எந்திரன் கதை திருட்டு! அமலாக்கத்துறையிடம் சிக்கிய இயக்குநர் ஷங்கர்!

ss

வருமே எதிர்பார்த்திராத வகையில், இயக்குநர் ஷங்கருக்கு ஹைவோல்ட் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது அமலாக்கத்துறை.

கடந்த 20ஆம் தேதி தனது எக்ந பக்கத்தில் அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற விவகாரத்தில் இயக்குநர் ஷங்கருக் குச் சொந்தமான 10.11 கோடி ரூபாய் மதிப்பிலான, மூன்று அசையாச் சொத்துக்களை தங்களது மண்டல அலுவலகம் கடந்த 17ஆம் தேதி முடக்கியிருப்பதாகக் குறிப்பிட்டி ருந்தது.. இதற்கான காரணமாக, இயக்குநர் ஷங்கருக்கு எதிராக ஆரூர் தமிழ்நாடன், சென்னை எழும்பூர் 13ஆவது மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 2011 மே 19ஆம் தேதி தொடுத்த எந்திரன் கதை தொடர்பான வழக்கு பற்றி (வழக்கின் சி.சி.எண் 2067/2011) விசாரணை நடத்தி, அவரது "ஜூகிபா' கதைதான் "எந்திரன்' திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ’திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஆய்வு நிறுவனத்தின் (எஃப்.டி.ஐ.ஐ.) ரிப்போர்ட் மூலம் உறுதி செய்துகொண்டு, இந்த விவகாரம் காப்புரிமைச் சட்டம் 57, பிரிவு 63-ன் படி குற்றமாகக் கருதப்படுவதால் இப்படியொரு நடவடிக்கையில் இறங்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

ee

இந்த நடவடிக்கை, திரையுலக கதைத் திருடர்களை மிரள வைத்திருப்பதோடு, கடந்த 15 வருடங்களாக நீதிக்காகப் போராடிவரும் கவிஞர், எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தரப்பிற்கு பெரும் ஆறுதல் ஒத்தடமாகவும் அமைந்திருக்கிறது.

இத்தனை ஆண்டுகளில் இந்த கதைத் திருட்டு வழக்கில்... கடந்த 15 வருடத்தில் ஒருமுறை கூட நீதிமன்றத்தில் ஆஜராகாத இயக்குநர் ஷங்கர், அமலாக்கத்துறையின் அறிவிப்பால் பதறிப்போய், "எந்திரன் தொடர்பாக ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அப்படி இருக்க, அமலாக் கத்துறை இப்படி சொத்தை முடக்கியது அதிகார துஷ்பிரயோகமாகும். எனவே அமலாக்கத்துறை அதிகாரிகள், தங்கள் நடவடிக்கையை மறு பரி சீலனை செய்வார்கள் என்று நம்புகிறேன். இல்லை யென்றால், இந்த நடவடிக்கையை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன்'’என்ற ரீதியில் தெரிவித்திருக் கிறார். தன் மீது கதைத் திருட்டு வழக்கு எதுவும் தற்போது நிலுவையில் இல்லாதது போலவும், அமலாக்கத்துறை சட்ட விரோதமாக தன் மீது நடவடிக்கை எடுத்தது போலவும் இயக்குநர் ஷங்கர் இப்படி எகிறிக் குதித்திருக்கிறார். அவர் இப்படிச் சொல்வது அப்பட்டமான பொய்யாகும்.

காரணம்-

எந்திரன் தொடர்பான சிவில் வழக்கு உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்சில் மேல்முறையீடு செய்யப்பட்டதன் மூலம், உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் தலைமையிலான அமர்வின் விசாரணையில் இருந்து வருகிறது. அதன் எண் ஞநஆ-ஈஆஉ 149/2024 ஆகும். அதேபோல் அமலாக்கத்துறை குறிப்பிடும் கதை தொடர்பான கிரி மினல் வழக்கும், குற்றவியல் நீதிமன்றத் தில் இருந்து வருகிறது. எனவே, இயக்குநர் ஷங்கர் முழுப்பூசணிக் காயை சோற்றில் மறைப்பது போல், தன் அறிக்கை மூலம் மறைக்க முயன்றிருக் கிறார். மேலும், ஏற் கனவே இருக்கும் கதைத் திருட்டு வழக்குகளோடு, இது தொடர்பான அமலாக்கத்துறையின் வழக்கையும் இப்போது சந்திக்கிறார் ஷங்கர்.

