நக்கீரனா... நான் அமெரிக்கன் கல்லூரி தலைமை பேராசிரியர் பேசுறேன். கல்லூரியில் சி.பி.ஐ விசாரணை நடந்துக்கிட்டு இருக்கு'' -என்றது நம் கைபேசியின் எதிர்முனை.
இதைத் தொடர்ந்து அவரை சந்தித்தோம்.
பதட்டத்துடன் நம்மிடம் பேச ஆரம்பித்த அவர்... ""என் பெயர் அருள் இஸ்ரேல். என்னைக் கொலை செய்ய முயற்சி நடக்குது. என்னைக் கொல்ல ஏற்கனவே லாரியை வைத்து மோதினார்கள். அதில் நான் படுகாயம் அடைந்ததோடு கோமா நிலைக்குப் போய் மீண்டிருக்கிறேன். நான் உயிர் பிழைத்ததே அதிசயம்'' என்றவர் அது குறித்தும் விவரிக்கத் தொடங்கினார்.
""அமெரிக்கன் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியரான அனிதாகாரல் என்பவர் தனது பணி நிரந்தரத்திற்காக, கல்லூரி முதல்வருக்கு 2018-ல் 15 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக ஆதாரத்துடன் அமெரிக்கன் கவுன்சிலுக்கு புகாரையும் அவர் அளித் தார். இதேபோல் அடுத்தடுத்து ஊழல் புகார்கள் கல்லூரி நிர்வாகத்தின் மீது குவிந்தபடியே இருந்தது. இப்படிப்பட்ட புகார்களை எல
நக்கீரனா... நான் அமெரிக்கன் கல்லூரி தலைமை பேராசிரியர் பேசுறேன். கல்லூரியில் சி.பி.ஐ விசாரணை நடந்துக்கிட்டு இருக்கு'' -என்றது நம் கைபேசியின் எதிர்முனை.
இதைத் தொடர்ந்து அவரை சந்தித்தோம்.
பதட்டத்துடன் நம்மிடம் பேச ஆரம்பித்த அவர்... ""என் பெயர் அருள் இஸ்ரேல். என்னைக் கொலை செய்ய முயற்சி நடக்குது. என்னைக் கொல்ல ஏற்கனவே லாரியை வைத்து மோதினார்கள். அதில் நான் படுகாயம் அடைந்ததோடு கோமா நிலைக்குப் போய் மீண்டிருக்கிறேன். நான் உயிர் பிழைத்ததே அதிசயம்'' என்றவர் அது குறித்தும் விவரிக்கத் தொடங்கினார்.
""அமெரிக்கன் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியரான அனிதாகாரல் என்பவர் தனது பணி நிரந்தரத்திற்காக, கல்லூரி முதல்வருக்கு 2018-ல் 15 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக ஆதாரத்துடன் அமெரிக்கன் கவுன்சிலுக்கு புகாரையும் அவர் அளித் தார். இதேபோல் அடுத்தடுத்து ஊழல் புகார்கள் கல்லூரி நிர்வாகத்தின் மீது குவிந்தபடியே இருந்தது. இப்படிப்பட்ட புகார்களை எல்லாம் நான்தான் தூண்டி விடுகிறேன் என்று நினைத்து என்னைக் கொல்லப் பார்க்கிறார்கள். இங்கே எல்லாமே மோசம். 20-9-2019 அன்று, கல்லூரி மாணவர்கள் விடுதிக்குள் போலீஸ் புகுந்து கஞ்சாப் பொட்ட லங்கள் மற்றும் போதை பொருட்கள் வைத் திருந்ததாக ஐந்து மாணவர்களை பிடித்துக் கொண்டு போனது.
இது தொடர்பான செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தவுடன் மொத்த நிர்வாகமும் ஆடிப்போனது. அதுபோன்ற சம்பவங்கள் இன்றளவும் தொடர்கிறது. இதை யாரும் தட்டி கேட்கமுடியாது. கேட்டால் ரவுடிகளை வைத்து மிரட்டுவார்கள். மேலும் அனைத்து ஒழுக்கக்கேடுகளும் அங்கே அரங்கேறுகிறது. இது பற்றியெல்லாம் நீங்கள் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே விசாரித்துப் பாருங்கள். பல பலான செய்திகள் வெளிவரும்'' என்றார் எரிச்சல் மண்டிய குரலில்.
