கவர்னரின் தமிழ்நாடு சர்ச்சை, எமர்ஜென்ஸி கதவைத் திறந்த சர்ச்சை, ஹனி ட்ராப் விவகாரம் எனப் பெரும்புயலுக்கிடையே கடலூரில் கடந்த 20ஆம் தேதி தமிழ்நாடு பா.ஜ.க.வின் மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. கடலூரில் நடந்த பா.ஜ.க. பொதுக்குழுவில், நக்கீரனுக்கு எதிராகக் கட்சியினரைத் தூண்டியிருக்கிறார், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. அவர் விரும்பியபடியே, பா.ஜ.க.வினர் நக்கீரன் இதழ்களை எரித்தும், கிழித்தும், கீழ்த்தரமாக கோஷங்களை எழுப்பியும் போராட்டம் என்ற பெயரில் தங்கள் வன்மத்தைக் காட்டிக்கிட்டு இருக்காங்க.
கடலூர் செயற்குழுவில் அண்ணாமலையின் பேச்சும் நடவடிக்கையும் எப்படி இருந்துச்சுன்னு இந்த கலோக்கியல் ரிப்போர்ட் படம்பிடிச்சிக் காட்டுது. ஈயத்தப் பார்த்து இளிச்சதாம் பித்தளைங்கற மாதிரி அண்ணாமலை செயற்குழுவுல ஒரு கதை சொல்லியிருக்காரு பாருங்க! அதாவது, 19ஆம் தேதி ராத்திரி 11 1/2 மணிக்கு, சர்ச் சைக்குரிய கர்நாடக எம்.பி.யான தேஜஸ்வி, அண்ணா மலைக்கு போன்பண்ணி ஸாரி சொன்னாராம்! எதுக்கு ஸாரின்னா... "ஃப்ளைட்ல கதவு திறந்த விசயம், இவ்வளவு பெருசாகும்னு நினைச்சே பார்க்கல. இந்தியா முழுக்க பெரிய இஷ்யூவா ஆயிடிச்சு... எங்களோட வந்ததுனால உங்களுக்கும் கெட்ட பேரு ஆயிடிச்சு... அத னால ஸாரி" அப்படின்னு தேஜஸ்வி ஸாரி கேட்டாராம்.
அப்ப அண்ணாமலை பதறியடிச்சு, "நீங்க ஸாரி கேக்க வேண்டியது இல்ல... உங்கள இன்வைட் பண்ணுனது நாங்கதான்... பா.ஜ.க.வோட இளைஞர் அமைப்புதான். கதவு கொஞ்சமாத் திறந்ததா, பெருசா திறந்ததா அப்படிங்கிறதெல்லாம் பிரச்சினையே இல்ல. ஆனா திறந்திருந்தது. அது ஏன் திறந்திருந்ததுங்கிறது மில்லியன் டாலர் கேள்வி. நீங்க எங்க கெஸ்ட். இறைவனா பாத்துதான் உங்கள அங்க உக்கார வச்சிருக்காரு. ஃப்ளைட்ல அந்தக் கதவு திறந்திருந்த விஷயத்த நீங்க சொல்லலைன்னா... ஃப்ளைட் டேக்-ஆப் ஆகும்போது, அடிக்கிற காத்துல கதவு திறந் திருந்தா... யோசிச்சுப் பாருங்க... எவ்வளவு பேருக்கு என்ன மாதிரியான தீங்கெல்லாம் நடந் திருக்கும்! அதனால ஏற்படுற சேதத்த யாராலும் நினைச்சுப் பார்க்கவே முடியாது. அதனால உங்களால பெரிய நல்லது நடந்திருக்கு. ஊடகம், பத்திரிகை, சோசியல் மீடியா... இதையெல்லாம் நீங்க புறந்தள் ளிருங்க!''ன்னு தேஜஸ்விக்கு தெம்பு அளிக்கிற விதமா ஆறுதலா பேசிட்டு, தேஜஸ்விய செயற்குழு கூட்டத்துல அண்ணாமலை போட்டுக் கொடுத்திருக்காரு.