இந்த நேரத்தில், எந்திரன் வழக்கு கடந்துவந்த பாதையை நாம் சுருக்கமாகப் பார்ப்போம்.

கவிஞரும் எழுத்தா

வருமே எதிர்பார்த்திராத வகையில், இயக்குநர் ஷங்கருக்கு ஹைவோல்ட் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது அமலாக்கத்துறை.

கடந்த 20ஆம் தேதி தனது எக்ந பக்கத்தில் அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற விவகாரத்தில் இயக்குநர் ஷங்கருக் குச் சொந்தமான 10.11 கோடி ரூபாய் மதிப்பிலான, மூன்று அசையாச் சொத்துக்களை தங்களது மண்டல அலுவலகம் கடந்த 17ஆம் தேதி முடக்கியிருப்பதாகக் குறிப்பிட்டி ருந்தது.. இதற்கான காரணமாக, இயக்குநர் ஷங்கருக்கு எதிராக ஆரூர் தமிழ்நாடன், சென்னை எழும்பூர் 13ஆவது மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 2011 மே 19ஆம் தேதி தொடுத்த எந்திரன் கதை தொடர்பான வழக்கு பற்றி (வழக்கின் சி.சி.எண் 2067/2011) விசாரணை நடத்தி, அவரது "ஜூகிபா' கதைதான் "எந்திரன்' திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ’திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஆய்வு நிறுவனத்தின் (எஃப்.டி.ஐ.ஐ.) ரிப்போர்ட் மூலம் உறுதி செய்துகொண்டு, இந்த விவகாரம் காப்புரிமைச் சட்டம் 57, பிரிவு 63-ன் படி குற்றமாகக் கருதப்படுவதால் இப்படியொரு நடவடிக்கையில் இறங்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

ee

இந்த நடவடிக்கை, திரையுலக கதைத் திருடர்களை மிரள வைத்திருப்பதோடு, கடந்த 15 வருடங்களாக நீதிக்காகப் போராடிவரும் கவிஞர், எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தரப்பிற்கு பெரும் ஆறுதல் ஒத்தடமாகவும் அமைந்திருக்கிறது.

இத்தனை ஆண்டுகளில் இந்த கதைத் திருட்டு வழக்கில்... கடந்த 15 வருடத்தில் ஒருமுறை கூட நீதிமன்றத்தில் ஆஜராகாத இயக்குநர் ஷங்கர், அமலாக்கத்துறையின் அறிவிப்பால் பதறிப்போய், "எந்திரன் தொடர்பாக ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அப்படி இருக்க, அமலாக் கத்துறை இப்படி சொத்தை முடக்கியது அதிகார துஷ்பிரயோகமாகும். எனவே அமலாக்கத்துறை அதிகாரிகள், தங்கள் நடவடிக்கையை மறு பரி சீலனை செய்வார்கள் என்று நம்புகிறேன். இல்லை யென்றால், இந்த நடவடிக்கையை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன்'’என்ற ரீதியில் தெரிவித்திருக் கிறார். தன் மீது கதைத் திருட்டு வழக்கு எதுவும் தற்போது நிலுவையில் இல்லாதது போலவும், அமலாக்கத்துறை சட்ட விரோதமாக தன் மீது நடவடிக்கை எடுத்தது போலவும் இயக்குநர் ஷங்கர் இப்படி எகிறிக் குதித்திருக்கிறார். அவர் இப்படிச் சொல்வது அப்பட்டமான பொய்யாகும்.

