"ஹலோ தலைவரே, ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா கொலை, கொள்ளை விவகாரம் இப்ப எதிர்பார்த்த முக்கிய கட்டத்தை நெருங்கியிருக்கு.''”
"ஆமாம்பா, சம்மன் மூலம் சசிகலா 21-ந் தேதி விசாரணைக்கு அழைக்கப்பட்டாரே?''”
"ஆமாங்க தலைவரே, நம்ம நக்கீரனில் தனி ஸ்டோரி வந்திருக்கு. எனக்குத் தெரிஞ்ச தகவலையும் சொல்றேன். விசாரணைக்கான சம்மனை தனிப்படை டீம், சசிகலாவிடம் கொடுத்த நொடியிலேயே அங்கே பதட்டம் பத்திக்கிச்சி. அதேசமயம், ஓ.பி.எஸ்.ஸோ, இப்பதான் விசாரணை சரியான இடத்துக்கு வந்திருக்குன்னு தன் சகாக்களிடம் உற்சாகமாகச் சொல்லியிருக்கார். காரணம், எடப்பாடிக்கு இதன்மூலம் நெருக்கடி வரும்னு அவர் ஆவலாக எதிர்பார்க்கிறாராம். அதேபோல் தனக்கு சம்மன் வந்ததும், தனது வழக்கறிஞர் களிடம் அது குறித்த ஆலோசனையில் சசிகலா ஈடுபட்டார். அப்போது கொடநாடு க்ரைமில் ஓ.பி.எஸ்.ஸுக்கு நேரடித் தொடர்பு இருக்க வாய்ப்பில்லைன்னு நம்பிக்கையோடு சொல்லியிருக்கிறார் சசிகலா.''”
"எதனால் அப்படிச் சொன்னாராம்?''”
"இதே கேள்வியைத்தான் வழக்கறிஞர்களும் அவரிடம் கேட்டிருக்காங்க. அதுக்கு சசிகலா, கொடநாடு சம்பவத்தில் கேரள நபர்கள் மூலம்தான் சதித் திட்டம் வகுக்கப்பட்டிருக்கு. ஓ.பி.எஸ்.ஸுக்கு கேரள ஆட்களிடம் அதிக பரிச்சயம் இருக் காதுன்னு சொன்ன சசிகலா, எஸ்.பி.வேலுமணிக்குதான் நிறைய மலையாளிகளைத் தெரியும். அவர்தான் க்ரைம் நபர்களை எடப்பாடிக்கு அறிமுகப்படுத்தியிருப்பார். அதன் அடிப்படையில் எடப்பாடி போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச்சின்படிதான் எல்லாம் நடந்திருக்கு. அதனால் எனக்குத் தெரிந்த உண்மைகளை எல்லாம் போலீசிடம் சொல்லிவிடலாம்னு இருக்கேன்னு அவர் அழுத்தமாகவே சொல்லியிருக்கார்.''”
"கொடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட டாக்குமெண்டுகளில், ஓ.பி.எஸ். தொடர்பான ஆவணங்களும் அதிகமாமே?''”
"இது பற்றிய ஆலோசனையும் அப்ப நடந்திருக்கு. அது சம்பந்தமா பேசிய சசிகலா, ஓ.பி.எஸ். தொடர்பான பல டாக்குமெண்டுகளும் அங்கே இருந்தது உண்மைதான். அது தொடர்பாக என்னிடம் விசாரணை அதிகாரிகள் கேட்டாங்கன்னா, அந்த ஆவணங்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அக்கா ஜெ.வுக்குத்தான் அதெல்லாம் தெரியும்னு மழுப்பிடுவேன். அதேபோல், பங்களாவில் தங்கம், வைரம் உள்ளிட்ட விலைமதிப்பு மிக்க பல பொருட்கள் இருந்தன. அவையெல்லாம் இப்போது இருக்கிறதா? அல்லது அதுவும் திருடப்பட்டுவிட்டதா? என்று தெரியவில்லை. அது பற்றியும் நீங்கள்தான் விசாரிக்கணும்னு, விசாரணை அதிகாரிகளிடமே சொல்லப்போகிறேன் என்றும் சசிகலா அந்த ஆலோசனையின்போது சொன்னாராம்.''”