அண்ணாமலை என்ன மாதிரி பேசியிருக்கார்னா, "நா எந்த தப்பும் செய்யல. பாட்டில ஓப்பன் பண்ணி தண்ணி குடிச்சவரு அவரு... நா கிட்டயிருந்து வெறுமனே பார்த்துக்கிட்டிருந்தவன் தான்கற கதையா, எல்லாமே அந்த கர்நாடகாக்காரன் தான் செஞ்சது. நான் ரொம்பவே நல்ல யோக்கியன். கூட மட்டும்தான் இருந்தேன். எனக்கும் அதுக்கும் சம்பந்தமேயில்லன்னு சொல்லி, தனக்கும் அந்த சம்பவத்துக்கும் சம்பந்தமே இல்லைங்கற மாதிரி செயற் குழுவுல பேசியிருக்காரு. ஆக, ப்ளைட் கதவத் திறந்தது உண்மைதாங்கறத பப்ளிக்கா ஒத்துக்கிட்டார் அண்ணா மலை. நூத்துக்கணக்கான பேரோட உயிருக்கு உலை வைக்கிற மாதிரி போதையில எசகுபிசகா வேலையப் பண்ணிட்டு ரெண்டு பேரும் அய்யய்யோ, எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைங்கிற மாதிரி... தேஜஸ்வி தான் திறந்தாருங்கற மாதிரி அண்ணாமலை செயற்குழுவுல புலம்பியிருக்காரு. கேப்பைல நெய் வழியுதுன்னா கேப்பா ருக்கு எங்க புத்தி போச்சுங்கற கதையா அண்ணாமலை புலம்புனதுதான் மேற்படி விஷயம். இந்த ரெண்டு பேருமே உப்பை நிறையா தின்னுட்டாங்க... உப்பத் தின்னவன் தண்ணி குடிக்கணும்கற மாதிரி இதுக்கு தண்டனை கண்டிப்பா இருக்கு.
மேலும், "நக்கீரன நான் எங்கயுமே எரிக்கச் சொல்லல. ஏன்னா என்னைப் பத்தி அவங்க செய்தி போட்டு, அதனால நக்கீரன் புக் சர்க்குலேஷன் கூடுச்சுன்னா, அது நக்கீரன்ல வேலை பார்க்கிறவங்களோட குடும்பத்துக்கு உதவறதா ஆயிடும். எப்பவுமே இந்த மாதிரி செய்திகள் வரத்தான் செய்யும். அதனால இதைப்பத்தி நாம கவலைப்படத் தேவையில்ல. ஆனா ஒரு விஷயம், நான் எந்த பத்திரிகையும் படிக்கிறது இல்ல. டி.வி. பார்க்கிறது இல்ல. முக்கியமா நக்கீரனப் பார்க்கிறது இல்ல, படிக்கிறதில்ல”ன்னு, இப்படி 20 இடங் கள்ல ’நக்கீரன்... நக்கீரன்...'னு அழுத்தம் கொடுத்து சொல்லியிருக்காரு. அங்கங்கே என்னென்ன நடக்கு துன்னு செய்திகள கேட்டுத் தெரிஞ்சுக்கிறது, அப்பப்ப சில விஷயங்கள மட்டும் பாத்துக்கிறது, அப்படின்னு, மத்த நேரங்கள்ல பத்திரிகைகளே படிக்கிறதில்லங்கிறது மாதிரி அண்ணாமலை பேசியிருக்காரு. அதுமட்டுமில்லை.
”இப்பக்கூட பாருங்க.... கேசவவிநாயகம் பக்கத்துல நடிகை நமீதா உக்காந்திருந்தாங்க. சன் டி.வி.ல அதத் திரும்பத் திரும்ப காமிச்சிக்கிட்டிருந்தாங்க. மாநில செயற்குழுக் கூட்டம் இனிதே நடந்ததுன்னு வேற, அதுல போடுறாங்க. அதனால நாம வெக்கப்படக்கூடாது. இந்த மாதிரி கருத்துகளுக்கு சோர்ந்து போயிறவும் கூடாது...” அப்படின்னு போறபோக்குல அந்த விஷயம் அவருக்கு உறுத்திச்சோ என்னவோ அதையும் டச் பண்ணியிருக்காரு.
