ராங்கால் -அமைச்சரைக் காப்பாற்றிய அமலாக்கத்துறை! நூற்றாண்டு சென்டிமெண்ட்! கவலையில் உடன்பிறப்புகள்! புதிய தலைமைச் செயலாளர்! புதிய டி.ஜி.பி.! யார்? யார்?

ff

"ஹலோ தலைவரே, கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கலைஞர் கோட்டம் அவரது திருவாரூரில் கோலாகலமாகத் திறந்துவைக்கப்பட்டிருக்கிறதே.''”

"ஆமாம்பா, வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும் இந்த நிகழ்ச்சி பற்றி, நம்ம நக்கீரனில் தனி ஸ்டோரியே வருது. அதே சமயம் சென்டிமெண்ட்டாக சிலவற்றை தி.மு.க.வில் இருக்கும் சிலர் ஃபீல் பண்றாங்களே?''’

ff

"ஆமாங்க தலைவரே, அதாவது, ஜூன் 3ஆம் தேதிதான் கலைஞரின் நூற்றாண்டுத் தொடக்க நாள். இதை முன்னிட்டு வடசென்னையில், பிரமாண்ட மாக நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் நடந்தன. அந்த நேரத்தில், ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் 250-க்கும் அதிக மானோர் பலியான சம்பவம் தேசிய அளவில் உலுக்கியதால், அந்தப் பொதுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல, சென்னை கிண்டியில் பிரமாண் டமாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையைத் திறந்து வைக்க வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புக் கொண்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் வராமல் போய்விட் டார். அதனால் அந்த மருத்துவமனையை முதல்வரே திறந்துவைக்கும் படி ஆனது. அதேபோல, திருவாரூரில் கட்டப்பட்டிருக்கும் கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க வருவதாக ஒப்புக்கொண்ட பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், கடைசி நேரத்தில் உடல்நலக் குறைவால் வரவில்லை. இப்படி அடுத்தடுத்து மூன்று சம்பவங்களிலும் சில இடையூறுகள் ஏற்பட்டதால், சென்டிமெண்ட்டில் நம்பிக்கையுள்ள தி.மு.க.வினர் சிலர், கவலையில் இருக்காங்களாம். ஆனாலும் முதல்வர் ஸ்டாலின், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்தடுத்த நிகழ்வுகளை நடத்திக்கிட்டே இருக்கார்.''”

"சரிப்பா, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறையினரால் ஒருவகையில் நல்லது நடந்திருக்கிறது என்கிறார்களே?''”

senthilbalaji

"உண்மைதாங்க தலைவரே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் ஆபத்தான அடைப்பு இருந்திருக்கிறது. அதை அவர் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் அவர் உயிருக்கே ஆபத்து வந்திருக்குமாம். அமலாக்கத் துறை ரெய்டு நேரத்தில் அந்த ஆபத்து வெளிப் பட்டதால்தான், அவர் இப்போது அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டிருக்கிறார். அமைச்சருக்கு இதயத்தில் மூன்று அடைப்பு இருப்பதாக அரசு மருத்துவமனை சொன்ன நிலையில்,

"ஹலோ தலைவரே, கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கலைஞர் கோட்டம் அவரது திருவாரூரில் கோலாகலமாகத் திறந்துவைக்கப்பட்டிருக்கிறதே.''”

"ஆமாம்பா, வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும் இந்த நிகழ்ச்சி பற்றி, நம்ம நக்கீரனில் தனி ஸ்டோரியே வருது. அதே சமயம் சென்டிமெண்ட்டாக சிலவற்றை தி.மு.க.வில் இருக்கும் சிலர் ஃபீல் பண்றாங்களே?''’

ff

"ஆமாங்க தலைவரே, அதாவது, ஜூன் 3ஆம் தேதிதான் கலைஞரின் நூற்றாண்டுத் தொடக்க நாள். இதை முன்னிட்டு வடசென்னையில், பிரமாண்ட மாக நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் நடந்தன. அந்த நேரத்தில், ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் 250-க்கும் அதிக மானோர் பலியான சம்பவம் தேசிய அளவில் உலுக்கியதால், அந்தப் பொதுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல, சென்னை கிண்டியில் பிரமாண் டமாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையைத் திறந்து வைக்க வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புக் கொண்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் வராமல் போய்விட் டார். அதனால் அந்த மருத்துவமனையை முதல்வரே திறந்துவைக்கும் படி ஆனது. அதேபோல, திருவாரூரில் கட்டப்பட்டிருக்கும் கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க வருவதாக ஒப்புக்கொண்ட பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், கடைசி நேரத்தில் உடல்நலக் குறைவால் வரவில்லை. இப்படி அடுத்தடுத்து மூன்று சம்பவங்களிலும் சில இடையூறுகள் ஏற்பட்டதால், சென்டிமெண்ட்டில் நம்பிக்கையுள்ள தி.மு.க.வினர் சிலர், கவலையில் இருக்காங்களாம். ஆனாலும் முதல்வர் ஸ்டாலின், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்தடுத்த நிகழ்வுகளை நடத்திக்கிட்டே இருக்கார்.''”