காரணம்-

எந்திரன் தொடர்பான சிவில் வழக்கு உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்சில் மேல்முறையீடு செய்யப்பட்டதன் மூலம், உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் தலைமையிலான அமர்வின் விசாரணையில் இருந்து வருகிறது. அதன் எண் ஞநஆ-ஈஆஉ 149/2024 ஆகும். அதேபோல் அமலாக்கத்துறை குறிப்பிடும் கதை தொடர்பான கிரி மினல் வழக்கும், குற்றவியல் நீதிமன்றத் தில் இருந்து வருகிறது. எனவே, இயக்குநர் ஷங்கர் முழுப்பூசணிக் காயை சோற்றில் மறைப்பது போல், தன் அறிக்கை மூலம் மறைக்க முயன்றிருக் கிறார். மேலும், ஏற் கனவே இருக்கும் கதைத் திருட்டு வழக்குகளோடு, இது தொடர்பான அமலாக்கத்துறையின் வழக்கையும் இப்போது சந்திக்கிறார் ஷங்கர்.

இந்த நேரத்தில், எந்திரன் வழக்கு கடந்துவந்த பாதையை நாம் சுருக்கமாகப் பார்ப்போம்.

கவிஞரும் எழுத்தாளரு மான ஆரூர் தமிழ்நாடன், இனிய உதயம் இதழில், 24 ஆண்டு களுக்கு முன், அதாவது 1996 ஏப்ரல் மாதம், ரோபோட் பற்றிய ஒரு விஞ்ஞானச் சிறுகதையை ’"ஜூகிபா' ‘ என்ற தலைப்பில் எழுதியிருந்தார். ரோபாட்டுக்கு மனித உணர்வுகளை உண்டாக்கி னால், அது மனிதர்களிடையே என்ன மாதிரியான உணர்வுச் சிக்கல்களையும் உறவுச் சிக்கல்களையும் ஏற்படுத்தும் என்பதே அந்தச் சிறுகதையின் கரு.

rr

அதே கதை 2007-ல் "திக் திக் தீபிகா'’ என்ற தொகுப்பு நூலிலும் பிரசுரமானது. இந்தச் சூழலில், இயக்குநர் ஷங்கர் இயக்கிய ’எந்திரன்’ திரைப்படம் 2010 அக்டோபர் ஒன்றாம் தேதி ரிலீஸானது. அந்தப் படத்தைப் பார்த்த பலர், தமிழ்நாடனுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு எந்திரன் கதை உங்கள் ஜூகிபா கதைபோல் இருக்கிறதே என்று கூறியுள்ளார்கள். பின் படம் பார்த்த தமிழ்நாடன் நண்பர்கள், எந்திரன் கதையும் தனது ஜூகிபா கதையும் ஒன்றாக இருப்பதாகக் கூறியதைக் கேட்டு அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

அதற்குக் காரணம்...

அந்தச் சிறுகதையின் சில பகுதிகளைப் படித் தாலே, அந்தக் கதையை வைத்து எடுக்கப்பட்ட படம் எது என்பதை வாசகர்கள் எளிதாகக் கண்டு பிடித்துவிடலாம். அந்தக் கதையில் வருவது போலவே, ரோபோவின் உருவாக்கத்தில் தொடங்கி, ரோபோ காதல் கொள்வதில் வளர்ந்து, ரோபோ வின் அதிரடியான முடிவோடு நிறைவடைகிறது இயக்குநர் ஷங்கரின் எந்திரன்.