ஈரோடு இடைத்தேர்தல் தேதி அறிவிச்சதும், நாமளும் நிக்கணும், நாம இத விடக்கூடாதுன்னு சிலபேரு அங்க கிளப்பி விட்டாங்க. அதுக்கு அண்ணாமலை, "இல்லயில்ல... நமக்கு அமைப்பு இல்ல, பூத் கமிட்டி இல்ல. இதுக்கு முன்னாடி போட்ட பூத் கமிட்டி எல்லாமே 'ஃபேக்'காவுது. 50% கூட தேறாது. எப்படி இதையெல்லாம் வச்சு நாம தேர்தல எதிர்கொள்ள முடியும்? (ஆனாலும் தேர்தல்ல அவரே நிக்கணும்ங்கிற ஆசை அவருக்கு இருக்கு) இத நம்பி நாம நடைபயணம் போனா, அது எப்படி சரியா இருக்கும்?னும் சொல்லியிருக்காரு. ஆனா ஏப்ரல் 14-ல் தொடங்குறதா இருந்த நடைபயணத்த... அன்னிக்கு கரிநாள்னு ஏப்.19-க்கு தள்ளி வச்சிருக்காங்க.
ஜனவரி 26ஆம் தேதி 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தி.மு.க. அரசு ஊழல் செய்திருக்கிறதாவும், அதனால தி.மு.க. அரசு மேல ஊழல் குற்றச்சாட்டு பற்றிய பட்டியலை வெளியிட்டு, அறிக்கை விடப்போறதாவும் அண்ணாமலை அறிவிச் சிருக்காரு. முக்கியமா அதுல 8 மூத்த அமைச்சர்களோட மகா சொத்துப் பட்டியல வெளியிடறதாவும், அதேநேரம்... செந்தில்பாலாஜிய மட்டும் எதிர்த்து, தனியா ஒரு தீர்மானமும் போட்டிருக்காங்க. எக்ஸ் எம்.பி. கே.பி.ராமலிங்கம் அந்தத் தீர்மானத்த வாசிக்கிறாரு. அப்போ, அண்ணாமலை, செந்தில்பாலாஜி பேரச் சொல்ல வேண்டாம், அத அடிச்சிருங்க... அப்படின்னு சொல்லி அந்தப் பேர மாத்திரம் எடுத்துட்டு, மூத்த அமைச்சர்களில் ஒருத்தர், முக்கிய அமைச்சர்கள்ல ஒருத்தர் அப்படின்னு போடுங்கன்னு சொல்லித் திருத்தியிருக்காரு. செந்தில் பாலாஜின்னாலே ஒரு கிலி இருக்கத்தான் செய்யுது அண்ணாமலைக்கு!
அடுத்ததா, கட்சியில் ஒரு டிஸிப்ளின் கொண்டுவர வேண்டியிருக்கு. ஆளாளுக்கு வந்து டி.வி.யிலயோ, மீடியாக்களிலோ பேசக்கூடாதுன்னு சொல்லி வாய்ப்பூட்டுச் சட்டம் ஒண்ணும் போட்டிருக்காரு. யாரும் அவரவர் சொந்தக் கருத்துக்கள்னு வெளிப்படையா சொல்லக்கூடாது. கட்சி சொல்லச் சொல்லியிருக்கிற கருத்துக்களை மட்டுமே சொல்லணும். அதிலும், சொல்லச் சொன்ன நபர்கள் மட்டும்தான் பேட்டி குடுக்கணும். இஷ்டத்துக்கு யாரும் பேசக்கூடாதுன்னு, கட்சிக்காரங்களுக்கு உத்தரவு போட்டுருக்காரு.
செயற்குழு கூட்டம் முடிஞ்சி வெளிய வந்த... பி.ஜே.பி. தமிழ்நாட்டுல வேர் ஊன்றக் காரணமா இருந்த... முக்கியமா, கரசேவையில கலந்துக்கிட்ட 4 பேரு அவங்களுக்குள்ளயே பேசிக்கிட்டாய்ங்களாம்... "கர சேவைக்கும், மசூதிகள இடிக்கிறதுக்கும் மட்டும் நாம போகணும்... அதுக்காக நாம கஷ்டப்படணும். அந்த கரசேவை நடக்கறப்பல்லாம் அரைக்கால் டவுசரப் போட்டுட்டு அலைஞ்ச அண்ணாமலை, இன்னிக்கு பெரிய ஆளா ஆயிட்டாரு. அதுக்குக் காரணம் முக்கிய பொறுப்புகள்ல இருக்கிற நாலஞ்சு பெருசுக அமைதியா இருக்கிறதுதான்னு பேசியிருக்காங்க.
