eps

சேலம் அருகேயுள்ள வீராணம் கிராமத்தில் 47 ஏக்கர் பரப்பளவிலுள்ள வீராணம் ஏரியில் மண் அள்ள எடப்பாடி பழனிசாமியின் பினாமி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதால் ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையெனப் புலம்புகிறார்கள் ஆளுங்கட்சி புள்ளிகள். திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த திருக்குமரன் என்பவருக்குச் சொந்தமான டி.பி.சி. இன்ப்ரா கிரீன் எனர்ஜீஸ் என்ற நிறுவனத்திற்கு, வீராணம் ஏரியி-ருந்து கிராவல் மண் அள்ளிச்செல்ல, 3 மாத காலத்திற்கு மாவட்ட நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது.

Advertisment

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வழங்கிய உத்தரவில், 'வீராணம் ஏரியி-ருந்து, மொத்தம் 5000 கன மீட்டர் அளவுக்கு 110 லாரி மண் அள்ளிச் செல்லலாமென்றும், 0.80 மீட்டர் ஆழம்வரை மண் எடுக்கலாமென்றும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டி.பி.சி. இன்ப்ரா கிரீன் எனர்ஜீஸ் நிறுவன ஊழியர்கள், மே 17ஆம் தேதி, டிப்பர் லாரிகள், எக்ஸ்கவேட்டர் இயந்திரங்கள் சகிதமாக ஏரிக்குள் இறங்கினர். அப்போது, வீராணம் ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறி மண் எடுத்தால் ஏரி தூர்ந்துவிடும் என்று எதிர்த்தனர். இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் மூண்டது. இதற்கிடையே, மர்ம நபர் ஒருவர் திடீரென்று டி.பி.சி. நிறுவனத்தின் டிப்பர் லாரி மீது கல்லெறிந்ததில், லாரியின் கண்ணாடி உடைந்தது.

அடுத்த நாளி-ருந்து காவல்துறை பாதுகாப்புடன் மண்ணள்ளும் பணி தொடர்ந்தது. இது தொடர்பாக வீராணத்தைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகரும், விவசாயியுமான பாரதி நம்மிடம், ""எங்கள் கிராமத்திற்கு வீராணம் ஏரிதான் முக்கிய நீராதாரம். ஏரியின் நீர்வரத்து வாய்க்காலையும், கரைகளையும் பலப்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். இந்நிலையில், திடீரென்று திருச்சியைச் சேர்ந்த டி.பி.சி. இன்ப்ரா என்ற தனியார் நிறுவனத்திற்கு, நெடுஞ்சாலை பணிகளுக்காக எனக்கூறி, ஏரியி-ருந்து கிராவல் மண் அள்ளிச்செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது.

Advertisment

நீர்ப்பிடிப்புப் பகுதியில் கிராவல் மண் அள்ளினால், ஏரியைச் சுற்றியுள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படும். மதகிற்குக் கீழே வரை மண்ணைச் சுரண்டி விடுவார்கள். அதனால் கிராவல் மண் அள்ளுவதற்கான அனுமதி உத்தரவை ரத்து செய்யும்படி மனு கொடுத்தோம். ஒப்பந்தம் எடுத்துள்ள டி.பி.சி. இன்ப்ரா நிறுவனம், எடப்பாடி பழனிசாமியின் பினாமி நிறுவனம் என்று சொல்லப்படுகிறது. அதனால் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் எங்கள் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இயற்கை வளம் சுரண்டப்படுவதை எதிர்த்துக் கேட்டால், லாரி கண்ணாடியை உடைத்துவிட்டதாக எங்கள் மீதே பொய்ப்புகார் அளிக்கின்றனர். போலீசாரும் அவர்களுக்குத்தான் உடந்தையாக இருக்கின்றனர்'' என்றார்.

