டகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் சென்னைக்கு விடப்பட்ட ரெட் அலர்ட் பொய்த்துப்போயிருக்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள் தப்பித்துள்ளதில் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது தி.மு.க. அரசு.

வடகிழக்கு பருவ மழையின் தொடக்கம், வங்கக்கடலின் தென்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் ஆகியவற்றால் இம்மாதம் 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை சென்னையிலும் வட தமிழகத்திலும் அதிக கனமழை (20 செ.மீ.க்கு மேல்) பொழியும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்திய வானிலை மையமும் இதையே வழிமொழிந்தது. 16 (புதன்) மற்றும் 17 (வியாழன்) ஆகிய தேதிகளில் சென்னைக்கு ரெட் அலர்ட்டும் கொடுத்தது வானிலை ஆய்வு மையம்.

chennai

அதற்கேற்ப திங்கள்கிழமை முதலே சென்னையில் மழையின் தாக்கம் அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை இடைவிடாமல் காற்று, மின்னலுடன் கொட்டியது மழை.

Advertisment

கடந்த ஆண்டு (2023) டிசம்பரில் உருவான மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் கொட்டித்தீர்த்த மழையில், சென்னை நகரமே தத்தளித்தது. தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நிறைய சிரமங்களை எதிர்கொண்டன. அப்போது, தி.மு.க. அரசை நோக்கி எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் குற்றம்சாட்டிய நிலையில், ”மிக்ஜாம் புயல் குறித்து முன்கூட்டி எந்தத் தகவலையும் வானிலை ஆய்வு மையம் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் முன்னெச்சரிக்கையாக அரசு பல நடவடிக்கை களை எடுத்திருக்கும். சென்னை மக்கள் இத்தகைய துயரங்களை எதிர்கொண்டிருக்கமாட்டார்கள்''” என்று சொல்லியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

இப்படிப்பட்ட சூழலில், இந்தாண்டு (2024) வடகிழக்கு பருவமழை துவங்கியதும் வங்கக்கட லில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலத்தால் ஏற்படும் தாக்கத்தை கணித்து, தமிழகம் முழுவதும் மிதமான மழை, கனமான மழை, அதிகனமான மழை பொழியும் மாவட்டங்களை அறிவித்தது சென்னை வானிலை ஆய்வு மையம். அதனை யொட்டி ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் ஆகிய எச்சரிக்கையை வகைப்படுத்தியும் அறிவிக்கப் பட்டன. இதனையடுத்து விழித்துக்கொண்டது தி.மு.க. அரசு. வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது என அறிந்ததுமே அதனை எதிர்கொள்ளத் தயாரானார் முதல்வர் ஸ்டாலின். கடந்த 15 நாட்களுக்கு முன்பிருந்தே அமைச்சர்கள், உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் எனத் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

c

Advertisment

அதற்கேற்ப, துணை முதல்வரானதும் முதல் பிரச்சனையாக மழையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உதயநிதிக்கு ஏற்பட்டதால் உதயநிதியும், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்; அவர்களுடன் விவாதித்தார். எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

சென்னை முழுவதும் சாலைகளில் தேங்கும் மழை நீரை உடனடியாக அகற்றத் தேவையான மின் மோட்டார்கள், மின் மோட்டார் இணைக்கப்பட்ட ட்ராக்டர்கள், போட்டுகள், தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை பாதுகாப்பது, அவர்களுக்குத் தேவையான அத்யாவசிய உணவுகளுக்கு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன. பள்ளி, கல்லூரிகளுக்கும் அத்யாவசிய சேவைத் துறைகளைத் தவிர்த்து அரசு துறைகளுக்கும் முன்கூட்டி விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. தனியார் துறைகள், தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அனுமதிக்கவும் அரசு கேட்டுக்கொண்டது.

மேலும், அரசு ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் தி.மு.க. கவுன்சிலர்களும் தி.மு.க.வினரும் இணைந்து பணியாற்றும் வகையில் களப்பணிகளுக்குத் தயாராக இருக்கவும் உத்தரவிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின். இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளுடன் ரெட் அலர்ட்டை எதிர்கொண்டது தி.மு.க. அரசு. திங்கள்கிழமை தொடங்கி மழை கொட்ட ஆரம்பித்தது. அன்றைய தினம் இரவிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு வரை கொட்டும் மழையில் அதிகாரிகளுடன் களத்தில் குதித்தார் உதயநிதி. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விசிட் அடித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்தார்.

அதேபோல, வடசென்னை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை விசிட் அடித்த முதல்வர் ஸ்டா லின், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட மாநகராட்சி பணியாளர்களை சந்தித்து அவர் களின் களப்பணியைப் பாராட்டியதுடன், உங்களுடன் இணைந்து முன்கள வீரனாகத் துணை நிற்பேன் என்று நம்பிக்கை கொடுத்தார். மேலும், தி.மு.க. ஐ.டி. விங் சார்பாக அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த வார் ரூம் செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர், அவர் களின் பணியையும் பாராட்டி உற்சாகப்படுத்தி னார். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை அரசு தரப்பில் எடுத்திருந்தாலும், ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர்., வேளச்சேரி, பள்ளிக்கரணை, தேனாம் பேட்டை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் ஆறுகள் போல தண்ணீர் பாய்ந்தது. அதனை மாநகராட்சி பணியாளர்களும், பேரிடர் மேலாண்மை பணியாளர்களும் உடனுக்குடன் அகற்றினர்.

cc

மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் பகுதிகளில் தண்ணீரை அகற்றுவதில் சிரமங்களை எதிர்கொண்டனர். அதேசமயம், தி.மு.க. மற்றும் சென்னை கவுன்சிலர்கள் மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருந்தாலும், செவ்வாய்கிழமை களத்தில் நின்றார்கள் கவுன்சிலர்கள். ஆனால், அவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் உதவ முன்வரவில்லை.

