"ஹலோ தலைவரே, இந்தவாரம் எல்லா பக்கமும் பரபரப்பு நிகழ்வுகளா அரங்கேறியிருக்கு.''’
"உண்மைதாம்பா. அமைச்சர் செந்தில் பாலாஜிக்குக் கூட நெருக்கடிகள் முற்றுகிறதே?''”
"ஆமாங்க தலைவரே... மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜிக்கு எதிராக அண்மையில் திட்டம் போட்டு களமிறங்கிய அமலாக்கத்துறை, டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் டாஸ்மாக் சரக்குகளைக் கொள்முதல் செய்யும் மதுபான நிறுவனங்கள் ஆகியவற்றில் ரெய்டு நடத்தியது. இதைத் தொடர்ந்து டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இதை அமைச்சர் செந்தில்பாலாஜி கடுமையாக மறுத்தார். இந்த நிலையில், டாஸ்மாக் நிறு வனத்தின் நிர்வாக இயக்குநர் விசாகன் ஐ.ஏ.எஸ்.ஸிடம் விசாரணை நடத்தவிருக்கும் அவர்கள், அவருக்கு சம்மன் அனுப்பி வரவழைக்கத் தயாராகிவருகிறார்கள். டெல்லியின் உத்தரவுக்காகத்தான் காத்திருக் கிறார்களாம்.''”
"த.வெ.க. தலைவர் நடிகர் விஜய், அறிக்கையெல்லாம் தர ஆரம்பிச்சிட் டாரேப்பா?''”
"நான் வழக்கமாக அறிக்கைவிடும் அரசியல்வாதியாக இருக்கமாட்டேன். நம்மகிட்ட எல்லாமே அதிரடி ஆக்ஷன்தான், என்று சொல்லிவந்த நடிகர் விஜய்யிடம் இப்படியொரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது பட்ஜெட்டைப் பற்றியும், டாஸ்மாக் ரெய்டு பற்றியும் கூட அடுத்தடுத்து அறிக்கைவிட்டிருக்கிறார். இப்படி அறிக்கைநாயகராக விஜய் அவதாரம் எடுத்ததற்கு முக்கிய காரணமாக இருப்பவர் ஆதவ் அர்ஜுன்தானாம். இவரது "வாய்ஸ் ஆஃப் காமன்' அமைப்பில் வேலை பார்ப்ப வர்கள் எழுதிக் கொடுப்பதை விஜய்யிடம் படித்துக்காட்டி, அதில் வியூக அமைப்பாளர் ஜான்ஆரோக்கியத்திடம் திருத்தம் பெற்று, விஜய் பெயரில் அவையெல்லாம் அறிக்கையாக வருகிறதாம். அப்படியிருந்தும் பெரியாரை கீழ்த்தரமாக விமர்சித்த ’நாம் தமிழர்’ சீமானுக்கு எதிராக, விஜய்யிட மிருந்து எந்தவிதமான கண்டன அறிக்கையும் வராததை, அவரது கட்சியினரே கூர்ந்து கவனிக்கிறார்கள்.''”
"அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கும், செங் கோட்டையனுக்கும் இடையில் சமாதானம் உருவாக முயற்சிகள் நடக்கிறதே?''”
"செங்கோட்டையனுக்கும் எடப்பாடிக்கும் இடை யிலான பேச்சுவார்த்தை முற்றிலும் நின்றுவிட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளில் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தபோது, ஓ.பி. எஸ்ஸும்... செங் கோட்டையனும் சபையை விட்டு வெளி யேறினார்கள். ஆனால் இவர்கள் இருவரும், எடப்பாடி வெளியேறிய 4-ஆம் எண் கேட் வழியாகச் செல்லாமல் வேறு ஒரு கேட் வழியாக வெளியேறினார்கள். மேலும், சபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கோட்டையில் உள்ள தனது அறையில் ஆலோ சனைக் கூட்டம் நடத்தினார் எடப்பாடி. அதிலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இது குறித்தெல்லாம் பத்திரிகை யாளர்கள் கேள்வி எழுப் பியபோது, "இதை அவரிடம் போய் கேளுங்கள் சார்' என்று கோபத்தோடு சொன்னார் எடப்பாடி. இதைப் பார்த்து கவலையடைந் திருக்கும் அ.தி. மு.க.வின் சீனியர்கள், இருவரையும் சமா தானப்படுத்தும் முயற்சியில் இறங்கி யிருக்கிறார்கள். இதற்கு பலன் கிடைக்குமா? என்கிற பட்டிமன்றம் அ.தி.மு.க.விலேயே நடக்கிறது.''”
"இதற்கிடையில் செங்கோட்டையனை நீக்கவேண்டும் என்றும் அ.தி.மு.க.வில் ஒருசிலர் குரல் கொடுக்கிறார் களே?''”
"அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட் டையனை நீக்கிவிட வேண்டும் என வைகைச்செல்வன் உட்பட ஒருசிலர், கொடிபிடித்து வருகின்ற னர். எடப்பாடியோ ’இப் போதைக்கு அப்படி செய்யக் கூடாது. அவர் ராஜ்யசபா தேர்தலில் நம்மைச் சார்ந்து ஓட்டு போட வேண்டும். இந்த நிலையில் அவரை நீக்கினால் அது அ.தி.மு.க. வுக்கு நஷ்டத்தைக் கொடுக்கும். மேலும் அவரை நீக்கிவிட்டால் அவரது நடவடிக்கைகள் நமக்கு எதிராக வேகமடையும். அதனால் பொறுத்துதான் போகவேண்டும்’ என்று சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்கிறாராம். இந்த நிலையில்... ஓ.பி.எஸ்., தினகரன், திவாகரன் ஆகி யோர் செங்கோட் டையனுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கி யிருக்கிறார்கள். இதுகுறித்து செங்கோட்டையனைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ்.''”
"இன்னொரு பக்கம் எடப்பாடியுடன் மோதும் செங்கோட்டையனுக்கு ஆஃபர் அதிகரித்திருக்கிறதே?''”
"செங்கோட்டையனை வளைக்க தி.மு.க.வும், பா.ஜ.க.வும் வேகமாக காய்களை நகர்த்துகின்றன. "எங்களுடன் வாருங்கள்; அமைச்சராக்குகிறோம். கட்சி தாவல் சட்டப்படி உங்கள் பதவி பறிபோனால் அப்போது வரும் இடைத்தேர்தலில் உங்களை மீண்டும் எம்.எல்.ஏ. ஆக்குகிறோம்' என தி.மு.க. தரப்பில் தூது விடப்பட்டிருக்கிறதாம். அதேபோல், "எங்கள் கட்சிக்கு வாருங்கள். பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி உருவாகும். அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நீங்கள்தான். எந்த எடப்பாடி உங்களை புறக்கணிக்கிறாரோ அவரையே உங்களுக்கு கீழ் பணிபுரிய வைக்கிறோம்' என பா.ஜ.க. தரப்பு ஏகத்துக்கும் ஆசைகாட்ட முயல்கிறதாம். ஆனால் செங்கோட் டையனோ, "என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்'’என தன் சகாக்களிடம் சொல்லிவருகிறாராம்.''
"செங்கோட்டையன் -சபாநாயகர் சந்திப்பு பற்றி அவரது ஆதரவாளர்கள் தரப்பு வேறு ஒரு கணக்கு சொல்கிறார்களே?''
"ஆமாங்க தலைவரே... தற்போது கொங்கு மண்டல அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உட்பட 24 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு செங்கோட்டையனுக்கு இருக்கிறதாம். ஏற்கனவே டி.டி.வி.தினகரன் தலைமையில் 18 எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து சென்றபோது, அவர்களை அப்போதைய சபாநாயகர் தனபால் பதவி நீக்கம் செய்தார். இப்போது அப்படி நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் செங் கோட்டையன் சபாநாயகரை சந்தித்தாராம். ஆனால் அதைக் காட்டிக்காமல், "எனது தொகுதி தொடர்பாகக் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து சபாநாயகரிடம் பேசினேன்'னு வேற காரணத்தைச் சொல்லியிருக்கிறாராம்.''
"இந்தச் சூழலில் சசிகலா தரப்பு அதிரடி வியூகத்தை வகுத்துவருகிறதே?''”
"ஆமாங்க தலைவரே.. எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கும் பகிரங்கமாகவே மோதல் வெடித்திருக்கும் நிலையில், தனியாக தனது டீமுடன் சசிகலா, பரபரப்பாக ஒரு அதிரடி வியூகத்தை வகுத்துவருகிறாராம். செங்கோட்டையனை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராகவும், ஓ.பி.எஸ்.ஸை இணை ஒருங்கிணைப்பாளராகவும் அவர் அறிவிக்க இருப்பதோடு, கட்சியின் பொருளாளராக பா.ஜ.க.வின் பேரன்பைப் பெற்றிருக்கும் எஸ்.பி.வேலுமணியை முன்மொழியவும் திட்டம் வகுத் திருக்கிறாராம். மேலும் அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளராக அவர் தன்னையே அறிவித்துக்கொள்ளவும் இருக்கிறார் என்கிறார்கள். அதற்காக சீக்ரெட் காய் நகர்த்தல்கள், ரகசிய சந்திப்புகள், பேரங்கள் என விறுவிறுப்பாக நடந்துவருகிறதாம். அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்களையும் மா.செ.க்களையும் வளைக்க இந்த அணி எடுக்கும் முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றிபெறும் என்பது விரைவில் தெரிந்துவிடும்.''”
