ட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க. வேட்பாளர் தரப்பில் கோடிக் கணக்கான பணம் கொண்டு செல்லப் படுவதாக ஆங்காங்கே பறக்கும்படையினர் பிடித்தபோது, திருச்சி பெட்டவாய்த்தலை அருகே பறக்கும் படை சோதனையில் சிக்கும் நிலையில் சாலையோரம் தூக்கி வீசப்பட்டது 3 கோடி ரூபாய். அந்தப் பணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், திருச்சியின் பிரபல ரவுடியான சாமி ரவி. புதுக்கோட்டையில் சிறைவாசம்.

rr

Advertisment

சிறைக்குள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சாமி ரவி, பிணையில் வெளியே வர விருந்த நிலையில், காரைக்காலில் ஒரு வழக்கு என மேலும் சில வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் தடுப்பு காவலில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். அவரது கூட்டாளிகள் முயற்சியால் குண்டர் தடுப்புக் காவலை நீதிமன்றம் மூலம் உடைத்து பிணை கிடைத்துவிட்டது.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை, புதுக்கோட்டை சிறையிலிருந்து வெளியே வரும் தகவல் அறிந்து, சிறை வாசலில் வர வேற்று திருச்சிக்கு ஊர்வலமாக அழைத் துச் செல்ல நூற்றுக் கணக்கான கூட்டாளிகள் சிறை வாசலில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன், சாமி ரவியை மாற்றுப் பாதையில் அழைத்துச் சென்று "இதுபோல அலப்பறைகள் செய்தால் மீண்டும் சிறைக்கு வர நேரிடும்' என்று அறிவுரையும் கூறி அனுப்பி வைத்தனர்.

Advertisment

rowdy

மாற்றுப் பாதையில் சாமி ரவி செல்லும் தகவல் சிறை வாசலில் காத்திருந்தவர்களுக்கு கிடைக்க... வேக வேகமாக கிளம்பின மோட்டார் சைக்கிள்களும் கார்களும். திருச்சி நெடுஞ்சாலையில் ஒன்றுசேர்ந்து ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப் பட்ட ரவுடியை, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சகாக்கள் வாகன அணிவகுப்பு நடத்தி அழைத்துச் சென்றனர். வழியில், ரவுடி சாமி ரவியை மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தது, அவரது ஆட்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. சமீபகாலமாக ரவுடிகள் பொதுவெளி யில் பட்டாக்கத்தியில் கேக் வெட்டி கொண்டாடு வது, சிறையிலிருந்து வந்தாலும் கேக் வெட்டி பட்டாசு வெடித்து ஊர்வலமாக சென்று கொண் டாடுவது உள்ளிட்ட சம்பவங்கள் பொதுமக்களை அச்சுறுத்தியே வைத்துள்ளது. அரசியல்வாதிகளின் துணையிருப்பதால் இப்படியெல்லாம் நடப்பதாக கூறுகிறார்கள் சாமானிய மக்கள்.

சிறையிலிருந்து வெளியே வரும் ரவுடியை வரவேற்க இத்தனை பேர் வந்திருந்ததை போலீசாரும் பொதுமக்களும் அதிர்ச்சியோடு பார்த்தனர்.

-மகி