ஜக்கியின் ஈஷா மையத்தில் மேலாடை யின்றி பெண் குழந்தைகளுக்கு தீட்சை கொடுக்கின்றார்கள். பல சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கப்படுகின் றார்கள்'' என்பது குறித்து, "ஆஸ்ரம் பாபு வழியில் மாட்டும் ஜக்கி.. தப்பவே முடியாது!' என நக்கீரன் ஆசிரியர் காணொலியில் பதிவு செய்ய, ஜக்கியின் ஈஷா மையம் ஆட்டம் கண்டது. குறிப் பாக, மார்கழி உற்சவத்திற்காக இந்தியா வரவிருந்த ஜக்கியின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இது எப்படி நக்கீரனுக்கு கசிந்தது..? என்பதை ஆய்வு செய்யும் முயற்சியில் சந்தேகப்படும் ஒவ்வொருவரையும் மிரட்டி வருகின்றனர் ஜக்கியின் அடிவருடிகள்.
உடல்நிலை சரியில்லை, என அமெரிக்காவின் கலிபோர்னியா, டென்னஸீ மாகாணங்களில் உள்ள ஈஷா மையத்தில் ஜாலியாக ஊர்சுற்றி வருகின்றார் ஜக்கி வாசுதேவ். அமெரிக்காவிலுள்ள இரு ஈஷா மையங்களின் பொறுப்புதாரி செந்தில் கன்னியப்பன், ஜக்கிவாசுதேவிற்கு வலது கை இவரே. அங்கு நடக்கும் அத்தனை அடாவடிகளுக்கும் அவரே பொறுப்பு. இவரது மனைவி அபர்ணா. அமெரிக்கா விலுள்ள ஈஷா பவுண்டேஷேனிற்கு கமலா என்பவர் பொறுப்பாளர். கலிபோர்னியாவிலுள்ள மையத்திற்கு மாயாமாவும், யாஸ்மினாவும், டென்னஸீ மகாணத்திலுள்ள ஈஷா மையத்திற்கு நாத்தலினும் பொறுப் பாளர்கள். இவர்கள் மூவரும் லெபனா னை சேர்ந்தவர்கள். இதில் யாஸ்மினா வின் கணவர் இப்ராஹிம், ஜக்கியின் அன்னிய செலவாணியை கவனித்துக் கொள்ள, நாத்தலின் கணவர் அங்குள்ள ஈஷா ஸ்டோர் அத்தனைக்கும் பொறுப் பாளர்.
அன்புள்ள அக்கா!
நீங்கள் நன்றாக செய்கிறீர்கள். வெவ்வேறு சூழ்நிலைகளில் நான் உங்களை அணுக விரும்பினேன். இப் பொழுது தனிப்பட்ட பழிவாங்கலுக் காக நீங்கள் கடினமாக உழைத்து உருவாக்கிய அனைத்தையும் அழிக்க உதவி வருவதால் நான் ஏமாற்றமடைந் தேன். இது உங்கள் சொந்த குழந்தை யைப் போன்றது. ஹர்ஷாவும் வர்ஷினி யும் உங்களுக்குப் பிடிக்காத ஒன்றைச் செய்தால், நீங்கள் அவர்களைப் புறக் கணிப்பீர்களா அல்லது அவர்களின் சொந்த விதிமுறைகளில் வளர வளர அவர்களுக்கு அதிக இடம் கொடுப்பீர்களா? இருபத்தி நாலு வருஷம் கஷ்டப்பட்டு வளர்த்த அந்த அறக்கட்டளைக்கு அது நடக்கவில்லையா? தங்கள் உரையாடல்களை நான் இன்னும் நினைவில் வைத்தி ருக்கிறேன். ஆன்மீக செயல்முறையை மக்களுக்குள் உயிர்ப்புடன் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் வலியுறுத்தினீர்கள். நீங்கள் உங்கள் நிலைப் பாட்டை