தேர்தல் பத்திரம்! வெளிக்கிளம்பிய பூதம்! -டேமேஜாகும் பா.ஜ.க. இமேஜ்!

ss

யாம் பாண்ட்...

ஸ்கேம் பாண்ட் 056' என சமூக வலைத் தளங்களில் மோடியைக் கலாய்த்து மீம்கள் தூள்பறத்திக்கொண்டிருக்கின்றன. ஊடகங் களில் திரும்புகிற பக்க மெல்லாம் எந்தெந்த நிறுவனம் எத்தனை கோடி கொடுத்தது என்கிற லிஸ்ட் டும், தொலைக்காட்சி விவாத நிகழ்வுகளில் தேர்தல் பத்திர விவகாரமும்தான் நாறிக்கொண்டி ருக்கிறது.

தேர்தல் பத்திர வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட விவரங்கள், தேர்தல் பத்திரம் என்ற பெயரில் நிகழ்ந்த ஒரு மாபெரும் ஊழல் நடைமுறையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக் கிறது.

bonds

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதிப் பத்திரங்களை வழங்கியவர் களின் பட்டியலைக் கூர்ந்து நோக்கினால் ஒவ்வொன் றும் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறு வனங்களாக இருக்கின்றன. இரண்டாவதாக அமலாக்கத் துறை, வருமான வரித் துறையால் சோதனைக்கு ஆளான நிறுவனங் களாக இருக்கின்றன.

மொத்தமுள்ள 22,217 பத்திரங்களில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கொடையளித்திருக்க, 187 பத்திரங்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு கொடையளித்திருந்தன.

தேர்தல் பத்திரம் வாங்கி நன்கொடையளித்தவர்களில் முன்னணியில் இருக்கும் 30 பேர்களில் 14 பேர் அமலாக்கத்துறை, வருமானவரித் துறை என ஏதோ ஒருவகையில் சோதனைக்கு உள் ளானவர்களாக இருக்கிறார்கள். "ரெய்டு வரும் முன்னே... டொனேஷன் கிடைக்கும் பின்னே' என்ற புதுமொழியை உருவாக்குமளவுக்கு பா.ஜ.க. அடித்து ஆடியிருக்கிறது.

லாட்டரி அதிபர் மார்ட்டினின் பியூச்சர் கேம்பிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம்தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வழங்கி முதலிடம் பிடித்துள்ளது. அந் நிறுவனம் 1368 கோடி ரூபாய் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளது.

கிராஸிம் இன்டஸ் ட்ரீஸ், பாரதி ஏர்டெல், வேதாந்தா லிமிடெட், மேகா என்ஜினியரிங், சன் பார்மா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாங்கிய பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இதில் மேகா என் ஜினியரிங், தெலுங்கானா அரசின் பல்வேறு உள்கட்டமைப்புப் பணி களைப் பெற்றுச் செய்த நிறுவனமாகும். இந்த நிறுவனம் 966 கோடிக்கு நிதியளித்துள்ளது. ஆகஸ்ட் 2020லில் 4500 கோடி மதிப்பிலான ஜோஸிலா சுரங்கப்பாதை திட்டத்தைப் பெற்றி ருக்கிறார்கள், அடுத்த மாதம் அக்டோபரில் 20 கோடி தேர்தல் நன்கொடை ssவழங்கியிருக்கிறது இந்நிறுவனம். 2022 டிசம்பரில் பி.கே.சி. புல்லட் ட்ரெய்ன் ஸ்டேஷன் கான்ட்

யாம் பாண்ட்...

ஸ்கேம் பாண்ட் 056' என சமூக வலைத் தளங்களில் மோடியைக் கலாய்த்து மீம்கள் தூள்பறத்திக்கொண்டிருக்கின்றன. ஊடகங் களில் திரும்புகிற பக்க மெல்லாம் எந்தெந்த நிறுவனம் எத்தனை கோடி கொடுத்தது என்கிற லிஸ்ட் டும், தொலைக்காட்சி விவாத நிகழ்வுகளில் தேர்தல் பத்திர விவகாரமும்தான் நாறிக்கொண்டி ருக்கிறது.

