ருவழியாக, தான் எதிர்பார்த்த நெல்லை தொகுதியின் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள பண்ணையார் நயினார் நாகேந்திரன், தற்போது அ.தி.மு.க.வின் வலுவான கூட்டணி பலம் இல்லாததால் மும்முனைப் போட்டியில் தனித்துவிடப்பட்ட சூழல். தவிர, நெல்லை எம்.பி. தொகுதியில் நாடார் சமூகத்தவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். நயினார் நாகேந்திரனின் சமூகத்தவர்கள் குறைந்த அளவிலிருப்பதும் அவருக்கு நெகடிவாக இருக்கிறது.

ee

எனவே தனது வெற்றிக்காகக் கடந்த மார்ச் 23ஆம் தேதியன்று திருச்செந்தூர் செந்திலாண்டவர் ஆலயத்தில் சத்ரு சம்ஹார யாகம் வளர்த்து, சிறப்பு பூஜை அபிஷேகம் செய்திருக்கிறார் நயினார். இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம், "மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினேன்'' எனக் கூறினாலும், திருச்செந்தூர் ஆலயத்தின் முதன்மை பட்டர்களிடம் விசாரித்தபோது, தன்னுடைய எதிரியை வீழ்த்த நினைப்பவர்கள் நடத்துவது தான் சத்ரு சம்ஹார யாக வழிபாடு என்று விளக்க மளித்தனர். திருச்செந்தூர் முருகனோட கூட்டணி போடுறாரோ!

ee

Advertisment

தொண்டர்களை உசுப்பேத்திவிடுவதற்காக, "கோயமுத்தூரில் என்ன அடிப்படை மாற்றம் செய்துள்ளார்கள்? ஊரை சூடேற்றியதுதான் மிச்சம். குளுமையாக அமைதியாக இருக்கக்கூடிய ஊரை இன்னைக்கு ரெண்டு டிகிரி, மூணு டிகிரி வெப்பநிலையை ஏற்றி இருக்கிறார்கள்''" என்றார் கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கான கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட தாமரைக்கட்சி வேட்பாளர். இதற்கு பதிலளிக்கும் வகையில் சூலூரில் நடந்த தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவோ, "பா.ஜ.க. பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தது, அப்பவும் ஒண்ணும் செய்யவில்லை. அ.தி. மு.க.வும் எதுவும் செய்யவில்லை. அப்ப, எந்த முகத்தை வைத் துக்கொண்டு தமிழக மக்க ளிடம் வாக்கு சேகரிக்க முடி யும்? அதனால் தான் 3 டிகிரி 5 டிகிரி கதையெல்லாம் சொல்லிட்டு இருக்காங்க. இவர்களுக்கெல்லாம் தேர்தல் சூடு தாங்காது. தேர்தல் சூடு என்றால் என்னவென்று தெரியாது. இன்னும் அடுப்பே பற்றவைக்கவில்லை தம்பி, அதுக்குள்ள சுடுது, சுடுதுன்னு சொன்னா என்ன பண்றது? புரிந்தவர் களுக்கு புரியும்'' என்றார் நக்கலாக. சூரியன்னா சுடத்தானே செய்யும்!

