போதைப்பொருள் கடத்தலின் மையமாக தமிழகம் மாறி வருவதையறிந்து கவலையடைந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை எஸ்.பி.க்களுடன் மாநாட்டில் விவாதித்தார்.
அப்போது,”"போதைப்பொருள் கடத்தலும் அதன் விற்பனையும் தமிழகத்தில் அதிகரித்து வருவது எனக்கு கவலையளிக்கிறது. போதைப் பொருள் நடமாட்டத்தை அறவே ஒழிக்க வேண்டும்; கடத்தலில் ஈடுபடுபவர்களையும் விற்பனை செய்பவர்களையும் கைது செய்வதுடன் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். என்னை மென்மையான முதல்வராக நீங்கள் பார்க்கிறீர்கள். தேவைப்பட்டால் சர்வாதி காரியாகவும் மாறுவேன்''’என்று கடுமையாக எச்சரித்திருந்தார் ஸ்டாலின்.
இந்த எச்சரிக்கை கொடுக்கப்பட்ட இரண்டா வது நாள், சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 100 கோடி ரூபாய் மதிப்புடைய 9 கிலோ 590 கிராம் அளவிலான கோகைன் மற்றும் ஹெராயின் போதைப் பொருளை சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரி அனில்குமார் கைப்பற்றி னார். 100 கோடி ரூபாய் போதை பொருள் பிடிபடு வது இதுதான் முதல்முறை என்பதால் சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ந்துபோனார்கள்.
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து சென்னைக்கு வரும் எத்தியோப்பியா ஏர்லைன்ஸில் (எண்: இ.டி.692) போதைப்பொருள் கடத்தப்படுகிறது' என ஒரு ரகசிய தகவல் எங்களின் மேலதிகாரிகளுக்கு கிடைத் தது. அதன்படி, எத்தியோப்பியா விமானத்தில் வந்த அந்த நாட்டு பயணிகளை முழுமையாக சோதித்தார் அனில்குமார். எதுவும் சிக்கவில்லை. தனக்கு கிடைத்த தகவல் உறுதியானதே என நினைத்த அனில்குமார், அதே விமானத்தில் வந்த சென்னை இக்பால் பாஷாவை சந்தேகத்தின் பேரில் விசாரித்தார். குறிப்பாக, எத்தியோப்பியாவிற்கு சுற்றுலா விசாவில் அவர் சென்றிருந்தார். அந்த நாட்டிற்கு சுற்றுலா செல்ல என்ன இருக்கிறது என்கிற சந்தேகத்தில் விசாரித்தார் அனில். அப்போது இக்பால் பாஷா சொன்ன தகவல்கள் முரண்பாடாக இருந்தன.
அதனையடுத்து அவரது கைப்பைகள், செருப்புகள் உள்ளிட்டவைகளை சோதிக்க, கருப்பு கார்பன் பேப்பர்களால் கோகைனும் ஹெராயினும் சுற்றி வைக்கப்பட்டதை கண்டறிந்தார். மொத்தம் 9 கிலோ 590 கிராம் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய். அதைக்கண்டு அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி.
பொதுவாக கார்பன் பேப்பருக்கு இடையில் மறைத்து வைக்கப்படும் இதுபோன்ற பொருட்கள் ஸ்கேனரில் சிக்குவதில்லை. இந்த சம்பவம் நடப்பதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு தான், இதே ஏர்லைன்சில் மறைத்து வைக்கப்பட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான கோகைன் பிடி பட்டது. அதேபோல 13-ந் தேதி எத்தியோப்பியா விலிருந்து சென்னைக்கு சுற்றுலா விசாவில் வந்த அங்கோலா நாட்டை சேர்ந்த பிபியனா கோஸ்டா என்ற 59 வயதான பெண்மணியிடமிருந்து 11 கோடியே 41 லட்சம் மதிப்புடைய கோகைனை கைப்பற்றினர்.
