EXCLUSIVE : ஜெயராஜ் -பென்னிக்ஸை அடித்துக் கொன்றதுபோல் என்னைக் கொல்லப் பார்க்கின்றார்கள்… -இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜெயில் கடிதம்!

ss

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் அடித்துத் துன்புறுத் தப்பட்டு படுகொலை யான தந்தை மகன் வழக்கில், முதன்மைக் குற்றவாளி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், "A2 முதல் A9 வரை உள்ள குற்றவாளிகளே ஜெயராஜையும் -பென்னிக்ஸையும் அடித்துக் கொன்றார்கள். அதுபோல் என்னை ஜெயிலிலேயே கொல்லவிருக் கின்றார்கள்'' என குற்றத்தை ஒப்புக்கொண்டு ஜெயிலிலிருந்து நீதிபதிக்கு எழுதிய கடிதம் பிரத்யேகமாக "நக்கீரனுக்கு' கிடைத்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதியன்று சாத்தான்குளம் காவல்துறையினரின் சித்ரவதையால் வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழக்க, நக்கீரனின் ஆவணங்களால் வழக்கு சி.பி.ஐ.க்கு சென்றது. தொடர்ந்து 21-12-2020 முதல் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரணையைத் துவக்கி சாட்சிகளை விசாரணை செய்துவருகின்றது. இந்நிலையில், மதுரை மத்திய சிறைச்சாலையிலிருந்து நீதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் வழக்கின் முதன்மைக் குற்றவாளியான ஸ்ரீதர்.

bb

"மேற்படி வழக்கில் கண்ட எதிரிகள் A2 to A9 எதிரிகள் ஒன்றுசேர்ந்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து ஜெயராஜ் மற்றும் அ

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் அடித்துத் துன்புறுத் தப்பட்டு படுகொலை யான தந்தை மகன் வழக்கில், முதன்மைக் குற்றவாளி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், "A2 முதல் A9 வரை உள்ள குற்றவாளிகளே ஜெயராஜையும் -பென்னிக்ஸையும் அடித்துக் கொன்றார்கள். அதுபோல் என்னை ஜெயிலிலேயே கொல்லவிருக் கின்றார்கள்'' என குற்றத்தை ஒப்புக்கொண்டு ஜெயிலிலிருந்து நீதிபதிக்கு எழுதிய கடிதம் பிரத்யேகமாக "நக்கீரனுக்கு' கிடைத்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதியன்று சாத்தான்குளம் காவல்துறையினரின் சித்ரவதையால் வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழக்க, நக்கீரனின் ஆவணங்களால் வழக்கு சி.பி.ஐ.க்கு சென்றது. தொடர்ந்து 21-12-2020 முதல் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரணையைத் துவக்கி சாட்சிகளை விசாரணை செய்துவருகின்றது. இந்நிலையில், மதுரை மத்திய சிறைச்சாலையிலிருந்து நீதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் வழக்கின் முதன்மைக் குற்றவாளியான ஸ்ரீதர்.

bb

"மேற்படி வழக்கில் கண்ட எதிரிகள் A2 to A9 எதிரிகள் ஒன்றுசேர்ந்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கொடூரமான முறையில் அடித்தும், பொய் வழக்குப் பதிவுசெய் தும் சிறையில் தந்திரமாக அடைத்ததினால் மேற் படி இருவரும் இறந்துவிட்டார்கள். அதுசம்பந்த மாக மேற்படி எதிரிகளிடம், "ஏன்? சாகும் அளவிற்கு அடித்து கொலை செய்து, என்னையும் வழக்கில் மாட்டிவிட்டுள்ளீர்கள்?' என கேட்டதில் தகராறு. நான் ஒரு பிரிவாகவும், ஆ2 ற்ர் ஆ9 எதிரிகள் பிரிவாகவும் மாறி சிறையில் இருந்துவரு கிறோம். நேரடியாகவும், மறை முகமாகவும் என்னைக் கெட்ட வார்த்தைகளால் திட்டிவரும் இவர்கள் நான் இருந்தால் உண் மையைக் கூறிவிடுவேன் என்று கருதி, ஜெயராஜை அடித்துக் கொலை செய்ததுபோல் செய்ய பல வகையிலும் திட்டம் தீட்டி வருகிறார்கள். கடந்த 26-03-22 அன்று காலை 6:30 மணிக்கு எதிரிகளான A4 முருகன், A6 முத்துராஜா, A7 செல்லத்துரை மற்றும் A9 வெயில்முத்து ஆகியோர் என்னை கேவலமான கெட்டவார்த்தைகளால் திட்டி 10 நிமிடமாக அடிக்கவந்தார்கள். இதுகுறித்து அங்குள்ள ஈஈபய-ல் பதிவுள்ளது. நீதிமன்றத்திற்கு ஒரே வாகனத்தில் செல்லும் போதும், திரும்ப வரும்போதும் எதிரிகளால் எனக்கு உயிர் பயம் இருக்கின்றது. கச்சநத்தம் கொலை வழக்கில் எதிரிகள் தனித்தனியாக சிவகங்கை நீதிமன்றத்திற்கு செல்வதுபோல் என்னைத் தனியாகவும், A2 to A9 எதிரிகளை தனி யாகவும் அனுப்பினால் ஓரளவு பாதுகாப்பு கிடைக்க வாய்ப்புள்ளது'' என முதன்மைக் குற்றவாளி, இன்ஸ் பெக்டர் ஸ்ரீதரின் 4 பக்க சிறைக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை யில், சி.பி.ஐ.யால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் முதன்மைக் குற்றவாளியாகவும், அடுத்தடுத்து கைதானவர்கள் மீதமுள்ள குற்றவாளிகளாகவும் அடையாளம் காண்பிக்கப்பட்டனர். இதில் 10-வது குற்றவாளி யாக சேர்க்கப்பட்ட பால்துரை இறந்தது குறிப்பிடத்தக்கது.

"வழக்கின் துவக்கத்திலிருந்தே தனக்கென்று எந்த வழக்கறிஞரையும் அமர்த்திக்கொள்ளாமல் தானே வாதாடி வந்தார் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர். "யூகத்தின் அடிப்படையில், செவிவழிச் செய்தி மற்றும் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் குற்றவாளி ஆக்குகிறீர்கள்' என்றார். எனினும், திருநெல்வேலியில் டீக்கடையில் வேலை செய்துவந்த ரவிசங்கர், வழக்கறிஞர்கள் மணிமாறன் மற்றும் ராஜாராம், பி.டெக் பட்டதாரியான அர்வின், ஜிஜி பாக்கியம் ஹார்டுவேர்ஸின் இசக்கித்துரை, ஆட்டோ டிரைவர் பேச்சிப்பாண்டி, குலசேகரப்பட்டணம் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ. ரவிச்சந்திரன் மற்றும் சம்பவத்தின்போது இன்ஸ் பெக்டர் ஸ்ரீதரின் டிரைவரான ஜெயசேகர் ஆகி யோர் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு எதிராக சாட்சி யம் அளித்துள்ளனர்.

இப்பொழுது தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அப்ரூவராக மாறாமல், மற்ற 9 பேர் மேலும் குற்றம் சுமத்தி நழுவப் பார்க்கிறார்'' என்கிறார் நீதித்துறை நண்பர் ஒருவர்.

_________________

சுடுகாட்டில் தீண்டாமைச் சுவர்! -துணை போகும் காவல்துறை!

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகிலுள்ள கல்லாத்தூர் ஊராட்சியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு சமூக மக்கள் வசித்துவருகின்றனர். சமத்துவத்தோடு காலங்காலமாக வாழ்ந்த இந்த மக்களுக்கு, உள்ளாட்சித் தேர்தலால் வந்த வினைதான் தீண்டாமைச் சுவர். கல்லாத்தூர் ஊராட்சி மன்றத்தேர்தலில், பா.ம.க. சார்பில் போட்டியிட்ட செந்தமிழ் செல்வனுக்கு எதிராகவும், தி.மு.க.விற்கு ஆதரவாகவும், முதலியார், ஆதிதிராவிடர் சமூக மக்கள் வாக்களித்ததை மனதில் வைத்துக்கொண்டு, தான் வெற்றிபெற்று ஊராட்சி மன்றத் தலைவரானவுடன் அச்சமூக மக்களின் ஒற்றுமையைப் பிரிக்க அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.

குடிநீரை நிறுத்துவது, நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை இவர்களுக்கு மறுப்பது என்பதில் தொடங்கி, கல்லாத்தூரில் முதலியார் சமூக மக்கள் வாழ்ந்துவரும் பகுதியிலுள்ள சர்வே எண் 184, பட்டா இடத்தை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி, அங்குள்ள வீடுகளை இடித்து பிரச்சனை செய்துள்ளார். அதேபோல, ஒரே சுடுகாடாக இருந்ததில், ஆதிதிராவிடர் மக்கள் பிணங்களை புதைக்கக்கூடாது எனப் பிரச்சனை செய்து, சுடுகாட்டின் நடுவில் தீண்டாமைச் சுவரை எழுப்பிவருகிறார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி. வரை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், ஊராட்சி மன்றத் தலைவரின் சமூகத்தைச் சேர்ந்த இளங்கோவன் மற்றும் தமிழரசன் ஆகிய இரண்டு எஸ்.ஐ.களும் சாதியப் பிரச்சனைக்கு வித்திட்டுவருகின்றனர் எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. அப்துல்லாவிடம் கேட்டபோது, "இந்த விவகாரத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

-அ.அருண்பாண்டியன்

nkn040522
இதையும் படியுங்கள்
Subscribe