வீராணம் ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் தங்கராஜ், ""டி.பி.சி. நிறுவனத்தினர் திருச்சியி-ருந்து குண்டர்களை அழைத்துவந்து, எங்கள் ஊர் ஏரியில் மண் அள்ளுகின்றனர். எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கிறது என்று நியாயம் கேட்கச் சென்ற எங்களை போலீசை வைத்து மிரட்டுகின்றனர். ஏரியி-ருந்து வணிக நோக்கத்திற்காக மண் அள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நெடுஞ்சாலைப் பணிக்காக என்ற பெயரில் கிராவல் மண் அள்ளினாலும், அதை ஒப்பந்ததாரர்கள் பொதுப்பணித்துறைக்கு ஒன்றும் சும்மா கொடுக்கப்போவதில்லை. கனிம வளத்துறைக்கு வெறும் 2 லட்சம் ரூபாயை கட்டணம் செலுத்திவிட்டு, 2 கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கப் பார்க்கின்றனர். ஒப்பந்த நிறுவன ஊழியர்களோ, இது எடப்பாடியாரின் ஊர். அவருடைய பினாமி நிறுவனம்தான் இந்த காண்டிராக்டை எடுத்துள்ளது. எங்களை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்கள்.

அவர்கள் மீது வீராணம் காவல் ஆய்வாளர் சங்கீதாவிடம் புகாரளித்தபோது, எங்களை உள்ளே தூக்கிப் போட்டுவிடுவோம் என்று மிரட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாட இருக்கிறோம்'' என்றார்.

இது தொடர்பாக டி.பி.சி. இன்ப்ரா கிரீன் எனர்ஜீஸ் நிறுவன உதவி மேலாளர்கள் ரஞ்சித், முத்துக்குமார் ஆகியோர், ""சேலம் மாவட்டம் ராம-ங்கபுரம், புத்திரகவுண்டன்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. அந்த பணிகளுக்காகத்தான் ஏரியி-ருந்து மண் எடுக்கிறோம். இதற்காக சேலம் மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்றுள்ளோம். உள்ளூர் மக்களில் சிலர் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் மண் அள்ளிச்செல்லலாம் எனக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளனர்'' என்றனர்.

இந்நிறுவனத்தின் திட்ட மேலாளர் நீலகண்டன், ""சிலர் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, லாரி மீது கல்லெறிந்தனர். அந்த கல், லாரி டிரைவரான வட மாநிலத்தைச் சேர்ந்தவர் மீது பட்டிருந்தால், இந்நேரம் மாநில அளவிலான விவகாரமாக மாறியிருக்கும். சிலர் பணத்துக்காக இவ்வாறு மிரட்டிப் பார்க்கின்றனர்.'' என்று வில்லங்கமாக விளக்கம் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக சேலம் மாவட்ட புவியியல் மற்றும் கனிமவளத்துறை துணை இயக்குநர் பன்னீர்செல்வத்திடம் பேசியபோது, ""டி.பி.சி. நிறுவனத்தினர் உரிய பர்மிட்டுடன் மண் அள்ளுவதற்காக ஏரிக்குள் இறங்கினர். அப்போதே உள்ளூர் மக்களில் சிலர் அவர்களிடம் பிரச்னை செய்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர், மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஓ. என அனைவரிடமும் உரிய அனுமதி பெற்றுள்ளனர். பொதுப்பணித்துறை பணிகளுக்காக ஏரியில் மண் அள்ளுவதற்கு எந்தத் தடையும் இல்லை'' என்றார்.

சேலம் மாநகராட்சி மூலம் விடப்படும் ஒப்பந்தப் பணிகளில் கணிசமானவை, எடப்பாடியின் வலது கரமான கரட்டூர் மணியின் மகனுக்குச் சொந்தமான பீனிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. தற்போது, ஏரியில் மண் அள்ளும் பணிகளும் எடப்பாடியின் பினாமிகளுக்கே கொடுக்கப்பட்டுள்ளதால், ஆளுங்கட்சிப் புள்ளிகள் மத்தியில் புகைச்சலைக் கிளப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வீராணம் ஏரியை ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி, தூர் வார எந்த முன்னெடுப்பும் செய்யாத சேலம் மாவட்ட நிர்வாகம், எடப்பாடி தரப்புக்கு கிராவல் மண் அள்ள ஒப்பந்தம் வழங்கிய விவகாரம், விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.