இந்தக் கதைக்கு இடையில், ஜூகிபாவுக்கு சிரிக்கவும் மிரட்டவும் அழவும் நெகிழவும் தெரியும் என்று கதாசிரியர் தமிழ்நாடன் வர்ணித்தது போலவே, திரைப்படத்தில் அந்த குணக் கலவை களைக் கொண்ட வில்லத்தன ரோபோக்களையும் எந்திரன் படத்தில் உருவாக்கி இருந்தார் ஷங்கர். ஆக, தமிழ்நாடனின் கதையில் சினிமா சமாச்சாரங் களான கிராபிக்ஸ், சண்டை, பாடல் காட்சிகளைச் சேர்த்து எந்திரன் திரைப்படம் எடுக்கப்பட்டி ருக்கிறது என்பது தெளிவாகவே தெரியவருகிறது

இதைத் தொடர்ந்து எந்திரன் திரைப்படத் தின் இயக்குநர் ஷங்கருக்கும், தயாரிப்பாளருக்கும் முதலில் இது தொடர்பான வக்கீல் நோட்டீசை அனுப்பினார் தமிழ்நாடன் அவர்களிடமிருந்து எந்தவித பதிலும் வராததால், தனது ரோபோட் பற்றிய ஜூகிபா கதையைத் திருடி, மோசடி செய்த இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று, அவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். எனினும் துரித நடவடிக்கை எடுக்கப்படாததால், சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆரூர் தமிழ்நாடன் தனிப்பட்ட முறையில் உரிமையியல் வழக் கைத் (எண் 914 / 2010) தொடர்ந்தார். அதேபோல் சென்னை எழும்பூர் மாஜிஸ் திரேட் கோர்ட்டிலும் ஒரு கிரிமினல் வழக்கைத் தொடர்ந்தார்.

இயக்குநர் சங்கர் உள் ளிட்டவர்கள் நீதி மன்றத்தில் ஒருமுறைகூட ஆஜராகாமல், தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் வழக்கை இழுத் தடித்த படியே இருந்தனர். இதனால் 2016 செப்டம்பரில், தயாரிப்பாளர் தரப்புக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதத்தை விதித்தது உயர் நீதிமன்றம். அதேபோல், இயக்குநர் சங்கருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் இதே காரணத்துக்காக 2018 செப் டம்பரில் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

ee

இந்த நிலையிலேயே, தங்கள் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் கிரிமினல் வழக்கு சட்டப்படி செல்லாது என்றும் அதற்குத் தடை விதிக்கவேண்டும் என்றும் இயக்குநர் ஷங்கரும், தயாரிப்பாளரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு இடைக்காலத் தடையை வாங்கினர். இந்தத் தடைக்காலம் தாண்டிய நிலையில், இந்த வழக்கின் விசாரணை நடந்தது.

அப்போது தயாரிப்பாளர் தரப்பு, எந்திரன் திரைப்பட சி.டியை நீதியரசரிடம் கொடுத்தது. நீதியரசரோ ஆரூர் தமிழ்நாடன் எழுதிய கதையைப் படித்துவிட்டு, எந்திரன் படத்தையும் முழுதாகப் பார்த்தார். இதைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பின் வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதியரசர் புகழேந்தி, கடந்த 6.6.2019 அன்று தனது அதிரடித் தீர்ப்பை வழங்கினார்.

அந்தத் தீர்ப்பில் அவர், ’தயாரிப்பாளர் மீது தொடுக்கப்பட்ட இந்த கிரிமினல் வழக்கு செல் லாது’ என்று அறிவித்ததோடு, வழக்கின் மையப் பகுதியை நாடிபிடித்துப் பார்த்து... ’படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆரூர் தமிழ்நாடனின் ஜூகிபா கதையை ஒத்து இருக்கின்றன’ என்று குறிப்பிட்டதோடு, இதுகுறித்து தமிழ்நாடன் தரப்பு தாக்கல் செய்திருந்த 29 ஒப்பீட்டு அம்சங்களில் இருந்து, கீழ்க்கண்ட 16 பாயிண்டுகள் வெகுவாக ஒத்துப்போவதாக பட்டியலிட்டுக் காட்டினார். அவை...

1. நான்கு வருட கால நீண்ட உழைப்பில் விஞ்ஞானி ரோபோவை உருவாக்கியதாக ஜூகிபா கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. எந்திரன் படத்திலும் 10 வருட உழைப்பில் ரோபோ சிட்டியை விஞ்ஞானி வசீகரன் உருவாக்கியதாகக் காட்டப்பட்டிருக்கிறது. உழைப்பின் நீளம் இங்கு பொது அம்சம்.