மாற்றிக்கொண்டதுபோல் தெரிகிறது. ஏன் என்று புரியாமல் தவிக்கிறேன். உங்கள் செயல்கள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன. மேலும் மில்லியன்கணக்கான மக்களின் ஆன்மீக வாய்ப்பு களை நீங்கள் பதிப்பேற்படுத்தலாம் என்று நான் அஞ்சுகிறேன். கடந்த காலத்தில் அந்த இதழால் நீங்கள் சந்தித்த வலிகளையும் போராட்டங்களையும் கருத்தில் கொண்டு நக்கீரனுக்கு நீங்கள் இப்போது உள்ளடக்கத்தை வழங்குகிறீர்கள் என்பது எனக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. கடந்த கால இதழின் காரணமாக நான் உங்களை தனிப்பட்ட முறையில் அணுகுகிறேன். ஏனென்றால் உங்களைப் பற்றியும், நீங்கள் என்னில் ஊக்கப்படுத்திய மதிப்புகள் பற்றியும் அக்கறை கொண்டுள்ளேன். உங்கள் செயல்களை மறுபரிசீலனை செய்து, உங்கள் தனிப்பட்ட உணர்வு களை ஒதுக்கி வைக்கவும். இல்லையெனில், பெரிய பிரச்சினையாக மாறி ஈஷாவை பாதிக்கும். உங்கள் செயல்களை மறுபரிசீலனை செய்து, ஒரு காலத்தில் நீங்கள் ஏற்றுக்கொண்டிருந்த உலகத்திற்கான உங்கள் மதிப்புகள் மற் றும் பார்வையை நினைவில் கொள்ளு மாறு நான் உங்களைக் கேட்டுக்கொள் கிறேன். தயவு செய்து அந்த வாய்ப்பை அழித்துவிடாதீர்கள்.
மிகுந்த அன்புடன்
அபர்ணா
இப்படியான வார்த்தைகள் தாங்கிய வாட்ஸ்-அப் பதிவு கோவையை சேர்ந்த "அந்தப் பெண்'ணிற்கு வர, நிலை குலைந்துவிட்டார் "அந்த பெண்'. துவக்கத் தில் ஜக்கிக்காக தனது குடும்பத்தை துறந்தவர், கொலைப் பழியில் பங்கு கொண்டவருக்கு இப்படியான மிரட்டல் சற்று அதிகம்தான். என்ன காரணத்திற் காக "அந்தப் பெண்' மிரட்டப்பட்டார்..? என்றிருக்கையில், "நக்கீரனுக்கு' பிரத்யேக அந்த மின்னஞ்சல் கிடைத்தது. ஜக்கியின் ஈனத்தனத்திற்கு, பெண் சிறுமிகளை வேட்டையாடுவதற்கு அந்த மின்னஞ்சல் சாட்சியாகியுள்ளது. உடற்கல்வி ஆசிரி யர், இசை ஆசிரியர் என பலதரப்பட்ட காமக்கொடூர ஆசிரியர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியின் தந்தை எழுதியது அந்த மின்னஞ்சல். அங்கு என்ன நடக்கின்றது..? இது தவறில்லையா? தண்டனை என்ன? என பல கேள்விகளை கேட்டு ஜக்கியின் துவக்க கால தோழியான, ஈஷா மையத்தின் "அக்கா'விற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணோ, குழந்தைகள் பயிலும் பள்ளியின் பொறுப்பாளரான "மா பிரதியுதா'விற்கு அனுப்ப, அவரோ "சாமுண்டி' என்பவருக்கு அதனை பார்வேர்டு செய்திருக்கின்றார்... ஆனால் பதிலில்லை.
