திருமணமான தம்பதிகளுக்கு இயற்கையான முறையில் கர்ப்பம் தரிக்க வாய்ப்பில்லையென்றால், செயற்கை முறையில் டெஸ்ட் டியூப் பேபி மூலம் குழந்தை பிறப்பு என்பது இப்போது சர்வசாதாரணமாகி விட்டது. நவீன மருத்துவ உலகத்தின் சாதனையான இச்செயல்பாட்டை வரமாகப் பார்க்காமல் வருமானமாகப் பார்க்கப் பழக்கிவிட்டன சில தனியார் மருத்துவ மனைகள். இதில் மூலப்பொருளாக மாறிவிட்டது கரு முட்டை வியாபாரம்.

ff

அதில் நிகழ்ந்த மிகக்கொடுமையான சம்பவம், 16 வயது ஈரோடு சிறுமியிடம் பல்வேறு மருத்துவமனைகளில் 16 முறை கரு முட்டை எடுக்கப்பட்டது தான். இது சம்பந்தமாக ஜூன் 11-14 நக்கீரன் இதழில், "16 வயது சிறுமியிடம் 16 முறை! கரு முட்டை வியாபாரம்! கல்லா கட்டும் மருத்துவ உலகம்!' என்ற தலைப்பில் விரிவான செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத் துறைத்தலைவர் டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்தது தமிழக அரசு. அக்குழுவினர், பாதிக்கப்பட்ட சிறுமி, அச்சிறுமியைச் சீரழித்து கரு முட்டை எடுக்கவைத்த அவரது தாய் இந்திராணி, புரோக்கர்களான சையத் அலி, மாலதி, ஜான் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியதோடு, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளான பெருந்துறை ராம் பிரசாத், ஒசூர் விஜய், கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா, ஆந்திர மாநிலம் திருப்பதி மாத்ருதுவா மற்றும் ஈரோடு, சேலம் ஆகிய மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை நடத்தியது.

ff

இதற்கிடையே, கருமுட்டை தானத்திற்கு அரசு விதிமுறை ஏற்படுத்தி, இனிமேல் முறைகேடு ஏற்படாதவண்ணம் கண்காணிக்க அதற்கென அரசு சார்பில் சுகாதாரச் செயலர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஜூன் 18-21 இதழில், 'நக்கீரன் செய்தி எதிரொலி -நடவடிக்கை எடுத்த அரசு' என அச் செய்தியை பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில், அரசு அமைத்த மருத் துவக்குழு தனது அறிக்கையை மருத் துவத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியத்திடம் வழங்க, 14ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த அமைச் சர் மா.சு., "ஈரோடு சிறுமியிடம் கரு முட்டை சட்டத்திற்குப் புறம்பாக எடுக்கப்பட்டிருக்கிறது. சிறுமியின் வயது 21 எனப் போலியாக ஆதார் கார்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. சிறுமியின் தாயும் இதற்கு உடந்தை யாக இருந்துள்ளார். சட்டத்திற்குப் புறம்பாக தனியார் மருத்துவமனைகள் இச்செயலில் ஈடுபட்டது நிரூபணமாகி யுள்ளது. ஆகவே இக்குற்றத்தைச் செய்த பெருந்துறை ராம்பிரசாத், ஓசூர் விஜய் மற்றும் ஈரோடு, சேலத் தில் உள்ள மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதல் கட்டமாக அம்மருத்துவமனைகளில் செயல்படும் ஸ்கேன் சென்டர்கள் மூடப்படுகிறது. அங்கு சிகிச்சையில் உள்ளவர்களைக் கருத்தில்கொண்டு 15 நாட்களுக்குப் பிறகு அந்த மருத்துவ மனைகள் சீல் வைக்கப்படும். குற்றச் செயலில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது சிறை மற்றும் அபராதம் போன்ற சட்ட நடவடிக்கையும், அந்த மருத் துவர்கள் மீது தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்படும்'' என்றார்.

மருத்துவர்கள் தாங்கள் படித்த படிப்புக்கு உள்ளார்ந்த அர்ப்பணிப்புணர்வுடன் சேவை செய்யவேண்டும். ஆனால் கார்ப்பரேட் மருத்துவ உலகில், கோடிகளைக் கொட்டும் வருமானமுள்ள துறையாக மருத் துவம் மாறியிருக்கிறது. மக்கள் கடவுளாகப் பார்க்கும் மருத்துவர்கள், வியாபாரிகளாக மாறிவருவதால், அத்தகைய முறைகேடான மருத்துவர்களுக்கு தமிழக அரசு தண்டனை பெற்றுத் தந்து மக்களுக்கு நம்பிக்கை யூட்டியிருக்கிறது.

Advertisment

_________________

அன்றே அம்பலப்படுத்திய நக்கீரன்!

Advertisment

னியார் மருத்துவமனைகளில் கரு முட்டை விற்பனையில் ஈடுபடுவது கூலிப்பெண் தொழிலாளர்கள்தான். மத்திய பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதார, தொழிற்கொள்கையால் விசைத்தறித் தொழில் முற்றிலும் முடங்கிய நிலையில்... வருமானத்துக்கு வழியின்றி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் ffமற்றும் திருப்பூர் பகுதிகளில் கருமுட்டை விற்பனையில் பெண்கள் ஈடுபடுகிறார்கள். கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக இத்துயரம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

2016-ஆம் ஆண்டு குமாரபாளையத்தில் விசைத்தறித் தொழிலாளி ஒருவர் தனது மனைவியை கருமுட்டை விற்பனையில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தினார். அப்பெண், குமாரபாளையத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஈடஒ (ஙக) தொழிற்சங்க அலுவலகத்தில் முறையிட்டார். அந்த அமைப்பின் நிர்வாகியான தோழர் கதிரவன், அப்பெண்ணை குமாரபாளையம் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று, அவரது கணவன் மீது புகார் கொடுக்க வைத்ததோடு, தனியார் மருத்துவமனைகளின் கரு முட்டை வியாபாரம் குறித்தும் புகாரில் தெரிவிக்க வைத்தார். அடுத்த ஓரிரு நாட்களில் கட்சி அலுவலகத்திலிருந்த தோழர் கதிரவனை, அந்தப் பெண்ணின் கணவர் கொலைவெறியுடன் அரிவாளால் வெட்டினார். கருமுட்டை விற்பனை குறித்தும், கொலைவெறித் தாக்குதல் குறித்தும் அப்போதே நக்கீரனில் விரிவான செய்தி வெளியிட்டோம். தீவிர சிகிச்சையால் தோழர் காப்பாற்றப்பட்டார். ஆனால் அப்போதைய "ஜெ.' அரசு கருமுட்டை வியாபாரம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.