தேர்தல் பத்திர வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட விவரங்கள், தேர்தல் பத்திரம் என்ற பெயரில் நிகழ்ந்த ஒரு மாபெரும் ஊழல் நடைமுறையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக் கிறது.

bonds

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதிப் பத்திரங்களை வழங்கியவர் களின் பட்டியலைக் கூர்ந்து நோக்கினால் ஒவ்வொன் றும் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறு வனங்களாக இருக்கின்றன. இரண்டாவதாக அமலாக்கத் துறை, வருமான வரித் துறையால் சோதனைக்கு ஆளான நிறுவனங் களாக இருக்கின்றன.

மொத்தமுள்ள 22,217 பத்திரங்களில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கொடையளித்திருக்க, 187 பத்திரங்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு கொடையளித்திருந்தன.

தேர்தல் பத்திரம் வாங்கி நன்கொடையளித்தவர்களில் முன்னணியில் இருக்கும் 30 பேர்களில் 14 பேர் அமலாக்கத்துறை, வருமானவரித் துறை என ஏதோ ஒருவகையில் சோதனைக்கு உள் ளானவர்களாக இருக்கிறார்கள். "ரெய்டு வரும் முன்னே... டொனேஷன் கிடைக்கும் பின்னே' என்ற புதுமொழியை உருவாக்குமளவுக்கு பா.ஜ.க. அடித்து ஆடியிருக்கிறது.

லாட்டரி அதிபர் மார்ட்டினின் பியூச்சர் கேம்பிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம்தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வழங்கி முதலிடம் பிடித்துள்ளது. அந் நிறுவனம் 1368 கோடி ரூபாய் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளது.

கிராஸிம் இன்டஸ் ட்ரீஸ், பாரதி ஏர்டெல், வேதாந்தா லிமிடெட், மேகா என்ஜினியரிங், சன் பார்மா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாங்கிய பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இதில் மேகா என் ஜினியரிங், தெலுங்கானா அரசின் பல்வேறு உள்கட்டமைப்புப் பணி களைப் பெற்றுச் செய்த நிறுவனமாகும். இந்த நிறுவனம் 966 கோடிக்கு நிதியளித்துள்ளது. ஆகஸ்ட் 2020லில் 4500 கோடி மதிப்பிலான ஜோஸிலா சுரங்கப்பாதை திட்டத்தைப் பெற்றி ருக்கிறார்கள், அடுத்த மாதம் அக்டோபரில் 20 கோடி தேர்தல் நன்கொடை ssவழங்கியிருக்கிறது இந்நிறுவனம். 2022 டிசம்பரில் பி.கே.சி. புல்லட் ட்ரெய்ன் ஸ்டேஷன் கான்ட்ராக்டைப் பெற்றிருக்கிறது, அதேமாதத்தில் ரூ.56 கோடி தேர்தல் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. 2023 ஏப்ரலில் இந்நிறுவனம் ரூ.140 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. அடுத்த மாதத்தில் ரூ 14,400 கோடி மதிப்பிலான தானே -போரிவா- இரட்டைச் சுரங்கப் பாதை ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சர்ச்சைகள் வெடித்த நிலையில் மேகா நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்த அந்நிறுவனம் மேற்கொண்டுவரும் பணிகள் பற்றிய விவரங்கள் நீக்கப்பட்டுள்ளன.