ee"ஐ.ஏ.எஸ். பொன்னையாவின் சகோதரர் என்ற அடிப்படையில் சீட் வாங்கி வந்திருக்கின்றார் ஜெயபெருமாள்'' என ராமநாதபுரம் நாடாளு மன்றத் தொகுதி அ.தி.மு.க.வினர் பேசிவந்த நிலையில், அதுவல்ல உண்மை என்று உண்மையை உடைத்துள்ளனர் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. வினர். விருதுநகர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவ ராக அடையாளம் இருந்தாலும் ஜெயபெருமாள் அவ்வளவாக அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவதில்லை. எடப்பாடிக்கு நெருக்கமான காண்ட்ராக்டராக அறியப்படும் செய்யாதுரையின் மகன் நாகராஜன் நேரடி அரசியலில் ஈடுபட்டால் தேவையில்லாத சர்ச்சைகள் எழும் என்பதால், தன் சார்பில் ஜெயபெருமாளுக்கு சீட் வேண்டுமென்று, ஐ.டி. விங் நிர்வாகியை ஜெயபெருமாளுடன் அனுப்பி, பெரும் தொகையை எடப்பாடி தரப்பில் கொடுத்து, ராமநாதபுரத்திற்கு சீட் பெற்றுள்ளார் செய்யாதுரை. ஏற்கெனவே காண்ட்ராக்டர் செய்யாதுரை வீட்டில் ரெய்டு நடத்தியது ஊரறிந்த கதை! காண்ட்ராக்ட் தொழிலில் சம்பாதித்து பதுக்கி வைத்த பணத்தை ஜெயபெரு மாளுக்காக செய்யாதுரை வாரியிறைக்கப் போகிறார் என் கின்றனர் வாய்பிளந்து. இராம நாதபுரத்தை நனைக் கப்போகும் பணமழை!

பா.ஜ.க. கூட்டணியின் சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளராக இந்திய மக்கள் கல்வி கழகத்தின் தேவநாதன் அறிவிக்கப்பட்டவுடனேயே, "சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க.வின் வெற்றியை எட்டாக்கனியாக்கிய eeபா.ஜ.க.வின் மாநில மற்றும் தேசியத் தலைமைக்கு பாராட்டுக்களும், இரங்கலும்'' என்றும், "நன்றி! எங்களது வெற்றி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் அவர்களை எளிதாக வெற்றிபெறச் செய்ய திருநெல்வேலியிலிருந்து சிவகங்கை நாடாளு மன்றத்திற்கு சீட் கொடுத்த பா.ஜ.க.வின் மாநில மற்றும் தேசியத் தலைமைக்கு மனமார்ந்த நன்றி!'' என்றும், "எங்களது வெற்றி வேட்பாளர் சேவியர் தாஸை எளிதாக வெற்றிபெறச் செய்ய திரு நெல்வேலியிலிருந்து சிவகங்கை நாடாளுமன்றத் திற்கு சீட் கொடுத்த பா.ஜ.க.வின் மாநில மற்றும் தேசியத் தலைமைக்கு மனமார்ந்த நன்றி!'' என்றும் பா.ஜ.க. தலைமையை நக்கலடித்து, சிவகங்கை தொகுதி முழுவதும் மூன்றுவிதமான போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது! இத்தொகுதியில் பா.ஜ.க. சார் பில் முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிச்சாமியும், மேப்பல் சத்திநாதனும் சீட்டு கேட்ட நிலையில், நயினார் நாகேந்திரன் சிபாரிசில் தேவநாதனுக்கு சீட் தரப்பட்டுள்ளது. அதன் விளைவுதான் இந்த போஸ்டர்கள் என்கின்றனர் விபரமறிந்தவர்கள். போஸ்டர் யுத்தம்!

Advertisment

பா.ஜ.க.வோடு அ.தி.மு.க. கள்ள உறவாக இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரங் களில் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதை நிரூபிப்பது போல், பா.ஜ.க. வேட் பாளர்களுக்கு அ.தி. மு.க. ஐ.டி. விங் நபர் கள் வேலை செய்வது தெரியவந்துள்ளது. சிவகங்கையில் பா.ஜ.க. வேட்பாளராக இருக்கும் தேவநாதனுக்கு ஐ.டி. விங் வேலையை ஏற்பாடு செய்துகொடுத்திருப்பது அ.தி.மு.க. ஐ.டி. விங் மாநிலச் செயலாளர் ராஜ்சத்யன். ராஜ்சத்யனின் தீவிர விசுவாசியான "பேசு தமிழா பேசு' ராஜவேல்தான் சிவகங்கையில் தேவநாதனுக்காக வேலை செய்கிறார். நெல்லையில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கும் இவர்தான் வேலை செய்கிறார்! இதையும் ஏற்பாடு செய்துகொடுத்தவர் ராஜ்சத்யன். இதுதான் ஆடு பகை, குட்டி உறவுங்கறது!

