ஸ்ரீமதி வழக்கில் சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்த குற்றப்பத்திரிகை நகல் வெளியாகி யுள்ளது. கடந்த பதினைந்தாம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் ரவிக்குமார், சாந்தி, சிவசங்கரன் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என குறிப்பிடப் பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி.யின் திருவண்ணா மலை மாவட்ட ஆய்வாளர் தாக்கல் செய்த இந்த குற்றப்பத்திரிகையில் ஒடஈ 305, குழந்தைகள் கவனிப்பு மற்றும் பாதுகாப்புச்சட்டம் 754, தமிழ்நாடு சிறார் மற்றும் பெண்கள் காப்பகங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 201, மற்றும் சந்தேக மரணத்துக்கான சட்டப்பிரிவு 174 ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இறந்துபோன ஸ்ரீமதி 12-7-2022 அன்று மாலை தனது தோழிகளுடன் விளையாட்டு வகுப்பில் விளையாடி முடித்துவிட்டு பள்ளிக் கட்டிடத்தின் ஆலிபிளாக்கை பார்த்தவாறு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, அவரது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ள அவரது நெருங்கிய வகுப்புத் தோழிகளிடம் ஸ்ரீமதி, "ஏழு வருடத்திற்கு முன்பு ஒரு அக்கா இ-பிளாக்ல இருந்து கீழே விழுந்து இறந்துட்டாங்க. ஆ-பிளாக் அதைவிடப் பெருசு. அங்கிருந்து விழுந்தால் என்ன ஆகும்?” என கேட்டுள்ளார். இது ஸ்ரீமதியின் நெருங்கிய தோழிகள் நீதிபதி முன் அளித்த வாக்கு மூலங்களில் இருந்து தெரிய வருகிறது.
“ஸ்ரீமதி தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார் எனத் தெரிய வருகிறது. தற்கொலைக் குறிப்பு ஒன்றை எழுதி தனது சீருடைக் கோட்
ஸ்ரீமதி வழக்கில் சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்த குற்றப்பத்திரிகை நகல் வெளியாகி யுள்ளது. கடந்த பதினைந்தாம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் ரவிக்குமார், சாந்தி, சிவசங்கரன் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என குறிப்பிடப் பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி.யின் திருவண்ணா மலை மாவட்ட ஆய்வாளர் தாக்கல் செய்த இந்த குற்றப்பத்திரிகையில் ஒடஈ 305, குழந்தைகள் கவனிப்பு மற்றும் பாதுகாப்புச்சட்டம் 754, தமிழ்நாடு சிறார் மற்றும் பெண்கள் காப்பகங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 201, மற்றும் சந்தேக மரணத்துக்கான சட்டப்பிரிவு 174 ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இறந்துபோன ஸ்ரீமதி 12-7-2022 அன்று மாலை தனது தோழிகளுடன் விளையாட்டு வகுப்பில் விளையாடி முடித்துவிட்டு பள்ளிக் கட்டிடத்தின் ஆலிபிளாக்கை பார்த்தவாறு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, அவரது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ள அவரது நெருங்கிய வகுப்புத் தோழிகளிடம் ஸ்ரீமதி, "ஏழு வருடத்திற்கு முன்பு ஒரு அக்கா இ-பிளாக்ல இருந்து கீழே விழுந்து இறந்துட்டாங்க. ஆ-பிளாக் அதைவிடப் பெருசு. அங்கிருந்து விழுந்தால் என்ன ஆகும்?” என கேட்டுள்ளார். இது ஸ்ரீமதியின் நெருங்கிய தோழிகள் நீதிபதி முன் அளித்த வாக்கு மூலங்களில் இருந்து தெரிய வருகிறது.
