"ஹலோ தலைவரே, கலைஞரின் 4-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க தி.மு.க.வினர் அவருக்கு மன நெகிழ்வோடு அஞ்சலி செலுத்தியிருக்காங்க.''”
"ஆமாம்பா, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணியும் நினைவிடத்தில் மலரஞ்சலியும் நடந்ததே?''
"ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞர் சிலையிலிருந்து புறப்பட்ட பேரணி, கலைஞரின் நினைவிடத்தில் முடிந்தது. பேரணியின் முன் வரிசையில் தயாநிதிமாறன், அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் புடைசூழ நடந்து சென்ற ஸ்டாலின், இரண்டாவது வரிசையில் வந்து கொண்டிருந்த கனிமொழியைப் பார்த்ததும், தயாநிதியிடம், கனியை முன்வரிசைக்கு வரசொல்லுன்னு சுட்டிக்காட்ட, மாமா உங்களை முன் வரிசைக்குக் கூப்பிடுகிறார்னு தயாநிதி, அவரை ஸ்டாலினுக்கு அருகே வரவழைத்தார். கனிமொழியை வாம்மான்னு அழைத்த முதல்வர் ஸ்டாலின் அவருடன் உற்சாகமாகப் பேசியபடியே நடந்தார்.''”
"உதயநிதி ஸ்டாலின் பின்னால் வந்துகொண்டிருந்தாரே?''”
"ஆமாங்க தலைவரே, ஸ்டாலின் கனிமொழி யைப் பக்கத்தில் அழைத்துக்கொண்டதைப் பார்த்த சிலர், உதயநிதியைத் தேட, அவர் அடுத்தடுத்த வரிசையில் இளைஞரணி டீமுடன் வந்தார். அவரோடு அமைச்சர் அன்பில் மகேஷ், ஐ.டி.விங் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா, மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் எல்லாரு
"ஹலோ தலைவரே, கலைஞரின் 4-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க தி.மு.க.வினர் அவருக்கு மன நெகிழ்வோடு அஞ்சலி செலுத்தியிருக்காங்க.''”
"ஆமாம்பா, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணியும் நினைவிடத்தில் மலரஞ்சலியும் நடந்ததே?''
"ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞர் சிலையிலிருந்து புறப்பட்ட பேரணி, கலைஞரின் நினைவிடத்தில் முடிந்தது. பேரணியின் முன் வரிசையில் தயாநிதிமாறன், அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் புடைசூழ நடந்து சென்ற ஸ்டாலின், இரண்டாவது வரிசையில் வந்து கொண்டிருந்த கனிமொழியைப் பார்த்ததும், தயாநிதியிடம், கனியை முன்வரிசைக்கு வரசொல்லுன்னு சுட்டிக்காட்ட, மாமா உங்களை முன் வரிசைக்குக் கூப்பிடுகிறார்னு தயாநிதி, அவரை ஸ்டாலினுக்கு அருகே வரவழைத்தார். கனிமொழியை வாம்மான்னு அழைத்த முதல்வர் ஸ்டாலின் அவருடன் உற்சாகமாகப் பேசியபடியே நடந்தார்.''”
"உதயநிதி ஸ்டாலின் பின்னால் வந்துகொண்டிருந்தாரே?''”
"ஆமாங்க தலைவரே, ஸ்டாலின் கனிமொழி யைப் பக்கத்தில் அழைத்துக்கொண்டதைப் பார்த்த சிலர், உதயநிதியைத் தேட, அவர் அடுத்தடுத்த வரிசையில் இளைஞரணி டீமுடன் வந்தார். அவரோடு அமைச்சர் அன்பில் மகேஷ், ஐ.டி.விங் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா, மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் எல்லாரும் கூட வந்தாங்க. கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின், அடுத்து சி.ஐ.டி. சாலையில் இருக்கும் ராஜாத்தியம்மா வீட்டிற்குச் சென்று, அங்கும் கலைஞர் படத்திற்கு அஞ்சலி செய்தார். அப்ப கனிமொழியின் முகத்தில் நெகிழ்ச்சியை அதிகம் பார்க்க முடிந்தது. மலரஞ்சலி முடிந்ததும், ராஜாத்தியம்மாளிடம் கனிவாய் உடல்நலம் விசாரித்துவிட்டுத்தான் ஸ்டாலின் அங்கிருந்து கிளம்பினார்.''’
