந்தரத்துக்கு 8 கோடி ரூபாய் லஞ்ச வேட்டை! ஆடியோ- ஆவணங்கள் அம்பலம்! அதிர்ச்சியில் அமைச்சர் அலுவலகம்!'’ என்ற தலைப் பில் முதன்முதலில் அம்பலப்படுத்தியது நக்கீரன். தொடர்ந்து, “"சி.எம்.கிட்ட பேசிட்டார் அமைச்சர். போஸ்டிங் போட 2 லட்ச ரூபாய் லஞ்சம்’-சி.எம் செக்யூரிட்டி ஆபீஸர் மனைவியின் ஆடியோ அம்பலம்'!’ என்ற தலைப்பில் ஊஷ்ஸ்ரீப்ன்ள்ண்ஸ்ங்-ஆக செய்தி வெளியிட்டோம். இந்நிலையில்தான், தனக்கு லஞ்சப்பணம் வசூலித்துக்கொடுக்கும் புரோக்கராக செயல்பட்ட கார்த்திக் என்பவரை சிக்கவைத்துவிட்டு ஐஸ்வர்யா தப்பித்துக்கொள்ள முயற்சித்துவருகிறார் என்று ஆடியோ ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகி சுகாதாரத்துறை வட்டாரத்தில் மேலும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
ஆடியோ வாக்குமூலம்- 1
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தற்காலிக பெண் நர்ஸ்: ""கார்த்திக் சார்ங்களா?
புரோக்கர் கார்த்திக்: ""ஆமா, சொல்லுங்க''
நர்ஸ்: ""எங்களுக்கு ஒரு ஃபார்வேர்டு மெசேஜ் வந்தது பார்த்தேன். டிரான்ஸ்ஃபருக்கு அரேஞ்ச் பண்ணித் தர்றீங்க ‘கோவிட்க்குன்னு சொல்லிட்டு...''
புரோக்கர் கார்த்திக்: ""எங்க சிஸ்டர் வேணும் உங்களுக்கு?''
நர்ஸ்: ""எனக்குங்களா சார்? சேலம் சார்''
கார்த்திக்: ""மெடிக்கல் காலேஜூங்களா.. எய்ட்டி தவுசண்ட் வரும் சிஸ்டர்''
நர்ஸ்: எய்ட்டி தவுசண்ட்ங் களா? எவ்ளோ நாளுக்குள் வாங்கித் தருவீங்க?''
கார்த்திக்: ""மண்டே கொடுத்தா வெட்னஸ்டே கிடைச்சுடும். டாக்குமெண்ட் வந்து உங்க ஆர்டர் காப்பி வேணும். ஃபைவ் தவுசண்ட் அட்வான்ஸ் வேணும். பேலன்ஸ் அமவுண்ட் ஆர்டர் இஷ்யூ பண்ணினதுக்கப்புறம் பே பண்ணினா போதும்''
நர்ஸ்: ""நீங்க ஒர்க் பண்றீங்களா?''
கார்த்திக்: ""நான், மேல் (ஆண்) நர்ஸுதான் சிஸ்டர். 2016 பேட்ச். ரெகுலரு. கேளம்பாக்கம் இ.எஸ்.ஐ. டிஸ்பென்சரியில ஒர்க் பண்றேன். தமிழ்நாடு யுனை டெட் நர்சிங் அசோசியேஷன்னு ரன் பண்ணிக்கிட்டிருக்கோம். அதுல, இந்தமாதிரி நிறைய பண்ணிக்கிட்டிருக்கோம்''
-என்று உரையாடல் ஆடியோ முடிகிறது.
இந்நிலையில்தான், கார்த்திக் மன்னிப்பு கேட்டு ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவை ஐஸ்வர்யா நமக்கு அனுப்பினார்.
""வளர்மதி அக்காதான், அரசு நர்ஸுகள் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் முடியறதனால அடுத்த தேர்தலில் ஐஸ்வர்யா நின்னு ஜெயிக்கிறதுக்கு வாய்ப்பிருக்கிறதனால, அதை தடுக்கணும்ங்குறதுக்காக இந்தமாதிரி அவுங்களோட சங்கத்தோட நேம்ல ஆடியோவை ரெடி பண்ணி வெளியிடச் சொன்னாங்க'' -என்கிறது புரோக்கர் கார்த்திக் கின் வாக்குமூலம் ஆடியோ.
