அண்மை நாட்களாக தமிழக மீனவர்களுக்கு, அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட் டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு அடுத்தடுத்து நேர்ந்துவரும் துயர அனுபவங்கள், அவர்களை பதறவைத்திருக்கிறது.
சமீபத்தில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது பெட்ரோல் டேங்க் வெடித்து, படகு சிதறியதில் அதில் இருந்த மீனவர்கள் பரி தாபமான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக் கிறார்கள். அந்த சோகம் குறை வதற்குள் சீர்காழியை அடுத் துள்ள தொடுவாய் கிராம மீன வர்களின் படகு முழ்கிப்போக, அதிலிருந்த மீனவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நீந்தியே கரை சேர்ந்தார்கள்.
இந்த நிலையில், கடந்த மாதம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கப் போன மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்த தஷ்விந்த் என்ற இளைஞரின் தலையில், திடீரென வானத்தில் இருந்து இடிவிழ... அவர் தனது தந்தையின் கண் முன்னாலேயே அங்கேயே எரிந்து இறந்துபோனார்
அண்மை நாட்களாக தமிழக மீனவர்களுக்கு, அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட் டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு அடுத்தடுத்து நேர்ந்துவரும் துயர அனுபவங்கள், அவர்களை பதறவைத்திருக்கிறது.
சமீபத்தில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது பெட்ரோல் டேங்க் வெடித்து, படகு சிதறியதில் அதில் இருந்த மீனவர்கள் பரி தாபமான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக் கிறார்கள். அந்த சோகம் குறை வதற்குள் சீர்காழியை அடுத் துள்ள தொடுவாய் கிராம மீன வர்களின் படகு முழ்கிப்போக, அதிலிருந்த மீனவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நீந்தியே கரை சேர்ந்தார்கள்.
இந்த நிலையில், கடந்த மாதம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கப் போன மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்த தஷ்விந்த் என்ற இளைஞரின் தலையில், திடீரென வானத்தில் இருந்து இடிவிழ... அவர் தனது தந்தையின் கண் முன்னாலேயே அங்கேயே எரிந்து இறந்துபோனார். இதற்கிடையே இலங்கை கடற்படை மற்றும் கடற் கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தாக் கப்படுவதும், சொத்துக்கள் சூறையாடப்படுவதும் தொடர்கதையாகவே இருக்கிறது. இப்படி அடுக் கடுக்கான இடர்கள் தாக்குவதால் திணறிப்போயி ருக்கிறார்கள் மீனவர்கள். இத்தகைய மீனவர்களின் கண்ணீரைத் துடைக்க என்னதான் வழி?
மீனவர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வல ரும் கவுன்சிலருமான அங்குதன் சொல்கிறார் ”"கடலை நம்பி வாழும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை, ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுவருகிறோம். தமிழக மீனவர்கள் விசயத்தில் பேச்சுவார்த்தை என்பதைவிட, மகாராஷ்டிரா, குஜராத் மாநில மீனவர்களை பாகிஸ்தான் நாட்டு கடற்படை தாக்கும் போது, ஒன்றிய அரசு திருப்பித்தாக்குவது போல், ஒரு முறையாவது இலங்கை கடற்படையை நோக்கி இந்திய கடற்படை சுட வேண்டும்.
கடல் மற்றும் நீர் நிலைகளை சார்ந்து வாழும் மீனவருக்கு அங்கீகாரமும், அப்பகுதிகளின் மீதான உரிமைக்கான சட்டத்தையும் கொண்டுவர வேண்டும். வேளாண்மை பாதுகாப்பு மண்டலம் அமைத்து வேளாண் தொழிலை பாதுகாப்பது போல, கடற்கரை பாதுகாப்பு மண்டலத்தை உறுதி செய்வதோடு, மீன் வளங்களையும், மீனவர்களை யும் பாதுகாக்க வேண்டும். கடற்கரை பகுதிகளில் துறைமுகங்கள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் போது, உள்ளூர் மீனவர்களின் கருத்தை அவசியம் கேட்கவேண்டும். தொலை நோக்கு இல்லாத எந்த வளர்ச்சித் திட்டங்களும் மீனவர்களுக்கு பயனுடையதாக இருக்காது.
அதேபோல், மீன்பிடிக்கும் போது இயற்கை இடரினால், மீனவர்கள் இறக்கும் போது, சில நேரங்களில் அவர்களது உடல் கிடைக்க வாய்ப்பில்லை. அதுபோன்ற சூழ்நிலையில் மீனவர்களுக்கான நிவாரணம் பெற ஏழு ஆண்டுகள் குடும்பத்தினர் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. அது போன்ற சூழலில் கள ஆய்வு செய்து இறப்புச் சான்றிதழ் உடனே வழங்குவ தோடு, நிவாரணம் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் நீண்ட கால கோரிக்கை களை ஒன்றிய அரசும், மாநில அரசும் நிறைவேற்றித் தரவேண்டும்''’என்றார் ஆதங்கமாக.
மீனவ சமுகத்தைச் சேர்ந்தவரும், மயிலாடு துறை நகர மன்ற உறுப்பினரும் சமூக செயல்பாட் டாளருமான. ம.ரஜினி கூறுகையில், "இலங்கை அரசின் தூண்டுதலில்தான் கடற்கொள்ளையர் களின் அட்டூழியமே நடக்கிறது என்கிறார்கள் பலரும். அவ்வப்போது மீனவர்களையும், அவர் களது படகுகளையும் மடக்குவதும், பிறகு தமிழக அரசு கேட்டுக்கொண்டால் மீனவர்களை மட்டும் விடுவிப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. ஆனால் அவர்களின் படகுகளை மீட்கவோ, நிரந்தரத் தீர்வையோ இதுவரை எடுக்க ஒன்றிய அரசு முன்வருவதில்லை. தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கேரளாவில் மீன்பிடிக்கச் சென்று இறந்துபோனார். அந்தக் குடும்பத்திற் குத் தேவையானதை அந்த அரசு முன் னின்று கவனித்துச் செய்து கொடுத்தது. தமிழகத்தில் இருந்து சென்றவர்களுக்கு தேவையான பயணப் படி உட்பட அனைத் தையும் அந்த அரசே செய்து கொடுத்தது. தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி, மீனவர்களுக்கு நிரந்தரத் தீர்வுக்கான வழியை ஏற்படுத்தவேண்டும்''’என்கிறார் கவலையாய்.
இதற்கிடையில் மீன்பிடிக்க இரண்டு படகு களில் சென்ற ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் ஆறு பேர் இலங்கைக் கடற்படையினரால் கடந்த ஜனவரி 22ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் தற்போது ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில், "இத்தகைய போக்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால் இதில் மத்திய அரசு கவனம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள் தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிப்பதுடன், மீனவ மக்களிடம் அச்சத்தையும் நிச்சயமற்ற சூழலையும் உருவாக்கியுள்ளது. எனவே, தமிழக மீனவர்களை யும் அவர்களது படகுகளையும் விரைந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்''’என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒன்றிய அரசும் தமிழக அரசும் மீனவர்களின் துயரத்தைக் களையுமா? இனியாவது, கண்ணீர்க் கடலில் தத்தளிக்கும் மீனவர்களுக்கு விடிவு ஏற்படுமா?