"சசிகலாவிடமும் டி.டி.வி.தினகரனிடமும் தனித்தனியா ரகசியப் பேச்சுவார்த்தை நடத்துறாரே ஓ.பி.எஸ்.?''”
"உண்மைதாங்க தலைவரே, இந்த இருவரிடமும் ரகசியமாகப் பேசியபடியே இருக்கிறார் ஓ.பி.எஸ். எப்படியாவது அ.தி.மு.க.வின் தலைமையைக் கைப்பற்றியே ஆகணும்ங்கிறதுதான் அவரது ஒரே குறிக்கோள். அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடியால் ஓரங்கட்டப்பட்ட கட்சி நிர்வாகிகள் சிலர், ஓ.பி.எஸ்.ஸை சந்தித்து, எடப்பாடியிடம் இருந்து கட்சியைக் கைப் பற்றணும்னா, சின்னம்மாவும், நீங்களும் ஒருங்கிணைந்து முயற்சிக்கணும். அப்பதான் கட்சி நம்ம பக்கம் வரும். அதே சமயம் நீங்க ரெண்டுபேரும் இணைஞ்சிடக்கூடாதுன்னு எடப்பாடி, கண்ணும் கருத்துமா இருக்கார்னு சொல்லியிருக்காங்க. அதுக்கு ஓ.பி.எஸ்., இப்போதைக்கு சசிகலாவுடன் நான் வெளிப்படையாக ஒன்றிணைந்து செயல் பட்டால் அது நமக்குத்தான் எதிராகப் போகும். ஏன்னா, சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானத்தில் நானும் கையெழுத்து போட்டி ருக்கேன். அதனால், திரைமறைவுலதான் எதிர்த்தரப்புக்குக் குழிவெட்டணும்னு சொன்னாராம்.''”
"இந்த விவகாரத்தில் எடப்பாடியின் நிலை?''”
"ஓ.பி.எஸ். சொன்ன மாதிரியே, சசியும் ஓ.பி.எஸ்.ஸும் கைகோத்துடக்கூடாதுன்னு எடப்பாடி பலவிதமா காய் நகர்த்திக்கிட்டு இருக்கார். சசிகலாவுக்கும் ஓ.பி.எஸ்.ஸுக்கும் இப்போது இருக்கும் பலம் என்பது, முக்குலத்தோர்ங்கிற சமூக பலம்தான். அதனால் அதை உடைச்சாகணும்னு அதற்கான வியூகங்களை அவர் வகுத்துக்கிட்டிருக்கார். தன்னால் பதவி பறிக்கப் பட்ட முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த தென் மாவட்ட கட்சி நிர்வாகி களைச் சமாதானப்படுத்தி, அவர்களுக்கு மீண்டும் பதவிகளைக் கொடுப் பதுதான் அவரது முதற் கட்ட வியூகம். இதற்காக தென்மாவட்டங்களில் விரைவில் அவர் சுற்றுப்பயணம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார். அதேபோல் முக்குலத்தோர் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்த, அக்டோபர் மாதம் 30-ந் தேதி நடக்கும் தேவர் ஜெயந்தி நிகழ்வில் அவர் கலந்துகொள்ளப் போகிறார். அப்போது அந்த இருவருக்கும் கிடைக்கும் வரவேற்பை விட, தனக்கு பலமான வரவேற்பு கிடைக்கணும்னு, அதற்கான வேலைகளையும் அவர் இப்பவே முடுக்கி விட்டிருக்கிறார்.''”
