மாணவர்களை போதையிலேயே கிறங் கடிக்க வைக்கும் கஞ்சாக்களுடன், பக்கத்தி லிருப்பவர்களால்கூட கண்டுபிடிக்கமுடியாத எல்.எஸ்.டி. ஸ்டாம்ப், எம்.டி.எம்.ஏ. பில்ஸ் மற்றும் மெத்தபிடாமைன் கிரிஸ்டல்ஸ் உள்ளிட்ட புதுவகை போதைப் பொருட்களின் நடமாட் டம் அதிகரிக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் கலக்கமடைந்துள்ளனர்.

d

சமீபத்தில் கோவை பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில், அத்திப்பாளையம் பிரிவில் சந்தேகத் திற்கிடமான வகையில் சுற்றிக்கொண்டிருந்த கடலூரைச் சேர்ந்த சிவா என்கின்ற சிவராமனை கைதுசெய்து, அவனிடமிருந்து 302 எல்.எஸ்.டி. ஸ்டாம்ப், 64 எம்.டி. எம்.ஏ. பில்ஸ், 9 கிராம் அளவிலான மெத்தபிடாமைன் கிரிஸ்டல் மற்றும் ஒன்றரைக் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு. தொடர்ந்து அவனை விசாரிக்க, கல்லூரி மாணாக்கர்களிடம் விற்பனை செய்வதற்காக அதனை வைத்திருந்ததாக தெரியவர ஷாக்கானது காவல்துறை.

"எல்.எஸ்.டி. ஸ்டாம்ப்" எனப்படும் லைசெர்ஜிக் டை எத்திலமைடு எனும் வேதிப்பொருளை டிஸ்டில்டு வாட்டரில் கரைத்து ஸ்டாம்ப் வடிவிலான அட்டை வில்லைகளில் ஊறவைத்து அதனை திரவ நிலையிலிருந்து திட நிலைக்கு மாற்று கின்றனர். இதில் அட்டை வில்லையில் இரு பக்கமும் எல்.எஸ்.டி. வேதிப்பொருள் சேர்க்கப்பட்டதும், ஒரு பக்கம் மட்டும் சேர்க் கப்பட்டதும் இருக்கும். அதற்குத் தகுந்தாற் போல் விலை. ஒரு பக்கம் மட்டும் எல்.எஸ்.டி. கொண்ட ஒரு பெருக்கல் குறி அளவிலான ஸ்டாம்பின் விலை ரூ.1500. இரண்டு பக்கமும் எல்.எஸ்.டி. தடவப்பட்டது ரூ.2500. இதனை நாக்கில் வைத்துக்கொண்டால் அதில் திட நிலையிலிருக்கும் வேதிப்பொருள் கரைந்து 20 நிமிடத்திலேயே போதை ஏறும். ஏறக்குறைய 7 மணி நேரம் போதையிலேயே வைத்திருக்கும். கலர், கலராக இருக்கும் மிட்டாய் வடிவிலான "எம்'' எனப்படும் எம்.டி.எம்.ஏ. பில்ஸோ இதே ரகம்தான். சூயிங்கம்போல் வாயில் போட்டுக்கொண்டால் போதை ஏற ஆரம்பிக்கும். முதலில் பழகுபவர்கள் கால்வாசி அளவும், அடுத்த நிலை யில் இருப்பவர்கள் அரை வாசி அளவும் எடுத்துக் கொள்வார்கள். இவை இரண்டையும்விட அதிக ஆபத்தைத் தரக்கூடியது டைமண்ட் கற்கண்டு போல் இருக்கும் மெத்தபிடாமைன் கிரிஸ்டல். இதனை ஒரு கிராம் அளவில் மட்டும் எடுத்து, அதனை ரூபாய் நோட்டுக்களில் வைத்து தூளாக்கி, அதனை மூக்கினில் உறிஞ்சி போதை ஏற்றிக்கொள்வார்கள். இது அத்தனையும் அருகிலிருப்பவர்களுக்குத் தெரியாததால் இதனை எளிதாக கல்லூரிக்கே வரவழைத்து போதையில் திளைக்கின்றார்கள் கல்லூரி மாணவர்கள். இந்த போதை வஸ்துகள் அனைத்தும் கிரிப்டோகரன்சியை வர்த்தகம் செய்பவர்கள் சிலரிடமும், கோவா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்திலுள்ள ரேவ் பார்ட்டி ஹாலிலிருந்தும் தருவித்து விற்பனை செய்கின்றனர்'' என்கின்றார் கோவை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.

ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் ஐ.ஜி. ஸ்பெஷல் டீமில் இயங்கும் அதிகாரி ஒருவரோ, "கோவை மாவட்டத்தினைப் பொறுத்தவரை பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரிகள் மட்டும் ஏறக்குறைய 50-க்கும் அதிகமாக இயங்கி வருகின்றது. இவைபோக தனியார், அரசுப் பள்ளிகளும் அதிகம். இவர்களைக் குறிவைத்துத்தான் எல்.எஸ்.டி. ஸ்டாம்ப், எம்.டி.எம்.ஏ. பில்ஸ், கிரிஸ்டல்ஸின் மிகப்பெரிய போதை வர்த்தகம் நடைபெற்று வருகின்றன. இதில் கஞ்சாவின் பங்கு மிக அதிகம். கோவை என்பதனை விட்டுவிட்டு தமிழ்நாடு முழுமைக்கும் என்றால் ஒரு அரசையே நடத்துமளவிற்கு அவர்களிடம் பொருளாதாரம் இருக்கின்றது. மாணவர் களை குறிவைக்கும் இந்த போதை வர்த்தகத் தில் சப்ளையர்களாக ஈடுபடுத்தப்படுவது முன்னாள் குற்றவாளிகள். திருந்தி வாழ்கின் றேன் என காவல்துறையிடம் எழுதிக் கொடுத்துவிட்டு அமைதியாக வாழ்கிறோம் எனக் காட்டிக்கொள்ளும் முன்னாள் வழிப் பறித் திருடர்கள், கஞ்சா வியாபாரிகள் மற்றும் போலீஸால் தேடப்படும் குற்றவாளிகளையே தங்களது சப்-டீலராக வைத்து வர்த்தகத்தில் ஈடுபடுகின்றது போதை மாபியா.

Advertisment

kk

அவர்களோ, தமிழகம் முழுமைக்கும் நர்சரி வைத்திருக்கும் தோட்டத் தொழி லாளியாக, முறுக்கு வியாபாரியாக, நெய், சோம்பு சீரகம் விற்கும் வியாபாரியாக தங்களது ஜாகையை நிலைநிறுத்தியுள்ளனர். கோவா, பெங்களூரு, ஆந்திராவில் ஹைதரா பாத், செகந்திராபாத், காக்கிநாடா மற்றும் கோதாவரி, கிருஷ்ணா ஆற்றுப்படுகையி லிருந்து கொண்டுவரப்படும் கஞ்சா உள் ளிட்ட போதை வஸ்துகள், விஜயவாடா டூ சென்னை ரயில்களிலும், பூண்டு வண்டிகளி லும் தமிழகத்திற்குள் நுழைகின்றது. அங்கி ருந்து தேனி, மதுரை, திண்டுக்கல் மற்றும் கோவைக்கு, சென்னையிலிருக்கும் உசிலம் பட்டியைச் சேர்ந்த நபரின் தலைமையின் கீழ் தேவாரம், கம்பம் மற்றும் கூடலூர் சுற்று வட்டார நபர்கள் மூலம் சப்ளை செய்யப்படுகின்றது. சிவகங்கை, தஞ்சாவூர், நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு திருச்சுழி யைச் சேர்ந்த அ.தி.மு.க. நபர் மூலமாக சப்ளை செய்யப்படு கின்றது. அதுபோல் கடலோரப் பகுதிகளுக்கும், கடற்கரை மாவட் டங்களுக்கும் உச்சிப்புளியைச் சேர்ந்த ஒருவரின் தலைமையின்கீழ் சப்ளை செய்யப்பட்டு வருகின்றது. சமீபத்தில் இதனை ட்ரேஸ் செய்தும் எங்களுடன் பணியாற்றும் எங்கள் ஆட்களே போதை மாபியாவிற்கு தகவலைக் கசியவிட்டு அவர்களைக் காப்பாற்றுகின்றனர்'' என வேதனையுடன் தெரிவித்தார் அவர்.

Advertisment

bb

மாநில அளவில் ஏ.டி.ஜி.பி. தலைமையில் செயல்படும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு நிர்வாக வசதிக்காக ஐ.ஜி. பொறுப்பில் வடக்கு, மேற்கு மற்றும் சென்னை சிட்டி ஆகியவை எஸ்.பி. ஒருவரின் ஆளுகையில் ஒரு மண்டலமாகவும், மத்தி, தெற்கு, திருச்சி சிட்டி மற்றும் மதுரை சிட்டி ஆகி யன மற்றொரு எஸ்.பி. தலைமையில் ஒரு மண்டல மாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மண்டலமும் ஒரு டி.எஸ்.பி. ஆளுகையில் ரேஞ்ச் அளவில் ஒரு இன்ஸ்பெக்டர், மாவட்ட அளவில் எஸ்.ஐ.க்கள், சப் டிவிஷன் அளவில் ஒரு காவலர் என பணியாற்றி வருகின்றனர்.