ee

திருவண்ணாமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கலியபெருமாள் அறிமுகக்கூட்டம், திருவண்ணாமலையில் மார்ச் 24ஆம் தேதி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. வேட்பாளர், திருவண்ணாமலை ஒன்றியச் செயலாளராக இருப்பதால், இந்த அறிமுகக் கூட்டத்துக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரம் பேர் வருவார்கள் எனத் தேர்தல் பொறுப்பாளர்கள் எதிர்பார்த்து, ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி தயார் செய்தனர். முன்னாள் அமைச்சர்கள் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் உட்பட பலர் கலந்துகொண்டு வேட்பாளர் கலியபெருமாளை அறிமுகப்படுத்தி பேசி முடித்ததும், தொண்டர்கள் கூட்டம் திபுதிபுவென பிரியாணி பந்தியை நோக்கிப் பாய்ந்து ஃபுல் கட்டு கட்டிவிட்டு சென்றபின்புதான், 600 பேருக்கான பிரியாணி மீந்துபோனது தெரியவந்து, நிர்வாகிகள் அதிர்ச்சியடைந் தனர். மேடையில் உட்கார்ந்திருந்த மாவட்ட நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் வந்திருந்தால்கூட பிரியாணி மீந்திருக்காதே என நொந்துகொண்டனர் வேட்பாளருடன் இருந்தவர்கள். எதையுமே ப்ளான் பண்ணி பண்ணணும்!

ddபா.ம.க. எப்போதும் தனது விருப்பப் பட்டியலில் வைத்துள்ள தொகுதி அரக்கோணம். அந்தளவுக்கு வன்னியர்கள் ஆதிக்கமுள்ள, பா.ம.க.வுக்கு சாதகமான பகுதி. பா.ஜ.க. கூட் டணியில் இத்தொகுதியை பா.ம.க. கேட்டு வாங்கியது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே.மூர்த்திதான் இத்தொகுதியின் வேட்பாளர் என்று நிர்வாகிகளும், தொண்டர்களும் உறுதியாக இருந்தனர். ஆனால் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பில் ஏ.கே.மூர்த்திக்கு பதில் வழக்கறிஞர் பாலு அறிவிக்கப்பட்டார். கட்சியின் மூத்த தலைவரும், மருத்துவர் குடும்பத்துக்கு உறவினராகவுமுள்ள ஏ.கே. மூர்த்திக்கு ஏன் சீட் இல்லை என விசாரித்தவர்களிடம், "அ.தி.மு.க.வுடனான கூட் டணி என்றால் போட்டியிட லாம் என்ற மனநிலையில் இருந்தார். பா.ஜ.க.வுடன் கூட்டணி முடிவானதும் தனது முடிவை மாற்றிக்கொண்டார். "ஜோசியரிடம் ஜாதகம் பார்த்தேன், வேண்டாம், நேரம் சரியில்லை எனச்சொல்லிவிட்டார், அதனால் நான் போட்டி யிடவில்லை' எனச் சொல்லி பின்வாங்கிவிட்டார்'' என்கிறார்கள். கட்டம் சரியில்லையா? கூட்டணி சரியில்லையா?

வேலூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம், வாணியம்பாடியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசும்போது, "இந்த தொகுதியில் மூன்று முறை தோல்வி யடைந்துள்ளேன். நான்காவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறேன். 2014ஆம் ஆண்டு தாமரை சின்னத்தில் போட்டியிட்டபோது, வாணியம் பாடியில் இரட்டை இலை முதலிடத்திலும், தாமரை இரண்டாவது இடத்திலும் இருந்தது. போன நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டேன். அப்போது 8 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந் தேன். என்னை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்து பழி வாங்கினார் அ.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் (கே.சி.வீரமணி). அவர் மாப்பிள்ளை என்றழைக்கும் தி.மு.க. கதிர்ஆனந்த் வெற்றி பெறுவதற்காக தி.மு.க.வுக்கு வேலை செய்தார். அவர் துரோகி'' எனச் சாடினார். அதிமுகவினரோ, "தேர்தலப்ப மட்டும் தொகுதிக்கு வந்து ஓட்டு கேட்டால் நாலு முறையல்ல நாப்பது முறையும் தோற்கவேண்டியதுதான்'' எனச் சொல்லி சிரிக்கிறார்கள். தோல்வியிலிருந்து மீளுவாரா?

