ஈரோடு கிழக்குத் தேர்தலில் டி.டிவி.தினகர னின் ஆர்.கே.நகர் ஃபார்முலாவை கடைப்பிடிக்க தி.மு.க.வின் தலைமை தீர்மானித்துள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தலில் மறைந்த அ.ம.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேல் ஒரு ஃபார்முலாவை கடைப்பிடித்தார். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் டெபாசிட் இழக்க, டி.டி.வி.தினகரன் சுயேட்சை வேட்பாளராக ஜெயித்த தேர்தல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்.
அந்த தேர்தலில் வெற்றிவேல் கடைப்பிடித்த ஃபார்முலா சற்று வித்தியாசமானது. சட்டமன்றத் தொகுதி முழுவதையும் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் பாகங்களாகப் பிரித்துக்கொண் டார் வெற்றிவேல். ஒவ்வொரு பாகத்திற்கும் அ.தி. மு.க.வின் ஒரு மாவட்டச் செயலாளர் அல்லது முக் கிய நிர்வாகி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
ஒரு பாகத்தில் 500 ஓட்டு இருக்கிறதென்றால், அதில் 300 ஓட்டுகள் கவர் செய்யப்படும். அந்த பாகத்தில் நடக்கும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங் கள் போன்றவற்றிற்கு இந்த 300 பேரை கண்டிப்பாகத் திரட்டுவார் வெற்றிவேல். இதில் வேட்பாளர் ஓட்டுக் கேட்டு வரும்போது அந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக் கும் 500 ரூபாய் கொடுக்கப்படும்.
வேட்பாளர் குழந்தைக்கு பெயர் வைத்தால
ஈரோடு கிழக்குத் தேர்தலில் டி.டிவி.தினகர னின் ஆர்.கே.நகர் ஃபார்முலாவை கடைப்பிடிக்க தி.மு.க.வின் தலைமை தீர்மானித்துள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தலில் மறைந்த அ.ம.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேல் ஒரு ஃபார்முலாவை கடைப்பிடித்தார். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் டெபாசிட் இழக்க, டி.டி.வி.தினகரன் சுயேட்சை வேட்பாளராக ஜெயித்த தேர்தல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்.
அந்த தேர்தலில் வெற்றிவேல் கடைப்பிடித்த ஃபார்முலா சற்று வித்தியாசமானது. சட்டமன்றத் தொகுதி முழுவதையும் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் பாகங்களாகப் பிரித்துக்கொண் டார் வெற்றிவேல். ஒவ்வொரு பாகத்திற்கும் அ.தி. மு.க.வின் ஒரு மாவட்டச் செயலாளர் அல்லது முக் கிய நிர்வாகி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
ஒரு பாகத்தில் 500 ஓட்டு இருக்கிறதென்றால், அதில் 300 ஓட்டுகள் கவர் செய்யப்படும். அந்த பாகத்தில் நடக்கும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங் கள் போன்றவற்றிற்கு இந்த 300 பேரை கண்டிப்பாகத் திரட்டுவார் வெற்றிவேல். இதில் வேட்பாளர் ஓட்டுக் கேட்டு வரும்போது அந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக் கும் 500 ரூபாய் கொடுக்கப்படும்.
வேட்பாளர் குழந்தைக்கு பெயர் வைத்தால் அதற்கு 1000 ரூபாய் வழங்கப்படும். ஏற்கனவே பெயர் வைக்கப்பட்ட குழந் தைக்கு பெயர் சூட்டினால், அந்தக் குழந்தைக்கு 500 ரூபாய் வழங்கப்படும்.
இப்படி ஆர்.கே.நகரில் ஒரு வட்டத்திற்கு 22 பாகங்கள் இருந்தது. பத்து வட்டத்திற்கு 220 பாகங்கள் இருந்தன. இப்படி செலவு செய்து இறுதியாக ஒரு ஓட்டுக்கு 4000 ரூபாய் கொடுக்கப் பட்டது.
அதில் சில இடங்களில் அப்போதைய தேர்தல் கமிஷனின் அதிரடியால் பணம் கொடுக்க முடியாமல் போக... 20 ரூபாயை டோக்கனாக கொடுத்து இதைக் காட்டினால் 2000 ரூபாய் என வெற்றிவேல் அறிவித்தார். அதனால் ஓட்டுக்கள் குவிந்தது. டி.டி.வி.தினகரன் அமோக வெற்றி பெற்றார். அதே ஃபார்முலாவை டி.டி.வி.தினகர னிடம் பயிற்சிபெற்ற செந்தில்பாலாஜி ஈரோடு கிழக்கில் அமல்படுத்துகிறார்.
ஆர்.கே.நகர் போலவே, ஈரோடு கிழக்கு தொகுதி முழுக்க வாக்காளர் பட்டியல் அடிப் படையில் பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாகத்திலும் 80 சதவிகிதம் வாக்காளர்களை தி.மு.க.வினர் அங்கு லோக்கலில் நடக்கும் ஊர்வலங் களுக்கு அழைத்து வருகின்ற னர். வேட்பாளர் ஓட்டுக் கேட்டு வருகிறாரோ இல்லையோ ஊர்வலங் கள் தொகுதி முழுவதும் நடக்கிறது. வேட்பாளர் ஓட்டு கேட்டு வரும்பொழுது அவருக்கு ஆரத்தி எடுக்க சில்வர் தட்டு, அவருக்கு வரவேற்பு கொடுக்க குத்துவிளக்கு மற்றும் கைத்தறி துண்டுகள் மூட்டை மூட்டையாக கட்டி ஈரோடு முழுக்க விநியோகிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளருடன் ஊர்வலத்தில் வரும் வாக்காளர்களுக்கு அரைமணி நேர ஊர்வலத்திற்கு 500 ரூபாய் வழங்கப் பட்டிருக்கிறது.
வேட்பாளர் இல்லாமல் நடக்கும் ஊர்வலங்களுக்கும் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் வழங்கப் படுகிறது. இப்படி 20 நாட்கள் தொடர்ந்து நடக்கும் இடைத் தேர் தல் திருவிழா கொண் டாட்டத்தில் கலந்து கொள்ளும் 80 சதவிகித ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் ஒருவர் 10,000 ரூபாய் பெறுகிறார்.
இது தவிர, வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது. இப்படி ஆர்.கே.நகர் ஃபார்முலாவை அப்படியே கடைப்பிடித்து இடைத்தேர்தலை சந்திக்க செந்தில் பாலாஜி திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்.
செந்தில் பாலாஜியின் இந்த வேகமான செயல்பாட்டுக்கு ஒத்துழைக்க சில தி.மு.க. அமைச் சர்கள் மறுத்து வந்தனர். சிலர் ஈரோடு கிழக்கு தொகுதிக்கே போகாமல் சொந்தத் தொகுதியில் சுற்றி வந்தனர். அவர்களையெல்லாம் கூப்பிட்ட மு.க.ஸ்டாலின், எல்லோரும் ஈரோட்டுக்கு செல்லுங் கள் என உத்தரவிட்டார். அதில் சென்னையில் இருந்த சேகர்பாபுவும் சிக்கிக்கொண்டார்.
அவரை ஈரோடுக்கு அனுப்பி வைத்தார் மு.க.ஸ்டாலின். மதுரையில் உதயநிதி வெற்றி விழா நடத்திய அமைச்சர் மூர்த்தி, ஈரோட்டுக்கு பயணமாகியிருக்கிறார். நிதித்துறை வேலைகளைக் கவனிக்க பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மட்டும் சென்னையில் இருக்கிறார். மற்றபடி ஒட்டுமொத்த தி.மு.க.வும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு வேலைபார்த்து வருகிறது. செந்தில் பாலாஜிக்கு டஃப் கொடுக்க அ.தி.மு.க.வால் முடியவில்லை. அ.தி.மு.க.வில் கடுமையான கரன்ஸி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிரியான அ.தி.மு.க.வின் முன்னாள் மந்திரி எஸ்.பி.வேலுமணி பணம் செலவழிக்கத் தயாராக இல்லை. எஸ்.பி.வேலுமணியிடமும் தங்கமணியிட மும் பேசி அவர்களுடன் எடப்பாடியும் இணைந்து கடைசி கட்டத்தில் வாக்காளர்களுக்கு தி.மு.க. எவ்வளவு கொடுக்கிறதோ அவ்வளவு தொகையைக் கொடுக்க திட்டமிட் டுள்ளது அ.தி.மு.க. என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.v அ.தி.மு.க. பணம் கொடுக்க வில்லையென்றால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் தி.மு.க. வெற்றிபெறும். அ.தி.மு.க. வாக்காளர் கள் இரட்டை இலைக்கு வாக் களிக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது.
யார் பணம் கொடுப்பது? எப்படி பணத்தைத் திரட்டுவது? என்கிற விவாதம் அ.தி.மு.க.வில் பெரி தாக எழுந்துள்ளது. இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. ஓட்டுக்கு 5000 ரூபாய்க்கும் மேல் கொடுத்தால் அந்த செலவு 300 கோடியைத் தாண்டும் என தேர்தல் பார்வையாளர்கள் தெரி விக்கிறார்கள். இதுதவிர, தலைவர்களின் பிரச்சாரம், விளம்பரம் என 500 கோடிக்கு மேல் தி.மு.க. செலவழிக்கத் திட்டமிட்டுள்ளது என்கிறது தி.மு.க. வட்டாரம். 500 கோடி பத்தாது அதற்கும் மேல் செலவாகும் என்கிறார்கள் களத்தில் நிற்கும் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
தி.மு.க.வுக்கு இணையாக அ.தி.மு.க. செலவு செய்யுமானால் 1000 கோடிக்கு மேல் பணம் ஈரோடு கிழக்கில் புழங்கும் என சமூக ஆர்வலர்கள் கணக்கெடுக்கிறார்கள்.
இது தி.மு.க. கூட்டணிக்கு பெரிய பிளஸ் பாயிண்டாகவே இருக்கிறது. கமிஷன் வாங்காத எம்.எல்.ஏ. இருந்த ஊரில் கரன்ஸிகள் பாயும் இடைத்தேர்தல் நடப்பது அரசியலில் வேடிக்கை யாகவே இருக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.