"ஹலோ தலைவரே, யாரும் எதிர் பாராதபடி செக் வைத்து அ.தி.மு.க.வை அதிரவிட்டி ருக்கிறது உயர்நீதிமன்றம்.''”
"ஆமாம்பா... கர்ப்பம் தரிக்கலாம், ஆனால் பிரசவம் கூடாதுங்கிற கதையா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்தலாம். அதன் முடிவை மட்டும் அறிவிக்கக் கூடாதுன்னு நீதிமன்றம் விசித்திரமாகக் கிடுக்கிப் பிடியைப் போட்டிருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, அ.தி. மு.க. பொதுச்செயலாளரைத் தேர்ந் தெடுப்பதற்காக தேர்தலை வரும் 26 ஆம் தேதி நடத்தப் போவதாக அறிவித்திருந்தது அ.தி.மு.க. இதில் ஓ.பி.எஸ். உள்ளிட்டவர் களுக்கு போட்டியிட வாய்ப்பில்லை என்பதால், எடப்பாடியை அன்னப்போஸ்ட்டாக பொதுச் செயலாளர்னு அறிவிக்கும் திட்டத்தோடு அவர் தரப்பு காத்திருந்தது. அதனால் இந்தத் தேர் தலை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு உயர்நீதி மன்றத் துக்குப் போக, அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு 24-ந் தேதி வழங்கப்பட இருப்பதால், அதுவரை தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாதுன்னு உத்தரவிட்டு, எடப்பாடி தரப்பின் உற்சாகத்தில் தண்ணீரை ஊற்றி விட்டது. இந்த நிலையில், பிரதான வழக்கின் தீர்ப்பு எப்படி வருமோங்கிற பதட்டத்தில் இருக்கும் எடப்பாடி, ரகசிய மூவ்களை நடத்த ஆரம்பிச்சிட்டார். ஒட்டுமொத்தத்தில் குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறது அ.தி.மு.க.''”
"தங்கள் தரப்பு வழக்கறிஞர்கள் சரியாக வாதிடவில்லைங்கிற ஆதங்கம் ஓ.பி.எஸ். தரப்புக்கு இருக்கிறதாமே?''”
"உண்மைதாங்க தலைவரே, இந்தத் தேர்தல் அறிவிப்பே தப்புன்னு அழுத்தமான வாதங்களை வைத்து, அதற்கு தடையாணையை தங்கள் வழக்கறிஞர்கள் வாங்கியிருக்கணும்னு ஓ.பி.எஸ். தரப்பு ஆதங்கப்படுது. குறிப்பாக, தேர்தல் என்றால் போட்டியிட அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால் எடப்பாடி தரப்போ, தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலேயே வேட்பு மனுத் தாக்கலையும் தொடங்குவதாக அறிவித்தது. அதேபோல் மனுத் தாக்கலுக்கு ஒரே ஒரு நாள் மட்டுமே வாய்ப்பு தரப்பட்டிருந்தது. எந்த ஒரு தேர்தலாக இருந்தாலும் வேட்புமனு தொடங்கும் நாளில் இருந்து, வேட்புமனுவை உறுதிசெய்வது வரை, குறைந்தபட்சம், 7 நாட்கள் இடைவெளி இருக்கவேண்டும். இதையெல்லாம் தங்கள் வழக்கறிஞர்கள் சுட்டிக் காட்டலையேன்னு அவங்க சொல்றாங்க.''”
"அப்புறம்?''”
"அதேபோல் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுபவர்களை 10 மா.செ.க்கள் முன் மொழிய வேண்டும் என்றும், 10 மா.செ.க்கள் வழிமொழிய வேண்டும் என்றும் விதிகளைத் தங்களுக்குத் தோதாக எடப்பாடி தரப்பு திருத்தி இருக்கிறது. அப்படிப் பார்த்தால், அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை 70 மாவட்டங்களும், அந்த வகையில் 70 மா.செ.க்களும் இருக்கின்றனர். அந்த எண்ணிக்கையின்படி பார்த்தால், ஒருவர் போட்டி யிட 20 மா.செ.க்கள் தேவை. எனவே பொதுச்செய லாளர் பதவிக்கு 3 பேர் மட்டும்தான் இதன்படி போட்டியிட முடியும். இதுவே தவறு. ஒரு தேர்த லில் இத்தனை நபர்கள்தான் போட்டியிட முடியும் என்கிற வகையில் மற்றவர்களுக்கு வாய்ப்பை மறை முகமாக மறுப்பதுகூட, எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வின் சட்ட விதிகளுக்கே எதிரானது என்பது ஓ.பி.எஸ்.ஸின் கருத்து. இதையும் நீதி மன்றத்தில் தங்கள் வழக்கறிஞர்கள் வைக்கலையே என்று அவர் தரப்பு கவலைப்படுது. மேலும், தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே வாக்காளர்கள் பட்டியலையும் வெளியிட்டாக வேண்டும். இதையும் அவர்கள் அழுத்தமாக வலியுறுத்தி இருக்கலாம் என்பது அவர்களின் ஆதங்கம். இதனால் விரக்தியில் இருக்கிறாராம் ஓ.பி.எஸ்.''”
"சரிப்பா, இப்ப ஆதங்கப்பட்டு என்ன பண் றது? இவ்வளவு அவசரமா எடப்பாடி எதுக்காக பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்தார்?''