அடுத்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய நிறுவனம் க்விக்சப்ளை செய்ன் பிரைவேட் லிமிடெட். இந்நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.410 கோடி நிதியளித்துள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் வழங்கியுள்ள நன்கொடை ரூ.360 கோடி. அந்த ஆண்டு க்விக்சப்ளை நிறுவனத்தின் நிகர லாபமே ரூ.21.27 கோடிதான். அதெப்படி ரூ.22 கோடி லாபம் சம்பாதிக்கும் நிறுவனம், ரூ.360 கோடி நிதியளிக்க முடியும் என்கிறீர்களா? முடியும், ஏனெனில் அந்த நிறுவனம், ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்தது. ஆக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெயரால் நன்கொடை தரவிரும்பாமல், க்விக் சப்ளை நிறுவனத்தின் பெயரால் பணம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆகஸ்ட் 04, 2023-ல் கல்பதரு இன்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் இயக்குநர்களின் வீடுகளில் 600 கோடி ரூபாய் அளவுக்கு நிதி முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் கூறி வருமான வரித்துறை சோதனை மேற்கொண் டது. அக்டோபர் 10, 2023-ல் இந்நிறுவனம் ரூ.25.5 கோடி நன்கொடை அளித்திருக்கிறது. அதன்பிறகு வழக்கு வேகமிழந்துள்ளது.

பாகிஸ்தான் என்றாலே முகம்சுளிக்கும் பா.ஜ.க. ஆனால் புல்வாமா தாக்குதல் நடந்த நான்காவது நாளில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹப் பவர் என்ற நிறுவனம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியிருப்பதாகத் தெரியவருகிறது.

ஜின்டால் பவர் அண்ட் ஸ்டீல் தேர்தல் பத்திரங்கள் மூலமாக 2022, அக்டோபர் 7-ல் நன்கொடை கொடுக்க, மூன்றே நாட்களில் காரே பால்மா நிலக்கரிச் சுரங்க உரிமம் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை புகழ் வேதாந்தா நிறுவனம் 2021, மார்ச் 3-ஆம் தேதி ராதிகாப்பூர் வெஸ்ட் பிரைவேட் சுரங்க உரிமையைப் பெற்றிருக்கிறது. ஏப்ரல் மாதம், 25 கோடிக்கு தேர்தல் பத்திர நன்கொடை அளிக்கப்பட்டிருக்கிறது.

ஷீர்டி சாய் எலெக்ட்ரிகல் நிறுவனம் டிசம்பர் 2023-ல் ஐ.டி. துறையால் சோதனை யிடப்பட்டிருக்கிறார்கள், ஜனவரி 2024-ல் ரூ.40 கோடி தேர்தல் பத்திரம் வாங்கியிருக் கிறார்கள்.

பாரதி ஏர்டெல் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு ரூ.247 கோடி அளித்துள்ளது. சில வருடங்களுக்கு முன் செல்போன் நெட்வொர்க் நிறு வனங்களின் மாதாந்திர குறைந்தபட்ச டாப் அப் தொகை 99 ரூபாயிலிருந்து 155-ஆக, கிட்டத்தட்ட 50-க்கும் அதிக மான சதவிகிதம் உயர்ந்தது. இத்தகைய உயர்வுக்கு அரசுத் தரப்பிலிருந்து எந்த ஆட் சேபனையும் எழவில்லை. இதன் பின்னணியில் இத்தகைய நன்கொடைகள் இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

ff

கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டு மல்லாமல் மருத்துவமனை, மருந்து நிறுவனங்கள் போன்றவற்றையும் பா.ஜ.க. விட்டுவைக்கவில்லை. மருந்துக் கம்பெனிகள், மருத்துவமனைகள் ஒட்டுமொத்தமாக ரூ.900 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளதாக பட்டியலிலிருந்து தெரிய வருகிறது. டாக்டர் ரெட்டீஸ் லேப் ரூ.80 கோடிக்கும், யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி நிறுவனம் ரூ.162 கோடிக்கும், டோரன்ட் பார்மாசூட்டிகல்ஸ் ரூ.77.5 கோடிக்கும் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன.

