லங்கையைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரான சண் மாஸ்டர், ஈழ விடுதலைக்கான இறுதி யுத்தம் நடந்து 15 ஆண்டுகள் ஆன நிலையில்... ஈழத்தின் தற்போதைய நிலவரம் என்னவென்பதை நக்கீரன் வாசகர்களு டன் பகிர்ந்துகொள்கிறார்.

முள்ளிவாய்க்காலின் 15ஆம் ஆண்டு நினைவு நாள் வந்துவிட்டது, ஈழத்தின் கள நிலை என்ன?

ss

பஞ்சம் நேரிடும்போது கஞ்சித்தொட்டி திறந்து பசிப்பிணி போக்கும் மரபொன்று தமிழினத்திற்கு உண்டு. இனஅழிப்புப் போரின் போது எம்மைக் கொல்வதற்காகவே உணவுப் பொருட்களைத் தடுத்துவிட்டது சிங்கள அரசு. அப்போது எமது மக்களின் உயிர் காத்து நின்றது உப்பில்லாக் கஞ்சி. அந்தக் கஞ்சியை குடிப்பதற்கு கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் எமது மக்கள் நின்றுகொண்டிருக்கும்போது, அந்த இடத்தைக் குறிவைத்து கொத்துக் குண்டுகளை வீசுவார்கள் இலங்கையின் முப்படையினர். குண்டு வெடித்து உடல் சிதிலம், சிதிலமாக வெடித்துச் சிதறி ஆறாய் பெருகி ஓடிய இரத்தத்தில் குடித்த கஞ்சியும் ஓடக் கண்டோம் நாங்கள்.

Advertisment

உலகெங்கும் உள்ள தமிழர்கள் அந்த இரத்தம் பெருக்கெடுத்து ஓடிய நாட்களை நினைவு கூர்ந்து உப்பில்லாக் கஞ்சி காய்ச்சி அடுத்த தலைமுறையின ருக்கு எமது அவலங்களைக் கடத்திக் கொண்டிருக் கிறார்கள். அந்த உப்பில்லாக் கஞ்சியே எமது மக்க ளின் நீதிக்கான குரலின் அடையாளமும், ஆயுதமும் ஆகும். அப்படித்தான் இந்த ஆண்டும் ஈழ மண்ணில் கஞ்சி காய்ச்சி பரிமாறினார்கள் தமிழ் பெண்கள். இலங்கை அரசோ காவல்துறையை ஏவி அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

15 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் எமது மக்களின் நினைவுகளில் இருந்து எமது போராட் டத்தையும், எமக்கு எதிரான அநீதிகளையும் அழிப்பதில் குறியாய் இருக்கிறது சிங்களம். எங்கள் நிலத்தைப் பறித்து, சிங்களக் குடியேற்றம் நிகழ்த்தி, பௌத்த விகாரைகளை நிறுவி கட்டமைப்பு வகையில் எம்மை அழித்தொழிக்க துடிக்கும் சிங்கள அரசு எமது நினைவுகளை அழிக்கும் நோக்கிலேயே கஞ்சி காய்ச்சிய பெண்களைக்கூட சிறைப்படுத்தி யுள்ளது. இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது பன்னாட்டுச் சட்டங்கள் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையாகும். ஆனால் யுத்தத்தில் இறந்தவர்களுக்காக கண்ணீர் விடுவதற்கு கூட ஈழத்தில் உள்ள எமது மக்களுக்கு உரிமை இல்லை என்பதே ஈழ மண்ணின் இன்றைய நிலை.

இறுதி யுத்தம் நடந்தபோது முள்ளி வாய்க்கால் பகுதியில் இருந்தவர் நீங்கள். அப்போது மறக்க முடியாத ஒரு சம்பவம்?

