டப்பாடிக்கு எதிராக நேரடியாக பா.ஜ.க. களமிறங்கியிருக்கிறது. சமீபத்தில், எடப்பாடி ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரராக இருந்த பாண்டித்துரை என்பவரது வீட்டில் வரு மான வரித்துறை ரெய்டு நடத்தியது. பாண்டித் துரை எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமானவர்.

தமிழகத்தின் சாலைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு ஒப்பந்தம் எடுத்த பாண்டித்துரை அதற்காக தனியாக ஒரு பெரிய தொழிற்சாலையை துவக்கினார். தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துத்துறை அலுவலகங்களில் எஃப்.சி.க்கு வரும் வாகனங்களில் ஒளிரக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கான ஆர்டரை பெற்றார்.

வெறும் 300 ரூபாய் பெறுமானமுள்ள ஸ்டிக்கர்களை பாண்டித்துரை கம்பெனியிட மிருந்து 1000 ரூபாய்க்கு வாங்க வேண்டுமென தமிழகம் முழுவதுமுள்ள போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஒரு சட்டத்தையே பிறப்பித்தனர்.

eps

Advertisment

அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில், ஒரு வாகனத் துக்கு ஸ்டிக்கர் ஒட்ட, கூட்டாக வசூலிக்கப்படும் எழுநூறு ரூபாயில் 500 ரூபாய் நேரடியாக எடப் பாடிக்கு தரப்பட்டது. இப்படி நெடுஞ்சாலை களிலும், அந்த சாலை யில் ஓடும் வாகனங்களி லும், நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் கொள்ளையடித்த பாண்டித்துரைக்கு எதிராக அ.தி. மு.க. ஆட்சி யில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் பாண்டித்துரை ஊழல் ஏதும் செய்யவில்லையென எடப்பாடியின் வசமிருந்த நெடுஞ்சாலைத்துறையும், கரூர் விஜயபாஸ்கர் கீழிருந்த போக்குவரத்துத்துறையும் பதிலளித்தது.

இந்நிலையில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை செய்ய வேண்டிய வேலைகளை மோடி அரசின் வருமானவரித்துறை செய்திருக்கிறது.

ops

Advertisment

பாண்டித்துரையின் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் அவர் எடப்பாடிக்கு கொடுத்த லஞ்சம் பற்றிய ஆவணங்களை வருமானவரித்துறை தேடிக் கண்டுபிடித்திருக்கிறது. இது எடப்பாடியை அலற வைத்திருக்கிறது. ஏற்கெனவே கர்நாடகாவில் எடப்பாடியின் மகன் மிதுனின் உறவினரான ராம லிங்கம் என்பவர் கட்டிய கட்டுமானங்கள் மீது கர்நாடகாவின் லோக் ஆயுக்தா பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. சமீபத்தில் எடப்பாடிக்கு நெருக்கமான ஒப்பந்தக்காரரான செய்யாதுரை வீட்டிலும் வருமான வரித்துறை பாய்ந்திருக்கிறது.

இந்த இடங்களில் நடத்தப்படும் ரெய்டுகளி லெல்லாம் வருமான வரித்துறை தேடும் டாக்கு மெண்ட் எடப்பாடியின் ஊழல் பணம் எப்படி முதலீடாக மாறுகிறது என்பது குறித்ôதுதான். இதை வைத்து எடப்பாடியின் மீது ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என வழக்கு பதிவு செய்ததைப் போல ஒரு வழக்கை பதிவு செய்ய சி.பி.ஐ. தயாராகி வருகிறது. 2ஜி வழக்கைத் தொடர்ந்து தி.மு.க.வின் ராசா மீது சொத்துக்குவிப்பு வழக்கு பாய்ந்ததைப் போல, எடப்பாடி மீது சொத்துக்குவிப்பு வழக்கு பாயும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது எடப்பாடிக்கும் மோடிக்கும் இடையே மோதல் நடைபெற்று வருவதைத்தான் காட்டுகிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். இதற்கிடையே, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தகராறில் சுப்ரீம் கோர்ட், தேர்தல் கமிஷன் ஆகியவற்றிலும் எடப்பாடிக்கு எதிராகவே மத்திய அரசு காய் நகர்த்தி வருகிறது.

இரட்டை இலைச் சின்னம் முடக்கப் படும் என்கிற தெளிவான எச்சரிக்கை பா.ஜ.க. தரப்பிலிருந்து எடப்பாடிக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் எடப்பாடியைச் சந்தித்த அமித்ஷா ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாகத்தான் எடப்பாடி யிடம் பேசினார். அதைத் தொடர்ந்து எடப்பாடிக்கு இந்த எச்சரிக்கைகளை பா.ஜ.க. அரசு தெரிவித்துள்ளது.

பா.ஜ.க.வுடனான மோதலை எடப்பாடி விரும்பவில்லை. எப்படியாவது பா.ஜ.க.வை சமாதானப்படுத்த தங்கமணி, வேலுமணி மற்றும் ஈஷா ஜக்கிவாசுதேவ் ஆகியோர் மூலம் எடப்பாடி பேசி வருகிறார்.

அவர்களிடம் பேசிய பா.ஜ.க. வரும் பாராளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு 20 சீட்டுகளை கொடுக்க வேண்டும். அத்துடன் சசிகலா, ஓ.பி.எஸ். ஆகியோரை அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும். டி.டி.வி.தினகரேனோடு அ.தி.மு.க. கூட்டணி அமைக்க வேண்டும் என நிபந்தனைகளை தெரிவித்துள்ளது.

modi

அதற்குப் பதிலளித்த எடப்பாடி, "வருகின்ற பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகத்திற்கு சட்டமன்றத் தேர்தலையும் நடத்த வேண்டும். அதற்கு பா.ஜ.க. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற அடிப்படையில் ஏற்பாடு செய்யவேண்டும்' என பதில் நிபந்தனையை பா.ஜ.க.வுக்கு விதித்துள்ளார்.

இதுபற்றி அ.தி.மு.க.வினரிடம் பேசும் எடப்பாடி, "பா.ஜ.க. என்னை மிரட்டுகிறது. ஓ.பி.எஸ்.ஸை கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளச் சொல்கிறது. சேர்க்கவில்லையென்றால் இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவோம் என்று சொல்கிறது. என் மீது சொத்துக்குவிப்பு வழக்கை போடுவார்கள். என்னைக் கைது செய்வார்கள். இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டாலும் என்னைக் கைது செய்தாலும் ஓ.பி.எஸ்.ஸை நான் அனுமதிக்கமாட்டேன். அவர்கள் அமைக்கும் கூட்டணியில் இடம்பெறுவேன் என தினகரன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். அதுபோல் சசிகலாவும் ஓ.பி.எஸ்.ஸும் அ.தி.மு.க. பா.ஜ.க. அமைக்கும் கூட்டணிக்கு வரட்டும். அவர்களை தேர்தல் களத்தில் பார்த்துக் கொள்ளலாம்'' என பேசியிருக்கிறார்.

இதற்கிடையே, கொடநாடு கொலை வழக்கில் இளங்கோவன், எடப்பாடி ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என்கிற அச்சம் அ.தி.மு.க.வினரிடையே நிலவி வருகிறது. இப்படி கைது, சின்னம் முடக்கம் ஆகிய களேபரங்களுக்கு இடையே அ.தி.மு.க.வின் 51வது ஆண்டுவிழா தொடங்கியிருக்கிறது.