நக்கீரன் செய்தி எதிரொலி! கைதியான போலீஸ் எஸ்.ஐ! -சிறுமி பட்ட பாடு

dd

க்கீரன் செய்தி எதிரொலியாக, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் எஸ்.ஐ. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பத்ம சேஷாத்ரி பள்ளியில் பாலியல் தொல்லை விவகாரம் வெளியானதையடுத்து, மாணவிகளுக்கு எதிரான பல்வேறு பாலியல் தொல்லை விவகாரங்களும் வரிசையாக வெளிவந்தபடி உள்ளன. இந்நிலையில் காவல் துறையைச் சேர்ந்த எஸ்.ஐ.யே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

police

சென்னை மாதாவரம் பால் பண்ணை பகுதிக்கு கொரோனா பாதுகாப்புப் பணிக்காக வந்த எஸ்.ஐ. சதீஷ்குமாருக்கும், அதே பகுதியிலுள்ள அருள் நகர் ரேஷன் கடையில் பணிபுரிந்த ரேவதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் இருவரும் நெருக்கமாகி, ஒரு வருட காலமாக மணலி பெரிய சேக்காடு பகுதியி லுள்ள ரேவதியின் சொந்த வீட்டில் இருவரும் தனி மையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இந்நிலையில் பள்ளிக்குச் சென்றுவந்த ரேவதியின் மகள் அதைப் பார்த்து அதிர்ந்துபோய், "உங்களை அப்பாவிடம் சொல்

க்கீரன் செய்தி எதிரொலியாக, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் எஸ்.ஐ. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பத்ம சேஷாத்ரி பள்ளியில் பாலியல் தொல்லை விவகாரம் வெளியானதையடுத்து, மாணவிகளுக்கு எதிரான பல்வேறு பாலியல் தொல்லை விவகாரங்களும் வரிசையாக வெளிவந்தபடி உள்ளன. இந்நிலையில் காவல் துறையைச் சேர்ந்த எஸ்.ஐ.யே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

police

சென்னை மாதாவரம் பால் பண்ணை பகுதிக்கு கொரோனா பாதுகாப்புப் பணிக்காக வந்த எஸ்.ஐ. சதீஷ்குமாருக்கும், அதே பகுதியிலுள்ள அருள் நகர் ரேஷன் கடையில் பணிபுரிந்த ரேவதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் இருவரும் நெருக்கமாகி, ஒரு வருட காலமாக மணலி பெரிய சேக்காடு பகுதியி லுள்ள ரேவதியின் சொந்த வீட்டில் இருவரும் தனி மையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இந்நிலையில் பள்ளிக்குச் சென்றுவந்த ரேவதியின் மகள் அதைப் பார்த்து அதிர்ந்துபோய், "உங்களை அப்பாவிடம் சொல்லாமல் விடமாட் டேன்'' என்று ஆத்திரப்பட்டுள்ளார். அதற்கு எஸ்.ஐ. சதீஷ்குமார், "இதைப் பற்றி உன் அப்பாவிடம் நீ சொன்னால், உன் அப்பாவும், உன் தம்பியும் உயிரோடு இருக்கமாட்டாங்க'' என்று மிரட்டியுள்ளார்.