Advertisment

ss

இறுதியில் யுத்தம் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அருகில் இருந்த வலைஞர் மடம் என்ற இடத்திலே தான் நாங்கள் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கியிருந்தோம். அன்று ஓர் இரவு பி.பி.சி. செய்தி கேட்பதற்காக இரவு 9, 10 மணியளவில் நானும் எனது மனைவியும் எமது குழந்தையுடன் பங்கருக் குள்ளே போய்விட்டோம். உள்ளேபோய் ஒரு சில நிமிடங் களில் மாபெரும் வெடிச்சத்தம் கேட்டது. ஒவ்வொரு சத்தத் தையும் கேட்டபோது, எமது தலைக்கு மேலே குண்டு விழுவதுபோல் உணர்ந்தோம். அன்று எமது வாழ்க்கையே முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தோம். சற்று சத்தம் குறைந்ததும் வெளியே வந்து பார்த்தோம். எங்கும் மரண ஓலம். சுற்றியிருந்த கூடாரங் களில் இருந்த மக்களில் பலர் இறந்துகிடந்தார் கள். பலர் கடுமை யான காயங் களுக்கு உள்ளானார்கள். நாம் இருந்த இடமே சுடுகாடுபோல் காட்சியளித்தது.

உண்மையில் அன்று நாங்கள் செய்தி கேட்பதற்காக பங்கருக்குள் செல்லவில்லை என்றால் இன்று நான் உயிரோடு இருந்திருக்க முடி யாது. அங்கே காயம்பட்ட மக்களை அருகில் உள்ள மாத்தளன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவமனை நிலத்திலே போடப்பட்டிருந்த வெள்ளை பாலித்தின் விரிப்பில்... எமது மக்களின் செங்குருதி வெள்ளமாக ஓடிய காட்சியை வாழ்க்கையில் என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது.

e

சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்களைக் கொல்வது உலகறிந்த உண்மை. ஆனால், அது எவ்வளவு கொடூரமாக தமிழர் களைக் கொன்றுள்ளது என்பதுதான் பலரும் அறியாதது. வரலாறு நெடுகிலும் அது நடந்துள்ளது. 1956ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறையில் நடந்த வன்முறைகளின்போது கருவுற்றிருந்த பெண்ணின் வயிற்றைக் கிழித்து, குற்றுயிராய் இருந்த குழந்தையை சுவரில் அடித்துக் கொன்றார்கள். 1983 இல் தமிழர்களை நிர்வாணப்படுத்தி உயிரோடு கொளுத்தினார்கள். இறக்கும் நிமிடத்திலும் தமிழர்கள் குறைந்த வேதனையை அனுபவிக்கக் கூடாது கூடுதலான வலிகளை அனுபவித்துக்கொண்டே உயிரை விடவேண்டும் என்று சிந்திக்கும் இவர்களோடு தான் சமரசம் செய்துகொண்டு கூடிவாழுமாறு சர்வதேச நாடுகள் எமக்கு போதனை செய்கிறார்கள்.

இந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினை வேந்தலுக்கு ஏன் இவ்வளவு அடக்குமுறை களை இலங்கை அரசு ஏற்படுத்துகிறது?

இந்தமுறை யுத்தம் நடந்த முள்ளிவாய்க் கால் மண்ணிலே இடம்பெறும் பிரதான நினைவேந்தல் நிகழ்வில் சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவர் ஆக்னெஸ் காலமார்ட் கலந்துகொண்டார். அவர் கலந்துகொள் ளும்போது பல்லாயிரக்கணக்கில் எமது மக்கள் உணர்வுபூர்வமாக ஒன்று கூடுவது எமது மக்கள் நீதியின்மீது கொண்டிருக்கும் பற்றை அது வெளிப் படுத்தும். இது இலங்கை அரசுக்கு அனைத்துலக அளவில் மிகுந்த நெருக்கடியை உருவாக்கும் என்பதை உணர்ந்துகொண்டே நினைவேந்தலை தடுப்பதற்காக, ஈழத்திலே இலங்கை அரசு பல்வேறு அடக்குமுறைகளை ஏவி வருகிறது. அதன் ஓர் அங்கமே திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி காய்ச்சிய எமது பெண்களை இலங்கை காவல்துறையினர் கதறக், கதற இழுத்துச்சென்று சிறையில் அடைத்தது. இதன் மூலம் இரணில் தலைமையிலான இலங்கை அரசின் உண்மை முகம் மீண்டும் ஒருமுறை உலகத்திற்கு சாட்சியாகியுள்ளது.

ee

பாலத்தீனம் ஈழம் –இன அழிப்புக்கு உள்ளாகும் தேசங்கள் ஒப்பிட முடியுமா?