dd

திண்டுக்கல் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பாக போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கர பாணி மற்றும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோருடனும், பா.ஜ.க. கூட் டணி சார்பாக போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் திலகபாமாவும், அ.தி.மு.க. கூட்டணி சார்பாக போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. முபாரக், மாஜி திண்டுக் கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோ ருடனும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்திருந்தனர். ஒரே நேரத்தில் மூன்று கட்சியினரும் வந்ததால் பரபரப்பு நிலவியது. முதலில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ம.க.வின் திலகபாமாவை சந்தித்த மாஜி திண்டுக்கல் சீனிவாசன், "நீங்களும் இங்கயா இருக்கு றீங்க? நல்லா இருக்கியாமா?'' என்று விசாரித்த வாறே, "கடந்த முறை மாம்பழ சின்னத்தில் எங்க ளோடு இருந்தீங்க. இந்தமுறை அவங்களோட இருக்குறீங்க'' என்று கிண்டலடித்தவாறே திலக பாமாவிடம் கூற, உடனிருந்தவர்கள் சிரித்துவிட்ட னர். பின்னர், மாஜி நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் சிலர், திலகபாமாவுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இது இப்போ... அது அப்போ!

ee

டசென்னையில் தி.மு.க. சார்பில் கலாநிதி வீராசாமியும், அ.தி.மு.க. சார்பில் ராயபுரம் மனோ வும் வேட்புமனுத் தாக்கல் செய்ய ஒரேநேரத்தில் வந்ததில் அமைச்சர் சேகர்பாபு, மாஜி அ.தி.மு.க. ஜெயகுமார் மற்றும் அ.தி.மு.க. மா.செ. ராஜேஷ் இடையே வாக்குவாதம் கடுமையானது. இதில் அமைச்சர் சேகர்பாபுவுக்கும், அ.தி.மு.க. மா.செ. ராஜேஷுக்குமிடையே இருந்த பழைய பகை வெடித்ததாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க.வில் சேகர்பாபு இருந்தபோது அவருக்கு எதிராக மதுசூதனனால் கட்சிக்குள் நுழைத்து உருவாக்கப் பட்டவர்தான் ராஜேஷ். வேட்புமனுத் தாக்கலுக் காக தி.மு.க.வுக்கு டோக்கன் எண் 2, அ.தி.மு.க.வுக்கு டோக்கன் எண் 7 என சேகர்பாபு தரப்பு சொல்ல, "வேட்புமனுத் தாக்கல் செய்ய 1+4 தானே போக வேண்டும்? இவர்கள் 1+8 என வந்தது ஏன்?'' என்றெல்லாம் கேள்வியெழுப்பினார் ராஜேஷ். சேகர்பாபுவோ, "அன்றைக்கே முளையிலேயே கிள்ளியெறிந்திருந்தால் இன்றைக்கு இப்படி பேசியிருக்க முடியுமா'' எனக் கூறுமளவுக்கு கடுப் பாகிவிட்டார். இறுதியில், அ.தி.மு.க. டோக்கன் டைம் 11.59, தி.மு.க. டோக்கன் டைம் 12.15 எனக்கூறி, அ.தி.மு.க.வின் வேட்பு மனு முதலில் தாக்கல் செய்யப்பட்டது. வேட்பு மனுத்தாக்கலுக்கே இம்புட்டு பஞ்சாயத்தா?

-ராம்கி, நாகேந்திரன், சக்திவேல், ராஜா, அருண்