"இதெல்லாம் எடப்பாடிக்கு மிகுந்த சிக்கலையும் நெருக்கடியையும் ஏற்படுத்துமே?''”
"ஆமாங்க தலைவரே, அதனால்தான் சசிகலாவுக்கு சம்மன்னு செய்தி வந்ததுமே, முகம் வெளிறிப்போய்விட்டாராம் எடப்பாடி. அ.தி.மு.க.வுக்குள் சசிகலா நுழைய, தான் குறுக்கே நிற்பதால், கொடநாடு விவகாரத்தில் தன்னை நிச்சயம் அவர் போட்டுக் கொடுப்பார்னு பயப்படறாராம். சசிகலாவை விசாரிக்க, சென்னைக்கே போலீஸார் வந்திருக்கிறார்கள்னு தெரிந்ததுமே, பதட்டமான எடப்பாடி, உடனடியாக மாஜி ஜெயக்குமாரைத் தொடர்புகொண்டு, சசிகலாவுக்கு தி.மு.க.வின் ஆதரவு இருப்பதாக நான் நினைக்கிறேன். அவரிடம் வாக்குமூலம் வாங்கி, என்னையும் கைது செய்ய தி.மு.க. திட்டம் வகுக்குது. அதனால் இந்த சட்டசபைக் கூட்டத் தொடர் முடிவதற்குள்ளேயே எனக்கு சம்மன் வரலாம்னு அச்சத்தோடு சொன்னாராம்.''”
"வினை விதைத்தவர்கள் விளைவதை அறுத்துக்கொண்டு போகட்டும். தலைமைச் செயலக அதிகாரிகளுக்குள் ஈகோ யுத்தம் நடக்குதுன்னு கோட்டைப் பக்கம் டாக் அடிபடுதே?''”
"உண்மைதாங்க தலைவரே, தலைமைச் செயலகத்தில் முதல் வரை சந்திக்கும் அதிகாரிகளுக் குள்ளேயே ஈகோ யுத்தம் நடப்பது பரபரப்பை ஏற்படுத்திக் கிட்டு இருக்குது. முதல்வர் அலுவலகத்தில் அடிக்கடி உய ரதிகாரிகளின் கோ-ஆர்டினே ஷன் கூட்டம் நடப்பது வழக்கம். இதில்தான் துறைகள் தொடர் பான முக்கிய விவாதங்கள் நடக்கும். இந்தக் கூட்டத்தை முதல்வரின் செய லாளர் கூட்டினா லும், அதில் துறைச் செய லாளர்களாக இருக்கும் அவரை விட சீனியர் அதி காரிகள் கலந்துகொள்ளாமல், தங்களுக்குக் கீழ் உள்ள டி.ஆர்.ஓ. ரேஞ்சில் இருப் பவர்களை அனுப்பி வைக்கி றார்களாம். அப்படி வரும் அதிகாரிகளிடம், கூட்டம் குறித்த விபரங்களை மேலதி காரிகள் கேட்பதும் இல் லையாம். தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக்கணும்ங் கிற முதல்வரோட டார்கெட்டுக்கு ஈடு கொடுக்காமல், கோட்டை யில் அதிகாரிகளின் ஈகோ ஃபைட் மேலோங்குதாம்.''”.
"தமிழக சைபர் க்ரைம் தன்னிச்சையாக வெளி நிறுவனங்களில் எலக்ட்ரானிக் பொருட்களை பர்ச்சேஸ் பண்ணியிருக்கே?''”
"உண்மைதாங்க தலை வரே, தமிழக காவல்துறையின் சைபர் க்ரைம் டி.ஜி.பி. யாக அம்ரேஸ் பூஜாரி இருக்கிறார். துறைக்கு ஆன்லைன் மூலம் வருகிற புகார்களைப் பதிவு செய்யவும், அது தொடர் பான நடவடிக்கைகளை அப்லோட் செய்யவும் "கியாஸ்க்' என்கிற சிஸ்டத்தை தனியார் நிறுவனத்திடமிருந்து, 150 காவல் நிலையங்களுக்கு 32 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக் கிறார்கள். இதை அரசின் எல்காட் நிறுவனத்திடம் குறைந்த விலைக்குத் தரமாக வாங்கி இருக்கலாமே என் கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.''”