2. ரோபோவை உருவாக்க, விஞ்ஞானி, தன் காதல் பொழுதுகளையும் ஒத்திவைத்துவிட்டு உழைத்தான் என்கிறது ஜூகிபா கதை. எந்திரன் படத்திலும், காதலியின் தொலைபேசி அழைப்பையும் மறுதலித்துவிட்டு, தன் காதலுக்கு விஞ்ஞானி இடைவெளி கொடுத்தான் என்று காட்டப்பட்டிருக்கிறது

ff

3. மனித வரலாற்றின் உச்சபட்ச சாதனையாக ரோபோட்டை விஞ்ஞானி உருவாக்கினான் என்கிறது ஜூகிபா. அதேபோல் மனிதனின் உச்சபட்ச சாதனையாக சிட்டி ரோபோ உருவாக்கப் பட்டதாகக் காட்டுகிறது எந்திரன்.

4. ரோபோவை முழுமையாக உருவாக்கும் வரை கன்னத்தில் ஷேவ் கூட செய்துகொள்ளாமல், அதிலேயே கவனமாக விஞ்ஞானி ராபின் இருந் தான் என்று உணர்த்துகிறது ஜூகிபா கதை. அதே போல், விஞ்ஞானி, சிட்டி ரோபோவை உருவாக் கும் வரை ஷேவ் கூட செய்துகொள்ளாமல் இருந் தான் என்று காட்டப்பட்டிருக்கிறது எந்திரனில்.

5. ரோபோ தன் நியான் விழிகளை உருட்டி, கண்களால் பார்க்கும் எல்லாவற்றையும் தனக்குள் முழுதாய் சேகரித்துக்கொள்ளும் என்று ஜூகிபா கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. எந்திரன் படத்திலும் ரோபோவான சிட்டி இதேபோல் விழிகளை உருட்டி, பார்ப்பதை எல்லாம் முழுதாகத் தனக்குள் பதிவு செய்துகொள்கிறது என்று காட்டப்பட்டிருக்கிறது, உதா ரணமாக, டெலிபோன் டைரி உள்ளிட்டவைகளை தனக்குள் அது கிரகித்துக்கொள்வதைக் காட்டுகிறது.

6. கேட்கும் கேள்விகளுக்கு மெட்டாலிக் வாய்சில் ரோபோ பதில் சொல்கிறது என்று ஜூகிபா கதையில் வருகிறது. எந்திரன் படத்திலும் ரோபோ மெட்டாலிக் வாய்சில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வ தாகக் காட்டப்பட்டிருக்கிறது.

7. ஜூகிபா கதையில் ரோபோவின் உடல் ஸ்பெஷல் பைபர் மூலம் மனிதனைப் போல் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. எந்திரன் படத்திலும் ரோபோ வின் உடல் ஸ்பெஷல் பொருளால் மனிதனைப் போல் உருவாக்கப்பட்டதாகக் காட்டப் பட்டிருக்கிறது.

8. ஜூகிபா கதையில், விஞ்ஞானி தான் உருவாக்கிய ரோபோட்டை, உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள், விஞ்ஞான கேந்திரங்கள், பல்கலைக் கழகங்கள் போன்றவற்றின் முன் நிறுத்தி அதன் ஆற்றலை மெய்ப்பிக்க நினைக்கிறான். எந்திரன் படத்திலும், கான்ஃபரன்ஸில் ரோபோட்டை நிறுத்தி அதன் திறமையை விஞ்ஞானி நிரூபிப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது.

9. விஞ்ஞானி, தனது ரோபோட்டுக்கு ஆதாம் காலத்தில் இருந்து இன்றைய நொடி வரையிலான உலகின் அத்தனை விசயங்களையும் புகட்டியிருப்ப தாகச் சொல்கிறது ஜூகிபா. எந்திரன் பட ரோபோவும் கணிதம், நடனம், இசை, தொடங்கி மருத்துவம் வரை அனைத்து வித்தைகளையும் கற்று வைத்திருப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது.