"அதெல்லாம் இருக்கட்டும். அண்மையில் முதல்வரின் செயல் தி.மு.க.வினரை நெகிழ வைத்திருக் கிறதே?''”
"ஆமாங்க தலைவரே.. பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக சென்னை அறிவாலயத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். அதில் எம்.எல்.ஏ.க்களுக்கு நிறைய அட்வைஸ் தரப்பட்டது. கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த ஸ்டா லின், காரில் ஏற முயற்சித்தபோது, முதியவர் ஒருவர், ஸ்டாலினை அணுகி தனது கையில் வைத்திருந்த கோரிக்கை மனுவை அவரிடம் கொடுக்க முன்வந்தார். அவர் கண்களில் கண்ணீர் வழிந்திருக் கிறது. அப்போது முதல்வரின் பாதுகாவலர்கள் அந்த முதியவரைத் தடுக்க முயற்சிக்க, அதைக் கவனித்த ஸ்டாலின், பாதுகாவலர்களைத் தடுத்து, அந்த முதியவரிடமிருந்து கோரிக்கை மனுவை வாங்கியிருக்கிறார். அதோடு, அங்கேயே நின்று அந்த மனுவையும் படித்திருக்கிறார். பிறகு முதியவரிடம், "நீங்க கவலைப்படாதீங்க. உங்கள் கோரிக்கையை ஏற்கனவே நிறைவேற்றச் சொல்லிவிட்டேன்... விரைவில் நடக்கும். அழாதீர்கள், பத்திரமா போங்க''’ என்று வாஞ்சையாகப் பேசி அனுப்பி வைத்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியைக் கவனித்த தி.மு.க. உடன்பிறப்புகள் நெகிழ்ந்து போனார்களாம்.''”
"காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் மீது காவல்துறை ஏகக் கடுப்பில் இருக்கிறதே?''”
"தமிழக காவல்துறை அதிகாரிகளை சகட்டுமேனிக்கு மிரட்டியிருக்கிறார் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர். இந்த மிரட்டல் விவகாரம் தான் ஐ.பி.எஸ். வட்டாரங்களில் பரபரப்பாக எதிரொலிக்கிறது. இது குறித்து அவர்கள் தரப்பில் விசாரித்தபோது, "தமிழக காங்கிரஸின் மத்திய சென்னை மாவட்ட முன் னாள் தலைவர் வீரபாண்டியன். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலை வர் ஒருவரின் ஆதரவாளர். அவருக்கு ஏதே னும் ஆச்சுன்னா துடி துடின்னு துடித்துப் போய் விடுவார் அந்த தலைவர். வீரபாண்டியன் மீது ஏகப்பட்ட கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு க்ரைம் ரெக்கார்டுகள் இருக்கின்றன. தற்போது, சென்னையில் போதைப் பொருள் விவகாரத்திலும் சிலரோடு இவருக்கு இருக்கும் தொடர்புகள் சிட்டி போலீசுக்கு தெரியவந்திருக்கிறது. அதனால் அவர் மீது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டிருக் கிறது. அதனடிப்படையில் அவரைக் கைது செய்து ரிமாண்ட் பண்ண போலீசார் திட்டமிட்டனர். இதனை அறிந்த அந்த முன்னாள் மாநிலத் தலைவர், போலீஸ் உயரதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, "அவரை ரிமாண்ட் பண்ணக்கூடாது. மீறினால் அதன் விளைவுகளை அனுபவிப்பீர்கள்'’என காட்டமாகச் சொன்னதோடு, "என் செல்வாக்கு தெரி யுமா? இப்பவே சி.எம்.கிட்டே பேசவா? வீரபாண்டி மீது கை வெச்சா... உங்க எல்லாத்தையும் ட்ரான்ஸ்ஃபர் செஞ் சிடுவேன்'னு மிரட்டியிருக்கிறார். இது காவல்துறையினரை ஏகத்துக்கும் எரிச்சல் படுத்தியிருக்கிறதாம்.''”
"காவல்துறை வரை வந்தாச்சி. அடுத்து, சிறைச்சாலை ஊழல் விவகாரத்தையும் பேசிடுவோம்.''”
"மதுரை மத்திய சிறையில் கைதிகளை வைத்து மருத்துவ பேன்டேஜ், காகித கவர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து விற்றதில், 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் மட்டும் நடந்த கோடிக்கணக்கான ஊழல் முறைகேடுகள் குறித்து, தொடர்ந்து நமது நக்கீரன் புலனாய்வுச் செய்தி வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ரூ.1.63 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்ததாக புதுக்கோட்டை சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா, திருநெல்வேலி சிறைக் கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன், வேலூர் சிறை நிர்வாக அலுவலர் தியாகராஜன் ஆகியோரை டி.ஜி.பி. மகேஷ் வர்தயாள் சஸ்பெண்ட் செய்திருக்கிறார். மற்ற மத்திய சிறைச்சாலைகளிலும் இதே ரீதியிலான குற்றச்சாட்டுகள் இன்னும் சரியாக விசாரிக்கப்படாததால், ஊழல் அதிகாரிகள் தப்பித்து வருவதாக சிறைத்துறை வட்டாரமே சொல்கிறது.''”