“ஸ்ரீமதி தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார் எனத் தெரிய வருகிறது. தற்கொலைக் குறிப்பு ஒன்றை எழுதி தனது சீருடைக் கோட்டின் வலதுபுறப் பாக்கெட்டில் வைத்திருந்ததை பிணக்கூராய்வு அலுவலர் எடுத்து முதல் விசாரணை அதிகாரியிடம் கொடுத்துள்ளார். அதை காவல்துறை கண்காணிப் பாளர் சாட்சிகள் முன்னி லையில் கைப்பற்றியுள்ளார். "அதில் இருந்த கையெழுத்து ஸ்ரீமதியின் கையெழுத்துதான் என ஸ்ரீமதி தனிப்பட்ட முறையில் பராமரித்த நோட்டுப்புத்தகம், அவரது தாய் செல்வியிடம் பெறப்பட்ட ஸ்ரீமதியின் கையெழுத்துக்கள் அடங்கிய நோட்டுப்புத்தகம், அவர் சத்திய சாய் பள்ளியில் சேர்ந்தபோது தன் கைப்பட பூர்த்தி செய்த விண்ணப்ப படிவம் ஆகியவற்றுடன் ஒப்பீடு செய்த தடய அறிவியல் பிரிவு, இவையனைத்தும் ஸ்ரீமதியின் கையெழுத் துக்களே'’என அறிக்கை அளித்துள்ளது.
ஸ்ரீமதி தனிப்பட்ட முறையில் பராமரித்த நோட்டில் "என்னுடைய பீஸ் மற்றும் என்னுடைய கடன்'’என ஒரு தனித் தாளில் எழுதியிருந்தாள். அந்தத்தாளை அரசு மனநலக் காப்பக நிபுணர் குழுவிற்கு அனுப்பி அறிக்கை பெற்றதில், “"ஸ்ரீமதி தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருந்துள்ளார், அவர் தன்னைத்தானே துன்புறுத் திக் கொள்ளும் சுபாவம் உள்ளவர்'’என்றும் அறிக்கை பெறப்பட்டு அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீமதியின் உடலில் உள்ள காயங்கள் எல்லாம் அவர் மேலிருந்து திடமான பரப்பில் விழுந்தபோது ஏற்பட்ட காயங்களாகவே இருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவருகிறது. அவரது தற்கொலைக் குறிப்பில் குறிப்பிட்டுள்ள ஆசிரியைகள் கிருத்திகா மற்றும் ஹரிப்பிரியா ஆகியோர் பொதுவான அறிவுரை வழங்கியுள்ளனர் என அவரது தோழிகள் அளித்த வாக்குமூலங்களில் இருந்து தெரியவருகிறது. ஸ்ரீமதி வெகுநாட்களாக மனஅழுத்தத்தில் இருந்து வந்ததும், அவர் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்ததையும் அதனால் தற்கொலை செய்துகொண்ட தும் தெரிய வருகிறது.
“இந்த வழக்கில் ஆசிரியர் கள் இருவரும் எந்தக் குற்றமும் செய்யாததால் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப் படுகிறார்கள். ரவிக் குமார் சாந்தி மற்றும் பிரின்சிபால் சிவசங்க ரன் ஆகியோர் மாணவியர் விடுதியை பதிவு செய்யாமலும், உரிமம் பெறாமலும், விடுதிக்கு மேலாளரோ அல்லது உள்ளிருப்பு மேலாளரோ நியமிக் காமல் விடுதியை நடத்தியதால் குற்றம் புரிந்தவர்கள் ஆகிறார் கள்’என குற்றப் பத்திரிகையில் குறிப் பிடப்பட்டுள்ளது.
இதுபற்றி நம் மிடம் பேசிய ஸ்ரீமதியின் தாயார் செல்வி, “"அந்தப் பள்ளியின் இ-பிளாக்கில் ஏற் கனவே ஒரு பெண் மாணவி மேலே இருந்து விழுந்து இறந்துள்ளார் என ஸ்ரீமதி சொன்னதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்கள். அந்தப் பள்ளியில் இதுபோல ஏழு பேர் இறந்துள்ளார்கள். அந்தப் பள்ளியில் படித்த ராஜா, பிரகாஷ் ஆகியோர் சந்தேகத்துக்கு இடமான வகையில் மரணமடைந்தார்கள் என்பது நக்கீரன் மேற்கொண்ட புலனாய்வுப் பதிவுகளுக்கு பின்தான் எனக்கு தெரிய வந்தது. அந்த மரணங்களின் லிஸ்ட்டில் இ-பிளாக்கில் இருந்து விழுந்து இறந்த மாணவியின் மரணம் இடம்பெறவில்லை. அது ஒரு விபத்தாகவே கருதப்பட்டது. அதைப்பற்றி இந்த விவகாரத்தில் இவ்வளவு விவரங்களை புலனாய்வு செய்த நக்கீரனுக்கும் எனக்கும் தெரியாதபோது ஸ்ரீமதிக்கு மட்டும் அதுபற்றி எப்படித் தெரியவந்தது, அதை அவள் தனது தோழிகளுடன் விவாதித்துள்ளார் என்பது நம்பமுடிய வில்லை. விளையாட்டு வகுப்பில் சந்தோஷமாக விளையாடி முடித்துவிட்டு வரும் மாணவி என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடும் போலீசார், விளையாடி முடித்தவுடன் ஸ்ரீமதி தற்கொலை செய்துகொள்வது பற்றிப் பேசினார் என சொல்கிறார்கள். இது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்து கிறது''’என்றார்.
