"ஹலோ தலைவரே, நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்டப் பணிகளை தி.மு.க. படுவேகத்தில் தொடங்கிவிட்டதே?''”

uday

"ஆமாங்க தலைவரே, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தி.மு.க. மா.செ., பொறுப்பு அமைச்சர், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளை அழைத்து, அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது தி.மு.க.வின் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு. அமைச்சர் நேருவின் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டாலும், அமைச்சர் உதயநிதியின் முன்னிலையில்தான் ஆலோசனைக் கூட்டங்கள் நடக்குது. சேலம் மாவட்ட நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனையின்போது, அங்கே முந்தைய தேர்தல்களில் தி.மு.க. வாங்கிய ஓட்டுக்கள் மற்றும் வெற்றி, தோல்வி ஆகியவற்றின் புள்ளிவிபரங்களை கையில் வைத்துக்கொண்டு, கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியிருக்கிறார் உதயநிதி. அப்போது, அங்கே நடக்கும் உள்ளடி விவகாரங்களும் அ.தி. மு.க.வுடன் சிலர் வைத்திருக்கும் ரகசிய நட்புகளும் வெளிப்பட... இதையறிந்த உதயநிதி, வெற்றிதான் நமக்கு முக்கியம். இதில் எங்கு சறுக்கினாலும் நிர்வாகிகள் எல்லோர் மீதும் நடவடிக்கை உண்டு என்று எச்சரித்திருக்கிறார். அடுத்து கோவையிலும் இதேபோல் எச்சரிக்கை செய்த உதயநிதி, அங்கே தேர்தல் குழுக்களில் கொங்கு வேளாள சமூகத் துக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று பலரும் வைத்த குறையை நீக்குவதாகச் சொல்லியிருக்கிறாராம்.''”

Advertisment

rr

"சரியாக வெற்றி தேடித் தராத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்னு உதய நிதியைப் போலவே தி.மு.க. தலைமையும் எச்சரிக்கை விடுத்திருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, அதே சமயம் பெரும்பான்மையான கட்சித் தொண்டர் கள் என்ன சொல்றாங்கன்னா, சரியா வேலை பார்க்காமல் வெற்றி வாய்ப்பை இழந்த பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுப் பதற்குப் பதிலாக, இப்போதே அதுபோன்ற குற்றச்சாட்டை சம்பாதித்த நிர்வாகிகளையும் பொறுப்பாளர்களையும் மாற்றி விட்டு, கடுமையாக உழைக்கக் கூடியவர்களை நியமித்துவிட் டால், தேர்தலில் சிக்கல் ஏற்படு வதைத் தடுத்துவிடலாமே? என்கிறார்கள். அதேபோல், இப்போது இருக்கும் கட்சி நிர்வாகிகளில் பலரும் 70 வயதைக் கடந்தவர்களே அதிகமாம். எனவே சீனியர்களான அவர் களை ஒருங்கிணைப்பாளர்களாக வைத்துக்கொண்டு, கட்சிப் பொறுப்பை, புதியவர்களிடமும், இளைஞர்களிடமும் கொடுக்க லாமே என்ற குரலும் தி.மு.க.வில் பரவலாகக் கேட்கிறது.''”

"பா.ஜ.க.வின் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகம் அமைப்பதில் இழுபறி ஏற்பட்டி ருக்கிறதே?''”

"தமிழகத்தின் 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக, பா.ஜ.க.வின் தலைமை தேர்தல் அலுவலகத்தை அமைக்க, சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹால் திருமண மண்டபத்தை தமிழக பா.ஜ.க. புக் செய்திருந்தது. அதற்கான பூமி பூஜையும் அண்மையில் போடப்பட்டது. இந்த அலுவலகத்தை 28ஆம் தேதி திறந்துவைக்க இருந்த நிலையில், மண்டப நிர்வாகம், எங்களுக்கு பிப்ரவரி 26ஆம் தேதிவரை புக்கிங் இருப்பதால், அது முடிந்ததும் மண்டபத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டது. இதில் அப்செட்டான பா.ஜ.க. நிர்வாகிகள், திறப்பு விழா நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டனர். இதைத் தொடர்ந்து மாற்று இடங்களைச் சொல் வதிலும் அக்கட்சியின் மாநில நிர்வாகிளான கரு.நாகராஜன், சக்கரவர்த்தி ஆகியோர் இடையே முட்டல் மோதல் வெடித்திருக்கிறது. இதையெல் லாம் பார்த்து மனம் வெறுத்துப்போன அக்கட்சி யின் தொண்டர்கள், ’"ஆரம்பத்திலேயே கோணலா? விளங்கின மாதிரிதான்'’என முணுமுணுக்கிறார்கள்.''

Advertisment

"உயர்கல்வி நிறுவனங்களின் இட ஒதுக்கீட்டை பா.ஜ.க. ஒன்றிய அரசு, கபளீகரம் செய்ய முயற்சித்ததே?''”