"அதிகாரிக போக்குனால நெல்லை மாநகரம் கொதிப்பிலும், அதிர்ச்சியிலு மிருக்காமே.?''”
"தலைவரே. ஆட்சியில தி.மு.க. இருந்தாலும் அரசுத்துறை நிர்வாகமோ காவி கட்சி சார்பு அதிகாரிக ஆதிக்கத்திலிருக்கு. கல்வி நிலையங்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட நெல்லை நகரின் மாணவர்கள் தங்களின் உயர்கல்விப் படிப்பான மருத்துவ ஆராய்ச்சி, இன்ஜினியரிங், ஜே.இ.இ., ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்ளிட்டவைகளின் நுழைவுத் தேர்விற்குத் தேவையான ஓ.பி.சி. சான்று கேட்டு ஏராளமானோர் ஆன்லைன்ல விண்ணப் பிச்சிருக்காங்க. அதோட பொதுமக்களும் வருமான, இருப்பிட, வாழ்வாதாரச் சான்றுகளுக்கும் விண்ணப்பிக்க... அதிகாரிக சுணக்கம் காட்டியிருக்காங்க. விண்ணப்பத் திற்கான காலக்கெடு நெருங்கியும், அரசுச் சான்றிதழ்கள் கிடைக்காமல் மாணவர்களும், மக்களும் இந்த அதிகாரிகளால் அலைக் கழிக்கப்பட்டிருக்காங்க. விஷயத்தை மாவட்ட கலெக்டரிடமும் தெரிவிக்க, அவரும் உடனடியாக சான்றிதழ்களை அனுமதிக்க உயரதிகாரியிடம் தெரி வித்தும் காரியம் ஆகவில் லையாம். இந்த விவகாரம் பெருசாய் வெடிச்சு வருவாய்த் துறையின் மாநில ஆணையர் வரை புகார் போக... உடனே தலையிட்ட அவரும், மக்களுக்கான சான்றிதழ்களை தாமதமின்றி அனுமதிக்க உத்தரவிட்டும், இழுத்தடிப்பு நடந்திருப்பது தான் நெல்லை மக்களை, இங்க யார் ஆட்சி நடக்கு என்ற அதிர்ச்சி மனநிலைக்குக் கொண்டுவந்திருச்சாம்.''”
"நானும் கைதி தொடர்பான ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். கோகுல்ராஜ் கொலைவழக்கில் தொடர் புடைய யுவராஜ், அண்மையில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார். அதை ரவுடிகள் பலரும் கூடி ஏகத்துக்கும் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள். தென் மாவட்டங்களில் ஏராளமான வழக்குகளைச் சந்தித்துவரும் ராக்கெட் ராஜாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உற்சாகமாக ஆட்டம் போட்டிருக்கிறார். இது ஏரியாவாசிகளைப் பதட்டப்படுத்தியிருக் கிறது. வழக்கறிஞர் ப.பா.மோகன் மட்டும் இல்லையென்றால் கோகுல்ராஜ் கொலை யாளிகளுக்கு தண்டனையே கிடைத் திருக்காது என்கிறார்கள் ஏரியாவாசிகள். எனினும் அந்த யுவராஜ், சிறையிலும் ஏகபோகமாக இருக்கிறாராம். அவருக்குச் சிறையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறதாம்.''
_________
இறுதிச் சுற்று
பா.ஜ.க. தலைவர்கள் கைது!
டாஸ்மாக்கில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை யகத்தை முற்றுகையிட்டு 17-ந் தேதி போராட்டம் நடத்துவதாக பா.ஜ.க. அறிவித்திருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை எதிர்த்து போராட்டம் நடத்த பா.ஜ.க. தலைவர்கள் திட்டமிட்டனர். இதனையறிந்த காவல் துறை அதிகாரிகள், தமிழக பா.ஜ.க. தலைவர்களின் வீடுகளில் போலீசாரை குவித்தனர். 17-ந்தேதி யாரும் வெளியேறாமல் பார்த்துக்கொள்வதற்கு இந்த ஏற்பாடு. ஒரு வகையில் இது வீட்டுச் சிறை போன்றது. இந்த நிலையில், 17-ந் தேதி வீட்டில் இருந்து வெளியேறி டாஸ்மாக் தலைமையகம் செல்ல முயற்சித்த தமிழிசை சௌந்திரராஜனை கைது செய்தது போலீஸ். அதேபோல மற்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இதனால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் தலைமையகத்தில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
-இளையர்