அதாவது, தண்ணீரை அகற்ற மின்மோட் டார்கள், ட்ராக்டர்களை உடனுக்குடன் அனுப்பி வைக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகளை கவுன்சிலர்கள் தொடர்புகொண்டபோது அதிகாரிகள் அக்கறை காட்டவே இல்லை. குறிப்பாக, "சென்னை மாநகராட்சி கமிஷனர் குமர குருபரன் ஐ.ஏ.எஸ்.ஸை தொடர்புகொள்ள நாங்கள் தொடர்ந்து முயற்சித்தோம். ஆனால், எங்களது போன் அழைப்பை கமிஷனர் அட்டெண்ட் பண்ணவே இல்லை. இதனால், மின்மோட்டார்களும், ட்ராக்டர்களும் அவசரத்துக்குக் கிடைக்காமல் அவஸ்தைப்பட்டோம். இறுதியில் அதிகாரிகளை நம்பாமல் சொந்தமாகவே ஏற்பாடு செய்து தண்ணீரை அகற்றும் பணிகளில் கவனம் செலுத்தி னோம்'' என்கிறார்கள் தி.மு.க. கவுன்சிலர்கள்.

இத்தகைய பிரச்சனைகள் ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர். பகுதிகளில் அதிகம் எதிரொலித்த நிலையில், ஓ.எம்.ஆர். பகுதிகளில் ஆய்வு நடத்திய அமைச்சர் எ.வ.வேலு, தேவையான அவசர நடவடிக்கைகளை எடுத்தார். அப்போது பேசிய அவர், ’"ஓ.எம்.ஆர். சாலைகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்துவருவதால், தண்ணீர் செல்லக்கூடிய இடங்களில் தடுப்புகள் இருக்கின்றன. இதனால் சிலமணி நேரம் நீர் வெளியேறாமல் தடை ஏற்பட்டது. உடனடியாக நெடுஞ்சாலைத் துறையினர் மூலம் தண்ணீர் வழிந்தோடுவதற்கான பாதைகள் உருவாக்கப்பட்டன. இதனால் தேங்கிய மழைநீர் 2 மணி நேரத்தில் வடிந்து சாலைகள் சுத்தமானது. போக்குவரத்தும் சீரடைந்தது.

அதேபோல, சென்னை மாநகராட்சி பகுதிகளில் 270 கி.மீ. சாலைகள், 347 சிறுபாலங்கள், 237 மழை நீர் வடிகால் கிரேன் ஆகியவற்றிலெல் லாம் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது'' என்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.

இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப் பட்ட சூழலிலும், "சென்னையை பாதுகாக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது'' என்று குற்றம்சாட்டினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, "சென்னையில் ஒரே நாளில் 17 செ.மீ. முதல் 30 செ.மீ. வரை மழை பொழிந்தது. ஓரிரு இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் மழைநீர் உடனடியாக வடிந்திருக்கிறது. உடனடியாக வெள்ளம் வடிந்ததே வெள்ளை அறிக்கை தான்'' என்று அவருக்கு நோஸ்கட் கொடுத்தார்.

சென்னையைப் பாதுகாத்ததில் மகிழ்ச்சியடைந்த முதல்வர் ஸ்டாலின், "ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் கமிட்டி கொடுத்த பரிந்துரைகளை அமல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மழை நீர் சாலைகளில் தேங்கவில்லை. உடனுக்குடன் தண்ணீர் வடிந்தது. கமிட்டி யின் பரிந்துரைகளில் இன்னும் 30 சதவீதம் நிறைவேற்ற வேண்டியதிருக்கிறது. அவைகளும் நிறைவேறியபிறகு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் சென்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிடும்''’என்றார் மிக அழுத்தமாக.

இதனால் நிம்மதிப் பெருமூச்சு எழுந்தாலும், ரெட் அலர்ட் பொய்த்துப் போனது எப்படி? வானிலை ஆய்வு மையத்தால் சரியாக கணிக்க முடியவில்லையா? என்கிற விவாதங்கள் பொதுவெளியில் எதிரொலித்தன. அரசு அதி காரிகளிடம் முதல்வர் ஸ்டாலினும் இதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ரெட் அலர்ட் பொய்த்துப்போனது குறித்து பேசிய சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், ‘’வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலிமையாக இருந்ததாலும், அதன் நகர்வின் வேகம் மற்றும் மேகக் கூட்டங்களின் அடர்த்தி ஆகியவற்றை கணித்துத்தான் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. ரெட் அலர்ட்டால் சென்னை முழுவதும் 22 செ.மீ.க்கு அதிகமாக மழை பொழியும் என கருதக்கூடாது. மக்களும், அரசுத் துறைகளும் உஷாராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது'' என்று விவரிக்கிறார்.

இதற்கிடையே, நீர் மேலாண்மை நிபுணர்கள், தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் பலரும் "டிசம்பர் மாதம் முடியும்வரை இந்த பருவ மழையின் அச்சமும் தாக்கமும் இருக்கவே செய்யும்' என்கின்றனர்.