கடந்த அக்டோபர் 7ஆம் நாளில் இருந்து பாலத்தீனத்தின் மீதான இனஅழிப்புப் போரைக் கட்டவிழ்த்துள்ளது இஸ்ரேல். ஹமாஸ் இயக்கத் திற்கு எதிரான போர் என்று சொல்லிக்கொண்டு தான் இதைச் செய்துவருகிறது இஸ்ரேல். இதுவரை சுமாராக 35,671 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் குழந்தைகளும் பெண்களும்தான் அதிகம். பாலத் தீனத்திற்கு ஆதரவாக உலகெங்கும் வரலாறு காணாத போராட்டங்கள் நடந்து வருகின்றன. பாலத்தீனத்திற்கு ஆதரவாக அரபு மக்கள் தெருக்களை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அம்மக்களை மீற முடியாமல் அரபு அரசுகளும் போர் நிறுத்தம் கோரி ஐ.நா.வில் இப்பிரச்சனையை எழுப்பி வருகின்றன. இது போலவே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லிக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்புப் போரை சிங்கள அரசு நடத்தியது. 1,46,679 பேர் வரை கொல்லப்பட்டனர். உலகெங்கும் உள்ள தமிழர்கள் போராடினார்கள். பாலத்தீனத்திற்கு அரபு நாடுகள் குரல் கொடுப்பதுபோல் ஈழத்திற்கு அருகேயும் 8 கோடி தமிழர்களை குடிமக்களாகக் கொண்ட இந்தியா குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், இந்தியா வோ, தமிழினத்தை அழித்துக்கொண்டிருக்கும் இலங்கையை ஆதரித்தும் பாதுகாத்தும் நின்றது, நின்று கொண்டிருக்கிறது. பாலத்தீனத்திற்கு பக்கபலமாய் அரபுலகம் இருக்கிறது. ஆனால், ஈழத்திற்கு ஆதரவாக இருக்கவேண்டிய இந்தியாவோ எம்மக்களைக் கைவிட்டுவிட்டது. இதுதான் பாலத்தீனத்திற்கும் ஈழத்திற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு.

15 ஆண்டுகள் ஆகிவிட்டதே, இனியும் ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?

அமெரிக்க – சீன வல்லரசுகளுக்கு இடையி லான போட்டியில் எமக்கு சாதகமான வாய்ப்புகள் உள்ளன. அதை அடையாளம் கண்டு செயல்படுத்த வேண்டியதே எங்கள் முன்னுள்ள பணியாகும். அப்பணியின் முதன்மை நோக்கம் என்பது இந்தியா வை எங்களுக்கு ஆதரவாக செயல்பட வைப்பதே ஆகும். இந்தியா நீதியின் பக்கம் நின்றால், எமக்கு ஆதரவாகப் பேசினால் உலகம் எம்மை ஆதரிக்கும்.

இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கு தமிழ்நாடு துணை நிற்க வேண்டும், அழுத்தம் கொடுத்துப் போராட வேண்டும். ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் உலகில் எந்த தமிழ ருக்கும் பாதுகாப்போ, தலைநிமிர்வோ இருக்கப் போவதில்லை முள்ளிவாய்க்கால் இன அழிப்புக் கான நீதியை தமிழர்கள் வென்றெடுக்கவில்லை என்றால் தமிழர்களின் பன்முக ஆளுமை குறித்தும் உலகத்தின் ஏனைய சமூகங்கள் கேள்வி எழுப்பு வார்கள். எனவே இந்த விடயம் தமிழர்களின் சுய கௌரவத்துடன் சம்பந்தப்பட்டது. தமிழர்களின் அறிவிக்கு விடப்பட்ட சவால் என்பதால் ஈழத் தமிழர்களுக்கான நீதியை வெல்வது ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் பொறுப்பு என்பதே நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலாகும்.

இலங்கை அரசாங்கத்தின் எந்தவொரு அடக்குமுறைகளுக்கும் அடிபணியாமல் இறுதி யுத்தம் நடந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் எமது மக்கள் எரிமலையிலிருந்து வெடித்துச் சிதறிய தீப்பிழம்பாக மாறி, உயிர்நீத்த உறவுகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

-கீரன்