"சிப்காட்டில் புகார் கிளம்புதே?''”
"ஆமாங்க தலைவரே, சிப்காட்டின் மேலாண் இயக்குநராக இருந்த குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்., தி.மு.க. ஆட்சி வந்ததும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டார். பிறகு கொஞ்சநாள் சிப்காட்டின் மேலாண்மை இயக்குநர் பதவியையும் கூடுதலாகக் கவனித்து வந்தார். பிறகு மேலாண் இயக்குநராக ஆனந்த் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுவிட்டார். சிப்காட்டில் இருந்து குமரகுருபரன் விடுவிக்கப்பட்டு 12 மாதங்கள் ஆகிவிட்டன. இருந்தும் சிப்காட்டில் இருந்தபோது தனக்காக அவரே நியமித்துக் கொண்ட இளவரசன், மணிகண்டன் என்ற 2 ஓட்டுநர்களுக்கும், சுரேஷ், தனலட்சுமி என்ற உதவியாளர்களுக்கும் இப்போதும் கூட சிப்காட்டில் இருந்து மாதந்தோறும் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2 டிரைவர்களில் ஒருவர் குமர குருபரன் வீட்டிலும், மற்றொருவர் குமரகுருபரனின் மாமனார் வீட்டிலும் பணிபுரியறாங்க. அதேபோல 2 உதவியாளர்களில் ஒருவர் குமரகுருபரனின் வீட்டில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். ஆனால், சம்பளம் மட்டும் சிப்காட்டிலிருந்து செல்கிறது. இதுதான் இப்ப சிப்காட்டில் புகையுது.''”
"கோட்டை அதிகாரிகள் சிலர் மீது அமைச்சர் துரைமுருகன் அதிருப்தியோடு இருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, ஏற்கனவே ஸ்டாலினிடம் துரைமுருகன், இங்கே நடப்பது அதிகாரிகள் ஆட்சின்னு எல்லோரும் பேசிக்கிறாங்கன்னு புகார் சொன்னது பற்றி ஏற்கனவே நாம் பேசிக்கிட்டோம். அதேபோல் கடந்தவாரம் கோட்டையில் அதிகாரி களோடு முதல்வர் நடத்திய ஒரு ஆலோசனைக் கூட்டத்திலும், அதிகாரிகள் பற்றிய குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் அமைச்சர். குறிப்பாக, கோட்டையின் முக்கியமான அதிகாரியையே அவரது குற்றச்சாட்டுக்கள் மையம் கொண்டிருந்ததாம். இதை முதல்வர் ஸ்டாலின் புரிஞ்சிக்கிட்டாலும், எந்த ரியாக்ஷனையும் காட்டலையாம்.''”
"நானும் இது தொடர்பாக ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். அதிகாரி மீது அமைச்சருக்கு அப்படி என்ன கோபம்னு கோட்டைத் தரப்பிடம் ஏற்கனவே நான் விசாரிச்சிட்டேன். தமிழக அரசு சார்பில் பொங்கலையொட்டி ஆண்டுதோறும் தலைவர்கள் பெயரில் அரசு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். கடந்தமுறை விருதுகளுக்கான பட்டியலைப் போடும்போது, அண்ணா விருதுக்கு அமைச்சர் துரைமுருகனைத் தேர்வு செய்திருந்தது அரசின் தமிழ் வளர்ச்சித்துறை. இந்தப் பட்டியல், குறிப்பிட்ட அந்த அதிகாரியிடம் சென்றபோது, அவர் அமைச்சரின் பெயரை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக நாஞ்சில் சம்பத்தின் பெயரை இணைத்து விட்டாராம். இது அமைச்சரின் காதுக்குப் போனதால்தான் அவர், அந்த அதிகாரி மீது கடும் எரிச்சலில் இருக்கிறாராம்.''”