ண்ணாமலையின் பேச்சும் அமித்ஷாவின் ஃபார்முலாவும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை பதம் பார்த்துள்ளது என்கிறார்கள் அ.தி.மு.க.வின் சீனியர்கள். மீண்டும் நல்லுறவை ஏற்படுத்த இரு கட்சிகளின் தலைமைகளும் முயற்சி எடுத்து வந்தாலும், தனி ரூட்டில் பயணிப்பதிலிருந்து அண்ணாமலை பின்வாங்கமாட்டார் என்கிறது கமலாலயம்.

amitsha

அறிஞர் அண்ணாவை சிறுமைப்படுத்தும் வகையில் அவதூறாகப் பேசிய அண்ணாமலைக்கு, மாஜி அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் தொடங்கி அ.தி.மு.க. தலைவர்கள் பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

ஒரு கட்டத்தில், "பா.ஜ.க.வுடன் தற்போது கூட்டணி இல்லை. அ.தி.மு.க.வின் நிலைப்பாடு இது. எடப்பாடியின் அனுமதியுடன்தான் இதைச் சொல்கிறேன். கூட்டணி என்பதெல்லாம் தேர்தல் காலங்களில் முடிவெடுப்பது''’என்று அதிரடி காட்டினார் ஜெயக்குமார்.

அ.தி.மு.க. தொண்டர்கள் இதனை வரவேற்று மகிழ்ந்த நிலையில், "கூட்டணியாவது கூந்தலாவது. நன்றி மீண்டும் வராதீர்கள்' என்று பா.ஜ.க.வை சீண்டும் வகையில் போஸ்டர் யுத்தத்தை தொடங்கியிருக்கிறார்கள் அ.தி.மு.க.வினர். இந்த போஸ்டர் யுத்தம் அ.தி.மு.க.-பா.ஜ.க. வட்டாரங் களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

"கூட்டணிக்குள் என்னதான் நடந்தது?' என அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் சிலரிடம் விசாரித்தபோது, "டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டன. அதில், தொகுதிகளின் எண்ணிக்கையை உறுதிப் படுத்துவதுதான் முதன்மையாக இருந்தது. தொகுதிப் பங்கீடு பற்றி நேரடியாகவே பேசியிருக் கிறார் அமித்ஷா.

ss

Advertisment

அதாவது, தேசிய கட்சியும் மாநில கட்சியும் கூட்டணி வைக்கும்போது, நாடாளுமன்றத் தேர்தல் எனில் தேசிய கட்சி அதிக இடங்களிலும், சட்டமன்றத் தேர்தல் எனில் மாநில கட்சி அதிக இடங்களிலும் போட்டியிடுவதுதான் ஆரோக்கியம். இதற்கு தமிழக அரசியலே உதாரணமாக இருந்துள்ளது.

எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உருவானபோது, நாடாளுமன்றத் தேர்தலில் 70 சதவீத இடங்களை காங்கிரசுக்கு ஒதுக்கினார் எம்.ஜி.ஆர். அதாவது, காங்கிரஸ் 28 இடங்களிலும், அ.தி.மு.க. 12 இடங்களிலும் என தொகுதி பங்கீடுகள் நடந்தன. (இதில், 1 சீட்டை கா.கா.தே.க.வுக்கு ஒதுக்கிவிட்டு 27-ல் போட்டியிட்டது காங்கிரஸ்) அதேபோல, 1991 தேர்தலில் ஜெயலலிதாவும் இதே ஃபார்முலாவை (28:12) பின்பற்றினார். அதனால், அந்த ஃபார்முலா வின்படி பா.ஜ.க.வுக்கு 28 இடங்களும், அ.தி.மு.க. 12 இடங்களும் பகிர்ந்துகொள்ளலாம். அ.தி.மு.க. வின் ஆகப்பெரிய தலைவர்களான எம்.ஜி.ஆர்.,dd ஜெயலலிதா பின்பற்றிய அரசியலை உங்களிடமும் எதிர்பார்க்கிறோம்'' என்றெல்லாம் அமித்ஷா சொல்லவும், எடப்பாடிக்கு அதிர்ச்சி. இதனை எடப்பாடி உறுதியாக எதிர்க்க வும் இல்லை; ஏற்கவும் இல்லை. "தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் இந்த ஃபார்முலாவெல்லாம் ஒத்துவராது' என எடப்பாடி சொல்ல நினைத்திருக்கிறார்... ஆனால், அவரால் முடிய வில்லை.