இந்த காரணத்திற்காக, அதே மின்னஞ்ச லில், "அதிகாலை 3 மணிக்கு குழந்தைகளை வரக்கூறுவது பலனளிக்கவில்லை. தூக்கத்துடன் வரும் அவர்கள் ஈரக்கூந்தலுடன் இருப்பதால் மயங்கி விழுகின்றனர். அதற்கு பதில் 4.30 மணிக்கு வரக்கூறலாமா..? துவக்கத்தின் போது, பெண்கள் மேல் துணியை அகற்றும்படி கேட்கப்படுகிறார்கள். நான் முன்பு கூறியது போல், எனக்கு சில தயக்கங்கள் உள்ளன. அவர்கள் மைனர் பெண்கள் என்பதை மனதில் வைத்து இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில் அவர்கள் எவ்வளவு அதிக கீழ்ப்படிதலுடனும் இருந்தாலும், அவர்கள் அனைவரும் இதை ரகசியமாக வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதைப் பற்றி விவாதிக்கவே இல்லை. பெண்களாக இருக்கும் அவர்கள், பிற்காலத்தில் உடன்படவில்லையென்றால் பகிர்ந்து கொள்ளும் போக்கு இருக்கும். மேலும் அவர்கள் இங்கு வந்திருப்பது அவர்களின் சொந்த விருப்பத்தால் அல்ல, மாறாக அவர்களின் பெற்றோரின் விருப்பத்தால். அவர்கள் பெற்றோருக்கு இது தெரியாது. இது மிகவும் ஆபத்தானது, தீட்சைக்கு முன் இதைச் செய்யச் சொன்னால் அவர்களின் முகம் மாறுவதையும் பார்த்தோம். மேலும், அவர்கள் எங்களுடன் இதைப் பற்றி விவாதிக்க வழி இல்லை. அவர்கள் வளர்ந்த பெண்கள் என்பதால் எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் இந்த விஷயங்களைப் பற்றி அவர்களாகவே சிந்திக்கத் தொடங்குகிறார்கள். அது எதிர்மறையாகச் சென்றால் மையத்திற்கு ஒரு பெரிய ஆபத்து காரணியாக மாறும்'' என ஜக்கிக்கு கூடுதலாக எழுதி இருக்கின்றார். இதுவே "அந்தப் பெண்' மிரட்டப்படுவதற்கு காரணம் என்கின்றனர் விபரமறிந்தவர்கள். இதே வேளையில், ஜக்கியின் லீலைகளையும், ஈஷா மையத்தில் நடக்கும் கொடூரங்களையும் அம்பலமாக்கியது குறிப்பிடத்தக்கது.
இது இப்படியிருக்க, வாட்ஸ்-அப் மிரட்ட லுக்கு அஞ்சி நடுங்கிய "அந்தப் பெண்' தனக்கு வேண்டிய ஒருவரிடம் ஆங்கிலத்தில் 26 நிமிட உரையாடலை நிகழ்த்தியுள்ளார். குறிப்பிட்ட "அந்த' ஆடியோவும் "நக்கீரனுக்கு' பிரத்யேக மாகக் கிடைத்தது. அந்த ஆடியோவிலிருந்து...
" குடும்பத்திலிருந்து விலகியும், யோகா மையத்திலிருந்து விலகியும் பல ஆண்டுகள் ஆயிற்று. இருப்பினும் ஹைதரபாத்திலுள்ள என்னுடைய குடும்பத்தாரை அவர்கள் விசாரிக்கின்றார்கள். இது நல்லதல்ல. நீங்கள் சாதாரணமாக 'நஏ'யை (சத்குரு ஜக்கி) எடை போட்டுவிட்டீர்கள். அவர் நினைத்தால் எத்தனை ஜோடிக்கப்பட்ட வழக்குகள் பாயும் என்று எனக்குத் தெரியும். பொறுமையாக இருந்திருக்கலாம். இனி கஷ்டம்தான்'' என்றிருக்கிறார் அந்தப் பெண்.