அவங்க சொல்றது யார் யாருன்னு பார்த்தா, .. பொன்னார்... அடுத்து சி.பி.ராதாகிருஷ்ணன்... எம்.ஆர். காந்தி... வானதி. இவங்க எல்லாரும் சேர்ந்து போய் அமித்ஷாகிட்ட, "இப்படி இப்படியெல்லாம் தமிழ்நாட்டுல நடக்குது. இங்க கட்சியக் காப்பாத்தணும்னா, இதையெல்லாம் செய்யணும்... அண்ணாமலை செய்ற காரியங்கள்... கட்சி வளர்றதுக்கு எந்தவிதத்துலயும் உதவாது''ங்கிற மாதிரி எடுத்துச் சொல்லிட்டாலே போதும்... அவங்க அதிரடியா எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிருவாங்க. ஏன்னா... பி.எல். சந்தோஷோட பேச்சு, எதுவுமே வடக்க எடு படல. அவர் சொல்றத யாருமே கேக்கிற தில்ல. கர்நாடகாவுலயும் அவரு பேச்ச யாருமே கேக்கல. தமிழ்நாட்டுல ஓட்டும் இல்ல... ஒண்ணும் இல்ல. ஏதோ சொல்றான், அவன் கேக்குறான்.... சரி செஞ்சு பார்ப் போம்ங்கிறதுனாலதான் சந்தோஷ், அண்ணாமலைக்கு சப்போர்ட்டா இருக்காரு.
'எனக்கு ஆபத்து இருக்கு, அதனால பாதுகாப்பு வேணும்'னு சில விஷயங்களச் சொல்லி சந்தோஷ்கிட்ட கேட்டதுனாலதான், 'சரி... இனிமேலாவது ஏதாவது பண்றாரான்னு பார்ப்போம்'னுதான் சந்தோஷ் இவருக்கு சப்போர்ட்டா இருக்காரு. மத்தபடி, இவரு சொல்ற எதுவுமே நடக்கல, யாரும் கேக்கிறதும் இல்ல... சந்தோஷ் ஒருத்தர் மட்டும்தான் அண்ணாம லைக்கு சப்போர்ட் பண்றாரு, அவரு சொல்லித்தான் இப்பகூட அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு குடுத்துருக்காங்க. அதனால... ஐகானா இருக்கிற அந்த 4 பேரும் போய் மேலிடத்துல சொல்லிட்டாலே... தமிழ்நாட்டுல கீழ்த்தரமான அரசியல் செய்ற அண்ணாமலை ஒண்ணுமே இல்லாமப் போயிருவாரு. ஆனா அவங்க யாரும் அதுக்கு மனசு வைக்கல. அதுக்கு காரணம், அவங்களுக்கான சீட்டைக் குடுக்க வேண்டிய இடத்துல அண்ணாமலை இருக்காரு. சீட் குடுக்காம விட்டுட்டா எலெக்ஷன் நேரத்துல அது வேற அசிங்கமா போயிரும்னு அவங்கள்லாம் பொறுத்துக்கிட்டிருக்காங்க அப்படின்னு சொல்லி அங்கலாய்ச்சிருக்காய்ங்க.
அண்ணாமலைக்கு எதிரா அவங்க கட்சிக்குள் ளேயே சூறாவளி வீசுது. ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது போதையில் பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தில், போதைப்பயணியான சங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஏர் இந்தியாவில் 4 மாதம் பறக்கத் தடை, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம், பைலட்டுக்கு 3 மாத லைசன்ஸ் ரத்து, விமான சேவை இயக்குநருக்கு 3 லட்சம் அபராதம் எனப் பல்வேறு தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறுநீர் கழித்த சம்பவத்துக்கே இவ்வளவு தண்டனைகளென் றால், நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிருக்கே உலை வைக்கும் எமர்ஜென்ஸி கதவு திறந்த விவகாரத்துக்கு வெறும் மன்னிப்புக் கடிதத்தோட விட்டது எப்படி நியாயம்னு கட்சிக்குள்ளயே முணுமுணுப்பு எழுந்திருக்கிறது. எல்லாத்தையும் பண்ணிட்டு, பழிய தேஜஸ்வி மேல தூக்கிப்போட்டு நல்லா நாடகம் நடத்தியிருக்காரு அண்ணாமலை.