தி.மு.க. அரசுக்கு நெருக் கடியை ஏற்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அனுப்பிய அமலாக்கத் துறையின் சம்மன்களுக்கு தடைவிதித்து மத்திய அரசுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது உயர்நீதிமன்றம். இந்த நிலையில், மணல் மாஃபியாக்களை கைது செய்ய அதிரடி ஆக்சன்களில் குதித்துள்ளது அமலாக்கத்துறை.

அரசுக்கு சொந்தமான மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட சட்ட விரோதமாக மிக அதிகளவில் மணல் அள்ளப்பட்ட விவகாரத்தில் மாவட்ட கலெக்டர்களிடம் விசாரணை நடத்த நேரில் ஆஜராகுமாறு அவர்களுக்கு சமீபத்தில் சம்மன் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர் அமலாக்கத்துறையினர்.

sasnd

இந்த சம்பவம் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்மன்களை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் நந்தகோபால், நீர்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப்சக்சேனா, திருச்சி, தஞ்சை, கரூர் அரியலூர், வேலூர் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார் அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தரமோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே,”"கனிமவள குற்றங்களுக்கு மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க முடியாது. சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான விவகாரங்களில் விசாரணை நடத்துவது, மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்தில் அமலாக்கத்துறை தலையிடுவ தாகும். இப்படி விசாரணை நடத்த மத்திய அரசின் ஏஜென்சிக்கு உரிமை கிடையாது. அமலாக்கத்துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டதும் அதிகார துஷ்பிரயோகமுமாகும்''’என்றும் வாதிட்டார்.

அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.எல்.சுந்தரேசன், "சட்டவிரோத மணல் விவகாரத்தில் பல மாவட்டங்களில் எஃப்.ஐ.ஆர். போடப் பட்டுள்ளது. இது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் திட்டமிட்ட குற்றங்களை உள்ளடக்கியது என்பதால் அந்த சட்டத்தின்படி அமலாக் கத்துறை விசாரிக்கிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை மாநில அரசு ஏன் பாதுகாக்க முயற்சிக்க வேண்டும்? சம்மன் அனுப்பப்பட்டவர்கள் யாரும் குற்றவாளிகள் இல்லை. விளக்கங்கள் பெறவே சம்மன் அனுப்பப்பட்டது. பி.எம்.எல்.ஏ. சட்டப்பிரிவுகளின்படி இந்த விவாகரத்தில் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருக்கிறது''’என்று தமிழக அரசின் மனுவை மறுத்து வாதிட்டார்.

Advertisment

ss

மீண்டும் தனது வாதத்தை தொடர்ந்த துஷ்வந்த் தவே,”மணல் குவாரி உரிமைதாரர்களின் தவறுகளுக்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப முடியுமா? யூகங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த முடியுமா? மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை கேட்டுப்பெறலாம். விசாரணைக்கு உதவும்படி கோரலாம். சம்மன் அனுப்பி ஆஜராக சொல்ல முடியாது. மாநில அரசு யாரையும் பாதுகாக்க முயற்சிக்கவில்லை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சேபனை இல்லை. அதற்கு மாறாக, அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது ஏன்?

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருவித மான நடவடிக்கைகளை எடுக்கிறது அமலாக்கத் துறை. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான குஜராத், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசத்தில் கனிமவள கொள்ளை தொடர்பாக நூற்றுக்கும் அதிகமான சட்டவிரோத வழக்குகள் நிலுவையில் இருக்கின் றன. அங்கெல்லாம் ஏன் இத்தகைய நடவடிக் கைகளை அமலாக்கத் துறையினர் எடுக்கவில்லை? அதில் நடவடிக்கை எடுத்தால் தமிழக அரசு தனது மனுவை திரும்பப்பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள் வேன்.

இந்த விவகாரத்தில் தலையிட மாநில அரசுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. மாநில அரசின் அனுமதியின்றி விசாரிக்கும் அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மன்களை ரத்து செய்ய வேண்டும்''” என்று அமலாக்கத்துறைக்கு எதிராகக் கடுமையாக வாதிட்டார்.

இதனையடுத்து மீண்டும் வாதிட்ட ஏ.எல்.சுந்தரேசன், ‘’சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் எஃப்.ஐ.ஆரை வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். விசாரணைக்கு உதவும் வகையில்தான் எஃப்.ஐ.ஆர். கேட்கப்படுகிறது. ஆனால், அதனை மாநில அரசு வழங்க மறுக்கிறது''’என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "உதவும் வகையில்தான் கோரப்பட்டது என்றால் சம்மன் அனுப்பியது எதற்கு? விசாரணைக்கு உதவி செய்ய கேட்பதற்கும், சம்மன் அனுப்புவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அனைத்து குவாரிகளின் விபரங்களையும் எப்படி கேட்க முடியும்?''’என்றனர்.