இந்த சந்திப்பு நடந்த நாட்களில் கவர்னர் ரவியும் டெல்லியில்தான் இருந்தார். அமித்ஷா- எடப்பாடி சந்திப்புக்கு முன்னதாக, அமித்ஷாவை சந்தித்து தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளின் ஊழல் பட்டியல்கள் அடங்கிய 2 லெதர் பேக்குகளை கொடுத்திருக்கிறார் கவர்னர்.

Advertisment

அதில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் அரசியல் களத்தில் மட்டும்தான் எதிரிகள். மற்றபடி தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அதிகாரம் பெற்றுவிட நாம் உதவிடக்கூடாது என இரண்டு கட்சிகளின் தலைமையும் ரகசிய உடன்பாட்டில் இருக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சியின்போது தி.மு.க.வினருக்கு அரசு காண்ட்ராக்ட்டுகள் கொடுக்கப்பட்டன. தற்போ தைய தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க.வினருக்கு அரசு காண்ட்ராக்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மணல் விற்பனை அரசு செய்வ தாக ஆணைகள் இருந்தா லும் மணல் கொள்ளை யர்கள் கையில்தான் இந்த பிசினெஸ் இருக் கிறது. இரண்டு கட்சி களுக்குமே மணல் கொள்ளையர்கள் தான் பணம் சம்பாதித்துக் கொடுக்கின்றனர். அ.தி. மு.க. ஆட்சியில் இந்த பிசினஸை தங்கள் கஸ்டடியில் வைத்துக் கொண்டு, எடப் பாடி பழனிச்சாமிக்கு யார் கப்பம் கட்டினார் களோ, அவர்கள் கையில்தான் தி.மு.க. ஆட்சியிலும் மணல் பிசி னஸ் இருக்கிறது. அவர்கள் தான் தி.மு.க.வுக்கு கப்பம் கட்டுகிறார்கள். இந்த பிசினஸில் புழங்கும் கோடிகள்தான் தேர்தல் காலத்தில் ஓட்டுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. அதனால் பிசினஸ் ரீதியாக இரண்டு கட்சிகளும் அண்டர்ஸ்டேண்டிங்கில் இருக்கின் றன என்கிற குறிப்புகளும் கவர்னர் கொடுத்த கோப்பில் இருக்கிறதாம். இதையெல்லாம் சொல்லித்தான், எடப்பாடியிடம், எம்.ஜி.ஆர். ஃபார் முலாவை முன்வைத்திருக்கிறார் அமித்ஷா. அதனால்தான், அமித்ஷாவை எதிர்க்க முடியாமல் மௌனமாக இருந்துள்ளார்.

சந்திப்புக்கு பிறகே எடப்பாடியின் மௌனம் உடைந்திருக்கிறது. பா.ஜ.க.வுக்கு 28 சீட்டுகள் என்பதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. அப்போதுதான், அண்ணாவை சிறுமைப்படுத்திய அண்ணாமலைக்கு எதிராக சி.வி.சண்முகம் தாக்கு தலை நடத்த, அதனை ஊதிப் பெரிதாக்குங்கள் என ஜெயக்குமாருக்கு உத்தரவிட்டார் எடப்பாடி. அப்படி ஊதிப் பெரிதாக்கியதில்தான் கூட்டணி முறிந்தது என சொல்கிற அளவுக்கு சூழல் உருவானது” என்று பின்னணிகளை விவரிக்கின்றனர்.