இதேவேளையில், ஆயுதங்களை சப்ளை செய்தல், மதங்களுக்குள்ளும் கலவரங்களை உருவாக்குதல், பல்வேறு தீவிரவாத அமைப்பு களுக்கு பண உதவி, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கருப்புப்பணத்தை வெள்ளை யாக மாற்றித்தருவது மற்றும் ஈஷா மையத்திற்கு தியானத்திற்காக வரும் மைனர் பெண்களை கடத்தி சட்டவிரோதக் குடியேற்றங்கள் செய்து பாலியல் அடிமைகளாக வைத்திருப்பது உள் ளிட்ட ஜக்கியின் 20 ஆண்டுகளுக்கும் மேலான மோசடிகள் குறித்து அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஇஒக்கு புகார் அனுப்பியிருக் கின்றனர் பாதிக்கப்பட்டோர். இதில் சாட்சி களாக 7 நபர்களை இணைத்துள்ளதும் ஜக்கிக்கு தலைவலியை உண்டாக்கியுள்ளது.
"அது 2000ஆம் ஆண்டு. ஜக்கிக்கு இங்கு பெரிய அளவில் கூட்டமில்லை. ஆதலால் எளிதாக அவரை அணுகிவிட முடியும். அந்தக் காலகட்டத்தில் எனக்கும் என்னுடைய கணவருக்கும் குடும்பத்தில் பிரச்சனை இருந்தது. அத்தகைய சூழலில் என்னுடைய தோழி ஒருவர் ஜக்கியை அறிமுகப் படுத்தினாள். நானும் அடிக் கடி அங்கு சென்று வந்தேன். "உனக்கு மிகப்பெரிய தோஷம் இருக் கின்றது. அதனை தாந்திரீக முறையில் தான் எடுக்க முடியும். அமெரிக்காவில் அதற்கான இடமில்லை. கோவையிலுள்ள ஈஷாவிற்கு வந்துவிடு' என எனக்கு ஓதினான் ஜக்கி. அவனுடைய பேச்சைக் கேட்டு கோவை ஈஷா மையத்திற்கு சென்ற நிலையில் தினசரி கோவிலுக்கு வரக்கூறுவான். ஒருநாள், உன்னிட முள்ள அந்த தோஷத்தை எடுக்க வேண்டுமென கூறி, குறிப்பிட்ட நாளைக் குறித்தான். அந்த நாளில் உடலெங்கும் சந்தனம் பூசி மெல்லிய ஆடையுடன் அவனுடைய அறைக்கு அனுப்பி வைத்தார்கள். வாசலில் இரு தடியர்கள். நான் உள்ளே சென்றதும் கதவு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டது. எனக்கு குடிக்க ஏதோ கொடுத் தான். மயிலிறகைக் கொண்டு என்மீது வருடிய படி, "நானே சிவன்... ஆலிங்கனம் செய்வோம். உன்னுடைய புருஷன் கெட்ட எனர்ஜி உன் மீது பரவிவிட்டது. அதை எடுக்க வேண்டும்' என பேசியது காதில் கேட்டது. அரை மயக்கத்தில் இருந்தேன். பின் என்னை ரேப் செய்தான் அவன். வெளியே வந்த நான் எப்படியாவது தப்பித்து செல்லவேண்டும் என்பதில் குறியாய் இருந்து ஒரு சாது மூலம் மும்பைக்கு சென்று என்னுடைய கணவரை தொடர்புகொண்டு நடந்ததை விளக்கினேன். அவரும் தூதரகத் துடன் கலந்து எனக்கு மாற்று பாஸ்போர்ட் தயார் செய்து அமெரிக்காவிற்கு அழைத்துக் கொண்டார். இப்பொழுது சந்தோஷமாக இருக்கின்றேன். ஜக்கியை பொறுத்தவரை அவன் அரக்கனே'' என தன்னுடைய புகாரில் பதிவு செய்திருக்கின்றார் ஆ...ப்ஹ என்பவர்.
"உனக்கு "மா' ஆகும் தகுதியிருக்கின்றது, என்னுடன் வந்துவிடு' என மூளைச்சலவை செய்து பலரை விவாகரத்து செய்ய வைத்து பலரின் சொத்துக்களை ஆட்டையப் போட்ட கதையும் ஜக்கியின் மீது உண்டு. விரைவில் ஜக்கிக்கு காப்பு ரெடி. அது அமெரிக்காவிலா? இந்தியாவிலா? என்பது நாளடைவில் தெரிய வரும்