10. ஜூகிபா கதையில் வரும் ரோபோ, தனது உலோகக் கைகளை கண்ட திசையிலும் கண்டபடி சுழற்றும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எந்திரன் படத்திலும் ரோபோ தனது உலோகக் கைகளை கண்டதிசையிலும் கண்டபடி சுழற்றுவதாகக் காட்டப்பட்டிருக்கிறது.

c

11. ஜூகிபாவில் வரும் ரோபோ, சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுத்து இயங்கும் திறன் கொண்டதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. எந்திரன் படத்திலும் சூழ்நிலைக்குத் தக்கபடி முடிவெடுத்து இயக்கும் திறன்கொண்டதாக ரோபோவான சிட்டி காட்டப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு தீ விபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவது, கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்ப்பது என்று.

12. ஜூகிபாவில் வரும் ரோபோ, தன் காதலுக்குரியவளை அடையமுடியாத வருத்தத்தில் தற்கொலை முடிவை எடுத்துத் தற்கொலை செய்து கொள்கிறது. எந்திரன் படத்தில் வரும் ரோபோவும் காதல் விரக்தியில் தற்கொலை முடிவை எடுக்கிறது என்றும். அதற்கான முயற்சியில் இறங்குகிறது என்றும் காட்டப்பட்டிருக்கிறது.

13. ஜூகிபாவில் வரும் ரோபோ, கை குலுக்குவதில் காதலின் மெல்லுணர்வை அடைவ தாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எந்திரன் படத்தில் வரும் ரோபோ, முத்தத்தின் மூலம் காதலின் மெல்லுணர்வை அடைவதாகக் காட்டப்பட்டி ருக்கிறது.

14. ஜூகிபாவில் வரும் ரோபோ, தைரியமாக விஞ்ஞானியின் காதலியைக் காதலிப்பதாக அவனிடமே கூறுகிறது என்று அந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. எந்திரன் படத்திலும், ரோபோ சிட்டி, தன்னைப் படைத்த விஞ்ஞானி யின் காதலியைத் தான் காதலிப்பதாக தைரியமாகச் சொல்கிறது என்று காட்டப்பட்டிருக்கிறது.

15. ஜூகிபாவில் வரும் ரோபோவும் காதலி இல்லை என்றால் தன்னால் வாழ முடியாது என்று சொல்கிறது. எந்திரனில் வரும் ரோபோவும் காதலி இல்லாமல் தனக்கு வாழ்க்கை இல்லை என்று சொல்வதாகக் காட்டப்பட்டிருக்கிறது.

16. ஜூகிபாவில் வரும் ரோபோ, கதையின் கடைசியில் மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டு, தன் முடிவைத் தேடிக்கொள்கிறது. எந்திரனிலும் ரோபோ, கடைசியில் நீதிமன்றத்தால், டிஸ்மேண்டில் மூலம் முடிவை எய்துகிறது. (தன்னைத் தானே முடித்துக் கொள்வதும் ஒருவகைத் தற்கொலைதானே?)

-இப்படி 16 ஒப்பீடுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை அலசி ஆராய்ந்திருக்கும் நீதியரசர் புகழேந்தி, இயக்குநர் ஷங்கர் மீதான கதைத் திருட்டு வழக்கை நடத்த முகாந்திரம் இருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருந்தார்.

மேலும் தனது தீர்ப்பில் அவர், ""ஒரு படைப்பாளியின் உண்மையான திறமைக்கும், உழைப்புக்குமான ஊதியம், அவருக்குக் கிடைத்தாகவேண்டும் என்பதற்காகத்தான் காப்பிரைட் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதை நீதிமன்றம் கருத்தில் கொண்டிருக்கிறது''’என்றும் அக்கறையோடு குறிப்பிட்டிருக் கிறார். இருந்தும் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ரத்து செய்யவேண்டும் என்று, உச்சநீதி மன்றத்தின் கதவைத் தட்டினார் இயக்குநர் ஷங்கர்.