dd

அ.தி.மு.க.வுக்குள் மேலும் நாம் விசாரித்த போது, "பா.ஜ.க.வுக்கு 28 சீட்டுகளை கொடுத்து விட்டு தேர்தலில் போட்டியிடுவதைவிட கேவலம் வேறு எதுவும் நமக்கு இல்லை. நம்மை பொறுத்த வரை, சட்டமன்றத் தேர்தல்தான் முக்கியம். நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமில்லை. அதனால் நாம் கொடுக்கிற சீட்டை பா.ஜ.க. வாங்கிக்கொண் டால் கூட்டணியில் அதை வைத்துக்கொள்ளலாம். அவர்களின் ஃபார்முலா எனில் பா.ஜ.க.வே நமக்கு வேண்டாம் என்பதைத்தான் எடப்பாடி எங்களிடம் சொல்லிவருகிறார். மேலும், காங்கிரசுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருக்கும் சுனில், எடப் பாடியிடமும் ரகசியமாக, நெருக்கமாக இருப்பதால் அவரிடமிருந்து கிடைக்கும் தகவல்களை வைத்து, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கூட்டணிக் குத்தான் சாதகமாக இருக்கும். மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையாது. காங்கிரஸ் கூட்டணிதான் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்கிற கணக்கைப் போட்டு வைத்துள்ளார் எடப்பாடி” என்றும் சுட்டிக்காட்டு கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்க மான மாஜிக்கள். இதற்கிடையே, அறிஞர் அண்ணாவை தவறாக சித்தரித்ததால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்குள் ஏற்பட்ட விரிசல் களைத் தொடர்ந்து, "கூட்டணி குறித்து யாரும் விமர்சிக்கக் கூடாது' என பா.ஜ.க. தலைவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் பா.ஜ.க.வின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ். அதையறிந்த எடப்பாடி, பா.ஜ.க. பாணியில், "கூட்டணி பற்றி விமர்சிக்காதீர்கள்' என அ.தி.மு.க.வினருக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில், பா.ஜ.க. தரப்பில் விசாரித்த போது,’"நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையில்தான் கூட்டணி இருக்கவேண்டும். அ.தி.மு.க.வுக்கு, பா.ஜ.க.தான் சீட்டுகளை பகிர்ந் தளிக்க வேண்டும் என கட்சி தலைமையிடம் பலமுறை வலியுறுத்தி வருகிறார் அண்ணாமலை. இதற்கு அ.தி.மு.க. தலைமை ஒத்துழைக்க மறுத்தால், எடப்பாடியை தனிமைப்படுத்த வேண்டும். அவரை எந்தக் கோணத்திலும் நம்பிடக்கூடாது. வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காகவே பா.ஜ.க.வுடன் நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொள்கிறார். உண்மையில் பா.ஜ.க. கூட்டணியை அவர் விரும்பவில்லை. பா.ஜ.க.வுடன் நெருக்கமாக இருப்பதுபோல காட்டிக்கொண்டு தேர்தல் நெருக்கத்தில் பா.ஜ.க.வை கழட்டிவிடுவதுதான் எடப்பாடியின் திட்டம்.

aa

அதனால் எம்.ஜி.ஆர் ஃபார்முலாப்படி சீட்டுகளை பெறவேண் டும். பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், ஓ.பி.எஸ்., தினகரன் உள்ளிட்டவர் களை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு அவர்களுக்கு இந்த 28 சீட்டுகளில் இருந்து ஒதுக்கீடு செய்யலாம். இதற்கு எடப்பாடி ஒத்துக்கொள்ள வில்லை எனில், 2014-நாடாளுமன்றத் தேர்தலின்போது உருவாக்கப்பட்ட கூட்டணியைப் போல பா.ஜ.க. தலைமையில் மற்றவர்களை இணைத்து இந்த முறையும் கூட்டணி அமைக்கலாம். 2014-ஐ ஒப்பிடும்போது தற்போது தமிழகத்தில் பா.ஜ.க.வின் செல்வாக்கு மக்களிடம் அதிகரித் திருக்கிறது.

அதனால், எடப்பாடியும் அ.தி.மு.க.வும் தனிமைப்படுத்தப்பட் டால் தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் தான் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நேரடி போட்டி உருவாகும். அந்த நேரடி போட்டி, 2026-சட்ட மன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு நன்மையை கொடுக்கும். இது தவிர, "தி.மு.க. ஊழல்களைச் சொல்லும் பா.ஜ.க., அ.தி.மு.க. ஊழல்களை ஏன் சொல்லவில்லை?' என்கிற கேள்வி தமிழக அரசியலில் இருக்கிறது.