"கூட்டுறவுத்துறையில் சல சலப்பு தெரியுதே?''”
"ஆமாங்க தலைவரே, வடசென்னையில், கூட்டுறவு சார்பதிவாளராக இருக்கும் செல்லையா, தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருக்கிறாராம். இவர் மீது, கூட்டுறவு பண்டக சாலையில் பணிபுரியும் பெண்கள், மாநில மகளிர் ஆணையத்திடம் புகார் கொடுத்திருக் கிறார்கள். அதில், ஆய்வு என்ற பெயரில் கூட்டுறவு பண்டக சாலைக்கு மதிய உணவு இடை வேளையின் போதும், மாலை 6 மணிக்கு மேலும் வருகிற செல்லையா, அங்கு பணிபுரியும் பெண்களிடம் ஆபாசமாகப் பேசுவதாகவும், குடோன் அரிசி மூட்டைகளில் ஏறி நின்று, எண்ணும்படி பெண் பணியாளர்களை வலியுறுத்துவதாக வும், அவரோட செயல்கள் எல்லை மீறுவ தாகவும், இதுபற்றிக் கேட்டால், தனது செல்வாக்கைக் காட்டி மிரட்டுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதை மகளிர் ஆணையம் தீவிரமாக விசாரித்து வருகிறது. இதுதான் அங்கே சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.''”
"’தெலங்கானாவுக்கும் புதுவைக்கும் கவர்னரா இருக்கும் தமிழிசை சௌந்திரராஜன் எழுதிய புத்தகத்தின் வெளி யீட்டு விழா சென்னையில் சிறப்பா நடந்திருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே.. நம்ம நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்ட பத்திரிகையாளர்களும் கலந்துக்கிட்டாங்க. ஆளுநருக்கும் முதல்வருக்கு மான உரசல்கள் பற்றி தமிழிசை அந்த விழாவில் சுட்டிக்காட்டினார். அவருக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் இடையே மோதல்கள் வெடித்தபடியே இருக்கிறதாம். ராவ் உட்பட மாநில அதிகாரிகள் யாரும் எனக்குரிய மரியாதை கொடுப்பதில்லைன்னு ஏற்கனவே வெளிப்படையாகவே சொல்லிவந்த தமிழிசை, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அண்மையில் சந்தித்து, தெலுங்கானா முதல்வர் குறித்து ஏகத்துக்கும் புகார்களைச் சொல்லியிருக் கிறார். கூடவே, புதுவை முதல்வர் ரெங்கசாமி பற்றியும், அங்கிருந்த தலைமைச் செயலாளர் அஸ்வின்குமார் பற்றியும் கூட புகார் வாசித்தாராம்.''”
"அதனால்தான் புதுவை தலைமைச் செயலாளர் அஸ்வின் குமார் மாற்றப்பட்டிருக்கிறாரா?''”
"அஸ்வின்குமாரோடு புதுவை முதல்வர் ரெங்க சாமிக்கும் இடையே கூட உரசல் ஏற்பட்டது. அதனால் அரசின் நிர்வாகத்துக்கு அவர் ஒத்துழைப்பதில்லை என்று தொடங்கி, அவர் மீது 12 குற்றச்சாட்டுகளைக் கூறி அமித்ஷாவுக்கு முதல்வர் ரெங்கசாமி, ஒரு புகார் கடிதத்தை எழுதி இருந்தார். இந்தச் சூழலில்தான் அஸ்வின் டெல்லிக்கு மாற்றப்பட்டு, அவருக்கு பதில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜீவ் வர்மாவை புதுவையின் புதிய தலைமைச் செயலாளராக நியமித்திருக்கிறார் அமித்ஷா. டெல்லித் தரப்போ, அஸ்வின் குமார், நிர்வாகக் காரணங்களுக்காகத்தான் மாற்றப்பட்டிருக்கிறார் என்கிறது.''”
"இளையராஜாவைப் பா.ஜ.க.வினர் பலிகடா ஆக்கிவிட்டனர் என்கிறார்களே?''”