கொரோனா காலகட்டத்தில் பொது மக்களுக்கு அரசு சார்பில் கோவிஷீல்டு, கோவாக்சின் என இரண்டு தடுப்பு ஊசிகள்தான் இந்தியாவில் அனைவருக்கும் போடப்பட்டன. கோôவிஷீல்டின் தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பல்வேறு கால கட்டங்களில் ரூ.502 கோடி நிதியளித்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. பதிலுக்கு, இந்தியாவில் அரசு கோவிட் தடுப்பூசி நிகழ்வு களில் கோவிஷீல்டு தடுப்பூசியே 79 சதவிகிதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த இடத்தில் நாம் இன்னொரு தகவலையும் உற்றுநோக்க வேண்டும். தேர்தல் பத்திரத் திட்டம் நடைமுறைக்கு வந்தபோது ஒரு நிறுவனம், அதன் மூன்று காலாண்டு களில் சம்பாதித்த நிகர லாபத்தில் 7.5 சதவிகிதம்தான் நிதியளிக்கமுடியும் என இருந்தது. இந்த உச்சவரம்பை 2017-ல் எத்தனை சதவிகிதம் வேண்டுமானாலும் கொடையளிக்க லாம் என பா.ஜ.க. திருத்தியது.

காங்கிரஸ் பொதுச்செயலாளரான ஜெய் ராம் ரமேஷ், “சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்” என தேர்தல் பத்திர திட்டத்தை விமர்சிப்பதோடு, “"எஸ்.பி.ஐ. வங்கி 2019 ஏப்ரல் முதல் வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களையே தற்போது கொடுத் துள்ளது. மாறாக, 2018 மார்ச்சிலேயே முதல் செட் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டு விட்டன. அதில் இடம்பெற்ற 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வழங்கவில்லை''’எனக்கூறி நம்மை திகைப்படைய வைக்கிறார்.

________________

தேர்தல் பத்திர வழக்கின் காலக்குறிப்புகள்:

செப்டம்பர் 14, 2017: தேர்தல் பத்திர வழக்கில் பிரதான மனுதாரரான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தை அணுகியது.

அக்டோபர் 03, 2017-ல் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கும் ஒன்றிய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. ஜனவரி 2, 2018-ல் ஒன்றிய அரசு தேர்தல் பத்திர திட்டம் குறித்து அறிவிக்கை செய்தது.

அக்டோபர் 16, 2023: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

நவம்பர் 2, 2023: உச்சநீதிமன்றம் தீர்ப்பை ரிசர்வ் செய்தது.

பிப்ரவரி 15, 2024: பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமைக்கான அரசியலமைப்பு உரிமையை மீறுவதாகக் கூறி, இந்தத் திட்டத்தை ரத்துசெய்து உச்சநீதிமன்றம் ஒருமனதாகத் தீர்ப்பளித்தது.

மார்ச் 4, 2024: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தேர்தல் பத்திரத்தின் விவரங்களை வெளியிட ஜூன் 30 வரை கால அவகாசம் கோரி உச்சநீதி மன்றத்தை அணுகியது.

மார்ச் 7: எஸ்.பி.ஐ.க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மார்ச் 11: உச்சநீதிமன்றம் கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரிய எஸ்.பி.ஐ.யின் மனுவை நிராகரித்து, தேர்தல் பத்திரங்களின் விவரங்களை மார்ச் 12-ம் தேதி முடிவதற்குள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்குமாறு உத்தரவிட்டது.

மார்ச் 15: தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட விவரங்களில் தேர்தல் பத்திரங்களின் பிரத்யேக எண்களை எஸ்.பி.ஐ. வழங்காததற்கு எதிராக உச்சநீதி மன்றத்தை பிரசாந்த் பூஷன் அணுகினார். உச்சநீதிமன்றம் அந்த விவரங்களையும் அளிக்கும்படி எஸ்.பி.ஐ. வங்கிக்கு உத்தரவிட்டதுடன், அதை ஏன் தரவில்லை யென மார்ச் 17-ஆம் தேதி விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

__________

நம்பர் 1 கொடையாளர்!

-மார்ட்டின் மீது எழும் சந்தேக வளையம்!