100 கோடி ரூபாய் போதை பொருள் கடத்திய இக்பால் பாஷாவை கைது செய்து அவ ரிடம் தீவிர விசாரணை நடந்துள்ளது. எத்தியோப் பியாவிற்கு இக்பால்பாஷாவை அனுப்பி வைத்தது யார்? அந்த நாட்டில் யாரிடமிருந்து போதை பொருள் வாங்கப்பட்டது? பொருளுக்குரிய பணம் அங்கேயே செட்டில் செய்யப்பட்டதா? அடீஸ் அபாபா விமான நிலையத்தில் செக்கிங் இல்லையா? எப்படி ஸ்கேனர் சோதனையை மீறி எடுத்துவர முடிந்தது? சென்னையில் யாருக்கு விற்பனை செய்வார்கள்? சென்னைக்குள் மட்டும்தான் இந்த பொருள் விற்கப்படுகிறதா? என்றெல்லாம் விசாரித்துள்ளனர். எல்லா கேள்விகளுக்கும் பதிலைச் சொல்லியிருக்கிறார் இக்பால் பாஷா. விரைவில் சென்னையில் ஒரு அதிரடி வேட்டை நடக்கப்போகிறது'' என்று விவரித்தனர்.
போதைப்பொருளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை தமிழக அரசு உருவாக்கிவரும் சூழலில், சென்னையை மையமாக வைத்து நடக்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் தொடர்பான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
சென்னையிலுள்ள தமிழ்நாடு போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது,’"இந்தியாவில் டெல்லி, மும்பை, குஜராத் மாநிலங்களுக்கு அடுத்து போதைப்பொருள் கடத்தலின் புகலிடமாக இருக் கிறது சென்னை. சமீபகாலமாக, மற்ற 3 மாநிலங் களை காட்டிலும் சென்னைதான் இந்த கடத்தலில் அதிவேகமாக வளர்ந்துள்ளது. வான் வழியாக மட்டுமே சென்னை விமானநிலையத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 50 கோடி ரூபாய் மதிப்பி லான கோகைன், கோடமைன், ஹெராயின், அபின், ஓபியம் இறங்குகிறது. ஆனால், பிடிபடுவது 10, 15 கோடி மதிப்பிலான போதை பொருள் மட்டுமே. சுங்கத்துறையில் உள்ள நேர்மையான ஓரிரு அதிகாரிகள் சோதனையில் இறங்கும்போதுதான் போதைப்பொருள் முழுமையாகப் பிடிபடுகிறது. மற்றபடி, அதிகாரிகளின் துணையுடனேயே இவைகள் சென்னைக்குள் தடையின்றி நுழைந்துவிடுகின்றன''‘என்கிறார்கள்.
சென்னைக்குள் நுழையும் இந்த போதைப்பொருள் 5 கிராம் அளவிலான பாக்கெட்டுகளாகப் பிரிக்கப்பட்டு கூரியர் சர்வீஸ், விரைவு தபால் பார்சல் மூல மாகவே பெரும்பாலும் தமிழகம், கேரளம், ஆந்திரம் மற்றும் வடமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. குறிப்பிட்ட முக்கிய நகரங்களுக்குள் செல்லும் போதைப்பொருள், அந்தந்த நகரங்களிலுள்ள கஸ்டமர்களுக்கு, உணவக பார்சல்களை அனுப்பும் தனியார் நிறுவனங்கள் மூலமாக கொண்டு சேர்க்கப்படுகிறது என்று கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
சமீபத்தில் ஐ.நா.சபை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை யில், "உலகத்தில் 90 சதவீத ஹெராயின் ஆப்கானிஸ்தானில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து கஜகஸ்தான், துருக்கி நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சுத்தம் செய்யப்படுகிறது. அதன்பிறகு கிரீஸ் நாட்டின் வழியாக ஐரோப்பா நாடுகளுக்கும், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
கொலம்பியாவில் கோகைனும், நெதர்லாந்தில் எக்ஸ்டஸியும் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு விமானம் மற்றும் கப்பல்கள் மூலமாகவே உலகின் முக்கிய நாடுகளுக்கு கடத்தப்படுகிறது. உலகம் முழுவதும் நடக்கும் இந்த கடத்தல் களில் புழங்கும் ஒரு வருட வர்த்தகம் 36 லட்சம் கோடிகள்' என்று சுட்டிக்காட்டுகிறது ஐ.நா. ஆய்வறிக்கை. போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் சென்னை உயர்நீதிமன்ற சீனியர் வழக்கறிஞர் வே.பாலு விடம் நாம் பேசியபோது, "இந்திய போதைப்பொருள் தடுப்பு சட்டம் 1985-ன்படி, போதைப்பொருட்களை உற்பத்தி செய்தல், கடத்துதல், பதுக்குதல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல் என அனைத்தும் குற்றம்தான். குற்றங்களின் தன்மைக்கேற்ப 10 ஆண்டுகள் வரை தண்டனைகள் உண்டு.