"சரிப்பா, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறையினரால் ஒருவகையில் நல்லது நடந்திருக்கிறது என்கிறார்களே?''”

senthilbalaji

"உண்மைதாங்க தலைவரே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் ஆபத்தான அடைப்பு இருந்திருக்கிறது. அதை அவர் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் அவர் உயிருக்கே ஆபத்து வந்திருக்குமாம். அமலாக்கத் துறை ரெய்டு நேரத்தில் அந்த ஆபத்து வெளிப் பட்டதால்தான், அவர் இப்போது அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டிருக்கிறார். அமைச்சருக்கு இதயத்தில் மூன்று அடைப்பு இருப்பதாக அரசு மருத்துவமனை சொன்ன நிலையில், நான்கு அடைப்பு இருந்ததாகச் சொல்லி, அவை அபாயகரமான அடைப்புகள் என்றும் அதிர வைத்திருக்கிறது காவேரி மருத்துவமனை. எது எப்படியோ செந்தில் பாலாஜியின் நோய்த் தீவிரம் ரெய்டால் வெளிப் பட்டு, அவர் ஆபத்திலிருந்து மீட்கப்பட்டிருக் கிறார். ஒருவகையில் அமைச்சரை அமலாக்கத் துறை காப்பாற்றி இருக்கிறது என ஆறுத லடையலாம் என்கிறார்கள், அவரது ஆதரவாளர்களே.''”

"அது சரி, அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை திணறிப் போய் இருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, காவேரி மருத்துவமனையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை எப்படியாவது தங்கள் கஸ்டடியில் எடுத்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டி நின்றது அமலாக்க துறை. அவரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க உயர்நீதிமன்றம் அனுமதித்ததை எதிர்த்து, அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தனியார் மருத்துவமனை யில் அட்மிட் செய்ய உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. நிறைய மேற்கோள்களை காட்டி நீங்கள் வாதிட்டாலும், பைபாஸ் சிகிச்சைக்காக அட்மிட் செய்யப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சரியில்லை என மருத்துவர்கள் கூறிய பிறகும், அவரை விசாரித்தே ஆகவேண்டுமென கேட்கிறீர்களா?’ என்றெல்லாம் கேள்வி எழுப்பியதோடு, வழக்கின் விசாரணையை, ஜூலை 4 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளனர். தாங்கள் திட்டமிட்டபடி எதுவும் நடக்காததால் அப்-செட் ஆகியிருக்கிறது அமலாக்கத்துறை.''”

rr

"தென்சென்னையில் பா.ஜ.க. பலப் பரிட்சையைக் காட்டிக்கொண்டு இருக்கிறதே?''’

"நாடாளுமன்றத் தேர்தலுக்காக தென் சென்னை தொகுதியைக் குறி வைத்திருக்கிறது பா.ஜ.க. இதைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சரான கிஷன் ரெட்டியை, பொதுக்கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார் ஒன்றிய உள்துறை அமைச்சரான அமித்ஷா. பொதுக்கூட்டத்திற்கு வந்து சென்ற கிஷன் ரெட்டியோ, சென்னையில் கட்சிக்காரர்கள் கூட கூட்டத்திற்கு வர வில்லை. இப்படி இருந்தால், தமிழ்நாட்டில் நாம் கரை யேறுவது கஷ்டம் என்று அமித்ஷாவிடம் ரிப்போர்ட் செய் திருக்கிறார். இதைத் தொடர்ந்து, தமிழக கட்சி நிர்வாகி களுக்கு டோஸ் விட்ட அமித்ஷா, அடுத்து பா.ஜ.க..வின் சீனியர் தலைவர்களில் ஒருவரான ராஜ்நாத்சிங்கை அனுப்பி னார். அதற்கு கூட்டமும் கூட்டப்பட்டது. வந்த ராஜ்நாத்சிங் செந்தில் பாலாஜி விவகாரத்தைக் கையில் எடுத்து, தி.மு.க. அரசை விமர்சித்துவிட்டுச் சென்றிருக்கிறார். இது இப்படி இருக்க, அ.தி.மு.க.வினரோ, ’நம்மோடு கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க., தானாக தென்சென்னையைத் தேர்வு செய்துகொண்டு எப்படி தேர்தல் ஆயத்தம் செய்யலாம்?’ என்று குமுறிக்கொண்டு இருக்கிறது.''”