இதற்கு பதிலளித்த ஏ.எல்.சுந்தரேசன், "அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இருக்கிறது. அதுகுறித்த விபரங்களை அறிவதற்கே சம்மன் அனுப்பப்பட்டது. நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். ஒரு யூனிட் மணல் விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு 1,900 ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், தனியாருக்கோ 20,000 வரை செல்கிறது. தமிழகத்தில் 28 மணற்குவாரிகளில் நடத்திய சோதனைகளில் 27.70 லட்சம் யூனிட் மணல் எடுக்கப்பட்டுள்ளது. அனுமதியளிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மணல் அள்ளப்பட்ட வகையில் 4,500 கோடி ரூபாய் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்திருக்கிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்கவும் விபரங்களை சேகரிக்கவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது''” என்றார் மிகஅழுத்தமாக.

இருதரப்பினரின் கடுமையான வாதங் களுக்குப் பிறகு வழக்கை மறு நாளுக்கு (28ந் தேதி) ஒத்தி வைத்தனர் நீதிபதிகள். மறுநாள் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மன்களை ரத்து செய்ததுடன், அமலாக்கத்துறையின் ஆட்சேபனை மனுவிற்கு 3 வார காலத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 19-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

சட்டவிரோத மணற்கொள்ளை வில்லங்கங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் இயங்கும் வருவாய்த் துறையின் உதவி இயக்குநர் மஞ்சுநாதன் மூலம் தமிழக அரசுக்கு எதிரான பிரமாணப்பத்திரம் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு அடிப்படை காரணம், அறிவியல்பூர்வமான பல ஆதாரங்களை அமலாக்கத்துறை சேகரித்திருப்பது மட்டுமல்ல; தமிழக நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளர் முத்தையா கொடுத்துள்ள வாக்குமூலமும்தான்.

சட்டவிரோத மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்ட மணல் மாஃபியாக்களான திண்டுக்கல் ரத்தினம், இவரது உறவினர் கரிகாலன், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகிய மும்மூர்த்தி களைப் பற்றி புட்டு புட்டு வைத்திருக்கிறார் முத்தையா.

மணல் அள்ள அரசு அனுமதித்துள்ள 28 இடங்களிலும் கான்பூர் ஐ.ஐ.டி.யை சேர்ந்த பேராசிரியர்கள் குழுவினர் அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்தி அதன் ரிப் போர்ட்டை அமலாக்கத்துறை யிடம் தந்துள்ளனர். அந்த ரிப்போர்ட்டின் படி, மணல் அள்ள 490 ஏக்கருக்கு அனுமதித்துள்ளது அரசு. ஆனால், 2,450 ஏக்கர்களுக்கு அதிக மாக மணல் அள்ளப்பட்டுள்ளது.

நீர்வளத் துறையின் ரெக்கார்டுகளில் 4.05 லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டதாக கூறப்பட்ட நிலை யில், 27.70 லட்சம் யூனிட் மணல் சட்ட விரோதமாக அள்ளப்பட்டிருக்கும் விபரங்களும், சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டதில் 4,500 கோடி ரூபாய் தனிநபர்களுக்கு சென்றுள்ள நிலையில் தமிழக அரசுக்கு வெறும் 36.45 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது என்ற விபரங்களையும் ஐ.ஐ.டி. குழு தங்கள் ரிப்போர்ட்டில் தெரிவித்திருக்கிறது.

இந்த ஆய்வு ரெக்கார்டுகளை காட்டி முத்தையாவிடம் கேள்விகள் கேட்ட போது, விபரங்கள் உண்மைதான் என்பதையும் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு நடந்திருப்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும், மணல் மாஃபி யாக்களான ரத்தினம், கரிகாலன், ராமச்சந்திரன் மூவருக்கும் யார், யாருடன் தொடர்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை எந்த வகையில் நடந்தது? இந்த விவகாரத்தில் புழங்கிய 4,500 கோடி ரூபாயில் பலன் பெற்றவர்கள் யார்? யாருக் கெல்லாம் எவ்வளவு பங்கு பிரிக்கப்பட்டது? எந்த வழியில், எங்கு அந்த பணம் சென்றது? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விரிவாக பதில் சொல்லியதுடன், மணல் மாஃபியாக்களின் கடந்த 10 ஆண்டுகால தொழில் ரகசியங்களையும் அவர்களுக்கு உதவிய அரசு அதிகாரிகளை பற்றியும் ஒப்புவித்துள்ளார் முத்தையா''’என்று தெரிவிக்கிறார்கள் அமலாக்கத்துறை தரப்பினர்.

கான்பூர் ஐ.ஐ.டி. நிபுணர்கள் குழுவினரின் ரிப்போர்ட் மற்றும் முத்தையாவின் வாக்குமூலம் ஆகியவற்றை வைத்தே மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரிக்க சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. அந்த சம்மன்களுக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.

இந்த நிலையில், மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்ட ரத்தினம், கரிகாலன், ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்ய அமலாக்கத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

"தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் சொல்லப்பட்டிருப் பதால், மணற்கொள்ளையர்கள் மூவரும் கைது செய்யப்படும்போது, துறையின் அமைச்சர் துரைமுருகனுக்கு தலைவலிதான்' என்கிறார்கள்.

-இரா.இளையசெல்வன்