"ஆமாங்க தலைவரே, ஒன்றிய அரசு திடீரென்று உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடுகளை ரத்து செய்யும் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, உயர் கல்வி நிறுவனங்களில் காலியாக இருக்கும் பதவிகளில், அதற்கு முன்னதாக தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும் அவற்றில் இருந்திருக்கிறார்களா? என்று ஆராய வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் அதுகுறித்து துறையின் அமைச்சகத்துக்குத் தெரிவித்துவிட்டு, அந்த இடங்களில் முன்னேறிய வகுப்பினரை நியமிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதன்மூலம் இட ஒதுக்கீட்டை அப்படியே கபளீகரம் செய்ய பா.ஜ.க. ஒன்றிய அரசு திட்டம் தீட்டியது. ஆனால் இந்த முயற்சியைப் பார்த்து நாடே அதிர்ந்து போனதால், பல தரப்பிலிருந்தும் இதற்கு கடும் எதிர்ப்புச் சூறாவளி கிளம்பியது. இதைப் பார்த்துத் திகைத்துப்போன டெல்லி, தேர்தல் நேரத்தில் எதற்கு தேனடையில் கை வைப்பானேன்? என்று அவசரம் அவசரமாக அந்த உத்தரவை வாபஸ் பெற்றுக்கொண்டுவிட்டது.''””

"பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர்களில் ஒருவரான பி.எல்.சந்தோஷின் முக்கியத்துவம் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறதாமே?''”

"பா.ஜ.க.வில் பவர்ஃபுல்லாக வலம் வந்து கொண்டிருந்தவர் பி.எல்.சந்தோஷ். இவரது அத்து மீறிய சர்வாதிகாரப் போக்கு பலத்த எதிர்ப்பை உருவாக்கியதால், சமீபகாலமாக கட்சியின் தேசியத் தலைமையால் இவர் ஓரம்கட்டப்பட்டு வருகிறார் என்கிறார்கள். இதன் எதிரொலி, அவர் அயோத்தி ராமர்கோயில் திறப்பு விழாவிற்குப் போனபோதே தெரிந்தது. அவரை எவரும் அங்கே கண்டு கொள்ளாததோடு, அவருக்கு முக்கிய பிரமுகர் களுக்கான வரிசையில் இருக்கை கிடைப்பதே பெரிய போராட்டமாக இருந்ததாம். தற்போது அவரை மேலும் டம்மியாக்கி வருகிறார்களாம். இவரைத் தொடர்ந்து கட்சியின் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில பொறுப்பாளராக இருந்த அவரது சிஷ்யரான சி.டி.ரவியின் பதவிகளும் பறிக்கப்பட்டுவிட்டன. இவருக்கு பதில் தமிழக பொறுப்பாளர்களாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், அரவிந்த் மேனனையும், சுகாதர் ரெட்டியையும் பா.ஜ.க. நியமித்திருக் கிறது. இந்த மூவருமே பி.எல். சந்தோஷின் எதிர்ப்பாளர்களாம்.'' ”

"தெலுங்கானா கவர்னர் தமிழிசை, தேர்தலில் நிற்க விரும்புகிறாரே?''”

tamil isai

"ஆமாங்க தலைவரே, தெலுங்கானாவின் ஆளுநராகவும் பாண்டிச்சேரியின் துணை நிலை ஆளுநராகவும் இருக்கும் தமிழிசை சௌந்திரராஜன், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார். இதன் பின்னணியில் தனது கவர்னர் பதவியை பிப்ரவரி 10ஆம் தேதிக்கு பிறகு அவர் ராஜினாமா செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம். அவர் தென்சென்னை அல்லது விருதுநகரில் போட்டியிட சீட் கேட்டு, பா.ஜ.க. தலைமையிடம் விண்ணப்பிக்க இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்கிறது. இதற்கிடையே, பாண்டிச்சேரியில் பா.ஜ.க. வேட்பாளராக யாரை நிறுத்தலாம்? என சர்வே எடுக்க மத்திய உளவுத்துறையிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார் ஒன்றிய உள்துறை அமைச்சரான அமித்ஷா. இதற்காக மூன்று பேர் கொண்ட ஒரு பட்டியலைக் கொடுத்து மக்களின் ஆதரவு யாருக்கு அதிகம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதே இந்த சர்வேயின் நோக்கமாம். அதன்படி மத்திய உளவுத்துறை எடுத்த சர்வேயில், பாண்டிச்சேரியின் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரியான சத்தியமூர்த்திக்கே அதிக ஓட்டுகள் விழுந்துள்ளதாம். இந்த சர்வே முடிவுகளை அமித்ஷாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது உளவுத்துறை.''”

