தேர்தல் கூத்து

s

ssடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத், கடலூரில் நடைபெற்ற கூட்டணிக் கட்சியினர் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முன்பு பேசுகையில், "நான் ஆரணி தொகுதியில் இருந்து கடலூர் தொகுதிக்கு வந்துள்ளேன். இந்த தொகுதியில் அமைச்சர் கூறுவதைக் கேட்டு செயல்படுவேன். இங்கே கதாநாயகன் நான்தான், ஆனால் நான் போட்டுள்ள சட்டை அமைச்ச ரோடது!'' என திரைப்பட காமெடியைப் பேசி அனைவரையும் சிரிக்கவைத்தார். மேலும், அமைச்ச ரிடம் சரணாகதி அடைந்துள்ளதாகவும், அவர் பார்த்து எது வேண்டுமானாலும் செய்யட்டும் என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர், "காலையில் ஒருவரிடமும் மாலையில் ஒருவரிடமும் தொண்டர்களை அடிமையாக வைத்து பேரம் பேசும் கட்சிக்கு சம்மட்டி அடி கொடுக்கவேண்டும். நீலிக் கண்ணீர் வடித்தால் மக்கள் வாக்களித்துவிடுவார்களா? இவர்களுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி முடிவு கட்டி, கை சின்னத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்'' என்றார். சட்டைய மாத்திக்கலாம்... கரை வேட்டிய மாத்திக்கக்கூடாது!

ss

ன்னியாகுமரி பா.ஜ.க. வேட்பாளர் பொன் ராதா கிருஷ்ணன், பிரச்சாரத்துக்கு செல்லும்முன்பாக பார்வதிபுரம் இலுப்பமூடு இசக்கியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டார். அப்போது தீபாராதனை காட்டிய கோவில் பூசாரி கணேஷ், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நெற்றியில் திருநீறு போட்டுவிட்டு, இரண்டு கைகளால் அவரின் கன்னத்தைத் தடவி முத்தம் ssகொடுத் தார். இதென்ன புது ஆசியாக இருக்கிறதேயென பா.ஜ.க.வினர் வியப்பாகப் பார்க்கும்போதே, எம்.ஆர்.காந்திக்கும் இதேபோல் கன்னத்தைத் தடவி முத்தம் கொடுத்தார். அடுத்ததாக விஜயதாரணி யை அழைத்த பூசாரி, அவருடைய நெற்றியிலும், தலையிலும் திருநீறைப் பூசியதோடு, விஜய தாரணியின் கன்னத்தையும் தடவி முத்தம் கொடுக்க முயன்றபோது, சுதாரித் துக்கொண்ட விஜய தாரணி, அவரது கையைத் தட்டிவிட்டார். அதை யடுத்து, இப்படியெல்லாம் செய்யக்கூடாது என பூசாரியை பா.ஜ.க.வினர் கண்டிக்க, "நீங்கள் நினைப்பது போல் நான் தவறாக எதுவும் செய்யவில்லை. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நான் கன்னத்தைத் தடவி முத்தம் கொடுத்தால் அவர் கள் நினைப்பதெல்லாம் அப்படியே நடக்கும். எல்லாருக்கும் அப்படி செய்ய மாட்டேன். ஆத்தா உத்தரவு தந்தால் தான் பண்ணுவேன்.

ssடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத், கடலூரில் நடைபெற்ற கூட்டணிக் கட்சியினர் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முன்பு பேசுகையில், "நான் ஆரணி தொகுதியில் இருந்து கடலூர் தொகுதிக்கு வந்துள்ளேன். இந்த தொகுதியில் அமைச்சர் கூறுவதைக் கேட்டு செயல்படுவேன். இங்கே கதாநாயகன் நான்தான், ஆனால் நான் போட்டுள்ள சட்டை அமைச்ச ரோடது!'' என திரைப்பட காமெடியைப் பேசி அனைவரையும் சிரிக்கவைத்தார். மேலும், அமைச்ச ரிடம் சரணாகதி அடைந்துள்ளதாகவும், அவர் பார்த்து எது வேண்டுமானாலும் செய்யட்டும் என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர், "காலையில் ஒருவரிடமும் மாலையில் ஒருவரிடமும் தொண்டர்களை அடிமையாக வைத்து பேரம் பேசும் கட்சிக்கு சம்மட்டி அடி கொடுக்கவேண்டும். நீலிக் கண்ணீர் வடித்தால் மக்கள் வாக்களித்துவிடுவார்களா? இவர்களுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி முடிவு கட்டி, கை சின்னத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்'' என்றார். சட்டைய மாத்திக்கலாம்... கரை வேட்டிய மாத்திக்கக்கூடாது!

ss

ன்னியாகுமரி பா.ஜ.க. வேட்பாளர் பொன் ராதா கிருஷ்ணன், பிரச்சாரத்துக்கு செல்லும்முன்பாக பார்வதிபுரம் இலுப்பமூடு இசக்கியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டார். அப்போது தீபாராதனை காட்டிய கோவில் பூசாரி கணேஷ், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நெற்றியில் திருநீறு போட்டுவிட்டு, இரண்டு கைகளால் அவரின் கன்னத்தைத் தடவி முத்தம் ssகொடுத் தார். இதென்ன புது ஆசியாக இருக்கிறதேயென பா.ஜ.க.வினர் வியப்பாகப் பார்க்கும்போதே, எம்.ஆர்.காந்திக்கும் இதேபோல் கன்னத்தைத் தடவி முத்தம் கொடுத்தார். அடுத்ததாக விஜயதாரணி யை அழைத்த பூசாரி, அவருடைய நெற்றியிலும், தலையிலும் திருநீறைப் பூசியதோடு, விஜய தாரணியின் கன்னத்தையும் தடவி முத்தம் கொடுக்க முயன்றபோது, சுதாரித் துக்கொண்ட விஜய தாரணி, அவரது கையைத் தட்டிவிட்டார். அதை யடுத்து, இப்படியெல்லாம் செய்யக்கூடாது என பூசாரியை பா.ஜ.க.வினர் கண்டிக்க, "நீங்கள் நினைப்பது போல் நான் தவறாக எதுவும் செய்யவில்லை. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நான் கன்னத்தைத் தடவி முத்தம் கொடுத்தால் அவர் கள் நினைப்பதெல்லாம் அப்படியே நடக்கும். எல்லாருக்கும் அப்படி செய்ய மாட்டேன். ஆத்தா உத்தரவு தந்தால் தான் பண்ணுவேன். என்னிடம் முத்தம் வாங்கிய பொன் ராதாகிருஷ்ணன் தேர்த லில் வெற்றி பெறுவார். எம்.ஆர்.காந்திக்கும் அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கும்'' என்றார் பூசாரி! விஜயதாரணிக்கு அரசியல் எதிர்காலமே இல்லையோ?

ஜினி அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தது மிகப்பெரிய ரசிகர் கூட்டம். காலத்தின் கோலத்தால் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஆனாலும், ரஜினியின் உடல் நலனைக் கருத்தில்கொண்டு, "என்றும் எங்கள் தலைவர் நீங்கதான்'’ என்று ரஜினியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துப் போஸ்டர் ஒட்டுவதிலும், சினிமா ரிலீஸின்போது போஸ்டர் ஒட்டுவதிலும் முனைப்பாக இருந்துவருகின்றனர்.

s

அதே நேரத்தில், ரஜினி மாதிரியே ரசிகர்களும் அரசியல் ஈடுபாடு சுத்தமாக இல்லாமல் இருந்துவிடுவார்களா? தேர்தல் வரும்போதெல்லாம், அரசியல் கட்சிகள் ரஜினி மன்றத்தினருக்குத் தூண்டில் போடுவதும், இந்த வேட்பாளருக்கு ரஜினி மன்றம் ஆதரவு, இந்த கட்சிக்கு ரஜினி மன்றம் ஆதரவு என, அந்தந்தத் தொகுதிகளின் தட்பவெப்பத்துக்கு ஏற்ப, ஏதாவது நடந்துகொண்டிருக்கும். சிவகாசியிலும் விருதுநகர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற துணைத் தலைவர் காளிராஜன், சக ரசிகர்களைத் தன்னுடன் அழைத்துச் சென்று, சிவகாசி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகனைச் சந்தித்து, விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்! கைக்கு கை கொடுக்கும் கை!

மூக ஆர்வலரும் சட்டக்கல்லூரி மாணவியுமான நந்தினியும் அவரது சகோதரி நிரஞ்சனாவும், டெல்லியிலுள்ள இந்திய

ss

தேர்தல் ஆணையத்தில், வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்துவிட்டு வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்தவேண்டுமென்று பெட்டிஷன் அளித்துள்ளனர். "பா.ஜ.க.வுக்கு ஆதரவாக மோசடி செய்வதற்காகவே வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தினால் இந்திய மக்களின் கோபத்திற்கு தேர்தல் ஆணையம் ஆளாக வேண்டியிருக்கும்'' என்றார் நந்தினி. மேலும், "வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்து வதில் இருக்கும் முக்கிய பிரச்சனையே, இதில் ப்ரோகிராமிங் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட சோர்ஸ் கோட் என்னவென்பதே தேர்தல் ஆணையத்துக்கு தெரியாது. எம்.பி. மணீஷ் திவாரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எழுப்பிய கேள்வியில், "இ.வி.எம். மெஷினில் முறைகேடு நடக்காதென்று உறுதியாகச் சொல்கிறீர்கள். ஆனால் ஆர்.டி.ஐ. போட்டு சோர்ஸ் கோட் கொடுங்கள் என்று கேட்டால், சோர்ஸ் கோட் எங்களுக்கே தெரியாது என்று சொல்கிறீர்கள். தயாரிக்கும் நிறுவனத்துக்கு மட்டும் தான் சோர்ஸ் கோட் தெரியுமென்றால், இதில் முறைகேடு நடக்காதென்று தேர்தல் ஆணையம் எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்?' என்று கேட்டுள்ளார். இதே கேள்வியைத்தான் நாங்களும் எழுப்புகிறோம்'' என்று கூறியுள்ளார் நந்தினி. சரியான கேள்வி தானே! விளக்குமா தேர்தல் கமிஷன்?

துரை தேர்தல் களம் என்றாலே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் அக்கப்போ ருக்கு அளவே இருக்காது. ஏற்கெனவே வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், "பாதியில் எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவிங்க!'' எனப் பேசி வைரலானவர், அ.தி.மு.க. வேட்பாளர் சரவணனை அருகில் வைத்துக்கொண்டே தி.மு.க. கூட்டணி எம்.பி. சு.வெங்கடேசனை புகழ்ந்ததுதான் சிறப்பான சம்பவமே! "நமக்கு மதுரை தான் முக்கியம். இப்பகூட எம்.பி. வெங்கடேசன் தெப்பக்குளத்துல ஹை மாஸ் விளக்கு வச்சப்ப நானே போனில் கூப்பிட்டு பாராட்டினேன். மதுரைக்கு யார் நல்லது செஞ்சாலும் பாராட்டணும்!'' எனக்கூற, பக்கத்திலிருந்த அ.தி.மு.க. வேட்பாளர் ஒன்றும் சொல்லமுடியாமல் நெளிந்ததே ஹைலைட்! செல்லூராரின் ஒவ்வொரு சொல்லும் வைரல் தான்!

ssம.தி.மு.க.வுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டபின்னர், திருச்சி தொகுதியில் அமைச்சர்களுடன் இணைந்து முழுவீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார் துரை வைகோ. ஒரு அமைச்சர் காலை பிரச்சாரத்திற்கு வந்தால், மற்றொரு அமைச்சர் மாலை பிரச்சாரத்திற்கு வந்துவிடுகிறார். தி.மு.க. மட்டுமல்லாமல், கூட்டணிக் கட்சிகளின் வெற்றியிலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்துவ தால், தீப்பெட்டி சின்னத்தை வெற்றிபெறச் செய்வதில் தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இங்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கருப் பையா, நிர்வாகிகள், தொண்டர்கள் என ஒவ்வொருவரையும் பணத்தால் கவனித்து, நம்பிக்கையோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரும் வாக்குச் சேகரிப்பில் உடன் வரு கிறார். மேலும், திருச்சி யை சேர்ந்த முன்னாள் எம்.பி. ப.குமார், உள் ளிட்டோரும் கருப்பையா விற்காக வாக்கு சேகரிக்கிறார்கள். கருப்பையாவுக்கு புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை பகுதியிலுள்ள கள்ளர் சமூக வாக்குகள் அதிகம் கிடைக்கக்கூடும். அதேபோல் திருவெறும்பூர் தொகுதியிலுள்ள கள்ளர் சமூகத்தினரின் வாக்குகளை, அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனும் ஓரளவுக்கு பெறக்கூடும். திருச்சி பாராளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, ம.தி.மு.க.வுக்கு தீப்பெட்டி சின்னம் என்பதால், இரட்டை இலையில் தன்னால் வெற்றிபெற முடியுமென்று நம்பிக்கை யோடு இருக்கிறார் கருப்பையா. அப்படியே துரை வைகோ வெற்றிபெற்றாலும், சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி அமையுமெனத் தெரிகிறது. திருச்சியில் கடுமையான போட்டி இருக்கு!