சி.எம் செக்யூரிட்டி ஆபீசர் செல்வத்தின் மனைவியும் யுனைடெட் எம்.ஆர்.பி நர்சஸ் அசோசியேஷனின் செயலாளருமான ஐஸ்வர்யாவிற்கு லஞ்சப்பணம் வசூலித்துக்கொடுக்கும் நபர்தான் இந்த கார்த்திக். இவர் ஆண் நர்ஸாக எங்கும் பணிபுரிய வில்லை. யுனைடெட் எம்.ஆர்.பி. நர்சஸ் அசோசியேஷன் செயலாளர் ஐஸ்வர்யா மிரட்டிய தால்தான் கார்த்திக், வளர்மதி பற்றிக் குறிப் பிட்டு இப்படியொரு ஆடியோவை வெளியிட்டார் என்பதற்கு ஆதார மான மேலும் சில ஆடியோக்கள் கிடைத்தன. ஐஸ்வர்யா -கார்த்திக் -செந்தில்நாதன் உள்ளிட்டவர்கள் புரோக்கர்களாக செயல்பட்டு எம்.ஆர்.பி.யில் செய்த ஊழல் முறைகேடுகள் இதன்மூலமாக அம்பலமாகின்றன.
ஆடியோ ஆதாரம் 2:
""இதே அசோசியேஷன் பேரை வெச்சுத்தானே, ஜனவரி யில டிரான்ஸ்ஃபர் போடச் சொன்னே? காசுக்காக வேலை பார்க்கிறது நான் இல்ல. இதே அசோசியேசன் நேம்லதானே, ஜனவரியில டிரான்ஸ்ஃபர் போட்டோம்'' என்று புரோக்கர் கார்த்திக் கூற...
""டேய், அதெல்லாம் இருக் கட்டும்டா. இப்போ, நீ என்ன சொல்ற? பண்ண முடியாதுன்னு தானே?''’என்று ஆடியோ போடச்சொல்லி மிரட்டுகிறார் ஐஸ்வர்யா.
கார்த்திக்: ""ம்மா, இது பிரச் சனைம்மா. பண்ணமுடியாதும்மா. ஒரு பேப்பருக்கு எவ்ளோ புடிச்சுக் கொடுத்தேன்''
ஐஸ்வர்யா: ""உனக்கு புடிக்கிற சான்ஸ் கொடுத் தவளே நான்தான்''
கார்த்திக்: ""ஏம்மா, ரெண்டா யிரத்து ஐநூறு ரூபாயும் ஐயாயிரம் ரூபாயும்தான் எனக்கு கொடுத்திருக்க நீயி''
…ஐஸ்வர்யா: ""நான், கேட்குறதுக்கு பதில் சொல்லு. முடியுமா முடியாதா?''
கார்த்திக்: ""நீ ஏன் அதுலேயே நிற்குற? ஆடியோ போடு ஆடியோ போடுன்னு''
ஐஸ்வர்யா: ""எனக்கு அதுதான் வேணும்டா. இப்ப நீ இதைச் செய்ய லைன்னு வெச்சுக்கோயன். நான், இன் னைக்கு ப்ராமிஸ் பன்றேன். உன் ஒய்ஃப் ரெகுலர் ஆகமாட்டா. அவ, ஜாப்ல இருக்க மாட்டா. என்ன விரட்டு விரட்டுறேங் கிறதை உன் கண்ணுமுன்னாடி பார்ப்ப''
கார்த்திக்: ""இதுவரைக்கும், உனக்கு எத்தனை பேப்பர் போட்டிருக் கேன். நீ எனக்கு எவ்ளோ கொடுத் திருக்க. நீ எவ்ளோ உள்ள கொடுத்த?''
ஐஸ்வர்யா: ""நான், கொடுத்திருக் கேன். கொடுக்கல. என்னைவிட்டு நீ தனியா பேப்பர் போட்றமுடியுமா?''
கார்த்திக்: ""உனக்காக எவ்ளோ ஹெல்ப் பண்ணிட்டேன். இந்த ஹெல்ப் என்னால பண்ணமுடியாதும்மா...''
ஐஸ்வர்யா: ""எழுதி வெச்சுக்க. உன் ஒய்ஃபை அந்த ஸ்டேஷனிலிருந்து தூக்கி வேற ஸ்டேஷன்ல போட்டு சஸ் பென்ஷன் கொடுக்கவெச்சு, ரெகுலர் ஆகவிடாம பண்ணல. என் பேரு ஐஸ்வர்யா இல்ல. நீ எங்கவேணாலும் போடா. இந்த ஏ.டி.எம்.கே பீரியட் முடிக்கிறதுக்குள்ள அத செஞ்சு, ரெக்கார்டு பண்ணி உள்ள வரமுடியாத அளவுக்கு பண்ணல''
கார்த்திக்: ""ஏம்மா, என்னைய பழிவாங்கும்மா, சம்பந்தமே இல்லாம ஏம்மா அவளை பழிவாங்குவேங்குற?