நாம் கல்லூரி வளாகத்தில் விசாரித்தபோது, நம்மிடம் பேசிய இன்னொரு பேராசிரியர் ஒரு வீடியோவைக் காட்டினார். அதில், கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபருக்கு நான்கு இளம்பெண்கள் எதையோ ஊட்டிவிடுவதும், கன்னத்தை தடவுவதும் போன்ற காட்சியை காண்பிக்க.. சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது நமக்கு. மேலும் சில பெண்களுடன் அவர் இருக்கும் காட்சிகளும் இருந்தது. நம்மிடம் சிரித்தபடியே பேசிய அவர் “""இது சாம்பிள்தான். சர்ச்சையில் சிக்கிய அந்த பேராசிரியை பெயரும் இவருடன் அடிபடுகிறது. ஏன் இப்ப கூட வேதியியல் பேராசிரியர் மோனிகா, தேசிய பெண்கள் பாதுகாப்பு இயக்குநரகத்தில் முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் மீதே பாலியல் புகாரை அளித்திருக்கிறார். அது பற்றி விசாரணை நடக்கிறது. இப்ப புகார்கள் அதிகமானதால் சி.பி.ஐ விசாரணையே தொடங்கிவிட்டது. அடிக்கடி, சுற்றுலா என்ற பெயரில் உலகில் உள்ள பல நாடுகளுக்கும் பெண்களை அழைத்துச் செல் கின்றனர். அதன் மர்மம் விசாரணையில் வந்தே தீரும்'' என்கிறார் ஆதங்கமாய்.
இந்த நிலையில் நிர்வாகத்தின் மீது பல்வேறு புகார்களைக் கொடுத்திருக்கும், பேராசிரியர் பிரேம் சிங்கை சந்தித்தோம். அவர் நம்மிடம், ""2016 முதலே அமெரிக்கன் கல்லூரி ஆட்சி மன்றத்திற்கு, இங்கே பல்வேறு முறைகேடுகள் நடப்பதை சுட்டிக்காட்டி புகார் கொடுத்துள்ளோம் அரசுக்கும் தெரிவித் துள்ளோம் தென்மண்டல பேராயரிடமும் முறையிட்டாச்சு. அவர் என்னால் ஒன்றும் செய்யமுடியாது. ஜபம் பண்ணுங்கள்னு சொல்கிறார். தற்போது நான்குவழி சாலைக்கு சத்திரபட்டியில் உள்ள பலகோடி மதிப்புள்ள கல்லூரி நிலத்தை தங்கள் பெயருக்கு பட்டா மாற்றி, பணத்தை பெற்று கொண்டிருக்கிறார்கள். இதையும் கண்டுபிடித்து புகார்கள் அளித்துள்ளோம்.
கல்லூரி முதல்வரின் இப்போதைய திட்டம் என்னவென்றால், பல ஆயிரம் கோடி பெறுமானமுள்ள அமெரிக்கன் கல்லூரி சொத்துக்களை, மொத்தமாகத் தன் பெய ருக்கு மாற்றுவதுதான். கல்லூரியின் ஆட்சிமன்ற குழுவிலோ, கல்லூரியின் நிர்வாகத்திலோ தன் மனைவி, பிள்ளைகள் மற் றும் உறவினர்கள் யாரையும் இடம்பெறச் செய்யக் கூடாது என்பது விதி. இருந்தும் தற்போது கல்லூரியின் ஆட்சிமன்ற குழுவில் தன் மனைவியை போட்டுள்ளார். அதோடு கல்லூரி நிர்வாகத்தில் 75% இடங்களில் தன் சொந்தங்களைப் புகுத்தி உள்ளார். பெரும் ஜாம்பவான்களான உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி, எழுத்தாளர் கோமல் சாமிநாதன், இயக்குனர்கள் மகேந்திரன், பாலா, நடிகர் விவேக், பட்டிமன்றம் சாலமன் பாப்பையா உள்ளிட்டவர்கள் இந்தக் கல்லூரியின் அடையாளங்கள். அப்படிப்பட்ட கல்லூரியை அசிங்கப்படுத்துவதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை'' என்றார் வருத்தத்துடன்.
புகார்கள்குறித்து முதல்வர் தவமணி கிறிஸ்டோபரைத் தொடர்புகொண்டு கேட்டபோது ""ஏற்கனவே சில பேராசிரியர்கள் எதையோ எதிர் பார்த்து கவுன்சிலில் புகார் கொடுத்தார்கள். அது குறித்து என்னிடமும் விசாரித்தார்கள். ஆனால் இதுவரை எதையும் நிரூபிக்கமுடியவில்லை. இனி யும் எவராவது புகார் சொன்னால், மான நஷ்ட வழக்கு தொடர்வேன்'' என்றார் அழுத்தமாக.
சர்ச்சைப் புயலில் அமெரிக்கன் கல்லூரி சிக்கியுள்ள நிலையில் அதை சரி செய்யாமல், புகார் கிளப்பிய பேராசியரை சஸ்பெண்ட் செய்திருப்ப தால், நிர்வாகத்திற்கு எதிரான கொநதளிப்பு அதிகரித்துள்ளது.
-அண்ணல்