திருச்சி மின் வாரியத்தில் கடந்த சில வாரங்களாக ஒரு வீடியோ பதிவு வைரலாக பரவியது. அந்த வீடியோவில் திருச்சி மலைக் கோட்டை மின் வாரியத்தில் பணி யாற்றும் உதவி செயற்பொறியாளர் ரங்கசாமி, உதவி மின் பொறியாளர் சுப்புலட்சுமி, உதவி மின் பொறியாளர் ராஜேந்திரன், மின்வாரிய ஊழியரான மூர்த்தி ஆகிய நான்கு பேரும், ஒவ்வொரு மின் இணைப்புக்கும் வாங்கும் லஞ்சம், போலி ஆவணங்களைப் பயன்படுத்தியது குறித்தெல்லாம் பேசியிருப்பது பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ விவகாரம் குறித்து நாம் விசாரித்தபோது, தென்னூர் மின் வாரியத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உதவி செயற்பொறி யாளர் ரங்கசாமியைத் தாண்டி எந்தவொரு மின் இணைப்பும் பெற முடியாது என்ற நிலை உள்ள தாம். 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு, திருச்சியில் மின் இணைப்பு பெறுவதற்கு மாநகராட்சியிடம் கம்ப்ளீ சன் சர்ட்டிபிகேட் பெறவேண்டுமென்று விதி முறையை மாற்றிவைத்து லஞ்சத்தில் விளையாடி யுள்ளனர். இதில், தென்னூரில் மின் இணைப்பு கேட்போருக்கு விலை நிர்ணயம் செய்வது இந்த ரங்கசாமி தானாம். அவர் குறிப்பிடும் தொகையை நுகர்வோர்களிடமிருந்து வசூலிப்பதற்காகவே இக்பால், முஸ்தபா, மணி என்கிற குண்டுமணி ஆகிய 3 புரோக்கர்கள் இருக்கிறார்கள்.
சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ராஜேஷ் என்ற ஏ.இ. லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டார். அவரோ லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம், ""ரங்கசாமி தான் வாங்க சொன்னார்'' என்று போட்டுக்கொடுத்துள் ளார். ராஜேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பிறகு ராஜேந்திரன் ஏ.இ., மொத்தம் 46 மின் இணைப்பு களைக் கொடுத்துள் ளார். அதில் வணிகப் பயன்பாட்டிற்காக 13 இணைப்புகள், கம்ப் ளீசன் சான்றிதழ் இல்லாமல் வழங்கப் பட்டுள்ளது. 25க்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டதில், நான்கு மாடிக் கட்ட டங்களுக்கு போலியாக கம்ப்ளீசன் சான்றிதழ் தயாரித்து சமர்பிக்கப்பட்டுள்ளது. இதில் இக்பால் என்ற புரோக்கர் தான் கம்பிளீசன் சான்றி தழ்களை போலியாகத் தயாரித்து மாநகராட்சி அதிகாரிகளின் கையெழுத்தையும் அவரே போட்டு மின் இணைப்பு கொடுத்துள்ளார். இதற்காக பல லட்சம் லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது.
முறைகேடுகள் குறித்த ஆவணங்களை மின்வாரிய விஜிலன்ஸ் அதிகாரியான பூவராகவன் என்பவரிடம் கொடுக்க, அவரோ ரங்கசாமி உள்ளிட்ட அதிகாரிகளை மிரட்டி பணம் பெற்றுக்கொண்டு ஆவணங்களை வெளிவிடாமல் மறைத்துள்ளாராம்.
அதேபோல், அந்த வீடியோவில் பேசும் மற்றொரு உதவி பொறியாளர் சுப்புலட்சுமியின் கணவர், அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குடன் ஒன்றாக கல்லூரியில் பயின்றவர். எனவே அந்த அதிகாரத்தை முறைகேடாகப் பயன் படுத்தி, மின்வாரிய அதிகாரிகளையும், ஊழியர்களை யும் மிரட்டி வருகிறார். இப்படியான சூழலில், ஊழல் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்காமல், ஒரு ஊழியரை மட்டும் பணியிடமாற்றம் செய் திருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்ச ஊழலில் திளைக்கும் அனைத்து மின்வாரிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளது.