நாம் தமிழர் கட்சியின் தென்காசி தொகுதி வேட்பாளர் மதிவாணன், கட்சிக்கொடிகள் கட்டப்பட்ட இரட்டை மாட்டு வண்டியில், முருகப் பெருமானின் கையிலிருக்கிற வேல் போன்று தன் கையில் வேலைப் பிடித்தபடி, உக்கிரப் பார்வை யோடு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தது வழியோர மக்களை மட்டுமல்ல, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் மிரளவைத்தது.
மதிவாணனிடம் கையிலிருந்த வேல், மாட்டு வண்டிப் பயணம் பற்றி கேட்டபோது, "தென் காசி மேற்குத் தொடர்ச்சி மலைப் பக்கமுள்ள எங்கள் சிவகிரி ஏரியாவில் கனிமங்களும், மண லும் கொள்ளையர் களால் சூறையாடப் படுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப் படுகிறது. எனவே கனிமக் கொள்ளையர்களை அழிக்கிற வேல், விவசாயத்தின் அங்கமான மாட்டு வண்டிப் பயணம்!" என்றார். மிரட்டியே ஓட்டு வாங்குவாங்க போலயே!
கடலூர் தொகுதியில் பா.ம.க. சார்பில் களமிறங்கியுள்ள இயக்குநர் தங்கர்பச்சான், சொந்த ஊரான பத்திரக்கோட்டையிலுள்ள அவரது மாந்தோப்பு வீட்டில் கட்சியினரோடு ஆலோசித்த பின்பே பிரச்சாரத்துக்கு செல்கிறாராம். அப்போது கட்சியினர், கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத், சின்ன ஐயாவோட மச்சானாக இருப்பதால், அவரை ஜெயிக்க வைப்பதற்காகத்தான் கட்சியினருக்கு சீட் தராமல் டம்மி ஆளைப் போட்டுள்ள தாகப் பரவலாகப் பேச்சு உள்ளதாகக் கூறியுள்ளனர். இது குறித்து மருத்துவர் ராம தாஸிடமும், அன்புமணி யிடமும் தங்கர்பச்சான் கூறவும், அதிரடியாக மார்ச் 29ஆம் தேதி இரவு, வன்னியர்கள் அதிகம் வசிக்கும் விருத்தாச்சலம், குறிஞ்சிப்பாடி தொகுதியில் மருத்துவர் ராமதாஸின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய மருத்துவர், விஷ்ணுபிரசாத்தை சுட்டிக்காட்டி, சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை என்ற பாடலைப் பாடி, மாம்பழத்திற்கு வாக்கு கேட்டார். "எங்கிருந்தோ வந்தவர்களெல்லாம் ஜெயிச்சிட்டு மக்களை மறந்துடுவாங்க. நமக்கு கட்சிதான் முக்கியம். நம்மில் ஒருவரான பச்சானுக்கு நீங்க அளிக்கிற வாக்கு, மோடிக்கு அளிக்கிற வாக்கு. மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமர்" என ஆருடம் கூறினார். சௌமியா அன்புமணிக்கும் இதே பாடலைப் பாடுவாரா?
பா.ஜ.க. வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து, முதலியார்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்த புதுவை முதல்வர் ரங்கசாமி, “"மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைவது உறுதி. நமது பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராகக் கேட்டுப் பெறுவோம். மத்திய அரசோடு இணக்கமாக இருந்து வேண்டியதை பெறுவோம். ரேஷன் அரிசிக்கு பதில் பணம் கேட்போம். பணத்தை வைத்துக் கொண்டு நீங்கள் வி
நாம் தமிழர் கட்சியின் தென்காசி தொகுதி வேட்பாளர் மதிவாணன், கட்சிக்கொடிகள் கட்டப்பட்ட இரட்டை மாட்டு வண்டியில், முருகப் பெருமானின் கையிலிருக்கிற வேல் போன்று தன் கையில் வேலைப் பிடித்தபடி, உக்கிரப் பார்வை யோடு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தது வழியோர மக்களை மட்டுமல்ல, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் மிரளவைத்தது.
மதிவாணனிடம் கையிலிருந்த வேல், மாட்டு வண்டிப் பயணம் பற்றி கேட்டபோது, "தென் காசி மேற்குத் தொடர்ச்சி மலைப் பக்கமுள்ள எங்கள் சிவகிரி ஏரியாவில் கனிமங்களும், மண லும் கொள்ளையர் களால் சூறையாடப் படுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப் படுகிறது. எனவே கனிமக் கொள்ளையர்களை அழிக்கிற வேல், விவசாயத்தின் அங்கமான மாட்டு வண்டிப் பயணம்!" என்றார். மிரட்டியே ஓட்டு வாங்குவாங்க போலயே!
கடலூர் தொகுதியில் பா.ம.க. சார்பில் களமிறங்கியுள்ள இயக்குநர் தங்கர்பச்சான், சொந்த ஊரான பத்திரக்கோட்டையிலுள்ள அவரது மாந்தோப்பு வீட்டில் கட்சியினரோடு ஆலோசித்த பின்பே பிரச்சாரத்துக்கு செல்கிறாராம். அப்போது கட்சியினர், கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத், சின்ன ஐயாவோட மச்சானாக இருப்பதால், அவரை ஜெயிக்க வைப்பதற்காகத்தான் கட்சியினருக்கு சீட் தராமல் டம்மி ஆளைப் போட்டுள்ள தாகப் பரவலாகப் பேச்சு உள்ளதாகக் கூறியுள்ளனர். இது குறித்து மருத்துவர் ராம தாஸிடமும், அன்புமணி யிடமும் தங்கர்பச்சான் கூறவும், அதிரடியாக மார்ச் 29ஆம் தேதி இரவு, வன்னியர்கள் அதிகம் வசிக்கும் விருத்தாச்சலம், குறிஞ்சிப்பாடி தொகுதியில் மருத்துவர் ராமதாஸின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய மருத்துவர், விஷ்ணுபிரசாத்தை சுட்டிக்காட்டி, சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை என்ற பாடலைப் பாடி, மாம்பழத்திற்கு வாக்கு கேட்டார். "எங்கிருந்தோ வந்தவர்களெல்லாம் ஜெயிச்சிட்டு மக்களை மறந்துடுவாங்க. நமக்கு கட்சிதான் முக்கியம். நம்மில் ஒருவரான பச்சானுக்கு நீங்க அளிக்கிற வாக்கு, மோடிக்கு அளிக்கிற வாக்கு. மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமர்" என ஆருடம் கூறினார். சௌமியா அன்புமணிக்கும் இதே பாடலைப் பாடுவாரா?
பா.ஜ.க. வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து, முதலியார்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்த புதுவை முதல்வர் ரங்கசாமி, “"மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைவது உறுதி. நமது பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராகக் கேட்டுப் பெறுவோம். மத்திய அரசோடு இணக்கமாக இருந்து வேண்டியதை பெறுவோம். ரேஷன் அரிசிக்கு பதில் பணம் கேட்போம். பணத்தை வைத்துக் கொண்டு நீங்கள் விரும்பிய அரிசியை வாங்கி சமைக்கலாம். இடைத்தரகர் தொந்தரவு இருக்காது'' என சொல்லிக்கொண்டே போனார். அவரை வழிமறித்த பெண்கள், "அவ்வளவு நல்லதெல்லாம் பண்ண வேண்டாம் ஐயா. முன்ன நீங்க வாக்குறுதி கொடுத்த மாதிரி ரேஷன் கடை திறந்து அரிசி போட்டாலே போதுமைய்யா'' எனக் கலாய்த்து நெருக்கடி கொடுக்க, அங்கிருந்து எஸ்கேப்பானார் ரங்கசாமி. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு புதுச் சேரியில் ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அள்ளி விடாதீங்க... அரிசி கொடுங்க!
"கோவையில் பா.ஜ.க. ஜெயிக்கட்டும். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகியவற்றை குஜராத்துடன் சில நாட்களில் மோடிஜி இணைப்பார். இது சாத்தியம்! இந்த முறை 400 தொகுதிகளை தாண்டி மோடி வெற்றி பெறுவார்!' என்கிற இந்தி வாசகங்களுடன் கோவை தொகுதி முழுவதும் போஸ்டரை ஒட்டியுள்ளது வட இந்திய ஒற்றுமை மையம் என்ற பெயரிலான அமைப்பு. இதனைத் தொ டர்ந்து, "அமைதியாக இருக்கும் கோவையில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிசெய்து வருகின்றனர். ஏற்கெனவே, எங்கோ வட மாநிலத் தொழிலாளர்களிடையே முன்னர் நடந்த சண்டையின் வீடியோவை, கோவையில் நடந்ததாகக்கூறி பரப்பி, தமிழ்நாட்டு மக்கள்மீது அவப்பெயரை ஏற்படுத்தினர். இப்போது மக்களைப் பிளவுபடுத்த இந்தி யில் போஸ்டர் ஒட்டி யுள்ளனர். தேர்தல் விதிமுறைகளை மீறி ஒட்டப்பட்ட போஸ் டர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென் றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் படும்'' என்றார் த.பெ.தி.க.வின் கு.ராமகிருட்டிணன். இதுகுறித்து கோவை தெற்கு தேர்தல் குழுவிலுள்ள சிறப்பு அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. பிரித்தாளும் சூழ்ச்சியை ஆரம்பிச்சிட்டாய்ங்க!
விருதுநகர் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சிக்கென்று தனி வாக்கு வங்கி உள்ளது. 1998ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் வேட்பாளர் சத்தியமூர்த்தி 1,06,726 வாக்குகளைப் பெற்றார். இந்நிலையில், 28ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற சிவகாசி பிரச்சாரக் கூட்டத்தில், தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து டாக்டர் கிருஷ்ணசாமி பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், டாக்டர் கிருஷ்ணசாமி மட்டும் மிஸ்ஸிங். இத்தனைக்கும் அவர், 28-ஆம் தேதி எடப் பாடி பழனிசாமியை சிவகாசி பெல் ஹோட்டலில் சந்தித்தார். ஆனாலும், பிரச்சார மேடைக்கு வர வில்லை. இதுகுறித்து, புதிய தமிழகம் நிர்வாகியிடம் விசாரித்தபோது, “"டாக்டர் கிருஷ்ணசாமி, எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தது உண்மைதான். ராஜபாளையத்தில் வி.ஐ.பி. ஒருவரை சந்திப்பதற்காக அவசரமாகச் செல்ல வேண்டியிருந்ததால், எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துவிட்டே சிவகாசியிலிருந்து கிளம்பினார். அந்த மேடை பேனரில் டாக்டர் கிருஷ்ணசாமியின் போட்டோ இருந்ததே? மற்றபடி, கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை''” என்றார். குழப்பம் இல்ல... ஆனால் இருக்கு!
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கான பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் ஆலங்குடியி லுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய வேட்பாளர் தேவநாதன், "மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்திருக்கிறது. சிவகங்கை தொகுதியில் 1.30 லட்சம் கழிவறைகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறது. இப்படி ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை செய்து கொடுப்பதால் மீண்டும் இதே ஆட்சி தொடர வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் சொல்லப் போனேன். எல்லாத்தையும் கேட்டுட்டு நீங்க தான் சிவகங்கை வேட் பாளர்னு சொல்லி என்னை போட்டியிட வச்சுட்டாங்க'' என்று பேசியபோது, "அப்ப உங்ககிட்ட நிறைய பணம் இருக்குன்னு உங்களையும் கட்டாயப்படுத்தி தான் நிற்க வச்சுட்டாங்களா?"ன்னு சொல்லி சிரித்துக் கொண்டனர் தாமரைக் கட்சியினர்! நிற்க முடியாதுன்னு சொன்னால் ரெய்டு வந்துடுமே!
திண்டுக்கல் தொகுதி பா.ம.க. வேட்பாளர் திலகபாமா, ஒட்டன்சத்திரத்தில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுப்பதாக இருந்தது. ஆனால் கூட்டம் முடிந்தும்கூட பிரியாணி வரவேயில்லை. வடக்கு மாவட்ட செயலாளர் ஜோதிமுத்து, வேட்பாளர் திலகபாமாவிடம், "இன்னுமா பிரியாணி கொண்டு வராங்க? கட்சிக்காரர்களே கிளம்பிட் டாங்க. இப்படியிருந்தால் எப்படி தேர்தல் பணி செய்வாங்க?'' என்று வாக்குவாதம் செய்ய, அவரோ கோபத்துடன் காரிலேறிக் கிளம்பிவிட்டார். பின்னர் இதுகுறித்து மருத்துவர் ராமதாஸிடமும், அன்புமணியிடமும் திலகபாமா முறையிட, அடுத்த 24 மணி நேரத்தில் ஜோதிமுத்துவை கட்சியிலிருந்தே நீக்கிவிட்டு, பழனியைச் சேர்ந்த வைரமுத்துவை மா.செ.வாக நியமித்தனர். பிரியாணிச் சண்டையில் பதவி போச்சே!
வேலூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிவாரியாக தேர்தல் அலுவலகம் திறந்துள்ளார். அந்த அலுவலகங்களுக்குள் யார் நுழைந்தாலும் சாப்பாட்டுக்கு டோக்கன், டீ, காபி, மோர் தருகிறார்களாம். கட்சி அலுவலகத்தில் எப்போதும் கூட்டம் இருப்பதுபோல் பார்த்துக் கொள்கிறார். தினமும் கட்சி அலுவலகத்தில் வரும் அடிமட்டத் தொண்டர்களுக்கு, இரவானதும் ஆயிரம் ரூபாய் கூலி, பிரியாணி, சரக்கு பாட்டில் தரப்படுகிறதாம். கடந்த மார்ச் 29ஆம் தேதி இரவு, குடியாத்தம் நகரிலுள்ள கட்சி அலுவலகத்தில், ஓட்டு கேட்க அழைத்துவந்த மக்களுக்கு பணம் செட்டில் செய்வதில் குளறுபடி செய்துள்ளார்கள் ஏ.சி.எஸ். ஆட்கள். இதனால் தேர்தல் அலுவலகத்துக்குள் அடிதடியாகி, அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் பறந்துள்ளன. பின்னர் சண்டையைத் தடுத்து சமாதானம் செய்து பட்டுவாடா செய்துள்ளனர்! புது நாற்காலிக்கும் பணம் ஒதுக் கிடுங்க!
திருவண்ணாமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டம், சட்டமன்றத் தொகுதிவாரியாக நடத்தப்பட்டது. அறிமுகக் கூட்டங்களுக்கு வந்து மேடையேறும் நிர்வாகிகள் ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து வணங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார் வேட்பாளர் கலியபெருமாள். நிர்வாகிகளைச் சந்திக்க சென்றாலும் அவர்களின் கால்களில் விழுந்து எழுந்துள்ளார். இதனைப் பார்த்த முன்னாள் அமைச்சர் திருப்பத்தூர் மா.செ. வீரமணி, "என்னய்யா நீ, வர்றவங்க போறவங்க கால்லயெல்லாம் விழுந்துக்கிட்டே இருக்க. வேட்பாளருக்கான கெத்தோடு இரு. கால்ல விழறதை விட்டுட்டு கட்சி நிர்வாகிகளுக்கு சால்வை மட்டும் போடு. ஓட்டு கேட்கற வேலையை மட்டும் பாரு'' என அட்வைஸ் செய்துள்ளார். அப்படியும் காலில் விழும் பழக்கத்தை விடவில்லையாம் வேட்பாளர்! நீங்க கால்ல விழுறதெல்லாம் சகஜம் தானே!
திருச்சி பாராளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா, மணல் கொள்ளையில் சம்பாதித்த பணத்தையெல்லாம் தண்ணீர் போல் செலவழிப்பதாகக் கூறப்படு கிறது. இவரும், இவருடைய அண்ணன் கரிகாலனும்தான் தற்போது மணல் மாபியாக்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர்கள். தினமும் வாக்கு சேகரிக்கச் செல்லும் சாதாரண உறுப்பினருக்கு ஆயிரம் ரூபாய் என்றும், முக்கிய நிர்வாகிகளென்றால், தினமும் ஐயாயிரம் வரை வழங்கி, அவர்களை செழிப்பாகப் பார்த்து கொள்கிறாராம். அதே போல் புதுக்கோட்டையை சேர்ந்த மாஜி விஜயபாஸ் கரிடம், திருச்சி, புதுக் கோட்டை பாராளுமன்றத் தொகுதிகளிலுள்ள மொத்த சட்டமன்றத் தொகுதிகளுக்கும், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் செலவை தானே பார்த்துக்கொள்வ தாகவும் வாக்கு கொடுத்துள்ளார். இத்தொகுதி வெற்றியை மானப்பிரச்சனையாகக் கருதி, அமலாக்கத்துறையினரின் தொடர் சோதனை களுக்கிடையேயும் மாஜி விஜயபாஸ்கரே கருப்பையாவின் பிரச்சாரத்தை வழிநடத்து கிறாராம். இதேவேளை, ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் துரை வைகோ, ஆரம்பத்தில் ஒருசில சர்ச்சைக்குரிய பேச்சில் ஈடுபட்டாலும், போகப்போகத் தனது செயல்பாடுகளிலும், பேச்சிலும் மிகுந்த நிதானத்தையும், கவனத் தையும் கொண்டு செயல்படத் தொடங்கிய தாலும், இரண்டு அமைச்சர்களும் அவருக்கு பக்கபல மாக இருப்பதாலும் கள நிலவரம் மாறி, அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக் கிறதாம். போர்வாளின் வாரிசு சோடை போகமாட்டாரே!
பெரம்பலூர் தொகுதியில் கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பாரிவேந்தர், இம்முறை பா.ஜ.க.வில் கள மிறங்குவதால் கடந்த முறை இருந்த கூட்டணி பலம் தற்போது இல்லை. அவரது கட்சிக் குள்ளும் அதிருப்தி நிலவுகிறதாம். அதேவேளை, தி.மு.க.வில் ஏற்கெனவே இருந்த அதிருப்தி, சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி அமைச்சர் மீதிருந்த அதிருப்தி உள் ளிட்டவைகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் அழைத்துப் பேசி சரி செய்துள்ளார். அதிலும் லால்குடி, மண்ணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் பெரும் அதிருப்தியில் இருந்த நிலையில், பாரிவேந்தர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னு டைய சமூகம் சார்ந்த ஓட்டு வங்கியைப் பெற்றுவிடலா மென்று கணக்கு போட்டிருந் தார். ஆனால் கே.என்.நேருவின் தலையீட்டில் தி.மு.க.வினர் சுறுசுறுப்பாகக் களப்பணியில் இறங்க, பாரிவேந்தரின் கணக்கு பொய்த்துப்போனது. அதிலும், திருச்சியிலிருந்து பெரம்பலூருக்கு சென்று தங்கியிருந்து, பெரம்பலூர் வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆதரவு கேட்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பெரம்பலூர் தி.மு.க.வினரே களத்தில் இறங்கி வேலை பார்ப்பது பெரும் உற்சாகத்தையும், வரவேற்பையும் பெற்றதால், அருண் நேருவுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. பாரிவேந்த ருக்கு பின்னடைவு!
பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், பட்டியிலினத்தைச் சேர்ந்தவருமான தடா பெரியசாமி, பா.ஜ.க.விலிருந்து திடீரென விலகி அ.தி.மு.க.வில் இணைந்திருக்கிறார். இந்த சம்பவம் பா.ஜ.க.வில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட தடா பெரியசாமி சீட் கேட்டிருந்தார். கட்சித் தலைமையும் நம்பிக்கை கொடுத்திருந்தது. ஆனால், சீட் மறுக்கப்பட் டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தடா பெரியசாமி, பா.ஜ.க.வில் எதிர்காலம் இல்லை என முடிவு செய்திருந்த நிலையில், அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இதனையடுத்து, உடனடியாக அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார் தடா. அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய 3 மாவட்டங் களில் பட்டியலினத்தவர் களிடம் நன்கு அறிமுக மானவர் தடா பெரிய சாமி என்பது குறிப்பிடத் தக்கது. பா.ஜ.க. அதிர்ச்சியான "தடா'!
-இளையர், ராம்கி, பி.சிவன், சக்தி, எஸ்.பி.எஸ்., ராஜா, பகத், நாகேந்திரன், மகேஷ், ராம்குமார், காளிதாஸ்