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவனுக்காக புதன்கிழமையன்று இரவு மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்தபோது, ஒன்றிய அரசை காட்டமாக விமர்சித்ததும், திருமாவளவனை பெருமைப்படுத்திப் பேசியதும் வி.சி.க. தொண்டர்களிடையே பெருத்த வர வேற்பைப் பெற்றது. கமல்ஹாசன் பேசியபோது, "பா.ஜ.க. ஒன்றிய அரசு அல்ல, மக்களிடம் ஒன்றாத அரசு! கண்டிப்பாக அப்புறப்படுத்த வேண்டும். திருமா, குரலற்றவர்களின் குரலாக, பெரும் சிறுத்தையாக உள்ளார். இவர், 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். சாதி தான் முதல் எதிரி என்று அரசியலுக்கு வருவதற்கு முன்பே முடிவு செய்தவன் நான். இன்று ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு முள் படுக்கை விரித்து வரவேற்றவர்கள், இனி என்ன செய்வார்கள்? சமத்துவ அரசியலுக்கு உகந்தது பானை. திருமா என்ற கருப்பு வைரத்திற்கு பானை சின்னத்திற்கு வாக்களித்து, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும்!" என்றார். ஒன்றாத அரசுக்கெதிராய் ஒன்றிய கூட்டணி!

"சமூகத்தில் மைனாரிட்டியான செட்டியார், ஆசாரி, பிள்ளைமார் மற்றும் முதலியார் சமூக மக்களுக்கும், பெண்களுக்கும், கட்சி யிலும், நிர்வாகத்திலும் பத்து சதவிகித இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று பா.ஜ.க. கூறி வருகிறது. இப்படி அறிவுரை சொல்லும் பா.ஜ.க., முதலில் தன் கட்சியில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். பா.ஜ.க.விற்கு வந்த நெல்லையின் முன்னாள் மேயரான புவனேஸ்வரி, மற்றும் விஜயதாரணி போன்றவர்களுக்கு கட்சியில் பொறுப்பும் தரப்படல, கட்சிப் பணிகளிலும் ஒதுக்கியே வைத்திருப்பது ஏன்?'' என்று முணு முணுக்கிற பா.ஜ.க.வினர். தி.மு.க.வில் ஒதுக்கீடு செய்த அளவிற்குக் கூட பா.ஜ.க. செய்ய வில்லை என்கிறார்கள். ஊருக்குத் தான்யா உபதேசம்!

சிவகங்கை பாராளு மன்றத் தொகுதியிலுள்ள ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் சேவியர்தாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே வாக்கு சேகரிக்கும்போது முன்னாள் சிவகங்கை எம்.பி.யும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் பேசுகையில், "இந்தத் தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றிபெற்று உயர்ந்த பதவிகளில் இருந்தும் ஒண்ணும் செய்யல, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வெற்றிபெற்றும் ஆளே வரல. பூ அதிகம் விளையக்கூடிய இந்த பகுதியில் ஒரு செண்ட் தொழிற்சாலைகூட கொண்டு வரல. ஆனால் மாநில அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், மருத்துவக் கல்லூரி, வேளாண் கல்லூரி கொண்டு வந்தார்" என்றவர், "கால்நடைக் கல்லூரியும் கொண்டு வந்தார்'' என்று ஏகத்திற்கு அடிச்சுவிட, "கால்நடை மருத்துவக்கல்லூரி நம்ம மாவட்டத்தில் எங்கே இருக்கு? சொன்னாலும் சரியா சொல்ல வேண்டாமா?'' என்று ர.ர.க்களே கிண்டலாகச் சிரித்துக்கொண்டனர். "இதெல்லாம் சரி தான், நீங்க எம்.பி.யாக இருந்து இந்தப் பகுதிக்கு என்ன செஞ்சீங்கன்னு கடைசிவரை சொல்லவே இல்லையே! நீங்களும் சென்ட் தொழிற்சாலை கொண்டுவரலையே!'' என்றும் ர.ர.க்கள் முணுமுணுத்தனர்! பொய் சொன்னா லும் பொருந்தச் சொல்ல ணும்ல!

துரையில் பா.ஜ.க. வேட்பாளர் ராமசீனிவாசனுக்கு ஓட்டு கேட்டு வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், "ஏற்கெனவே உங்களுக்கு எம்.பி.யாக இருக்கும் வெங்கடேசனுக்கா நீங்கள் ஓட்டு போடப்போகிறீர்கள்? திருவிளையாடல் படத்தில் வரும் தருமியைப் போல கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பாரே!'' எனச் சொல்ல, அடுத்ததாக அப்பகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் பேசும்போது, "இது மதுரை. இங்கு தருமி பக்கம் தான் இறைவனே நின்றார் என்பது தான் வரலாறு!" என பதிலடி தர, "நம்ம எம்.பி. பாராளுமன்றத்தில் மட்டுமல்லாமல், பிரச்சாரத்திலும் சரியான பதிலடி தருகிறாரே'' என்று அவரது பேச்சைக்கேட்ட மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்! திருவிளை யாடல் வினையாகிடுச்சே!

- ராம்கி, சிவம், பகத், மணிகண்டன், அண்ணல், துரை.மகேஷ், காளிதாஸ்

nkn100424
இதையும் படியுங்கள்
Subscribe