அது, நீதியரசர்களான ரொஹிண்டன் பாலி நாரிமன், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற அமர்வோ, எடுத்த எடுப் பிலேயே வழக்கின் போக்கைப் புரிந்துகொண்டு, “உயர் நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாகக் கொடுத்த தீர்ப்பிலும் விசாரணையிலும் உச்சநீதிமன்றம் தலையிட விரும்பவில்லை.’’ என்று தெரிவித்து, இயக்குநர் ஷங்கரின் மனுவை 2020, அக்டோபரில் தள்ளுபடி செய்துவிட்டது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், இயக்குநர் ஷங்கர் தரப்பு, வழக்கை இழுத்தடிப்பதிலேயே தீவிரம் காட்டியது. அதேபோல், உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கையும் தள்ளுபடி செய்யும்படி கேட்டு, தனது எண்ணத்தை சாதித்துக்கொண்டது. இதன்பின்னர் இந்த குற்றவியல் வழக்கிற்கு இயக்குநர் தரப்பு தடையாணை வாங்கியது.

எனினும், ஆரூர் தமிழ்நாடன் தரப்பு, பெரும் போராட்டத்தை நடத்தி, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய, அந்த வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீதரன் தலைமையிலான அமர்வின் விசாரணையில் இருக்கிறது.

இந்த சட்டப் போராட்டத்தை முதலில் தொடங்கி வைத்தவர் மூத்த வழக்கறிஞர் பி.டி.பெருமாள், அவரின் ஜூனியர் வழக்கறிஞர் சிவகுமார். அதன்பின் மூத்த வழக்கறிஞர் இளங்கோவும், வழக் கறிஞர் சதீஷ்குமாரும். கடைசியாக இந்த வழக் கில் ஆஜராகிவரும் வழக் கறிஞர் வயிரவ. சுப்பிர மணியத்திடம் இந்த அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்துக் கேட்டபோது...

""சட்டவிரோதமாக ஒரு பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக, அம லாக்கத்துறை அதிகாரி ஒருவர் நம்பினாலே போதும், அவர் அந்த விவகாரத்தை விசாரிக்க உரிமையுள்ளது. அதேபோல் ஒருவருக்கு செல்லவேண்டிய பணத்தை, வேறொருவர் பயன்படுத்தினார் என்றால், அது சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைக் குற்றத்திற்குள் அடங்கும். அந்த வகையில்தான் இந்த எந்திரன் கதை விவகாரத்தைத் தெரிந்துகொண்ட அமலாக்கத்துறை, அதுகுறித்து புகார்தாரரான ஆரூர் தமிழ்நாடனுக்கு 2021 ஏப்ரலில் சம்மன் அனுப்பி விசாரித்தது. அவரிடம் இருந்த ஆதாரங்களை வாங்கியிருக்கிறார்கள்.

அதேபோல் இயக்குநரையும் சம்மன் அனுப்பி அழைத்து விசாரித்திருக்கிறார்கள். அவர் கொடுத்த ஆவணங்களையும் அலசி ஆராய்ந்து, கதை விவகாரத்தில் இயக்குநர் மீது தவறு இருப்பதை உறுதி செய்துகொண்டுதான், இப்படியொரு நடவடிக்கையை எடுத்திருக் கிறார்கள்'' என்றார்.

தற்போது சென்னை கோலிவுட் தொடங்கி, பாலிவுட் வரை ஒட்டுமொத்த இந்தியத் திரைப்பட உலகையும் திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது அமலாக்கத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை. அமலாக்கத்துறையின் கிடுக்கிப்பிடியில் வசமாகச் சிக்கியிருக்கிறார், நீதிமன்றத்திற்கு போக்குகாட்டி வந்த ஷங்கர்.

-கீரன்

nkn260225
இதையும் படியுங்கள்
Subscribe