லாட்டரி அதிபர் மார்ட்டின் 2019 முதல் 2024 வரை 1368 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கி, பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார்.

dd

மார்ட்டினின் பூர்விகம் பர்மா எனப்படும் ரங்கூன். அவர் இந்தியா வுக்குள் நுழைந்து பின்னாளில் கோவையைத் தஞ்சமடைந்து லாட்டரி மன்னனாக உருவெடுத்தார். சிக்கிம் மாநில லாட்டரியை நடத்திவந்த அவர், அதன் பரிசுகளில் நடத்திய ஊழல் மூலம் மாநில அரசை 900 கோடி வரை ஏய்த்ததாக புகார் கிளம்பியது. நாட்டைவிட்டே தப்பியோடிய அவர் மேற்குவங்க அரசுக்கு தாராளமாக நிதி தந்து மேற்கு வங்கத்தைத் தஞ்சமடைந்தார்.

பின் லாட்டரித் தொழிலுடன் ஹோட்டல், பியூச்சர் கேமிங் என மேலும் பல தொழில்களை இணைத்துக்கொண்டாலும் சர்ச்சை யும் மார்ட்டினும் இணைபிரியாத ஜோடியாகவே இருந்தது. 2011-ல் கோவையில் நில அபகரிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டார்.

2019, ஏப்ரல் 30-ல் மார்ட்டி னுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரியில் காசாளராகப் பணிபுரிந்துவந்த பழனிச்சாமி இந்த விசாரணைக்குப் பின் மே 3-ஆம் தேதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அப்போதுதான் அவர் மிகுந்த நெருக்கடியில் சிக்கினார்.அந்த சமயத்தில் பழனிச் சாமி மரண விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது.

அதேபோல 2023-ஆம் ஆண்டு சிக்கிம் அரசுக்கு சுமார் 900 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி பியூச்சர் கேமிங் சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டுக் குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி 457 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் மேலுமொரு வழக்கைப் பதிவுசெய்தது.

2022, ஏப்ரல் 4-ஆம் தேதி அமலாக்கத் துறை பியூச்சர் கேமிங் அண்ட் ஓட்டல் சர்வீசஸில் சோதனை நடத்திய நிலையில், ஐந்து நாட்கள் இடை வெளியில் ஏப்ரல் 7-ஆம் தேதி அந்நிறுவனம் 100 கோடி ரூபாய் மதிப்பி லான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. அக்டோபர் 2023-ல் ஐ.டி துறை ப்யூச்சர் கேமிங்கில் சோதனை நடத்த, அதே மாதம் அந்நிறுவனம் ரூ.65 கோடி தேர்தல் பத்திரம் வாங்கி நன்கொடை செய்திருக்கிறது.

இப்படியாக தன்னை வழக்கு நெருக்கும்போதெல்லாம் தேர்தல் பத்திரங்களின் மூலம் மேலிடங்களைக் குளிர்வித்து தப்பித்து வந்தாரா என்ற கேள்வி எழுந் துள்ளது. மார்ட்டின் தனது ஓராண்டு நிகர லாபத்தை விடவும் 6 மடங்கு அதிக தொகையை தேர்தல் பத்திரங்களுக்காகச் செலவிட்டி ருக்கிறார்.

ஆன்லைன் ரம்மி போன்ற திட்டங்களை தமிழக அரசு தடைசெய்தபோது, தமிழக ஆளுநர் ரவி அதனை கடுமையாகத் தொடர்ந்து எதிர்த்துவந்தார். அதுசமயம் ஆளுநர் ரவியை ஆன்லைன் விளையாட்டுப் போட்டி களை நடத்திய நிறுவனங்கள் சந்தித்தாகவும் செய்தி பரவியது. அதில் மார்ட்டினின் ப்யூச்சர் கேமிங் நிறுவனமும் அடக்கமா என்ற சந்தேகம் தற்போது எழுகிறது.

nkn200324
இதையும் படியுங்கள்
Subscribe