"சென்னை பா.ஜ.க பிரமுகர் ஒருவர் மீது, குண்டர் சட்டம் பாய இருக்கிறது என்கிறார்களே?''”

"அண்மையில் மிண்ட் ரமேஷ் என்கிற பா.ஜ.க. பிரமுகர், மோசடி வழக்கில் கைதாகி, குண்டர் சட்டத்தில் உள்ளே அனுப்பப்பட்டிருக்கிறார். இப்போது. அதே சமயத்தில் கைது செய்யப்பட்ட மற்றொரு பா.ஜ.க. பிரமுகரான மிள காய்ப் பொடி வெங்கடேசன் என்கிற கே.ஆர். வெங்கடேஷை யும் இதேபோல் குண்டர் சட்டத்தில் வைக்க ஆவடி போலீஸ் மூவ் செய்துவருகிறது. இந்த வெங்கடேஷ் மீது, துப்பாக்கி வைத்திருந்தது உட்பட மூன்று வழக்குகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெங்கடேஷை இதில் இருந்து காப்பாற்ற பா.ஜ.க. தரப்பில் இருந்து டெல்லி நபர்களே பேசுகிறார்களாம். அதேபோல் சில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் வெங்கடேஷுக்காக வரிந்துகட்டி நிற்கிறார்களாம். இதற்காக சில பா.ஜ.க. புள்ளிகள் கோடிக் கணக்கில் டீலிங்கும் பேசுகிறார்களாம். எனினும், ஆவடி கமிஷனரான அருண், சட்டப்படியான நடவடிக்கைகளில் உறுதி யாக இருந்து, பா.ஜ.க. தரப்பை பரிதவிக்க வைக்கிறாராம்.''”

"அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்று ஓரளவுக்கு முடிவாகி இருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, இறையன்பு ஓய்வு பெறுவதை யடுத்து, அவரது தலைமைச் செய லாளர் பதவியில் அமரப்போகும் புதிய தலைமைச் செயலாளர் யார் என்ற கேள்வி பெரிதாக எழுந்தது. அந்தப் பதவியைக் குறிவைத்து, பல சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காய் நகர்த்திவந்த நிலையில், அவர்களில் ஒருவரான ஷிவ்தாஸ் மீனாவை முதல்வர் ஸ்டாலின் டிக் அடித்திருப்பதாகத் தகவல் வரு கிறது. இந்த நிமிடம் வரை இதில் மாற்றம் ஏற்படவில்லை என்கிறது கோட்டை வட்டாரம்.''”

"அடுத்த டி.ஜி.பி.யையும் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதே?''”

rr

"ஆமாங்க தலைவரே, டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஓய்வு பெறுவதால், புதிய டி.ஜி.பி.யைத் தேர்வு செய்வதற்கான பரிந்துரைப் பட்டியலை தமிழக அரசு டெல் லிக்கு அனுப்பி இருக்கிறது. அதில் சங்கர் ஜிவால், ஏ.கே..விசுவநாதன், வி.கே.ரவி, சஞ்சய் அரோரா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றில் மூவரை ஒன்றிய அரசு சீனியாரிட்டி அடிப்படை யில் தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கும். அதில் ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்துகொள்ள லாம். தமிழக அரசின் பட்டியலில் இருக்கும் சஞ்சய் அரோரா, ஒன்றிய அரசுப் பணியில் இருக் கிறவர். அவரிடம், மாநிலப் பணிக்குத் திரும்ப விரும்புவதாக ஒரு வில்லிங் சர்டிபிகேட்டை வாங்கி, அவர் பெயரையும் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள். அதற்குக் காரணம், ஒன்றிய அரசின் பரிந்துரைப் பட்டியலில் ஏ.கே.விசுவ நாதனின் பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தானாம்.''”

"ஜார்கண்ட் மாநில அதிகாரியான பத்மநாபன் பற்றி பல்வேறு தகவல்கள் வருதே?''”

ff

"நயினார் நாகேந்திரனை தமிழக பா.ஜ.க. தலைவராக ஆக்குவதற்காக, ஜார்கண்ட் அதிகாரி பத்மநாபன் என்பவர் காய் நகர்த்தறதா கடந்த நக்கீரன் இதழில் ஒரு செய்தி வெளி யானது. அவர் அங்குள்ள கவர்னர் மாளிகையில் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டதற்கான உத்தரவு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக் கிறதாம். இந்த பத்மநாபன், ஒன்றிய அரசில் முக்கிய பதவிகளைப் பெற்றுத் தருவதாக, தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி கள் பலரையும் ஏமாற்றியுள்ளாராம். அதாவது, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா ளர் அந்தஸ்தில் இருப்பவர்கள் மத்திய அரசுப் பணிக்குச் சென்றால் அவர்களை துறையின் கூடுதல் செயலாளர் அல்லது செயலாளர் என்ற அந் தஸ்தில் நியமிப்பார்கள். இப்படி நியமிக்கப்படுவதற்கு முன்பு எம்-பேனல் என்ற ஒரு பட்டியல் தயாரிக்கப்படும். அந்த பேனலில் இடம்பெறு பவர்கள் தான் மத்திய அரசின் கூடுதல் செயலாள ராகவோ, அல்லது செயலாள ராகவோ நியமிக்கப்படு வார்கள். அப்படிப்பட்ட எம்-பேனலில் பெயரை வர வழைக்கிறேன் என்று ஆசைகாட்டியே பல ருக்கும் பத்மநாபன் பட்டை நாமம் போட்டி ருக்கிறார் என்கிறது கோட்டை வட்டாரம்.''”

"கனிம வளத்துறையில் இருக்கும் ஒரு பெண் அதிகாரி ஏகத்துக்கும் வசூல் செய்கிறார்ன்னு புகார் கிளம்புதே?''”

"ஆமாங்க தலைவரே, விழுப்புரம் மாவட்ட கனிமவளத் துறையில் இருக்கும் அந்த விஜயமான பெண் அதிகாரிக்கு துறையில் செல்வாக்கு அதிகமாம். அதனால் இவருக்குக் கூடுதலாக மேலும் சில மாவட்ட பொறுப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்த அம்மணி, வானூர் வட்டத்தில் செம்மண் குவாரிகளுக்கு முறைப்படியான அனுமதியை வழங்காமல் 10 நாள், 5 நாட்கள் என டெம்ப்ரவரி அனுமதி வழங்கி, மாதா மாதம் லட்சக்கணக்கில் கல்லா கட்டி வருகிறாராம். இதற்காக தற்காலிக அனு மதி என்ற பெயரில் டன் கணக்கில் கனிம வளத்தை சுரண்டச் செய்து, வசதியில் கொழிக் கிறாராம். யாராவது தட்டிக்கேட்டால், "நான் துறையின் சீனியர் அமைச்சருக்கு ரைட் ஹேண்ட். என்னை யாராலும் ஒன்றும் செய்யமுடியாது' என்றும் சவால் விடுகிறாராம். இதையறிந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டீம், அண்மையில் இவரை கண்காணிக்க ஆரம்பிக்க, அதற்கு பயந்து அவர் லீவில் சென்றதாகவும் கூறுகிறார்கள்.''”

"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்க றேன். அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை மூலம் ஒன்றிய அரசு நடத்திய அத்துமீறலால் கோபமடைந்த தமிழக அரசு, ஒன்றிய அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சி.பி.ஐ.போலீஸுக்கு தமிழகத்திற்குள் அனுமதி இன்றி நுழைவதற் கான அனுமதியை ரத்து செய்வதாக அறிவித் தது. இதைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ மாக அதற்கான அனுமதியை உள்துறை செய லாளர் அமுதா ஐ.ஏ.எஸ். ரத்து செய்தார். இந்த நிலையில், இந்த உத்தரவை தமிழ்நாடு அரசின் கெஜட்டிலும் முறைப்படி பதிவேற்றம் செய்துள்ளார் அவர். இனி, சி.பி.ஐ. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் தங்கள் விருப் பப்படி தமிழ்நாட்டிற்குள் விளையாட முடி யாதபடி அரண் எழுப்பப்பட்டிருக்கிறது.''’

இறுதிச்சுற்று

தீர்ப்பு எப்போது?

சாத்தான்குளம் காவல்துறையின் கொடூர தாக்குதலால் படுகொலை செய்யப்பட்ட வணிகர்களான தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கொலைக்கு விரைவான நீதி வேண்டி மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் மௌன அஞ்ச- செலுத்திட அழைப்பு விடுத்திருந்தனர் அவர்களது உறவினர்களும், நண்பர்களும். இதனையொட்டி 22-ந்தேதி வியாழக்கிழமை அன்று பென்னிக் ஸின் மொபைல் சிட்டி கடை முன்பு அமைக்கப் பட்ட திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வழக்கினில் விரைவான நீதி வேண்டி மௌன அஞ்ச- செலுத்தினர் உறவினர்களும் நண்பர்களும்.

-நாகேந்திரன்

nkn240623
இதையும் படியுங்கள்
Subscribe