சென்னை போன்ற சர்வதேசத் தொடர்புகள் உள்ள நகரத்தில் போதைப்பொருள் என்பது மிகப்பெரிய சந்தை. அதனாலேயே சென்னையைக் குறிவைத்தே போதைப் பொருள் கடத்தல் மாஃபியாக்கள் இயங்குகிறார்கள். கஞ்சா, மது போதை வஸ்துகள் மட்டுமல்லாமல், விதவிதமான போதைகளைத் தேடி அலையும் இளைஞர்கள் -இளைஞிகள் கூட்டம் சென்னையில் அதிகரித்து விட்டது.
பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் ஹாசிஸ் எனும் ஒருவித போதைப் பவுடர், காஷ்மீர் பள்ளத்தாக்குகள் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து, குஜராத், ராஜஸ்தான், கோவா, மகாராஷ்டிராவுக்குள் அடைக்கலமாகிறது. அங்கிருந்து தமிழகம், கேரளாவுக்குள் தரை மார்க்கமாக நுழைகிறது. தரைமார்க்கமாக நுழைவது வெறும் 10 சதவீதம்தான். ஆனால், 90 சதவீதம் அமெரிக்கா, ஐரோப் பிய மற்றும் தென்ஆப்ரிக்க நாடுகளிலிருந்து வான் வழியாக வும், கடல் வழியாகவும் மட்டுமே இந்தக் கடத்தல்கள் நடக் கின்றன. தமிழகத்துக்குள் நுழையும் இந்தப் போதைவஸ்து கள் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் தொடங்கி குடிசைப் பகுதிகள்வரை புழக்கத்தில் விடப்படுகிறது. இதுதான் தமிழகத் திற்கு தீராத தலைவலியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
இதுமட்டுமல்லாமல், கிரிப்டோ கரன்சி நுகர்வுகள் அதிகரித்துவரும் சூழலில்... சினிமா நடிகர்-நடிகை கள், அரசியல்வாதிகளின் வாரிசுகள், பிரபல தொழிலதிபர்களின் குடும்பங்கள், ஐ.டி. நிறுவனத்தினர் என பலரும் ஆன்-லைன் வர்த்தகம் மூலம் கூரியரில் இவற்றை பெற்றுக்கொள்வதும் நடந்துவருகிறது. 18 வயதுக்கு குறைவான பள்ளி சிறார்களிடம் போதைப் பழக்கம் பெருகியதற்கு தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒரு காரணம். அரேபிய நாடுகளிலும் சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலும் இருப்பதுபோல மரண தண்டனை இந்தியாவில் இல்லை. அதனால், போதைப்பொருள் கடத்தல் களும் குறைவதில்லை''’என்கிறார் அழுத்தமாக.