"போதைப்பொருள் தடுப்புப் பிரிவு என்பது பணம் கொழிக்கும் ஒரு விங். அதுபோல் தான் மதுவிலக்கும். இந்த இரண்டுக்கும் போட்டி போட்டுக்கொண்டு பணியாற்ற வருபவர்கள் அதிகம். இங்க சம்பாதிக்கத் தான் வர்றாங்க. இது கண்கூடான உண்மை. இப்ப இரண்டு விங்கையும் ஒன்றாக்கி சம்பாதிக்க விட்டுட்டாங்க. விற்காதவர் களையும் விற்கச் சொல்லி டார்ச்சர் செய்து வரு கின்றார்கள் இங்கு பணிபுரியும் சிலர். அதுபோல், கைப்பற்றிய சரக்குகளை டிஸ்போஸ் செய்வது இவர்கள் கையில்தான் உள்ளது. அதனை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவருவதும் இவர்களே. இதுகுறித்து குறிப்பெழுதும் உளவுத்துறைகளுள் ஒன்றான சி.ஐ.யு. இதனைக் கண்டுகொள்ளவே யில்லை. இவர்களைக் கொண்டு முதலமைச்சர் எப்படி போதை மாபியாக்களை ஒழிக்கமுடியும்?'' என்கிறார் இதே துறையில் பணியாற்றும் டி.எஸ்.பி. அந்தஸ்திலான அதிகாரி.

_____________________

சாதிப் பிரச்சனையாக உருமாறும் பாலியல் குற்றச்சாட்டு! Follow Up!

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத்துறை தலைவராகப் பணியாற்றிவரும் ஜெயக்குமார் மீதான பாலியல் புகார் விவகாரம் குறித்து "பேராசிரியர் பாலியல் சீண்டல்! நடவடிக்கை எப்போது?' என்ற தலைப்பில் கடந்த நக்கீரன் இதழில் கட்டுரை வெளியிட்டி ருந்தோம்.

dd

தற்போது பேராசிரியருக்கு ஆதரவாக, தமிழ்நாடு பல்கலைக் கழக மற்றும் கல்லூரி எஸ்.சி., எஸ்.டி. ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகிகள், கல்லூரி முதல்வர் மீது குற்றம்சாட்டியுள்ளனர். கல்லூரி முதல்வர் தன்னிச்சை யாக, பழிவாங்கும் நோக்கோடு, உரிய விசாரணை செய்யாமல் விசாரணை அறிக்கையை கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி யுள்ளதாகக் கூறுகின்றனர். பேராசிரியர் ஜெயக்குமார் மீது ஏற்கெனவே 2015ஆம் ஆண்டிலும் ஓர் பாலியல் புகார் கொடுக்கப்பட்டதாகவும், விசாரணையில் அவர் மீது தவறில்லை யென்று தெரிவிக்கப்பட்டதாகவும், தற்போது அவரது பதவி உயர்வைத் தடுக்கும் விதத்தில் முதல்வர் செயல்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த விவகாரத் தில் முறைப்படி விசாகா குழு அமைக்காமல் தன்னிச்சையாக, வெளிப்படைத்தன்மை இல்லாமல் கல்லூரி முதல்வர் செயல்பட்டதால், இதுகுறித்து கல்வி இயக்குனரகத் தில் புகாரளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த சூழலில், மாணவிக்கு ஆதரவாக ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பும், கல்லூரி முதல்வருக்கு ஆதரவாக, அரசு கல்லூரி பேரா சிரியர்கள் கழகமும் களமிறங்கி யுள்ளன.

இவற்றுக்கிடையே, ஆங்கிலத் துறைப் பேராசிரியர்கள் அனைவரும் இணைந்து, துறைத்தலைவரின் செயல்பாடுகள் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், அவர் துறைத்தலைவராக இருப்பதை விரும்பவில்லை என்றும் கடிதம் கொடுத்து பரபரப்பைக் கிளப்பி யுள்ளனர். தற்போது இப்பிரச்சனை சாதியப் பிரச்சனையாக உருவெடுப்பதாகத் தெரிவதால், தமிழகக் கல்லூரிக் கல்வி இயக்கு னரக அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டு மென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

-துரை.மகேஷ்