"தமிழக பா.ஜ.க.வின் விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர்பிரசாத்ரெட்டியைக் கைது செய்ய, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறதே?''”

rr

"பா.ஜ.க. பெண் நிர்வாகி ஆண்டாள் மற்றும் அவரது சகோதரி தேவி ஆகியோரின் வீட்டுக்குள், அமர்பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர் மற்றும் அமருக்கு நெருக்கமான பா.ஜ.க. மகளிர் அணி பெண் நிர்வாகிகளான நிவேதா, கஸ்தூரி உள்ளிட்டவர்கள் அத்துமீறி நுழைந்து கண்மூடித்தனமாகத் தாக்கினார்களாம். இது தொடர்பாக, கோட்டூர்புரம் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அமருக்கு வேண்டப் பட்ட காவல்துறை அதிகாரிகளால் புகார் கண்டுகொள்ளப் படவில்லையாம். இது உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன் கவனத்துக்குச் செல்ல, இதைத் தொடர்ந்து அடையாறு டெபுடி கமிஷனர் இந்த விவகாரத்தில் களமிறங்கிய நிலையிலேயே அமர் உட்பட அவர் தரப்பினர் மீது 9 பிரிவுகளில் வழக்கு போடப்பட்டிருக்கிறது. தன்னை மடக்க சிறப்புக்குழுக்கள் போடப்பட்டதை அறிந்த அமர்பிரசாத், சிக்கினால் குண்டர் சட்டம்தான் என்று புரிந்துகொண்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம்.''”

"குமரி மாவட்டப் பிரமுகர் ஒருவரை வருமான வரித்துறை குறி வைத்திருக்கிறதே?''”

rr

"டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. கட்சியில் இருந்த செந்தில்முருகன், கடந்த தேர்தலில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை எதிர்த்து களமிறங்கியிருந்தார். எனினும் தேர்தலில் இருவருமே வெற்றி பெறவில்லை. இந்த செந்தில்முருகன், தேர்தலுக்குப் பின் தி.மு.க.வில் இணைந்துவிட்டார். அப்படிப்பட்டவர் மீது இப்போது பல வில்லங்கப் புகார்கள் வந்துகொண்டி ருக்கின்றன. அதில் ஒன்றாக, குமரி மாவட்டம் பார்வதிபுரம் அருகே 200 கோடி ரூபாய் மதிப் பிலான நிலத்தை 10 கோடி ரூபாய் கொடுத்து அக்ரிமெண்ட் போட்டிருக்கிறாராம். இந்த நிலத் தில் பல வில்லங்கங்கள் இருப்பதாக வும், அந்த வில்லங்கங்களை சரி செய்ய மாவட்ட ஆட்சி நிர்வாகம் செந்தில் முருகனுக்கு உதவுவதாகவும், இதில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடந்திருப்ப தாகவும் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறைக்கு புகார்கள் சென்றிருக் கிறதாம். எனவே விரை வில் வருமானவரித் துறை இவரைக் குறி வைத்து அதிரடி ரெய்டை நடத்த விருப்பதாகத் தகவல் கள் வருகிறது.''”

"நானும் ஒரு முக்கியமான தக வலைப் பகிர்ந்துக் கறேன். தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சி 28ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது காங்கிரஸுக்கு நெல்லை, கன்யாகுமாரி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 சீட்டுகளை மட்டுமே ஒதுக்க இய லும் என தி.மு.க. தரப்பில் சொல்லப்பட் டது. இதைத் தொடர்ந்து உடன்பாடு எட்டப்படாத நிலையில், ’மீண்டும் பேசுவோம்’ என்று சொல்லிவிட்டு காங் கிரஸ் தரப்பினர் எழுந்து வந்துவிட்டனர். காங் கிரஸுக்கு அதிகபட்சம் 6 சீட் வரை ஒதுக்குவதுதான் தி.மு.க.வின் முடிவு என ஏற்கனவே நாம் பேசிக் கொண்டது போல்தான் நடக்கும்போல் தெரி கிறது.''”

________________

இறுதிச் சுற்று!

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அலுவலகத்தை வேளச்சேரியில் திங்கள்கிழமை (29-01-2024) திறந்து வைத்திருக்கிறார் பா.ஜ.க. தலைவர். இந்த நிகழ்வில் கேசவவிநாயகம், வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். வேளச்சேரி ராம்நகர் 6-வது பிரதான சாலையில் கெனால் ஓரமாக இருக்கும் கட்டிடத்தில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டடத்தில் பல வில்லங்கங்கள் இருப்பதால் கட்டிடப்பணிகள் முழுமை பெறாமல் இருக்கிறது. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையில் இந்த ப்ராப்பர்ட்டி இருப்பதால், துறையிலிருந்து பெறவேண்டிய சில அனுமதிகள் பெறப்படவில்லை. அதேபோல, இந்தக் கட்டடத்துக்குச் செல்வதற்கு கெனாலில் தற்காலிகமாக ஒரு பாலத்தைக் கட்டியிருக்கிறார்கள். இதற்கான உறுதித்தன்மை சான்றிதழும், பாலம் கட்ட நீர் மேலாண்மைத்துறையிடமிருந்து தடையின்மைச் சான்றித ழும் வாங்கப்படவில்லை. இப்படி பல வில்லங்கங்கள் நிறைந்த கட்டிடத்தில்தான் தேர்தல் அலுவலகத்தை பா.ஜ.க. தலைவர்கள் திறந்துள்ளனர். இந்த விவகாரங்கள் சென்னை கார்ப்பரேசன் அதிகாரிகளுக்கும், நீர் மேலாண்மைத் துறையினருக்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில்... பா.ஜ.க.வில் பரபரப்பு ஏற்பட்டது.

-இளையர்