"எடப்பாடி தரப்பிலேயே உள்ளுக்குள் பூகம்பம் வெடித்துக்கொண்டு இருக்கிறது. மாஜி மந்திரிகளான தங்கமணியும் வேலுமணியுமே அண்மைக் காலமாக எடப்பாடியின் போக்கோடு ஒத்துப்போவதில்லையாம். குறிப்பாக, சசிகலாவையும் ஓ.பிஎஸ்.ஸையும் கூட கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த இருவரின் எண்ணமாம். ஆனால், இதற்கு நூலிழை அளவுக்குக் கூட இடம் கொடுத்துவிடக் கூடாது என்று எடப்பாடி அழுத்தமாக இருக்கிறார். இந்த நிலையில் தனக்குப் போட்டியாக இந்த இரண்டு மணிகளும் வந்துவிடுவார்களோ என்ற சந்தேகம் கூட எடப்பாடிக்கு இருந்ததாம். இதைத் தொடர்ந்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் கேரள கவர்னராக இருந்தவருமான சதாசிவத்திடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் எடப்பாடி. இப்படிப்பட்ட சூழலில் எந்த நிமிடமும் எடப்பாடிக்கு சிக்கல் வரலாம் என்று நினைத்த சதாசிவம்தான், "உங்கள் அரசியல் எதிரிகளுக்கு அவகாசம் கொடுக்காமல் விரைவாகத் தேர்தலை நடத்திவிடுங்கள்' என்றாராம். அந்த ஆலோ சனையின் படிதான், அவசர கதியில் தேர்தல் தேதியை அறிவித்தாராம் எடப்பாடி. பொதுச்செயலாளர் தேர்வுக்கு எடப்பாடி விண்ணப்பித்த நிகழ்ச்சியில் வேண்டா வெறுப்பாக வேலுமணி ஆஜராக, தங்கமணியோ, அந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்து, எடப்பாடிக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.''”
"சரிப்பா, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஒன்றிய அமைச்சர்ங்கிற கனவில் மிதக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் பிரதமர் மோடி, தனது அமைச்சரவையை மாற்றியமைக்கத் திட்ட மிட்டிருக்கிறாராம். அப்போது அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர் முடிவு செய்திருக்கிறாராம். இந்த நிலையில், கடந்த வாரம் டெல்லி சென்ற த.மா.கா. வாசன், மோடியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார். அப் போது, வாசன் தன்னை மோடியின் அமைச்சரவை யில் சேர்த்துக்கொள்ள வேண்டும்னு வேண்டுகோள் வச்சிருக்கார். இதைக் கேட்டதும் கொஞ்ச நேரம் அமைதிகாத்த மோடி, உங்க கோரிக்கையை மனதில் வைத்துக்கொள்கிறேன்னு சொல்லி இருக்கிறார். இந்த வார்த்தையைக் கேட்டதில் இருந்தே, தான் ஒன்றிய அமைச்சராகிவிட்டது போன்ற மகிழ்ச்சியில் வாசன் திளைக்கிறாராம். ஆனால் டெல்லி பா.ஜ.க. தரப்பினரோ, "முதலில் த.மா.கா.வை கலைத்துவிட்டு எங்கள் கட்சியில் சேருங்கள் என்று பலமுறை சொல்லிவிட்டோம். கட்சியில் சேராமல், அவருக்கு எப்படி பதவி கொடுப்பது? அவர் கட்சியோடு கூட்டணி வைக்கலாம் என்றால், அதற்கான ஒர்த் த.மா.கா.விற்கு இல்லையே'’ என்கிறார்கள் சலிப்போடு.''”
"டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் செயலைப் பாராட்டறாங்களே?''”
"டாஸ்மாக் ஊழியர்கள் தவறு செய்தால் தயவு தாட்சண்யமின்றி அவர்கள் மீது நடவடிக்கைக்கு எடுக்கும்படி கறாராக உத்தரவிட்டு மிரள வைத்தவர்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதேசமயம், ஊழியர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவர்களுக்காக அவர் கள மிறங்கத் தயங்கியதில்லை என்கிறார்கள் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர். உதாரணமாக, கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் பணிபுரிந்த ஒரு ஊழியரை மிரட்டி, ஒரு ரவுடி கும்பல், ஓசியில் மதுபாட்டில்களைத் தரவில்லை என்பதற்காக, அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டுச் சென்றது. இதையறிந்த அமைச்சர், தனது டீம் ஒன்றை அனுப்பி, உயிருக்குப் போராடிக் கொண்டி ருந்த அந்த ஊழிய ரைக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்தார். ஏறத்தாழ 10 லட்ச ரூபாய் செலவிட்டும் அந்த ஊழியரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவத்தால் மனம் வருந்திய அவர், அந்த டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிதியுதவி செய்யணும்னு முதல்வரிடம் அனுமதி கேட்டிருக்கிறாராம். இல்லையென்றால், தனிப்பட்ட முறையில் உதவவும் அவர் தயாராக இருக்கிறாராம். இதுதான் ஏனைய டாஸ்மாக் ஊழியர்களை நெகிழ வைத்திருக்கிறது.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். நாகையில் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணிபுரியும் செல்வக்குமாரை, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தின் பி.ஆர்.ஓ.வாக நியமித்திருக்கிறார், செய்தித்துறையின் இயக்குந ரான மோகன் ஐ.ஏ.எஸ். நாகை மாவட்ட கலெக் டரின் புகாரின் பேரில் தான் இந்த இடமாற்ற உத்தரவே பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. ஆனால், இந்த உத்தரவை ஏற்க மறுத்து நாகை மாவட்டத் திலேயே தொடர்ந்து பணியாற்றி வருகிறாராம் செல்வக்குமார். இந்த விவகாரம் தற்போது செய்தித்துறையில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.''’