"ஒருவகையில் அது உண்மைதாங்க தலைவரே, புளு கிராஃப்ட் டிஜிட்டல் பவுண்டேசன் என்ற நிறுவனம், பிரதமர் மோடியின் புகழ்பாடும் நோக்கத்துக்காகவே உருவாக்கப்பட்ட அமைப்பாகும். அது மோடி குறித்த நூல்களையும் கையேடுகளையும் தொடர்ந்து வெளியிட்டு வரு கிறது. அந்த நிறுவனம், மோடி யையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு ஒரு நூலை வெளியிட் டது. இதற்கு இசைஞானி இளையராஜாவிடம் அணிந் துரை கேட்டிருக்கிறார்கள். அவர் முதலில் தயங்க, அவரை வற் புறுத்தி எழுதவைத்து இருக் கிறார்கள். அதில்தான் ராஜா, அம்பேத்கரின் கனவுகளை மோடி செயல்படுத்தி வருவதாக தாறுமாறாகப் பாராட்டி யிருந்தார். அதுதான் இப்போது, அவரது ரசிகர்கள் மத்தியிலும் அவருக்கு எதிர்ப்புணர்வை உண்டாக்கியிருக் கிறது என்கிறார்கள். தேவையற்ற விமர்சனங்களோடு, தன்னோட ஜி.எஸ்.டி. வரி பாக்கி விவகாரமும் வெளி யானதால் தன்னை பலிகடாவாக்கிட்டாங்கன்னு இளைய ராஜா அப்செட்டாயிட்டாரு. கமலாலயத்தில் நடந்த புத்தக விழாவில் கலந்துக்கிட்ட டைரக்டர் பாக்யராஜ், மோடியை ஆதரிச்சதோடு, அவரை எதிர்ப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவங்கன்னு சொன்னாரு. இது பெரியளவில் சர்ச்சையானதால, தன்னோட கருத்துக்காக உடனடியா மன்னிப்பு கேட்டதோடு, நான் திராவிட உணர்வில் வளர்ந்தவன்னு சொல்லியிருக்காரு. இளைய ராஜா மாதிரி சிக்காமல் பாதியிலேயே தப்பிச்சிட் டாருன்னு அவர் தரப்பில் சொல்றாங்க.''”
"அண்மைக்காலமாக ஒரு பா.ஜ.க. பிரமுகர் பற்றி அதிகமாக சர்ச்சை கிளம்புதே?''”
"பிரித்வி என்கிற அந்த பா.ஜ.க. பிரமுகர், முன்பு சென்னை கற்பகாம்பாள் கோயிலை மையமாக வைத்து, தன்னை வளர்த்துக்கொண்டவராம். பின்னர் பா.ஜ.க.வின் சீனியர்களான பொன்னாரிட மும் தமிழிசையிடமும் நட்பு பாராட்டி வந்தவர், இப்போது பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சுற்றிச் சுற்றி வருகிறாராம். இந்த பிரித்விக்கும் அண்ணா மலையின் அரசியல் அட்வைசரான அமர் பிரசாத் ரெட்டிக்கும் இடையே இப்போது ஏற்பட்டிருக்கும் மோதல் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. இந்த பிரித்வி, கல்லூரிகளில் சீட் வாங்கித் தருகிறேன் என்றும், அரசாங்க விசயங்களை முடித்துத் தருகிறேன் என்றும் பெரிய இடங்களிடமே மெகா கலெக்ஷன் நடத்தி வருகிறார் என்றும் கூறுகிறார்கள். பிரித்விகிட்ட இது பற்றிக் கேட்டால், நான் ஒரு கடவுள் பக்தன். அவ்வளவுதான் சொல்ல முடியும்கிறாரு.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். சசிகலா மீதான வருத்தத்தில், அவரிடமிருந்து ஒதுங்கி இருந்த அவரது சகோதர் திவாகரன், கடந்த வாரம் அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். குடும்ப நலன்கள் குறித்து இருவரும் உருக்கமாகப் பேசிக்கொண்டன ராம். அதேபோல் கொஞ்சகாலமாக சசிகலாவுடன் முரண்பட்டிருந்த டி.டி.வி.தினகரனையும் சசிகலா பேசி, தன் வழிக்குக் கொண்டு வந்துவிட்டார் என்கிறது மன்னார்குடி தரப்பு.''