மொத்தத்தில் போலீசார் ஸ்ரீமதியின் நெருங்கிய தோழிகள் இருவர் கொடுத்த வாக்குமூலத்தை முழு வதுமாக சார்ந்து அறிக்கை தயார் செய் திருக்கிறார்கள். இந்த மாணவிகளை யார் கண்ணிலும் படாமல் மறைத்து வைத்து பாதுகாக்கிறார்கள். அதில் ஒரு மாணவியை ரவிக்குமார் தனது சொந்த செலவில் வேறொரு பள்ளியில் படிக்க வைக்கிறார். போஸ்ட் மார்ட்டம் சரியாக செய்யப்பட வில்லை. கடிதத்தில் இருந்த கையெழுத்து ஸ்ரீமதியுடையது அல்ல என ஏகப்பட்ட விவாதங்கள் ஏற்கெனவே நடந்துள்ளன.
ஆசிரியைகளை விடுவித்த போலீசார், விடுதி விசயத்தில் ரவிக்குமாரையும், சாந்தியையும் குற்றவாளி ஆக்கியுள்ளார்கள். சாந்திக்கும், ரவிக்குமாருக்கும் ஆதரவாக செயல்பட்டார்கள் என பழிச்சொல் வந்துவிடக்கூடாது என்பதற் காக அவர்கள் மீது சிறிய குற்றத்தை சுமத்தியுள்ளார்கள். ஸ்ரீமதி தற்கொலை செய்யும் மனநிலையில் இல்லை என்பது இவர்கள் குறிப்பிடும் விளையாட்டு நேரமே இவர்களுக்கு எதிரான சாட்சியாக அமைந்துள்ளது. மற்றும் ஏகப்பட்ட மாணவிகள் நக்கீரனிடம் ஸ்ரீமதி தற்கொலை செய்யும் மனநிலையில் இல்லை என வீடியோ சாட்சிகளாகவே தெரிவித் துள்ளார்கள். அந்தப் பள்ளியில் ஏற்கெனவே நடந்த மரணங்களில் ரவிக்குமார் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார். அதை மறைத்துவிட்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை ஏகப்பட்ட சந்தேகங் களை உருவாக்குகிறது.
____________
இறுதிச் சுற்று!
காயிதேமில்லத்தின் 128வது பிறந்தநாளை யொட்டி, சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள அவரது நினைவிடத்தில் 5-6-23 திங்கள்கிழமை அன்று மலர்போர்வை அணிவித்து மரியாதை செலுத்தி னார் முதல்வர் ஸ்டாலின். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி, எம்.பி. தயாநிதிமாறன் உள்பட இஸ்லாமிய பெரியவர்கள் பலரும் வணங்கினர். காயிதேமில்லத்தின் நினைவுகளை பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின், "இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைசிறந்த நாட்டுப்பற்றாளர். தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என அரசியல் நிர்ணய அவையில் ஆணித்தரமாக வாதாடிய மொழிக்காவலர். போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் வெற்றி பெறக்கூடிய அளவுக்குச் செல்வாக்கு கொண்டிருந்த தனிப்பெரும் தலைவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பின ராகவும் தமிழர்களுக்காகவும் சிறுபான்மைச் சமுதாயத் தினரின் உரிமைகளுக்காகவும் உரக்கக் குரல் எழுப்பிய அரிமா. "இவ்வளவு பெரிய முஸ்லிம் சமுதாயத்திற்கு இம்மாதிரி ஒரு தலைவர் மீண்டும் கிடைப்பது அரிது' என தந்தை பெரியாரால் பாராட்டப்பட்ட மாசற்ற மாணிக்கம்'' என்று காயிதே மில்லத்தை நினைவுகூர்ந் துள்ளார்.
-இளையர்