மிரட்டலுக்குப் பயந்துபோன ரேவதியின் மகள், அதுகுறித்து தன் அப்பாவிடம் சொல்லாமல் மறைத்துவந்துள்ளார். எனவே தொடர்ந்து தைரியமாக அவ்வீட்டுக்கு வந்துசென்ற சதீஷின் காமப்பார்வை, ரேவதியின் மகளின் பக்கமும் திரும்பியிருக்கிறது. ரேவதியிடமே "உன்னை தற் போது இருக்கும் வசதியைவிட இன்னும் உச்சத்திற் குக் கொண்டு செல்கிறேன். அதற்கு நீ ஒன்று செய்து தர வேண்டும். உன் மகளை எனக்குப் பிடித்துள் ளது. நீ மட்டும் சரியென்று சொன்னால், அவ ளுடைய அனைத்து தேவைகளையும் நான் பார்த் துக்கொள்கிறேன்'' என்றதும், ரேவதியும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இசைவு கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சதீஷ் தன் ஆட் டத்தை ஆரம்பித்துள்ளான். ரேவதி மகளின் பிறந்த நாளுக்கு இரவு 12 மணிக்கு கேக் வாங்கி வந்து கேக் வெட்டச் சொல்ல, ரேவதியின் கணவர் “"இது போன்று தேவையில்லாத வேலையெல்லாம் செய்ய ddவேண்டாமென்று ஏற்கனவே உன்னிடம் சொல்லி யுள்ளேன். பெண் பிள்ளை இருக்கும் இடத்தில் இதுபோன்று வருவதை நிறுத்திக்கொள்ள வேண் டும்''’என்று சதீஷிடம் சண்டை போட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த மாதமே ரேவதியின் மகளுக்கு ஒரு கிஃப்ட் கொடுப்பதாகக் கூறி ‘ஐபோன்’ வாங்கிக் கொடுத்துள்ளார். அதை அவள் வாங்க மறுத்திருக்கிறாள். அதையும் ரேவதி வாங்கிவைத்துக்கொண்டு "நான் பார்த்துக்கொள் கிறேன். நீங்க போங்க'' என்று சொல்லவே சதீஷும் சென்றுள்ளான். அதன்பிறகு, "நான் உன் மகளுடன் தனியாகச் செல்ல வேண்டும்" என்று கேட்டுள் ளான். அதற்காக ரேவதியிடம் ரூ.1 லட்சம் பணத் தைச் செலவிற்கு வைத்துக்கொள் என்று கொடுத் துள்ளான். இதனைத் தொடர்ந்து அந்தப் பணத்தை ரேவதியும், ரேவதியின் பெரியம்மாவும் ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக்கொண்டு, சதீஷுடன் செல்ல ரேவதியின் மகளை வற்புறுத்தியுள்ளனர்.

மறுநாள் சதீஷ் வீட்டிற்கு வந்துள்ளான். "அவரோடு போ… போ'' என்று ரேவதியும், ரேவதியின் பெரியம்மா வும் வற்புறுத்தவே, கோபமடைந்த ரேவதியின் மகள் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தன்னு டைய அப்பாவிடம் சொல்லியுள் ளார். உடனடியாக வீட்டிற்கு வந்த சிறுமியின் தந்தைக்கும், ரேவதிக்கும் பிரச்சினை முற்றி, ரேவதியை வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாகச் சிறுமியின் தந்தை கூறுகையில், "காவல் நிலையத்தில் அவன் மீது புகாரளிக்கச் சென்றபோது, புகாரளித்துவிட்டு நீயும், உன் மகளும், மகனும் உயிரோடு இருந்து விடுவீர்களா? என்று மிரட்டினான். அதனால், என் குழந்தைகளை ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், என்னுடைய குழந்தைகளுக்காக வாழ வேண்டுமென்ற எண்ணத்தில், புகார் கொடுக்காமல் வந்துவிட்டேன். அதன்பிறகு நக்கீரன் ஆசிரியர் பேசிய வீடியோவைப் பார்த்து விட்டு, இவனைப் போன்ற ஆட்களை விடக் கூடாது, என்னுடைய குழந்தைக்கு நடந்ததுபோல வேறு எந்த குழந்தைக்கும் நடந்துவிடக்கூடாது என்றுதான் நக்கீரனிடம் வந்தேன்''’என்றார்.

இது தொடர்பாகப் பேசிய ரேவதியின் மகள், "தொடர்ந்து எனக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவந்தார். அதற்கு என்னுடைய அம்மாவும் உடந்தையாக இருந்தாங்க. இதைத் தட்டிக்கேட்ட என்னுடைய அப்பாவைக் கொலை செய்து விடுவதாக மிரட்டினாங்க''’என்று கதறி அழுதார். காசிமேடு காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ. சதீஷ்குமாரிடம் இதுகுறித்து கேட்டபோது... பேச மறுத்துவிட்டார்.

இச்செய்தி நக்கீரன் இணையதளத்தில் வெளியானதையடுத்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாதவரம் எஸ்.ஐ. சதீஷ் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். பாலியல் துன்புறுத்தலுக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய், சிறுமியின் பெரியம்மா நிலவழகி ஆகியோரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கறிஞர் குமரன் கூறுகையில், "இந்த குற்றச்செயலுக்கு அதிகபட்சம் 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல இதற்கு உடந்தையாக இருந்த பெண்களுக்கு 3 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது'' என்றார்.

nkn300621
இதையும் படியுங்கள்
Subscribe