அதனால் அவர்களின் ஊழல் களையும் பா.ஜ.க. அம்பலப்படுத்த வேண்டும். அப்படி அம்பலப்படுத்தி னால் தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு மாற்று நாம்தான் என்கிற கருத்தை உருவாக்க முடியும். எனவே, பா.ஜ.க. தலைமையில் கூட்டணி உருவாக்குவதுதான் தேர்தல் அரசியலில் பா.ஜ.க.வுக்கு நல்லது என்றெல்லாம் தேசிய தலைமைக்கு ஏற்கனவே ரிப்போர்ட் அனுப்பி யிருக்கிறார் அண்ணாமலை. அதன் அடிப்படையில்தான் எடப்பாடியிடம், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஃபார்முலாவை பேசியிருக்கிறார் அமித்ஷா.

இதற்கான உறுதியான பதில் எடப்பாடியிடமிருந்து சொல்லப்படாத தால்தான், கூட்டணி குறித்த விமர்சனங்கள் உருவானதும் அதனை தடுக்கும் வகையில், "கூட்டணி பற்றி யாரும் பேசக்கூடாது; அதனை மேலிடம் பார்த்துக்கொள்ளும்' என தமிழக பா.ஜ.க.வுக்கு உத்தரவிட்டது எங்களின் தேசிய தலைமை''’என்கிறார்கள் பா.ஜ.க.வின் மேலிடத் தொடர்பாளர்கள்.

சீட் பகிர்வில் அமித்ஷா முன்வைத்த ஃபார்முலாவை எடப்பாடி ஏற்க மறுத்தால், அ.தி.மு.க.வில் உள்ள பா.ஜ.க. ஆதரவாளர்களான தங்கமணி மற்றும் வேலுமணியை வைத்து அ.தி.மு.க.வை மீண்டும் ஒருமுறை உடைக்கும் மாஸ்டர் ப்ளானில் இருக்கிறது பா.ஜ.க. தலைமை!

_____________

இறுதிச் சுற்று!

ff

வருகிற பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, தேர்தல் திட்டப் பணிகளை கொங்கு மண்டலத்தில் தொடங்கவிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேற்கு மண்டலத்தின் மைய நகரான திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வருகிற 24-ஆம் தேதி சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி என 7 மாவட்டங்களைச் சேர்ந்த 14 மாவட்ட தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப் பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தி.மு.க.வைச் சேர்ந்த 14,500 வாக்குச்சாவடி முகவர்கள், மாவட்ட நிர்வாகிகள் 1500 பேர் என மொத்தம் 16 ஆயிரம் பேர் கலந்துகொள்கிறார்கள். சீனியர் அமைச்சரான செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதனின் சொந்த தொகுதியான காங்கேயம் அருகில் உள்ள படியூர் கிராமத்தில் இந்த கூட்டம் நடக்கவிருப்பதால், அமைச்சர் சாமிநாதனின் ஏற்பாட்டில் பிரம்மாண்டமான பந்தல்களும், அதற்கான தயாரிப்புப் பணிகளும் நடந்துவருகிறது. அந்த பணிகளை அமைச் சர்கள் சாமிநாதனும், முத்துசாமியும் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினர்.

-ஜீவா தங்கவேல்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ் நாட்டுக்கு தண்ணீரைத் திறந்துவிட மறுத்த கர்நாடகம், இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தமிழ்நாடு அரசும் எதிர் மனுத்தாக்கல் செய்ய, அதன் மீதான விசாரணையில், கடந்த 21ஆம் தேதி, வியாழனன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்கக் கோரிய கர்நாடகத்தின் கோரிக்கையை நிராகரித்தது. அதேபோல், 24,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கையையும் நிராகரித்தது. அதேவேளை, கர்நாடகத்தில் தற்போது வறட்சியான சூழல் நிலவுவதால், வறட்சிக்கால அட்டவணைப்படி தமிழ்நாட்டுக்கு உரிய நீரைத் திறந்துவிட வேண்டுமென்று கர்நாடகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

-கீரன்