ஐஸ்வர்யா: ""நீ துரோகம் பண்ணும்போது, எங்க அடிச்சா உனக்கு வலிக்குமோ அங்கதானே நான் அடிக்கணும்.
கார்த்திக்: ""சரி, ஐஷு நீயே இவ்ளோ இதா பேசும்போது நான் எதுவுமே பண்ணாம இருக்கணும்னு அவசியமில்ல. உன்கிட்ட இப்போ சொல்றேன் கேளு. ஜனவரியிலிருந்து இல்ல பிப்ரவரி மார்ச்சிலிருந்து இதுநாள் வரைக்கும், "மேல் நர்ஸ்' மேட்டர் எல்லா மேட்டரும் ரெக்கார்டு பண்ணித்தான் வெச்சிருக் கேன். நான், அதை எங்க எடுத்துட்டுப் போகணுமோ போறேன்.
ஐஸ்வர்யா: ""இங்க பாரு, நீ மட்டுமில்ல. சுபின்லேர்ந்து என்ன பண்ணனுமோ ரெக்கார்டு பண்ணி முடிச்சிருக்காங்க. பண்ணிட்டு ஒண்ணும் பண்ணமுடியாதுன்னுதான் நொட்டிக் கிட்டிருக்காங்க. சி.பி.ஐ.க்கோ எங்க வேணாலும் கம்ப்ளைண்டு பண்ணிக்கோ என்ன?
கார்த்திக்: ""... .... ...''
ஐஸ்வர்யா: ""வளர்மதிதானே? வளர்மதிதான் ஸ்டான்லியில காளியம்மா கிட்ட சொல்லி சிக்ஸ்மன்த் கோவிட் நர்ஸை வெச்சு ரெக்கார்டு பண்ணி யிருக்கு. அது, ஆதாரப்பூர்வமா தெரிஞ் சிடுச்சு. அதே வளர்மதிக்கு செஞ்ச விஷயத்தை ஆடியோ போடமுடியா துன்னா என்னது இது? நான் கேட்கிறேன்''
கார்த்திக்: ""நீ எதுவுமே செய்யவேணாம். ரெண்டு நிமிஷத்துல உனக்கு அந்த ரெக்கார்டு வரும்''
ஐஸ்வர்யா: ""நான்தான், தெளிவா சொல்றேனே. ரெக்கார்டு இல்லைன்னா தூக்குவேண்டா உன் ஒய்ஃபை.. உடனே, ரிலிவிங் ஆர்டர் கொடுக்கவைப்பேன். ரிலீவும் ஆகச் சொல்லுவேன். ஆடியோ சென்ட் பண்ணலைன்னா நீ செத்த''
என்று கார்த்திக்கை ஐஸ்வர்யா மிரட்டுவதோடு ஒரு ஆடியோ முடிகிறது. பிறகு, மீண்டும் இன்னொரு உரையாடலில், அரசு நர்ஸுகளின் சங்கத்தின் செயலாளர் வளர்மதியின் ஆள்போல ""நீ ஆடியோ வெளியிடவில்லை என்றால் உன் மனைவியை ட்ரான்ஸ்ஃபர் செய்துவிடுவேன்'' என்று கடுமை யாக மிரட்டுகிறார். மேலும், ""பிரச்சனைன்னு வந்தா காப்பாத்து றதுக்கு நான் நிற்கிறேன்னு சொல்றேன். நீ வளர்மதிக்கு போயி நிற்குற? வளர்மதியைவிட இன்னைக்கு ரெகுலர் அசோசி யேஷன் பேப்பர் போடுற இடத்துல நான் நிற்குறேன் மினிஸ்டர் ஆபீஸுல. நான், எனக்காக செய்யின்னு சொல்றேன். ரெகுலர் அசோசியேஷனை நான்தான் டேக் ஓவர் பன்றேன். இன்னைக்கு இல்ல. என்னைக்கும் உள்ள நுழைய விடமாட்டேன். செந்தில் நாதனையே மினிஸ்டர் ஆபீஸுல பேச வெச்சேன். வளர்மதி சொல்லிச்சு அதனாலதான் பண்ணினேன்னு சொல்லிட்டான். அப்போ, இன்னைக்கு போன்பண்ணி கான்ஃபரன்ஸ் போடவா என்ன சொல்றான்னு கேட்கிறியா நீ?
வளர்மதி சொல்லிச்சி. அதனால தான், இப்படி பண்ணிட்டேன். என் னைய மன்னிச்சுடுங்கன்னு போட்ட ஆடியோ எங்கிட்ட இருக்கு. நான், தரவா?''’’ என்று ஏற்கனவே புரோக்கர் செந்தில்நாதனை வைத்து தப்பித்ததைக் கூறி மிரட்டுகிறார். மேலும், ""அதோட (வளர்மதி) எலக்ஷன் பீரியடே முடிஞ்சு போச்சு. மினிஸ்டர் ஆபீஸுலருந்து வெளியே இருக்கு. உள்ளகூட வரமுடி யாது. அவுங்க பெரிய ஆளுன்னா நாங்க யாரு?''’’ என்பதன்மூலம் அமைச்சர் அலுவலகத்தில் தனக்கு இருக்கும் செல்வாக்கையும் வெளிப்படுத்துகிறார்.
இதனால் கார்த்திக், “""சரிம்மா நான் போடுறேன் இப்போ. போட்டுட்டு உனக்கு அனுப்புறேம்மா நீ எழுதிக் கொ டுத்த மாதிரியே போடுறேன்''’என்கிறார்.
""இங்கபாருண்ணா, நான் சொன் னேன்னு எட்டு கோடியை கலெக்ட் பண்ணிக் கொடுத்துட்டு கம்முனு இருக் காண்ணே. ஒரு வருஷம் ஆர்டர் இன் னும் கொடுக்காம...'' ’என்று கார்த்திக் கிடம் கூறுவதன் மூலம் ஆண் நர்ஸு களின் பணி நிரந்தரத்துக்காக 8 கோடி ரூபாய் லஞ்சப்பணம் வசூலிக்கப்படு வதாக நக்கீரனில் அம்பலப்படுத்தியது மேலும் உண்மையாக்குகிறது அவரது ஒப்புதல் வாக்குமூலம்.
இதற்குப் பிறகுதான், மன்னிப்பு ஆடியோவை வெளியிட்டார் கார்த்திக். அதில்தான், ஐஸ்வர்யா மிரட்டி எழுதிக் கொடுத்ததுபோல் தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் மாநிலச் செய லாளர் வளர்மதி மீது குற்றஞ்சாட்டி ஆடியோவை வெளியிட்டுள்ளார் கார்த்திக்.
எம்.ஆர்.பி. எனப்படும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள் யார், யாரெல்லாம் இவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்படு கிறார்கள் என்ற விசாரணையை நடத்தி னால்தான் எம்.ஆர்.பி.யில் லஞ்சம் விளையாடுவது தடுத்து நிறுத்தப் பட்டு அரசு மருத்துவமனைகளில் ஏழை-எளிய மக்களுக்கு சரியான சிகிச்சை, சேவைகள் கிடைக்கும். ஆனால், போஸ்டிங் -டிரான்ஸ்பர் லஞ்ச மோசடி பற்றி நக்கீரனில் ஆடியோ ஆதாரங்கள் உள்பட பல ஆவணங்களை வெளியிட்டும் சுகாதாரத்துறை அலட்சியமாகவே இருக்கிறது.
-மனோசௌந்தர்
_____________
கண்டும் காணாத அதிகாரிகள்!
சுகாதாரத்துறை அதிகாரிகளும் டி.எம்.எஸ் இயக்குனரும் முறையான விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததன் விளைவுதான், முதல்வர் செக்யூரிட்டி ஆபீசர் செல்வத்தின் மனைவியும் தமிழ்நாடு யுனைட்டட் எம்.ஆர்.பி. நர்சஸ் அசோசி யேஷன் செயலாளருமான ஐஸ்வர்யாவின் தொடர் மிரட்டல்களுக்கு காரணம். இதுகுறித்து, நாம் மேலும் விசாரித்தபோது "டி.எம்.எஸ். வளாகத்தில் நிழல் இயக்குனர்போல் சுற்றிக்கொண்டிருக்கும் அமைச்சரின் புரோக்கர் லால், நர்சிங் சூப்பிரண்டண்ட் இளையராஜா உள்ளிட்டவர்களை விசாரணை செய்தாலே ஒட்டுமொத்த ஊழல் மோசடிகளும் வெளிச்சத்துக்கு வந்துவிடும்' என்று ஷாக் கொடுக்கிறார்கள்.