போதைப்பொருள் கடத்தலைக் கண் காணித்து அதனை தடுப்பதற்காக, நார்க்கோட் டிக்ஸ் தடுப்பு பிரிவு, நார்க்கோட்டிக்ஸ் புலனாய்வு பிரிவு, வருவாய் புலனாய்வு பிரிவு, சுங்கத்துறை, கலால் துறை, காவல்துறை என நிறைய பிரிவுகள் இருக்கின்றன. ஆனால், இங்கு புழங்கும் ஊழல்களால் கடத்தல்கள் முழுமையாக தடுக்கப்படுவதில்லை. மாதந்தோறும் அரசுக்கு கணக்கு காட்டுவதற்காக மட்டுமே கடத்தல்கள் சிறிய அளவில் பிடிக்கப்படுகிறது. அதேசமயம், ஒவ்வொரு கடத்தலின் மதிப்பில் 10 சதவீதம் லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு போதைப்பொருளை சிட்டிக்குள் அனுமதிக்கிறார்கள் அதிகாரிகள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விமானநிலைய ஊழியர்கள், "சென்னை விமான நிலையம்தான் போதைப்பொருள் கடத்தலின் கேந்திரம். விமான நிலையத்துக்குள் சோதனையிடும் அதிகாரம் சுங்கத்துறைக்குத்தான் இருக்கிறது. தமிழக அரசின் கட்டுபாட்டிலுள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட முடியாது. மேலும், மாநில அரசின் அதிகாரிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இதனால் இரண்டு தரப்பும் ஒருங்கிணைந்து செயல்படுவதும் கிடையாது.
கடத்தல் தொடர்பாக தங்களுக்கு ஏதேனும் ரகசியத் தகவல்கள் கிடைத்து விமான நிலையத் துக்கு தமிழக அதிகாரிகள் வந்தாலும், அவர்கள் வெளியில் நின்றுதான் கணிகாணிக்க முடியும். உள்ளே நுழைந்து விடமுடியாது. கடத்தல்காரர் கள் வெளியே வரும்போதுதான் பிடித்துக்கொள்ள வேண்டும். ஆனால், சுங்கத்துறை அதிகாரிகளைக் கவனித்து விடுவதால், போதைப்பொருள் வெவ்வேறு ரூட்டில் வெளியே சென்றுவிடும். கடத்தல்காரர் ஹாயாக வெளியே வருவார். அவரது கையில் பொருள் இருக்காது. அதனால் அவரை கைது செய்ய மாநில அதிகாரிகளால் முடிவதில்லை. மத்திய-மாநில அதிகாரிகள் ஒருங்கிணைந்து சமூக நலன் கருதி அக்கறையுடன் செயல்பட்டால் மட்டுமே போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பை கட்டுப்படுத்தி, அதை இல்லாததாக்க முடியும்''‘ என்கிறார்கள் விமானநிலைய ஊழியர்கள்.
தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் நாம் பேசியபோது, ’"சென்னை விமான நிலையத்துக்கு வருசத்துக்கு சராசரியாக 2 கோடி பேர் வந்து செல்கிறார்கள். அமெரிக்கா, நைஜீரியா, எத்தியோப்பியா, வெனிசூலா, தாய்லாந்து, நெதர்லாந்து, கிர்கிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈரான், இந்தோ னேசியா, பிலிப்பைன்ஸ், ஹாங்காங், கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகம்பேர் சுற்றுலாவுக்காக வருகிறார்கள். இவர்களில் சுமார் 3 சதவீதம் பேர் சின்னதாகவும் பெரியதாகவும், இந்தக் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். பெரும்பாலும் 7 நாள் சுற்றுலா விசாவில்தான் வருகின்றனர். ஒருவர் ஒருமுறை வந்தால் அவர் மீண்டும் சென்னைக்கு வருவதற்கு ஏழெட்டு மாதங்கள் ஆகும். அதற்கு மாறாக, அந்த நபர் இந்தியாவில் வேறு மாநிலத்துக்கு சுற்றுலாவுக்காக அனுப்பி வைக்கப்படுவார். இதுதான் மாஃபியாக்களின் வழிமுறை. சென்னை விமான நிலையத்தில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 3 கிலோ ஹெராயின், 2 கிலோ ஓபியம் பிடிபடுகிறது. ஆனால், கண்துடைப் பாக மட்டுமே வழக்குகள் பதியப்படுகிறது. உலக அளவில் போதைப்பொருள் கடத்தலும் பழக்கமும் 22 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளது. அதுவும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி யில் போதை மற்றும் பாலியல் பழக்கத்துக்கு அதிகளவில் 18-25 வயதுள்ள இளைஞர்களும் இளம் பெண்களும் அடிமையாகி வருவது ஆபத்தானது'' என்கிறார்கள் தமிழக அதிகாரிகள்.